வியாழன், 31 டிசம்பர், 2009

ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.


உலக ஒழுங்கை உற்றுக் கவனி.நீ
உலவ இதை உவப்பாய் அவதானி.
நிலவும் நீட்சியை நிர்மலாய் நிதானி.இல்லையேல்
பலவும் உன்னை பாழாய் படுத்தும்.சிலதென்று
எதையும் சினந்து புறம் தள்ளாதே.

எதனதன் ஆரம்பமும் என் வீட்டு-
முற்றத்தில்தான் முகிழ்க்கும்-எனதான
சிரத்தைகளை நாமொதுக்க.
அதனால்தான் ஆயிலியத்தை அகமாக பேண-
ஆவன நாமாற்ற அகமேந்த அரணமைப்போம்.
இல்லையெனில்!
தாமதமான தரமாக தானே சரணாகதி.
எல்லாமே எப்போதும்.எங்கேயும் என்றும்.

சாட்டுக்கள் சாட்டி சரமமைப்பதை,
சகமாக கூட சாலை வகுக்காதே.
இகமான வாழ்வில் இதமான அணுகு முறை,
ஒன்றது வேண்டும் இல்லாதெனில்,
ஒவ்வொரு விநாடியும் ஓயாத மன உ(ழை)ளைச்சல்
மதியூகம் கொண்டு மானசீகமாய் யோசி.
மற்றதெல்லாம் மாண்பாக மார்க்கம் அமைக்கும்.

ஒட்டுக் குழவாய் வாழாதிருக்க,
ஒற்றுமையை ஓர்மமாய் வளர்.
விட்டுக் கொடுப்பதை விவேகமாய் விதை.
தட்டிக் கேட்கும் தைரியம் பேண்,எதையும்
தார்மீகம் பேணி தரணியில் உழை.

வாசிக்கும் பழக்கத்தை வாழும் வரை பேண்.
வரலாற்றை அறிவதில் வாஞ்சையாய் வகைபாகம்.
தரமான தாக்கத்தை தண்மையாய் தெரிந்தெடு.
நேசிக்கும் நேர்மையை நேயமாய் நேசி.
சிந்தித்து செயலாற்றும் சீலத்தை கடைக்கொள்.
நிந்தித்து,வஞ்சினமாற்ற கிஞசித்தும் நினையாதே.

ஆம்!
இதெல்லாம் ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.
ஆயின்!
இன்று!
சுயநலமே தோழமையாற்றும்
கயவர்களால் எந்த
ஆயுதத்தை கலயமேந்தி கருவேற்ற?

சனி, 26 டிசம்பர், 2009

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.


அகிலத்தை அசைத்த அசைவது அதன்
ஆள(ழ)ப் பெயரே சுனாமி-உலகில் எத்தனை,
அக்கிரமங்களை ஆட்சியாளர்கள் ஆக்க,
அற்ப நிமிடத்தில் அதை மீறிய அனர்த்தனம்!
ஆக்கிய ஆழியின் ஆர்ப்பு நர்த்தனமே!உன்
அசைவின் புனர் பெயர்தான் பூமியில் சுனாமியாக
சுகந்தங்களை சுருட்டியதோ?

வறட்சியின் வையகத்தை மடக்கும் மாண்பூ _நீ
திரட்சியாய் திடகாத்திரமாய் திறன் ஊட்டி-இத்
தீவினை மட்டுமல்ல திறந்து,விரிந்து பரந்திருக்கும்
அவனியை ஆட்சி செய்யும் ஆர்ப்பு நீ-
அன்று!(26.12.2004)
பவனி வந்த பாரை பாறையாக்கிய போர்ப் பரணியை!
இன்று வரை யாரும் இறுமாந்து அழிவாற்றவில்லை.
ஊழிப் பெரும் ஊற்றே ஆழிப் பேரலைக்கு ஏன் இந்த
கோரப் பசி?

எத்தனை மக்களை எவ்வளவு இலாவகமாக--
இவ் வையகததில் வளமாக வாழ வைத்த வனப்பு நீ!
உன்னால்-
அன்றும்,இன்றும் ஆரோக்கிய வாழ்வதனை,
செளபாக்கியமாக்கிய செளதாமினியே!
செளந்தரியே!
ஆழ,அகல நீ ஆர்ப்பரித்து அலைகளாக அசைவெடுத்து,
மீள,மீள மிதமாக மீட்டிய உன் ஆதங்க கரம் தழுவ,
சோளகக் காற்றின் தோகை வரிப்பில் எங்கள் தேசம்
தழுவிய கடலம்மையே-ஏன்?
அன்று இந்த கோர ஊழி தாண்டவமாடினாய்?

உன்னால் உவப்பெய்த அத்தனை ஆத்மர்களையும்,
உனையே நாளும்,பொழுதும் உரசி,ஊடி நின்ற உவப்பான
உனதருமை உத்தம மைந்தர்களையும்,
ஏனிந்த தாளாச்சினமேந்தி
எக் காளமாய் கொன்றேகினாய்?
வயது,பால்,மறைத்து
புலர்ந்தது,
மலர்ந்தது,
வளர்ந்தது,
வாழ மடி தேடும் வஞ்சியர்,
நேற்றுத்தான் நேச மடி குடி புகுந்த-
கோவையர்கள்,கோமகர்கள்,
வாழுதலின் வசப்பெழுதி வையத்தில் தன்-
வாரிசுகளை வனப்பெழுத வசந்தமாய் வார்த்தெடுக்க,
வளம் தேடும் வாசலில்!நீ
வகித்த வதை பாகம்!

தனதான சந்ததியின் மழலை குரலேந்த,
இன்றைய விடியலில் இரத்தல் தவிர்த்து
இதமான வாழ்வெழுத,
நாளைய பொழுததினில் மங்கல நாணேந்த,
நாணம் நயித்த நங்கையரின்
ஞாயத்தை,
இராப்பொழுது இதமாக விடிந்ததால்!
இரவெல்லாம் இமை விழித்து இணையாளனை!
எதிர்பார்த்த மனைவியின் ஏக்கங்களை,
அவர் தம்-
மழலைகளின்,மையல்களை-எந்த
கூர்ப்பெழுதி குலைத்தழித்தாய்?

அடித்து நீ ரணப்படுத்தியிருந்தால்!
இதன் இலங்கலை இதப்படுத்தியிருப்போம்-ஆனால்
அத்தனையையும் அலங்கோலமாய்,குதறி,கிழித்து
வதைத்து,உன்னோடு கொண்டு,கொன்று
ஏக்கப் பரப்பில் நீ ஏகாந்தமாய் பறித்த
இந்த பரப்பளவை எந்த பரப்பில் நாம் நிமிர்ப்பெழுப்ப முடியும்?

ஆக்கிரமிப்பாளனின் பாளத்தில் நாம் அனுதினமும்,
ஆர்தெடுக்க ஆயிலியம் சுரப்போமா?
இந்த
வேதனையின் வேகமையில்,அதன் சுமைகளின் சுமையை
நின்று நிதானித்து, ஆசுவாசப்படுத்த, ஆர்த்த இந்த
இமைப்பொழுதிலா-நீ
இந்த இணையற்ற வேகம் தரித்தாய்,
எம் ஏற்றமெல்லாம் இழுத்தழித்து இழவெழுதினாய்?

ஏய்,
ஆழிப் பேரலையே!
ஆயுள் முழுவதும் நாம் ஒப்பாரி எழுதி-எங்கள்
ஒய்யாரம் அழிக்கவா?உன் ஓங்கார சங்கூதல்?
ஆரியனின் அதமத்தில்,அந்த ஆக்கிரமிப்பில்,
வெங்களத்தில் எங்கள் வேதம் தரித்தோம்.ஆனால்?

உந்தன் உற்சவத்தில் நாம் சவமாகவே சகம் தரித்தோம்.
நிந்தன் பொற்பாதத்தில் எங்கள் வாழ்வேந்த
தந்தனை உந்தன் ஈகபாகத்தை,
ஈய்ந்தனை இறைந்தனை,
சந்தன மேனியரின் சாகச களமே,விந்தனைத்தும்
சிதைத்தோம்-ஆயினும்
விடியலையும் இழந்தோம் அல்லோம்.

ஒவ்வொரு இழப்பிலும்,
இன்னொரு உயிர்ப்பிருக்கும்,
உணவுச் சங்கிலிபோல் உணர்விருக்கும்.
உயிர்த்தெழும் உரமிருக்கும்,உறங்காத
உணர்ச்சியிலே உற்சவமெழுதும்,
உயிர் இருக்கும்.
உந்துதலிலே உறுப்பெழுத உரமாக இன்னமும்
இந்த ஏகாந்த வெளியில்!

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.

வியாழன், 24 டிசம்பர், 2009

மானப் பரப்பில் மக்கள் திலகம் மையித்த மங்கலம்.


சிரஞ்சிவியான எம் சஞ்சீவியே
ரம்யமான ரகசியனே!-எமதான இதயக் கனியே!
ஈழ விடுதலைக்காய் இதயம் சுரந்தவனே;
எழுக விடுதலையென ஏற்றமாய் இழைத்தவனே'
தோழமையாய் எம் தலைவன் தோளேந்திய முதல்வனே-உன்
தோளேந்தும் ஈழத் தமிழினம் தரணியில் என்றும்--

ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல்-
உதவும் கரம் படைத்த உதயனே-நீங்கள்
உண்மையான உழவனை உளமார உணர்ந்து
ஒப்புவமைக்கு அப்பாற்பட்ட தொலை நோக்கின்-
ஈழவிடுதலையின் அவசியத்தை ஐயமின்றி நேசித்த
ஆழத்தை எந்த அரசியல்வாதி தமிழகத்தில் சிந்தித்தான்,
மெளனமாக மலைதாண்டிய உதவி.

தலைவனின் ஆழமான எதிர்பார்ப்பை எந்த இடையூறுமின்றி,
தானேந்தி தாளேந்திய தார்மீகத்தை என்னென்போம்?
திரையில் மட்டமல்ல நீவிர் புரட்சி படைத்தீர்,புடை
சூழும் எம் ,ஈழ தமிழர் இனத்திற்கே பசுமை படைத்தீர்.தமிழ்
விழாதிருக்க எம் விழுதேந்திய வீரனே நாம்
வழுவாதிருக்க வகை சூட்டிய வல்லோனே-ஈழ தமிழ்
இனம் இருக்கும் வரை வரையில்லா உம் வரைபிருக்கும்.

நன்றி மறவாத நல்லுள்ளம் ஈழத் தமிழருக்கு என்றும்,
குன்றிடாமல் உமதான நினைவெழுதும் குவலயம்.
கன்றிடாமல் காலமெல்லாம் கனதியெய்தும்.
வென்றிடும் நீ அரசாட்சியில் இன்றிருந்தால்-இந்த
ஈனம் அகற்றி ஈழம் இழைந்திருக்கும்-விதி
வழி உம் பயணம் ஒத்தி ஒப்பேறியிருந்தால்?

வஞ்சினம் கொலுவமைத்த வஞ்சி ஒன்றும்,
மிஞ்சி இந்தியில் இழவமைத்த இலங்கல் இணைப்பகற்றி,
இங்கிதம் அகற்றிய ஈனர்களால் நாம் இசைவகற்றி,
இழவேந்தி,
இராப்பகலாய் பழுதேந்தி பாரம் சுமந்து--?

அன்று போல் உன் அகலங்கள் எங்களின் ஆழப்
பரப்பேந்த யாருமில்லை ஐயா!இன்று
ஐயகோ என
நாமழ எமை தேற்ற,தோற்ற எந்த தோழமையும்-எம்
மனப் பரப்பில்கூட கூடவில்லையே,

வானவர் தேசம் வையத்தில் உண்டென்றால்-நீவிர்
எம்மவர் தேசம் கண்டு நெஞ்சம் பதறி,
சங்கறுக்க தமிழக சதிகாரரை சாய்த்திருப்பீர்-
வெங்களத்தின் வேதனையை,அதன் வெப்பியாரத்தை
வெம்பியே அறுத்திருப்பீர்.ஆனாலும் என்ன
துவண்ட ஈழத் தமிழினம் துயரறுக்கும்,
தூக்கணங் குருவிக்கும் தூங்க ஓர் தொட்டில் போல்
எக் கணமும் நாம் எமக்கமைக்க ஏற்றமாய் உழைத்திருப்போம்.

விழ,விழ வீரியம் சுரக்கும் விழுதுகள் எழும்.
தொழ,தொழ ஓர்மம் ஒழியும்,தொட்ட காரியம்
தொய்ய தோட்டம் அமைக்கோம்,
அமைப்போம்!
தரணியில் தமிழரின் தாயகம் எத் தடை வந்த போதும்-
எந்த வேளை வரினும் உம் நினைவெழுதி-
ஏந்தும் துயரறுத்து தூயவன்,எம் வேலுப்பிள்ளை
பிரம்மத்தின்,பிராயத்தை மீண்டும் மு(மி)டுக்கி.

நெக்குருகும் உன் நினைவுகளில் எம் துக்கம் உருகும்.
பக்கமிருந்தாய் பலம் தந்தாய்,பாங்குடனே பாரம் சுமந்தாய்.
துக்கம் தாக்காது துணையிருந்தாய் தூயோனே!
அகப் பரப்பில்,
ஆழ வேரோடி,
இங்கிதமாய் இலங்கியவனே,காலப்
பரப்பெழுதும் காத(ல) தூரம் கண்ணியமாய் எம் கருவேந்தும்.
விண்ணிலிருந்தும் நீ விசாலமாய் புறுவல் பூப்பாய்.
புலரும் பொழுது பூபாளமிசைக்க.
தமிழரின் தாகம் தமிழீழமாய் தர(க)மேந்த.

புதன், 23 டிசம்பர், 2009

திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே!


திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே-உன்
திரு முகம் காண திசைகள் திரும்புமே.உன்
ஒரு விழி கூறும் ஓர்மம் பகைவர் பெரு விழி மிரளும்-உன்
இரு விழி இயம்பும் இலங்கல் புரிய இலங்கை அதிருமே.
குரு விழியாக குவியம் குவிக்க குல மகனே குதிராயா?

இரும்பு இதயம் கொண்டாய் இருளர் இலங்கல் இரைந்தது-நீ
கரும்பு உள்ளம் கரைசலாய் கவித்ததில் களமே நிறைந்தது.-உன்
கரிசனங்கள் கலந்தபோது ஈழக் கலயம் கனிந்தது-உந்தன்
உரிமைச் சங்கு ஊதியபோதே உலகம் உணர்ந்தது.நிந்தன்
பரிவு பார்வை பகிர்ந்தபோதே பவனி புரிந்தது.

இரண்டகம் புரிந்த ஈனர்களை இனம் காண நீ படைத்த,
இமாணயர்கள் எத்துணை இடுக்கண் வரினும்,
எத்தனை ஈனர் கண்டாய் களத்தில் உன் கனதி தெரிந்தது.
இழைந்து,
சித்தம் கலந்து சிதைக்க சினந்தாய் சிலர் திமிரே சி(தி)ரைந்தது.
அத்துணை ஆற்றல் அலையாய் உன்னில் அமரர் அணைத்தனர்-அவர்
ஆவி,உடல் பொருளெல்லாம் உன்னால் உதித்தது-மாவீரக்
கனல்களெல்லாம் மாதவம் செய்ய உனையே சூழ்ந்தது.

இராச தந்திரம், அரசியல் ஆவணம், ஈழக் கட்டுமானம்,
இராசாதி ராசன் சோழப்பெரு வேந்தனின் தோகையை தொட்டதாக,
ஈழம் களித்தது.தமிழீழம் களித்தது.
தேசக் கட்டுமானம்,
தேவையான சேந்தல்கள்,
விஞ்ஞானத்தின் விதைப்பு,
சாதி ஒழிப்பு,சீதனக் காப்பு சட்டம்,
விதியின் வரைபூ உன் மதியின் தெளிவு.
ஈழ செளமியத்தின் செளபாக்கியம்,ஈனமாக இழைத்த
இழிவுகள் இறைந்தே கழிந்தது.

மனிதாபிமான மரபுக் கட்டளை,
மனித நேயம்,மாந்தர் உள்ளம் மதிக்கும் தன்மை-அதில்
பூத்த தண்மை,மென்மை,பதித்த மேன்மை-இத்தனை
வித்தகமும் விதைத்த வீரியா -- இன்று
உன் அன்பான முகம் காண,ஆசியான வார்த்தை கேட்க
விகசிக்கும் எம் மனம் மானசீமாய் மருகுகின்றது.

வார்த்தைகட்கு அப்பாற்பட்ட வைராக்கியம்-ஆளுமையின்
ஆர்ப்பு வசீகரப் புன்னையின் புறுவல்.
தேர்ந்த தேசியம் தேவையின் தேடல்-ஆதலினால்
அகமெல்லாம் ஆக்க வேண்டிய ஈழத்தின் ஆதங்கம்.
அரிய,பெரிய ஆவலின் ஆதாரம்,அவதாரம் ஆக
உரியவர்களின் உள்ளக் கிடக்கறிந்து ஊக்கம் உருத்த தெரிவுகள்,
மலரும் மணம் அறிந்து வேர் நாட்டிய வேதம் நீ.
பரிவுகளின் பாகம் உதிரிகள் ஆகக் கூடதென்பதான
ஊக்கம்,
உள்ளதெல்லாம் உதயமாகும் ஈழப்பரப்பிற்கே என்பதில்-
எள்ளளவும் ஐயம் திரிபுற அர்ப்பணிக்கும் ஆதார்சம்
எந்த இனத்திற்கு இப்படி ஒரு தலைவன் என்பதில்
அகிலத்திற்கே ஆளுமையற்ற பொறாமை.

ஐயனே!
என ஆரும் அழைப்பதில் பெருமை தவிர்க்கும் பெரும் விம்பம் நீ.
ஈழ இனத்தின் இயலாமையை ஒட்டு மொத்தமாக கரைப்பதில்-
ஈகமான பெரும் கருணை.
தன் கடமையை தட்டிக் கழிப்பதில் தமிழனிற்கு நிகர் தமிழனே.
இதை இயல்பாக சுட்டி இயலாமையை இகழ்ந்ததில் நீ இமயம்.
ஈர்த்தெடுத்து இனத்தின் ஈகத்தை இகம் மலைக்க வைத்த இயல்பன் நீ.

அவலத்தை தந்தவனுக்கே அதை ஆசுவாசமாக திருப்பி,
ஆர்த்து கொடுக்க ஆளாக்கியதில் அவனி அவதானிக்க வைப்பதில்,
அலாதியாக தைரியம் தைத்த தைலவன்.
தாற்பாரியத்தை தக்க வைப்பதில்-
தாண்டவன்.
எதிரிக்கு என்றுமே எமன்-அவன் படை கட்டும் கட்டுமானம்
சுட்டுவதை சூத்திரம் சுதாகரிக்கா சுமையவன்-என்றும்
உதிரிகளுக்கும்தான்.
உரியவன்-
உவப்பான உரிமையின் உலகவன்.உலவவன்.
தெரிவான பாதை தெளிக்கும் உதயம்.
உரிய நேரம் உதயமாகும்-எங்கள் உதய உரிமம்.
அன்று தெளிவாகி சேமம் விசாரிக்கும்-உலக தேசமெல்லாம்
தெவிட்டாத சேதிகளாக,சோதி ஒளிர சோகம் அகல ஆருடமா எமக்கு தேவை?
அல்ல அல்லும்,பகலுமாய் அயராதுளைத்த ஆளுமைகளே நாளை,
எம் வயல் வகுக்கும்
தொடரும்)

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.


காத்திருக்கும் கதை சாற்ற
காதலியை காணவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்
வீற்றிருந்தாள் வியாபித்திருந்தாள்-இன்று
விடியலில் காணவில்லை-இந்த
விந்தையும் புரியவில்லை.

காற்றுக்கு புரியும் காரிகையே ஏன்
காதலில் காணவில்லை?அவள் பூத்திருந்த
புன்கையும் பூமியில் புலரவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்-நோத்திருந்தாள்
எனை ஏற்றிருந்தாள்-இங்கு யாகத்தை காணவில்லை.

காதலில் வேதனை யாருக்கும் புரியும்
ஏன் இவளிற்கு புரியவில்லை?பூ
வீழ்ந்தபின் மிதிக்கும் மானிடம் சிரிக்கும்
வலி புரியா வஞ்சி நீயே! நாளை நீ நயக்கும்
நர்த்தனம் ஞாயிக்க நான் இருப்பேனா-நீயிருப்பாய்
நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.

சனி, 19 டிசம்பர், 2009

பொய்மை பொய்க்க பொதியல்கள் போதிக்க.

மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?


சுழலும் பூமிப் பந்து எவரை சுவீகரம் கொண்டது?
உழலும் மனமதை யார்தான் வென்றது?
சுழியும் சூன்யமாக சூத்திரம் யார்தான் வகைத்தது?
மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?
மதமும்,நிறமும் ஏன்தான் முண்டியது?

மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை-இது
மார்க்கம் பூண்டதால் மதம் என்ற போர்வை.
ஆதலால் வேர்த்தது பூமித்தாய் என்ற பாவை.
பூமியெல்லாம் குருதியின் பார்வை.இது
பலமுள்ள பராக்கிரமன் பண்ணிய நுண்ணிய கோ(ர்)வை.

வரலாறு இதை வகை,வகையாய் ஆய்ந்தது.
மனிதாபிமானம்,எல்லோரும் ஒருதாய் மக்கள் என்பதை
ஓங்கியே ஒப்பித்தது,
ஆய்வு இதை ஆரோக்கியமாய் ஆய்ந்தது.அதை
அகிலம் இங்கு ஐக்கியமாய் ஆரோகணித்தது.ஆயின்
அவனியில் ஏன் இந்த அவலம் வலம் வார்த்தது?

பிரபஞ்சம் தோன்றி பில்லியன் ஆண்டுகள்-இங்கு
எங்கே பிரம்மனும்,பிதாக்களும்?
மதத்திற்கு இங்கு என்ன ஆளுகை?
சீவராசிகளின் பரிணாம வளர்ச்சியின் அதி உச்ச
பிரமாண்டம் மனித இனம்-பகுத்தறிவு அதன் பிரம்மம்
விஞ்ஞானமாக இங்கு விழுதெறிந்து மனிதன் நாளை
நிலவில் குடியேற நீட்சித்து நிற்கும் நியம் புரியா பிறவிகளே!

இன்னமும் இந்து என்றும்,புத்தமென்றும்,
இசுலாமிய இனமென்றும்,கிறித்துவ கீர்த்தியென்றும்
ஈனமியற்றும் இழியோரே!
வாருங்கள் எம் இனம் அதன் வளம் எல்லாமே
வகுந்தெடுத்த வன்மையாளனின் புயம் தறிக்க
புதுப் பூபாளம் இசைப்போம்.

ஆவணத் தமிழனின் கோவளங்கள் மீட்க,
பூபாளம் பூட்டிய எம் புண்ணியரின் தடம் ஒற்றி,
பேதங்கள் களைந்து எங்கள் பேதமை கலைத்து,
சாதி,மதமென்ற சங்கடங்கள் களைந்து,நாம்
தமிழீழ மக்கள் ஓர் இனமென்ற மகுடம் தரித்து.

மனிதாபிமானம் சுடர மனிதராய்,
ஒற்றுமையாய் ஓரணியில் ஒத்தடம்
ஒற்றிய கல்லறை கனதியரை--
காத்திரமாய் எமதான களங்களில் சுமந்து.

அழுது ஆர்ப்பழித்து அவதி எழுதும் அவயங்களை.


அகத்தோடு வந்த என்னகத்தவளே!இன்று
நுகமெறிந்து மெளனம் ஏனோ?
யுகமெல்லாம் எனதான யாகம் என்றவளே-இன்று
எந்த யுகமேந்தி யூகம் யூகித்தாய்?அன்று நீ
யாகித்த யாகமெல்லாம் இன்று யதி கலைந்து
சுதி எல்லாம் சுரமேந்த நான் சுகிக்கும் சுரம்
பூப்பிழந்து புலர்வழுகி புன்னமெல்லாம் புகையாக??

எழுதும் ஏணமெல்லாம் என்றும் நீ நீராகராமா?
உழுதும் ஊனமெல்லாம் ஊன்றும் உசாவாக- நீ
அழுதும் தொழும் ஆரமெல்லாம் ஆயிழையே-உன்
பழுதில்லா பாசமெல்லாம்-இன்று பவ்வியம் பாதிப்பதேனோ?
பொழுதுகள் போனதிசை போர் கலந்து விழுதுகளாக உன்
செழுமைகளில் என் சேணமெல்லாம் செவிடு தரித்து!

குலவும் கூடிழந்து கூனமது தான் குடி கொள்ள,
உலவும் உள்ளம் அரித்தவளே!
ஆர்க்கும் அபிலாசைகள்-
அபிநயம் ஆய்ந்து அந்தரத்தில் எம் ஆலிங்கனங்கள்.
களம் கொள்ள கலயம் தேடும் கனங்கள்-என்
கண்களுக்குள் கூடு கட்ட குவலயத்தை குலைத்தவளே-என்
அகத்தவளே!

ஆர்க்கும் என் 'ஆ' சுவாசம் சூடு விட்ட பின்
பேர்க்கும் என் பிணவாசல் தரியாதே. ஏனெனில்
இழந்தபின் இருப்பெழுதும் ஈனத்தை
என் இறப்பின் பின்னாவது!?

இந்த
பிறப்பின் பின்னல் பிரிக்கும் பீரிகைகள்
பிறை எழுதட்டும்-இருக்கும் போதே இன்னல்களையும்,
இனியவைகளையும் இதமாக இனம் காண,
இலங்கும் இதயம் கொள்ளா என் கொலுவிருப்பே!
இனியாவது பூப்பெய்தும் புரிந்துணர்வுகளை புறந்தள்ளாமல்
இயங்கும் இனங்காணும் இலவல்கள் இருப்பெழுதட்டும்.

வாழ்வில் இன்பமும்,துன்பமும்
காலநிலைபோல் காத்திரம் இல்லாதது.
குளிரும்போது வெட்கை கேட்கும் உடல்
வெட்கையின்போது குளிர் கேட்கும்-அதுபோல்
துன்பத்தில் இன்பமும், துன்பத்தில் இன்பமும்
தெரியாமலே எம் தோள் சேரும்.குறைகளை
நிறையாய் கொள்ளும் மனம் உண்டாக்கின்,
மருவும் மையங்கள் மாயமேந்தும்.

உருளும் காலங்கள் எந்த வேதனையையும்
மருளகற்றி மாயம் அகற்றும். எதையும்
நேரான மனமேற்றி முறையாக ஆய்ந்தெழ,
அத்தனையும் அகம் விரிக்கும்.ஆக புரிதலின்
புளகாங்கித்தை சிறகொடித்து சிதைத்தவளே!

இனியும்,
விதைத்தவைகளை வினையறுக்க அகம் கொள். என்றோ
ஓர் நாள் உன் நுகங்கள் உனதான இருப்பெரிக்கும்-அன்று
அழுது ஆர்ப்பழிக்கும் அவயங்களை,
என்ன செய்வதாக உத்தேச உறுப்பெழுதியுள்ளாய்?

திங்கள், 14 டிசம்பர், 2009

தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.


நிமிர்வெழுதிய எம் நித்திலனே-தரணியில்
எம் சாரம் சாற்றிய சத்தியனே
உரிமைக் குரலின் உருத்திரனே-நீ
கருமம் ஆற்றிய கச்சிதத்தால்-நாம்
விறுமம் பெற்றே வீரியம் வீற்றோம்.

அரசியல் ஞானியே!
உன் ஆளுமைகளே எங்கள் அரண்களாக,அதன்
சாரங்களின் சாளரங்களே சத்தாக!
உந்தன் உலக வலத்தில் உறுப்புக்கள்
உயிர்ப்பெய்தே "உசா´ வந்தன.-ஆயின்
மனிதமற்ற பிண்டங்களால் எல்லாமே????

தனக்காக வாழாமல் தமிழீழத்திற்காக வாழ்ந்த
தத்துவஞானியே!
சத்தியனே!
பார் இந்த பாரில்--
எம் பரப்புக்கள் எல்லாம் வரப்பிழந்து-
பாறி,
அரசியல் அனாதைகளாக அவனியில் எங்கள் பவனி—
யார் ஆற்றுவார் எங்கள் யதார்த்த யாதகத்தை?

உனதான உறுப்புக்களை உலகறியும்—எமதான
தரப்புக்களை எவர் அறுப்பர்?
கானகங்கள் கருகுகின்றது.
உனதான இழப்புக்கள் ஆற்றாமைக்கு அப்பாற்பட்டது.
விழுதாக நீ எறிந்த வியர்ப்புக்கள் என்றாவது
நுகம் நூர்க்கும்.
நம்பிக்கையே வாழும் நமக்கு ஓர்மம் தரும் ஓணம்.

உன் நினைவுகளை எங்கள் கரம் என்றும் இறுகப்பற்றி
நாளைய விடியலிற்காய் நாம் உழல்கின்றோம்,இல்லை
உயிராக உழுகின்றோம்,உலகப் பரப்பில்
எங்கள் உரிமம் கோரி-
உளதான உனது பாதப் பரப்பில் உதயம் தேடி.

உத்தமர்கள் எத்தனையா நாம் இழந்தது.எல்லாமே
நாளை ஓர் நர்த்தனம் எம் ஈழப் பரப்பெழுதும்.
விடியல் தேடும் விடுதலை களம் காண
நாம் நாளும் பொழுதும் நயமாக உழைப்போம்.
ஆதலால் நாம் ஆழும் அழுகலை ஆர்ப்போம்.

ஈழ தேசத்தின் எழ குரலே!உன்
ஆர்ப்புக்கள் அழுகலாகிப் போகா,
சத்தியவேள்வியின் சாரங்கள் சங்கூதும்-நாளை
வித்தகராம் எம் மாவீரம் சந்தித்த சாரங்களாய் சாரல் தூவும்,
அது தமிழுக்கு உண்டு நாடென்றே நாயனங்கள் ஊதும்.

எம் தேசத்தின் தேமாங்கான தேசத்தின் குரலே,
உமதான அரசியல் தத்துவம் அன்று அரங்கேறும்.
நாட்டுக்காக தனை ஈன்ற செம்மலே உன் தாபனத்தின்
மேல் நின்று எமதான அந்த அழகிய தேசம்-உன்
பெயரெழுதி பெருமை சேர்க்கும் பொய்கை கூடும் வரை
எங்கள் குவலயம் சோராது.

பூமிப் பந்தில் புலரும் உந்தன் கனவுகள்-அந்த
கலயம் காவும் கனதியாக எங்கள் கனவு நனவாகும்,
அந்த பொன்னான நாள் புலர புலம் பெயர்
உறவுகள் நாம் உங்களின் ஓர்மமான நினைவுகள் புடை
சூழ ஓயாமல் உழைப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இந்த வேதங்கள் உலகொலிக்க,
உங்கள் ஞானங்கள் வழி சமைக்க,
தூங்காத கோணங்கள் கொலுவமைக்க,
ஈழ இதயத் தூயவன் வலுவூட்ட,
நீங்காத நினைவெழுதி நேர்மையாய் நெய்வோம்.
தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.

திங்கள், 7 டிசம்பர், 2009

இவ் வையகம் எந்த உவப்பள்ளி முன்னுரை எழுதப் போகின்றது?


மனையாளை நினைக்கின்றேன்
மற்றும் எமது மக்களை எண்ணுகின்றேன்-என்
சுற்றம்,உற்றார் உறவினரை உற்றே நோக்குகின்றேன்,
சூழலில் சுகமாற்றும் சமூகத்தை சார்ந்து பார்க்கின்றேன்.

எவரிடத்தும்,ஏதோ சோகம்,
கவழ்ந்திருப்பதையே காணக்கூடியதாக--
சுவரிடத்து ஒட்டப்பட்ட கறைகளாக,
ஏதோ களங்கம் சுரப்பதாக---
இடர் தாங்கி இழையோடும்,
சொல்லவெண்ணா துயர் துலங்குவதாக--
படர்ந்திருக்கும் பார்வையே என் படரலில் பரவுகின்றது.

போலியான புன்னகை,
விரக்தியான பார்வை,
இலக்கற்ற இழப்புக்களின்,
இன்னதுதான் என்ற இயல்பை கூறவும்,
கிரகிக்கவும் முடியாத,
ஒரு உன்னத இழப்பை உயிரினும் மேலான ஊட்ட சக்தியை
உறுதியுடன்,இரும்பை ஒத்த இருப்புடன்
உலாவர உவப்புக்களை, உரசவிட்டூ--

உலகப்பரப்பெங்கும் உறைந்திருக்கும்--எம்
உன்னதங்களின் ஏக்கப் பெரு மூச்சில்-ஈழ
மண்ணின் மகோன்னத,மருவற்ற,
மகோற்சவர்களின்-
தியாகங்களின் வரையறைக்கு அப்பாற்பட்ட-
உதயங்களின்,உற்பவங்களின் இலங்கல்களிற்கு -இவ்
வையகம் எந்த உவப்பள்ளி,
முன்னுரை எழுதப் போகின்றது?

அவலம் விதைத்தவனிற்கே அதை ஆவணமாக்க.


சிரிப்பெழுதும் நேரம் எம்
சிந்தை கொள்ளுமா?இந்த
விரிப்பெழுத எங்கள் களம்
வியப்பேத்துமா?

ஆகும் என்பதாக எந்தன் ஆவி அள்ளும்
அனந்தம் வெறும் ஆசைதானா?இல்லை
ஆக்கினாரே என்று இணையம் அரற்றும்
ஆக்கம் மெய்தானா?

குழப்பம் குடி புகும் குதர்க்கம்
குலம் சூடுமா?இது என்ன மாயை என்றே மனம் இருள் சூடுமா?
ஏதா ஒன்று ஒளி கூட்டும் என்ற உத்தி உயருதே.காலம்
கருவூட்ட காத்திரு என்றே புத்தி புலருதே.

யார் குத்தினாலும் ஆரியப் பழு தீர்க்க அனல்
அரியும் அவை கூடுமே! இந்த அரிய நீதி அகம் ஆற்றுமே.
அவயம் புனையும் ஆக்கமான இந்த தேற்றம்
அனிச்சையாகவே அவனியில் அரன் அமைக்குமே.

வெங்களம் இப்பா வேறு திசைதான்,ஆனாலும்
வேட்கைகள் சுமந்த அந்த நேத்திரர்கள் நேர்த்தியை முடிக்கும் காலம்
கண் அசைவிற்காய்,
உறங்கு நிலை யாத்த அற மெளனர்கள் இயற்றும் இந்த
துறவு நிலை தூரமகற்றி தூர் அள்ளுவர்,துலங்கும் துயரம் துடைப்பர்.

இது தொலைதூர கனவாகாது,
நனவாகும் லயம் லாவகமாக இலங்கும் இணைப்பிற்காய்
இருளிற்குள் எங்கள் இளையோர்கள்,நாளை ஒன்று கூட்டி
நாட்டுவர் நலங்கிடும் நமது கொடி.

புரிதல் என்றும் தெளிவானால் குழப்பம் குன்றும்.
தெரிதல் அதில் தேர்வானால் உறுதி ஊன்றும்.
சரிதல் உலகில் சாசுவதமில்லை புரிதல் வேண்டும்
விரிதல்,விழ,விழ எழுதலே சரியென்ற தைரியம்
எரிதலை அழிக்க விழுதேந்தலே-அக
அரிதலை அழிக்க ஆற்றலான ஒளவ்வியம்.

செரிக்கும் மனம் வேண்டும்,உரிக்கும்
உணர்வேந்த உய்விக்கும் உரிமையேந்த
புனருத்தாரண புது வித்துக்கள் புலம் ஏந்த
சீவாருத்தாரண சீவியம் சுரக்க,
எரிதலை எரிதணலாலே!
எந்த ஏகாந்தத்திலும் ஏந்தவே வேண்டும்.
அவலம் விதைத்தவனிற்கே அதை ஆவணமாக்க.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.


அஞ்சாத தளம் இது,
ஆர்ப்பெடுத்த நிலையிது,
இயல்பினிலே ஈர்க்கும்.
உறவது உரிமையை உரைக்கும்.
ஊக்கமாய் உறுதி ஊட்டும்.
எதிர்ப்பதில் அது ஏணமே ஏற்றும்.
ஐயமகற்றி ஆவன ஐக்கித்தே,
ஒப்புரவாக்கி ஓதாமல் ஒப்பித்தே,
ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.

எங்கள் கொற்றவனை!
வெஞ்சமர் நாயகனை,அரசியல் ஆற்றலனை,
துஞ்சாத அந்த சூரிய தேவனை,
விஞ்சாத அந்த விற்பனனின் வீரிய வரவை!
மிஞ்ச முடியயாத அந்த மூத்தவனை,

எங்கள் களமிறக்க வேண்டுமெனில்,
ஏற்ற காரியம் ஏற்றமாய் முடிப்போம்.
திண்ணியமாய் அந்த,
தீர்மானத்தை திடமாய் முடிப்போம்.
வழுவில்லா வரம்பாய்,
பழுவில்லாமல் இத் தரணியில் தாக்குதல் செய்வோம்.

உருத்திரனின் உயர்வான ருத்திரங்களை,
ரூபமாய் ஆக்குவோம்.
நரித்தனம் இனியும் ஞாயிக்க விட்டிலோம்.
பரித்தலம் பற்றும் பாதையை விலத்தி,எங்கள்
கைத்தலம் பற்ற கனதியை கலப்போம்

இயற்பது இயல்பாய் அது இலங்கும்.


சிலிர்த்தவைகள் என்றும் சிரிக்கும்,
இயற்பது இயல்பாய் அது இலங்கும்,அங்கு
உதிர்ந்தவைகளும் ஓர் நாள் உயரும்,இது
ஓர்மங்களில் ஒளிர்பவை,எனவே
தர்மங்களின் சாட்சியாய் தடயமாய்
தரை விரியும்.

நிமிர்வுகள் உடனே நிர்ணயிப்பதில்லை எதையும்
அவை அவைகளின் அலுப்புச் சலிப்பிலேதான் உயிர்த்தெழும்
இது காலச் சக்கரத்தில் காத்திரமான காட்சிகள்,காடுகள்தான்
இன்று நகரம்,அது இந்த நிலை பூக்க இழந்தவைகள் எண்ணிலடங்கா,

எத்தனை உயிர்,உடமைகளில் எரிந்தவைகள் ஏராளம்,
அத்தனை இழப்புக்களையும் ஈய்ந்தவர்களையும்
இலக்கற்று,இழைத்தவர்களையும்,ஈனத்தனங்களால்
இயக்க மறந்தவரையும் இலக்கற்று இந்த யுகம்?????

இன்று இமயமாய் சனநாயகம் பேசுகின்றது.
பேடித்தனமான பேகம் இல்லை போகம்
பலவற்றின் பாமரத்தனமான,அல்லது ஈனத்தனமான
மனிதாபிமானம் மரத்த போக்கில் எல்லாமே,
ஒன்று மட்டும் நெடுதான உண்மை
நாம் நடமாடும் உலாத் திசையெல்லாம்
இரத்தமும்,சதையுமாக
அழுகையும்,ஓலமுமாக,
எதிர் பரப்பெல்லாம் பரத்து,
விழுதெறியா,விழுதறியா
விகல்பாய்,விதை சிதறி.

நெஞ்சம் நெகிழ்வேத்த,ஏந்த
இந்த வையப் பரப்பு இராகு காலம் பார்ப்பதில்லை,
அதன் இயங்கு தளம் அதன் பலத்தில் இல்லை.
பலமான பார்ப்பனர்களிடம் இந்த வையத்தின் மையங்கள்.

இங்கு பலமான பாத்திரர்களே பாதை விரிப்பார்,அஃது
அற்றவர்களெல்லாம் அற(ர)வாணிகளே.
கனிம வளங்களெல்லாம்,கற்றவன் பாதையில்
காசு பணத்துடன் பத்திரமாய் பற்றேந்தும்.

இனமான உணர்வெல்லாம் இந்த வையத்தில்
வளமேற்றாது,
கனதியான உணர்வேந்த அதை பயங்கரவாதமாய்
இப் பரப்பு பரப்பெழுதும்.
ஈடாடிப் போனாலும்,இந்த இகம் இலங்க மனமெழுதாது.
வாழும் பரப்பிழந்து நாம் ஆயுள் பூராய்
அக நாட்டிலும்,புல வாழ்விலும் பரி பூரணமாய்
நாம் புலமேவிலும் புதிய அகதிகளே.

எனினும்
இப்போதும் நாம் ஒன்றாய் இயங்க மறுத்தால்
மாற்றுக் கருத்தென்று வடம் இழுக்க வகை இழந்தால்
போற்றும காலம் பொலிவிழக்கும்,
தோற்றம் இனி தோரணை இழந்து
மீண்டும்,மீண்டும்
தோணி ஏறவே சோரம் சேரும்.
இணைந்திங்கு இயற்ற மறுத்தால்.
வேண்டாம் வேதமெழுத வேகமாய் வா.
சிலிர்த்தவைகள் என்றும் சிரிக்கும்,
இயற்பது இயல்பாய் அது இலங்கும்.
இலங்கவா --இழக்கவா?
இருதயம் இதந்து இயங்க வா.

சனி, 28 நவம்பர், 2009

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.


அருகிருந்த துணையின்றி
அழுவதில் சுகம் வருமா?
மனம் விட்டு அழுவதில்
மானசீக சுகம் உண்டு. நெஞ்ச பாரமதை,
இறக்கிவிட பஞ்சாகும் நிறைவுண்டு.

செயலது எம்மாலே நாமே இயக்கவேண்டும்.
எமக்காக நாமே எம்மையும் இலக்கவேண்டும்,
இழப்புகள் இலங்குவதும்,இயற்கையாய் நடப்பதுண்டு,
ஈடாட்டம் கொள்வதுவும் இயல்பாய் இலங்குவதுண்டு:

ஒன்றனதன் இழப்பிலே ஒன்று மலர்வதுண்டு.
நின்றனதன் நிலைப்பதனை நித்திலத்தில் நீயும் உணர்.
கொன்றதன் கோலத்தை கோபுரமாய் கோர்த்துவிடு.
அன்றனதன் காரியத்தை அன்றன்றே ஆற்றிவிடு.
ஆனது ஆகட்டும் ஆர்வமாய் அகன்றுவிடு.

சிந்தனையின் சூட்சுமத்தை சீராக நீவி விடு.
நிந்தனை செய்பவரை நிட்சயமாய் விலக்கிவிடு.
சொந்தமென்று சொக்க வைக்க சோபனமாய் உறவு வரும்.
பந்தமென்று பதவிசாக பாங்குடனும் உலவி வரும்.
உந்தனது உற்பவத்தை உருவவும் கோலமிடும்.
உற்சாகம் ஊட்டுவதில் உறவறுக்க உலவிடும்.ஆகவே
அற்பர்களே இப்படி அடுக்கடுக்காய் அனலிடுவார்-உந்தன்
அற்புதமான ஆற்றலினால் அத்தனையும் தவிர்த்து விடு.

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.
சுற்றம் சூழத்தாரை எந்த சூழலிலும் சுரண்டாதே.
குற்றம் குறை கூறாமல் குன்றாத உதவி செய்.
மாற்றம் எந்த வேளையிலும் தோற்றமின்றி தோன்றி விடும்.
மாநிலத்தை புரிந்து விட்டால் மார்க்கமதும் தேற்றி விடும்.

சுகமான வாழ்வுனக்கு சூத்திரமாய் எண்ணாதே.
அகமான வாழ்வில்லை அடிக்கடி மறக்காதே.
முட் கம்பி வேலிக்குள்ளே உன் முதுசங்கள் அகதியாய்
முடிவுறாத வேதனையில் முடிச்சுள்ளான் எதிரியவன்
முடிவெடுக்க நீயும் முகாந்திரமாற்ற வேண்டும்.முடிந்தவரை
அவர்கட்கு முனகாமல் உதவி செய்.

வியாழன், 26 நவம்பர், 2009

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.


பூபாளம் புலரும்
பூமிப் பந்து மெல்ல அசையும்
புள்ளினங்களும் மெல்லிசை இசைக்கும்
நீர்ப் பரப்பெங்கும் நெகிழும்
ஆலோலம் பாடும் செடி,கொடி,மரங்களெல்லாம்
ஆலிங்கனமாய் ஆரோகணிக்கும்,
வான் பரப்பை மென் முகில் வையப் பரப்பெங்கும்
நெகிழ்த்தி பரவசமாய் பாவும்.
இந்த இயற்கையின் இந்த பரப்பளையும் முகையை
பரவசப்படுத்த பகலவனின் பார்வையே முகாந்திரம்
முகிழ்த்த மூல காரணம்.

சூரியனற்ற பூமிப் பந்தை
யாராலும் கற்பனையிலாவது காணமுடியுமா?
ஆதவனில்லா அவனியை அகப்படுத்த முடியுமா?
மேய்ப்பானில்லா மேனியர் மேதினியில் மேன்மை கொள்ளல்
மேய்ந்தவர்கள் காண்டீரா?
ஆலிங்கனமற்ற ஆனந்தம் அவனியில் ஆர்ப்பதுண்டோ?
ஆயிழையாள் அற்ற அறமெங்கும் உண்டோ?
அவர் தம் மழலை இன்றி அரனேதும் உண்டோ?

இத்தனைக்கும் மூலம்
ஆதவனெனறால் மறுப்போர்தான் உண்டோ?
இதைவிட வலிமை உள்ள வையவர் யாரும் யாண்டால்
பூமிப் பந்தே புவனத்தில் பூண்டே.
இத்தனை மகிமையின் மையலை ஒத்தவன்
ஈழத் தமிழர்க்கு இளையோன் எங்கள்
கிழக்கின் கீர்த்தனன் வல்வை மண் ஈன்ற
மைந்தன் ஈழ வேந்தல் பிரபாகரன் தவிர வேதம் உண்டோ?

தமிழ் இலக்கியத்திற்குள் அடங்கா இலக்கணமவன்,
ஈழ விடுதலைக்காகவே அவதரித்தவன்,ஈழ வானின்
பகலவன்,பகைவர்க்கு சிம்ம சொப்பனவன்,பாங்கானவன்
தமிழீழ விடுதலை வேட்கை பூத்தவர்க்கு பா“ அவன்
எழுத,எழுத இனியவன்,பகை பரப்பளந்தவன் பாரில்
பூக்கும் புவன தமிழீழ கட்டுமானத்தின் கரை கடைத்தவன்:

ஆதலால்தான்
அயலவர்க்கு அமுதமானவன் அவர்தம் ஆளுமையில்
பெரும் வீச்சேந்திய அசகாய நர்த்தனம் நாட்டினான்.
இவ்வளவு கட்டுமானங்களின் ஒப்பீட்டளவற்ற ஓங்கார நாயகனின்
ஒவ்வோர் அசைவிலும் கட்டுண்ட காத்திர நாயகர்கள்தான்
எத்தனை பேர்,
அத்தனையும் எங்கள் மாவீரச் செல்வங்கள் என்றால் மிகை ஏது?
இதில் வகை என்று வேறுண்டா?

விடியல் ஒன்றே இலக்கு
ஈழம் விடியும் இமாலய நாயகனின் பெயர் உச்சரித்து
எம் பூமியை புனிதமாக்கிய சரித்திர நாயகர்களே!
உங்களின் தியாகத்தை எந்த மொழிகளிற்குள்ளும் கட்டி,
அவை
சொரியமுடியாது.
ஆம் இதுதான் யதார்த்தம்.

தமிழினம் என்றால் அது தலைவன் பிரபாகரன் பெயரின்றி
அசைவை ஆர்க்காது.
உதிக்கும் திசை பார்க்கும் எம் உத்தமர்காள்.
ஆதவன் யார் சொல்லி ஆழிக் கரை ஏகுவான்.
இடம்,
பொருள்,
ஏவல்,
காலப் புற யதார்த்தம்,
இத்தனையையும் அறியும் ஞானம் படைத்தவன்
ஈழ ஞாயம் அறிவித்தவன்,
அவனறியா கால,நேரம் யாதும்
உண்டோ?
ஆகவே என் இனிய ஈழ தேசத்துறவுகளே!

எங்கள் அன்னையிலும் மேலான பூமிப் புதல்வர்களாம்
எம் மாவீரர்களை நெஞ்சார அவர்கட்கு புனிதமான
வீராஞ்சலி மானசீகமாக மைத்து வீர சபதம் செய்வவோம்
வாருங்கள் அணி,அணியாய்,
இன்று நாம் பேரணியாய் செலுத்தும் பேராண்மையான அஞ்சலிதான்,
எம் பேராளனாம் அண்ணன்,பெருந்தலைவன் பிரபாகரனிற்கு கூறும்
பிறந்த நாள் நற் செய்தி ஆகும்.

நெஞ்சம் கலங்குமா?
நினைவு சிதையுமா?
துஞ்சும் கோலத்தை தூமணி துய்க்குமா?
இல்லை!
கலங்கும் நாளல்ல,
காத்திரமான,நேர்த்திணை நீட்சிக்கும்
நேரிய நாள் பூத்திருப்போம்!
புது வாழ்வு புலவ யாத்திருப்போம்.
ஒப்பாரும்,மிக்காரும் அற்ற பெருந் தலைவனின் வீர --
வரலாற்றிற்கு வித்திட்ட இந்த வீரிய நாளில்
எம் ஆயங்களை அகன்றெடுப்போமென சித்திக்கும் சித்தம் கொள்வோம்.

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.

புதன், 25 நவம்பர், 2009

அகமாக உற்பவத்தில் உரமேற்ற!


அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
என்ன கடனாற்ற போகின்றோம்?அவர்
தூய உள்ளம் புளகாங்கிம் புலவ என்ன,
கருமமாற்ற பாத்திரமேந்துவோம்?

ஆத்ம சோதிகளின் மூல தானத்தில் என்ன,
முதுசம் முகிழ்விக்க முன் நிற்கப் போகின்றோம்?
அவர் முன்றலில் முகம் புதைத்து எம்
ஆற்றலை ஒன்றாக்கும் வரம்கேட்போம்.

அவர் தம் தாகம் தீர்க்க வலு கேட்போம் –அந்த
உறுதியின் உறைவிடத்தில் முகனமர்ந்து எம்
ஈழ தாகம் இழைக்கும் சத்தியம் சாற்றுவோம்,
சோர்ந்து போகா வல்லமை யாப்போம்.

எம்!
இனிய தேசத்து தேமாங்கின் முத்துக்களின்,
முகாந்திரம் மீட்கும் பணியை இன்னமும்,
இன்னமும் ஆக்ரோசமாய் முன்னெடுப்போமென,
இங்கிதமான சங்கீதத்தின் சாத்தியம் சாற்போம்.
வாருங்கள்!
எம் இனத்தின் விடுதலை விரும்பிகளே.

அந்த புண்ணியர்களின் பூர்வாங்க சந்நிதியில்,
ஆத்மார்த்தமாய் ஆழ புதைந்து,
அவர் யாகங்களை,
ஆழமாய் தொழுது,
அவர் மன சாந்தி கொள்ள,
பாதி வழி பயணத்தை நாம்
சீராய் முன்னெடுப்போமென
எம்!
சத்திய வேள்வியின் சாரங்களை,
சாத்தியமாய் வெல்வோமென,
நித்தியமான உங்கள் ஈழக் கனவை
நிச்சயம் வெல்வோமென ---அந்த
உத்தமர் மூலத்தில் முகங் கொள்வோம்.

ஈழக் கனவுடன்
ஈகையான உம் உறவுகளினதும்
வித்தகமான விதை குழி மீதொரு
சாசனம் எழுதுவோம்,அதுவரை
இந்த!
சாகித்தியமான சாகரங்கள் சகக் கொள்ளும்.
விதி வெல்லும் விற்பனங்களை விசாலமாக்குவோம்.
வாருங்கள்
எம் தேசத்து புலர்வுகளே,
„மா‘‘ வீரர் சந்நியில் எங்களின் ஆதங்கத்தை
அரங்கேற்ற அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
அகமாக விளக்கேற்ற.

விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.


மனிதம் கொன்றவன் மனிதம் பேசுகின்றான்.
மா“ பலி கொண்டவன் மாறு வேடம் பூணுகின்றான்.
நரபலியை எப்போதும் நாணாக கொண்டவன்,
நாட்டில் நாணயத்தை நாற்றிடப் போகின்றானாம்.

உலகம் போகும் ஊற்றைப் பார்த்தால்,எதுவும்
புலவுவதான பூடகமும் புரியவில்லை. ஏனோ?
நிலவுவதெல்லாம் நீதியின் நீட்சிபோல் கலவுகின்ற,
தலங்களெல்லாம் தாங்கியே போமோ? தமிழரின் துயரை,

தமிழனிற்கு துயரம் சிங்களவன் சூட்டியதில்லை,ஆம்
வரலாறு அதைத்தான் வலிமையாய் வகைக்குது,திரும்பி
சரிதம் தரிசிக்க சதிகள் புலவுகின்றது.இது இன்றும் தொடரும்
தொடர் வரலாறு பாரே பார்க்குது.எள்ளிச் சிரிக்குது.
தமிழன் கோடாரிக் காம்புதான் மாற்றுக் கணுவில்லா
காலக் கலமத்து.

ஒல்லாந்துகாரன்!
எந்தையர் மண்ணில் காலடி
வைத்த காலம் முதல் இன்று கரிகாலனின்
பொற்காலம் ஈறாக -----
தன் இனத்தை தானே அழிக்க முதுசம் சூட்டிய மூதேவிகாள்.
மதம் புனைந்தான்—மறைக்க ஈன இனம் புனைந்தான்.
சாதி, பேத, வர்க்கம் வரைந்தான்.கூடவே தமிழர்க்கு
நாக்க எலும்புத் துண்டினையும் அன்றே எறிந்தான்,
நில,புல ஆக்கிரமிப்பாளன்.

மான தன்மான சிந்தனையால்,
இன விடுதலையின் ஈர்ப்பால்,தன் சுயம் இழந்து
தன் மூச்சையே ஈழ விடுதலையின் பால் இறுமாந்து
காட்டியவர்களின் காலமிது.,
அவன் அந்த தார்மீகத் தலைவனின் அணியாக,
எத்துணை கட்டுமானங்களை காத்திரமாய் கட்டியெழுப்பி,
இவ்வளவு காத தூரமும் காவியமாய் சுமந்தானே,
எத்துணை ஈக,ஈர மாவீரங்களை இந்த மண்ணிற்காய்,
அதன் விடுதலைக்காய் ஈடு,இணையற்ற எங்கள்-
தலைவனின் ஏன்?
எங்களின் தேசிய இலட்சியத்திற்காய்---

இன்னமும் இந்த தேசிய மண்ணை நேசித்ததினால்
அத்துணை சொந்த,பந்தங்களை நாம் இன்றும்
இழக்க!
வழி வகுத்தவன் சிங்களனா?இல்லையே
இன்னமும்
தன்னையும் டமிழர் என தனக்குத்தானே தாம்பாளம்
தூக்கும் இந்த கோடாரிக் காம்புகள்,என்றால் தவறென்ன?
யார் சாற்ற முடிவுறும்?

இன்றும் முட்கம்பி வேலிக்குள்,
முகம் புதைக்கும் எம் மேனியரின் துயராற்ற,
எந்த பிதாமகன் பிறவிக் கடனாற்றுகின்றான்?
சுய நலத்திற்குள் சூடாற்றும் இவர்கள் சூரணர்களாம்.
இன்னமும் சிலதுகள் இன்றும் சிலம்பம் சுற்றுகின்றனர்.
சூடு சுரணையற்ற சிங்களரின் குதம் நக்கும் குரங்குகள்.
இந்த இலட்சணத்தில்
தேர்தலாம் அதற்கோர் கூட்டமாம், கொற்றமாம்.
சா“ வீடே இன்னமும் முடியவில்லை,விடியலில்லை.

இற்றைவரை தாய் மண்ணிற்காய் ஈகையான
எம் „மா“ வீரம் மீது தலை சாய்த்து அவர் மீதொரு
சாகித்தியம் தீட்டி எங்கள் தேசக் கடனாற்ற
தேர்ந்த புயலாய் மீண்டு(ம்) எழவோம்.
எமதான தேச ஈகையர் எமக்கான உந்து சக்தியாய்,
விழி நீட்டி வழி காட்ட,தேசத் துரோகிகளையும்,
எட்டப்பரான, ஒட்டப்பர்களையும் ஓர்மத்துடன்,
ஓணமான ஓர் ஓரம் கட்டி!

எங்கள் ஈகையர்களின்,
சந்நிதியில் தலை வணங்கி,
அவர் தம் தாகம் தீர்க்க,ஓயாமல் ஒழியாமல்,
ஒளிர்வோம்,அவர்தம் நினைவால் நிமிர்வெய்வோம்.
புலம் பெயர் எம் இனிய,
ஈழ இளைய தலைமுறையே!
தேசத்தை நேசிக்கும் எம் ஆத்மார்த்த இனிய உறவே!

தீப்பொறியாக உனக்குள்,
அனல் கக்கும் ஆளுமையை,அந்த ஆற்றலை
தேசத்தை நிர்மாணிக்கும் உன் உறுதியை
உன் ஆத்மார்த்த கீதார்த்தமாய்,
சுகமான சுமையாக சூரியத் தேவனின் சூத்திரத்திற்குள்,
சூசகமாய் சுரமூட்டு.
அகம்!

அந்த ஆளுமைக்காய்,அணையாமல் ஆறாக
ஆங்காரமாய் அனந்தமாய் எரியட்டும்.
விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.

செவ்வாய், 24 நவம்பர், 2009

துணைக்கு நீயும் சுமை தூக்க தூயவர் பாதை சேர்.


வலி தந்த வேதனையின் வாசலை துடைத்து,
பலி கொண்ட பாதகரின் பாதங்களை கடைந்து,
புலி கண்ட பாதையினை புனருத்தானம் புகுத்தி,
கிலி கொள்ள வைப்போமடா கீசக வதம் படிப்போமடா.

வலிமை என்பதை வாசகமாய் கொள்ளாமல்,
வார்த்தெடுக்க வேண்டுமே எம் வாசலதை மீட்க,
புலம் பெயர் மக்களெல்லாம் புது வேகமேற்றி,
வலம் வரவேண்டுமே வாசலது நிறைய.

முட் கம்பி வேலியடு தானாக திறவாது,எங்கள்
கட்டுமானம் கனதியாய் சுரவாமல்,
தொட்டுச் சொல்லும் வேளையில்லை,பகையை
சுட்டுக் கொல்ல கோலம் கோர்க்கும்.கொண்ட-
கோலமெல்லாம் கொலுவாய் மாற்ற.

விட்டுச் செல்லும் வேளையில்லை-விதியென
கட்டுக் கதை இட்டுச் செல்ல,சுற்றும் பகை சூழ,
எட்டாத பாதையெலாம் எம்மவர் எரித்தே வென்ற,
காலமழியா காவியமாக்கி வைத்த சுவடதை அழியவிட.

விதி சொல்லி விகன்றழ வீரியம் விரியாது,
எதிர்த்தால்,எழுச்சியுடன் போரிட்டால்,
உதிக்கும் உறுதி,இல்லையேல் அழிவெனினும்
மதிக்கும் மானுடம் மறு பிறப்பேந்தும் போராட்டம்.
விழிப்புணர்வு ஏற்ற வேண்டும் வீதியெலாம் அதுவே வேண்டும்.

விகன்றினி எழும்பா விட்டால் வீதி கூட-
விதியாய் ஏற்காது,
அகன்றிதை அகமே ஏற்று ஐயத்தை அகற்றி எழு.
பகன்றிடும் பாதை பரக்க பாரமிறக்கி பாதை கீறு.
தகன்றிடும் தர்க்கமெல்லாம் தாளாமையும் தானே விலக.

உனக்கான பாரத்தை நீயே தாங்கணும்-
ஊர்கூடி தேர் இழுக்க நீயும் உதவணும்.
தனக்கான பாதை இல்லை ஈழ தமிழர்க்கான பாதை இடு.
மனக் கணக்கம் பார்த்தாயானால் மரணமே மையல் பூணும்.
தனக்கென வாழா நெஞ்சம் தன் தாயவர் நிலம் மீட்க.

மாவீரர்க்கு எமதான மாவீர வணக்கம்.


மானசீக மார்க்கமாய்,
ஞாலமதில் ஞாற்றுகின்ற ஞாயம் கொண்டோம்.
சீலமவர் சிந்தையில் சீட்டி சுரந்த சீவியத்தை,
காலமதில் கனம் கொண்டு,
காத்திரமாய் காத்து நிற்போம்.

போராளிகள்.
இவர்கள் போர் ஆழிகள்.
வேரோடிய எங்கள் வேதனை களைய,
ஊராடி, உறவோடி, சீரடி சேர்ந்த சீர்காளர்காள்.
நீரோடி போகாமல் எங்கள் நியமங்களை நிர்ணயித்து,
நார்த்து நிற்கும் நாயகர்கள் ஈழத்திற்கான,
வேதாகமத்தை வேதித்த வேதியர்கள்.

உறைகின்ற உயிர்ப் பரப்பில்,
உயிர் இழைத்த இனியோர்கள்,இளையோர்கள்.
கறை படிந்து போகாமல் காலக் கடனாற்றிய காவியர்கள்.
ஆதலால் இவர்கள் ஈகம் இழைந்த இனியோர்கள்.
வேர்த்திரா வேதியர்கள் வேங்கைகள்.
பெரு வெற்றிகளின் நாயகர்கள்.

ஐயா!
உமை உரைக்க உரை கல்லும் உதிரும்.
உமை எழுத மனப் பரப்பு விரியும்.
ஒப்புவமையற்ற ஓங்காரம் ஒலிக்கும்.
ஒற்ற முடியாத ஓர்மங்கள் ஓங்கும்.
வற்றாத சீவிதங்களாய் உங்கள் வாகைகள்-
வரையும் வேற்று விகார மனங் கலைந்து,
வெட்கைகள் வெட்கும்.

காற்றிடை கலந்தோரே,
ஆற்றிடை அலைந்தோரே,
ஆழியின் ஆழத்தை அகத்திற்குள் புதைத்தோரே,
நதியின் சல,சலப்பாய் உங்கள் நர்த்தனங்கள்.
போதிப்பிற்கு அப்பாற்பட்ட „ஆ“ தித்தியாகங்கள்,
தானைத் தலைவனின் தார்மீகத் தாற்பாரியங்கள்.
உங்கள் கனவுகள் எங்கள் வசப்படும்—வான்
பரப்புக் கூட அன்று எங்கள் வாசல் வரும்.

தெய்வீகப் பிறவிகளென்றான் எம் தலைவன்.
ஆம்!
தேசப் பற்றாளன் தன் தேசத்திற்காய் தேகத்தையே,
தேர்ந்து தந்தவர்கள்,
ஈழத் தாயின் இனிய பூப் புதல்வர்கள்.
முகரும் தென்றலெல்லாம் முகிழ்ந்துள்ள முகையர்கள்.

நாமிருப்போம் என்றில்லை,
நாடிருக்கும் அந்த நாளிருக்கும்,என்ற
ஞாயம் ஞார்த்த ஞானியர்கள்.
நேர்த்த நேத்திரத்திற்காய்
ஈழ தோத்திரத்திற்காய்,வீரிந்த சூரிய புதல்வர்கள்.

வித்தகர்களே!
தீர்க்க தரிசனம் தீட்டிய திவ்வியர்களே!
தீக்கும் தியாகத்தின் திரவியம் தீட்டிய தீரர்களே!
தாங்கிகளே!
ஈழ தியாக தூமங்களே!
ஈழக் கனவுகள் எங்கள் காத்திரமாய்-
கனியும்வரை,
எங்கள் வயல்கள் எங்கள் எல்லையாக,
வரைபுகள் எங்கள் வாசல் வரும்வரை,
ஓயாது எங்கள் போராட்டம் ஓயாது.

உங்கள் தியாகத்தின்-சுவட்டில்
ஓர்மத்துடன் எங்கள்,
ஓசைகள் ஒலிக்கும்.அது ஈழ வாசல்
உங்கள் வாசலாய்,வலிமையாய்,
சிங்களத்து வெங்களம் விழலாக,
ஈழ பூமியாய் புவி வரையும் பூபாளமாய்.

சிந்திய குருதியின்,
குவியங்கள் அந்த அந்திமத்தை-
சூட்சுமமாய் சுவீகரித்து,
எந்தையர்களின் ஏணங்கள்,
தந்தையர்களின் தார்மீகங்களை,
சிந்தாமல் தரணி தரவு நுகர- வரும் ஈழம் மலரும்.
அதுவரை-
ஓயாத எங்கள்
தார்மீக தாரக மந்திரம் தரணியெலாம் ஒலிக்க.

திங்கள், 23 நவம்பர், 2009

அன்பாக நீ இருந்தால்
அருவியாக சுகம் இருக்கும்.

வியாழன், 29 அக்டோபர், 2009

பிரிகேடியரின் பிரம்மங்கள் பிறவிக் கடனாற்றும்.


முரசேந்தி நின்றவன் ஈழ முகிலவன்,
பகலவனின் வாரிசாக வசம் தரித்து வகைந்தவன்,
உலக வலவில் உண்மைகளை உறுத்தவன்-,மிகையிலா
பலமதில் பாதை விரித்து பரந்தவன்,
செவ்வனச் செல்வன் எங்கள் சேந்தல்களில் இளையவன்,
இனியவன் இலங்குவதிலும், இழைவதிலும்,
ஈடில்லா ஈர்ப்பவன்,நூர்த்தவன் பாதைகளை
நுகை முகை புன்னகையுடன் பூத்தவன்
மிகையில்லா மிடுக்குகளை மிதமாகவே தரித்தவன்,
தமிழ்ச் செல்வனவன்,தார்மீகச் செல்வனவன்.

பிரிகேடியர்,
பிரிவதை தவிர மார்க்கம் மாற்றில்லையென
உரிமையுடன் உலக வலவில் உறுதியாய் உரைத்தவன்,
பரிவவன் பாதையெலாம் புவனம் பூபாளம்தான் புனைய
புன்னகையாலே புலவுகளை புதித்தவன்,
உதித்த திசையெல்லாம் தித்தித்தவன்,
மதித்தவன் மதியின் மரபில் மாண்பின் மனைப்பில்
கொதித்தவைகளை கோலம் கோர்த்தவன்.
ஆதலால்தான்!

எதிரியின் ஏவுகணைக்குள் எள்ளளவும்
தினையாமல் ஏற்றமாய் பிழைத்தவன்,
ஆரியனிற்கு அனலவன்,ஆர
அணைப்பவர்க்கு அனந்த களிப்பவன்,ஆக
இன்னமும் எதிரிக்கு கொள்ளிக் கண்ணாய்
கோலம் அளித்தவன்,

எனவேதான்!
எங்களவனை
எப்படியும் எரிக்க எதிரி முகாந்திரம் முச்சூடும் சூட்ட
தப்பாத தளத்தில்கூட தகமையாய் தப்பித்தவன்.
உப்பிட்ட உளத்தைக் கூட எங்கள் உறவுகள்தான்
உருவழிக்க என்ன மனம் காவி எதிரியில் சரணடைந்தானோ?
பாவி,பரதேசிகளின் பாங்கு எங்கோ,எப்படியோ அரணமைக்க
எங்கள் செல்வன் ஏகாந்த தேசம் நோக்கி அவன்
அறுவருடன் ஈழப் பரப்ழுக ஏகினான்.

அண்ணலே!
ஆரோக்கிய அகத்தவனே,இந்த
இகத்தில் ஈரடி இலக்க மூவடி சறுக்கும்,
முகத்தில் ஈரூடக பாய்ச்சலாய் ஈர்த்தவனே,
தகத்தில் அதன் தளத்தில் என்னே பரப்பளவேந்தினாய்,
பெரும் பாய்ச்சலின் பரமம் நீ-இன்று ஈராண்டு
இலக்கெய்ய ஈழத்தில் எத்தனையோ
இழவுகள் சுமந்து நாம்,ஆயினும் உங்களின்
உறுதியான உலைக்களத்தில் உந்தன்
நினைவு நீவி நாம் நிமர்வெய்வோம்.

தலைவனின்!
தார்மீகங்கள் தளராத பீறு நடை பிறளாமல்,
ஏந்த புலத்தில் புவியில் பூப்பெய்ய-நாம்
உன் சந்தங்களின் சாதிப்பில் சலியாமல்
சகமேற்றுவோம்,
நிச்சயம் சாதிப்போம்,
நிலப் பரப்பில் எங்கள் முகாந்திரம்
முத்தெய்யும்வரை.
அன்று உன் ஆசிகள் அனந்தம் பெறும்,
வனப்பெய்யும்,
வரம்புகள் எங்கள் வயலாக.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பெளதீகம் தர்க்கிக்கும் தாக்கம் தரமேற்ற!


ஏமாற்றும் ஏற்றம் தோற்றம்--யாரை
ஏமாற்றவும் இந்த தேற்றம்,
ஊற்ற,ஊற,வீற்றும் வித்தகம் நாளை
உலகறிய எல்லாமே?ஏளனம் சொட்டும்.

காற்றுக்குள் கூடு கட்டும்
மார்க்கம்
எந்த மையத்தில் மனிதம் ஏற்கும்?
மீள் குடியேற்றமென்ற ஏமாற்றும்
கொற்றம் மகிந்தாவின் ராஜதந்திரம்.
தூற்றுகின்ற துர்க்கன் துகிலுரித்து,
தூர் துவைத்து துளை போட்ட துலாம்பரம்-ஏன்
இவ் வையகம் வாய் பொத்தி மெளனம்?

இளைஞர்கள் இளம் தலைமுறைகள்
இன்று காதகனின் கைகளில் கனதி இழந்து
சான்று யார் சார்த்தார்கள்,கேட்டார்கள்-இவர்
சா“ விளிம்பில் சாகா வரம் பெற்றதை-எந்த
சாத்வீகர் சாகரம் சாய்த்தார்?

ஏய்!
ஐரோப்பிய அறிவாளிகளே,
உன் வரிச் சலுகைக்குள் இந்த வைரிகளை
மடக்கும் மார்க்கம் அறியாயா?ஏன் எங்கள்
உற்றங்களின் சாவினிற்கான உற்பவம் உரக்கக் கேளாயா?
நீதிகளின் காவலர்களே!,
மனித உரிமைகளின் மையர்(ல்)களே!
வெறும் சல்லிக்காசு சதைப்பதற்காக எங்கள் இளவல்களை
ஈனச் சாவாக்கிய,இரக்கமற்ற இருளர்க்காக,

எங்கள் “சா“ மேட்டில்,
உங்கள் சகவாசங்கள்,
வியாபாரிகளே,
வெறும் கஞ்சிக்கும்,மருந்திற்குமா,
வன்னி மக்கள் வ(சு)யமிழந்து தவிக்கின்றார்கள்?
ஞாபகம் உண்டா-
ஹிட்லரின் விச மாடங்கள்?
இருந்தால்!
எங்களை இந்த ஊனத்திற்கு உள்வாங்கியவனை
ஐ.நா மன்றில்
நீதியின் மடியில் நித்திரை நீவ-நீவிர்
நித்திலம் அமைக்கலாமா?

எங்கள் „மா“ விதைகளின்
விரையழிப்பிற்கு என்ன மாதவமாற்றப் போகின்றாய்?
எங்கள் மாநிலம் விரிய இன்னமும்
எத்தனை விதைகளை
ஈகமளித்தும் எங்கள்
மான நிலம் சமைப்போம்,
மார்க்ங்களின் ஈரத்திற்கு ஈகமாய் என்ன
கோர்க்கப் போகின்றாய்?
தர்மம் தலை நிமிர,
தமிழீழம் தரணி தரமேற்றும்.

வியாழன், 22 அக்டோபர், 2009

சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.


திண்ணிய நெஞ்சினர்,
தினவெடுத்த தலைவனின்,
நுண்ணிய பார்வையின்,
நுனிவரை சென்றனர்.
எண்ணிய காரியம்-
ஏற்றியே முடித்தனர்.
எரி தழல் மீதிலோர்-
காவியம் தீட்டினர்.

எதிரியின் ஏற்றத்தை-
உதிரியாய் உதிர்த்தவர்.
குருதியின் குதத்திலே-
கூரிய களத்திலே-
பருதியாய் படித்தவர்.பாரினிலே,
ஈழப் பாரினிலே விடி வெள்ளியாகினர்,
புரவியின் பாய்ச்சலாய்-
பரவியே பனித்தனர்.
இரவின் மடியிலே-
விடிவினை விதைத்தனர்.

வார்த்தைகளின் வகிடுக்கப்பால்-
வைரமாய் வகைத்தவர்,இவர்,
ஈகையின் தொழுவம்,
ஈழப் பாதையின் விட்டம்,
விஞ்சமுடியாத வீரியத்தின் தொகுப்பவர்.

ஆற்றலே,
உறுதியின் உரமே,
மாற்றங்கள் இன்று ஈழப்பரப்பில்,எனினும்
உங்கள் ஈகங்களின் தாகங்கள் தரணியெல்லாம்
தாக்கமாக,
நாளை இந்த தோற்றம் மாறும்,
எங்கள் ஆதவன் உயர்த்திய ஈழக் கொடி
தங்களின் தியாகத்தின் தீப்பிழம்பில்
உலகப் பரப்பில் உத்வேகமாக உயரப் பறக்கும்,

ஞால கதிரதில் அன்று இந்த ஞானியரின்
ஞான விழா,
ஞாயிறாகும்,ஞாயங்கள்
ஞானம் தவிர்த்து நீர்ப்படையாது,

உங்கள் நிறங்களின் உரங்கள் தாகங்களை
தாற் பாரியமாக்கும்.தர்மம் தலை தவழ்வதாக
பவனி என்றுமே பார் மேயாது.
ஈழம் மலர்ந்த பின்பும்-உங்கள்
ஈகங்கள் செழித்தே ஓங்கும்.
கல்லறை மேனியரே உங்கள் களிப்பில்
சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.

என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?


உள்ளம் உறையும்?
உறங்கா உண்மைகள் உயிர் கரிக்க,
உபரிகளாகும் உயிர்களின்
உன்னதம் உறக்குமா?
சின்னங்களேந்தி சிதைக்கும் சின்னத்
தனங்கள்-எங்கள்
வண்ணக் கனவுகளின் வரைபுகளை வறுத்தெடுத்து,
ஈனத்தனம் ஈற்றும் இந்த இழி பிறவிகளை,
என்ன தனம் கொண்டு கறுத்தலாம்,

இன்னமும் எத்தனை உறங்கா!
உண்மைகள் உறவரிக்கும்,ஊன
சிங்களனின் இந்த சித்தத்தை,எந்த
மத்தையில் போட்டு மகுடமெரிக்க,
வித்தகம் விதற்றுவோம்?கண்கள்
ஒத்தடம் ஒதுக்கும் ஓர் விழி கரையும்,
நீர் வரைந்த இந்த நிலவுகளை,எந்த
கானத்தில் வைத்து கழுத்தறுத்தானோ?

புத்தனிற்கு அபிசேகம் எங்கள்
புண்ணியரின் குருதியிலென்றால்
புத்தனும் கூட சித்தம் மகிழ்வானா?
தித்திக்க,திகட்டாமல் எங்கள் சதைப்பிண்டங்களில்
என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?
விகாரையின் விகாரங்களில் விக்கிப்பதெல்லாம்
முகாரி விக்கும் வினயமாற்றும் தமிழ் குருதியன்றோ!

என்றோ ஒர் நாள் விடையிறுக்கும் என்று
மன்றாடி எங்கள் மானம் மறைக்கும்
மார்க்கம் வேண்டாம்,
நின்றறுப்பான் நித்திலனென்று நிழல் ஒதுக்கும்
மன்றத்தை விலத்தி,
கொன்றறுக்க கோர்க்கும் கோகிலத்தை கோர்ப்போம்,

அன்றேல்,
நாளை இது உன் வாசல் வந்து
வசந்தம் வரைக்கும்,
உன் வாசத்தை
சீழாக்கி, சூழாக்கும் சுரம்தான் சுரக்கும்,
உறவே!
உறங்கும் இந்த உபாதைகளை ஊர் பரப்பு,
கிறங்காத உந்தன் உறுப்பமை,
விரைவில் விடியல்!
இல்லையெனில்?
விதையெல்லாம் நுரை தள்ளும்
விரையின்றி விதையில்லை விகல்பகற்றி விரிவடை.

வியாழன், 15 அக்டோபர், 2009

தினம் மென்னி கிள்ளும் மேனியரை!


உலகெங்கும் ஓலங்களாய்-எங்கள்
வலம். இது என்ன சீலம் என
கலம் நோகும்?உள்ளம்
உவகையை மறந்து பள்ளத்தில் பல நாட்களாய்-
எந்த,
பாசாங்கும் அற்று விசும்பும்
எண்ணற்ற உறவுகளின் தாகத் தவிப்பில்
தரணியில் தமிழர்,

உலகப் பரப்பை நிரப்பவா நாம்?
திலகம் இட்டுள்ளோம்,
நிலவாதா?
வசந்தமென நீட்சிக்கும்
நயங்கள் என்று நார் கோர்க்கும்?
கலகமென்று முன் காதை விட்டார்,
இன்று!
நிலக் கிளிகளாகக் கூட கூடின்றி
புலம் பெயரும் பூப்புக்களுள் எங்கள்
கோமேதகங்கள்,

கனவாகாத
எங்கள் வயல் மீட்டிருந்தால்???
நிலம் நீட்டி இருந்தால்!! இந்த நிலை
ஈய்ந்திருக்குமா?
ஈனம் இழைந்திருக்குமா?
இல்லை,இந் நிலை
இலங்கித்தான் இருக்குமா?

புலமே!
நீ
மெல்லுவது போல் உள்ளத்தை கரைசலில் தோய்த்து,
எங்கள் கனதியை குறைக்காதே.
இல்லாத திருநாளை உன் கலசத்தில் ஏந்தாதே.
மெல்லக்கூட வழியின்றி எம் இனம்
தினம் மென்னி கிள்ளும் மேனியரை
அவர் ஊனம் உலகாக்கி,
எங்கள் தள மைந்தர்களை
அவர் சுயமூட்ட,
தரமாக்க உற்ற தகமைகளை கரம் பற்று.

நிலமே,
எங்கள் வளமே,
நலமாக்க நல்ல ஞாயம் வகி,

புலமே!
சூலம் ஏந்தும் சூத்திரத்தை சூடு நீக்கி
ஞாலமேந்த இன நமைச்சலை நா`` விரி,
கீலங்கள் தான் விலக்கி
சீலங்கள் தான் சுமக்கவே!பகை
முகாம் சூடு விலக,
சீரியமான சிந்தையை கரம் கொள்-ஆரியன்
காரியமழித்து எங்கள் காலம் வெல்ல.
ஊர் வலம் வா.
தமிழர் பேரவையின் தாற்பாரியத்தில்
தகமை வகி,
இளையோரின் இலங்கலை இயைந்து கை கொடு
இலங்கட்டும் உன் ஈடிணையற்ற இருப்பு.

திங்கள், 12 அக்டோபர், 2009

வல்ல பகையால் எங்கள் வாசல்!

இலங்கிடுமா இவர்களின் இயலாமைகள்,
இந்திய காங்கிரசின் இலக்குகள்
இனியும் மறக்குமா?
ஈழத் தமிழனவன்னிற்கு
இன்னல்கள் இலக்கிய ஈனர்கள் இன்று
எந்த முகம் ஊக்கி எங்களவர் அகதி நிலை
ஆய வந்தார்.இல்லை வேய வந்தார்?

இன்னல்கள் சூழ முன்னர்
என்னவெல்லாமோ நாம் இரந்து நின்றோம்,
சொல்ல நாக்கூசும்,
நினைக்க மனம் கூசும்.

நாம்!
நெக்குருகி புழுவிலும் கேவலமாய்,
உக்கி உருகி செத்தழிந்த போதெல்லாம்,
செவிடராய்,
ஊமையாய்,
குருடராய்
குனுகி இருந்த இந்த குன்(ற்)றமெல்லாம்,,,

இன்று
எந்த மென்னியை அறுக்க
எங்கள் மேனியை நனைக்க வந்தார்?
எந்த
கோலம் கொண்டு எங்கள் கோகுலம் ஏகினர்?
என்னதான் இவர் எத்தனை வேடம் போட்டாலும்
இவர் வந்ததால் எந்த ஏணமும் இழையாது,
இது
முந்தையர் ஆண்டது போல் நாம்
மீண்டும் எம் மண்ணை
ஆளாமல் எந்த விந்தையும் விழையாது,
சிந்தை இவர் நிச்சயமாய் இந்த
வீச்சள்ள எண்ணார்,

மகிந்தாவின் குதம் தடவி மக்கள்
சுகித்த பெரு வாழ்வெய்தார் என்றே
நாளை அழகான விதை தூவுவார்,

காங்கிரசின் கைப்புண்கள்தான் இன்று எம்
வீரர் கால் பட்ட வீரியமான விளை நிலத்தில்!
எந்த காரியமும் இவன் காத்திரமாய் ஏந்தாமல்
பந்தம் அவர் வாழ்வில் பவ்வியம் காத்திடவே,
வெந்த எம் புண்களில் வேலேந்தி கீறும்
சந்தனத்தையே இவன் சாதகமாக சாத்துவார்,

இருந்து பார் இனமே,
இராணுவத்தின் முற்றுகைக்குள் எங்கள் மக்கள்
எந்த மூலிகையை இவர் முன் ஏற்றுவார்,
இந்த அரசியல் நாகரீகம் தெரியாதவரா?
நாம் என்ன இன்னமும் பாமர மக்களா?
சுயாதீனமாக எந்த சுந்தரத்தை சுகிக்க அவன்
இங்கு வந்தான்?

டீ,ஆர் பாலு!
கோடரிக்காம்பின் கொற்றம் இவன்,
இந்திய அரசியலின் விந்தையை அறிவர்,
ஈழ மக்கள் மட்டுமா,இகத்தில்
இளையவரும்,எம் மக்களும்,
இது புரியாத பரி பாசையா?
கருணா நிதிக்க ஒரு வெற்றுத்தாள் கொடு,
இனி புதிதாக ஒரு பா`` பாட,

சேவகரே!
கருண கரத்தின் பாதகரே,
அந்த சேந்தலிற்கு ஒரு
மடல் கொண்டு வாரும் தன்
உடன் பிறப்பிற்கு ஒரு ``மா`` காவியம் சொருக
இவரால் ஈழத் தமிழினம் புளகாங்கிதம் பூண்டதாக
ஒரு உண்மையான சேதியை உறவுகளுடன்
பகிர்ந்து கொள்ள.

மகிந்தாவின் மகிமையை இவர் தேசம்
மொள்ள உடன் ஒரு வெள்ளைத்தாள்
சூரிய உதயத்திற்கு முன் இவன் முன் தாள்
தாள் பணி.
தாடையைத் தடவி நீ என்ன எழுத
திண்ணமாக எண்ணம் கொள்வாய்,
நாளைய முரசொலி வாசி
அப்புறம் சுவாசி.

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்!

எள்ளி நகையாடுது!
எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்,-தம்மையும்
தமிழரென்றே தரம் வேறு தார்மீகமாம்-எது
ஈழ விடைதலையின் பால் ஏகம் கொள்ளும்?-எதிரி
தன்னை ஏந்தும் இந்த வக்கற்ற கூட்டங்கள்-எந்த
வைடூரியத்தை எங்கள் மனவிருளகற்ற
மா`` விளக்கேற்ற போகின்றார்கள்?

ஆட்சியில் எந்த ஆர்ப்புக்களும் எல்லாள
காட்சிகளை கானம் ஏற்றாது.
மாட்சிகள் எங்கள் பரப்பில் என்றும் ஏந்தும்,
சாட்சிகள் எல்லாம் இன்று சரணாகதியாய் முகாம்களில்
வாயடைத்து,வயிறடைத்து,மூச்சடைத்து
எங்கள் முத்தாரங்கள்,
எந்த மூலவன் இவர்
கையறு நிலையை காத்திரமாய் கானம்
ஏற்றுவார்?

ஒற்றுமை அகன்ற எம் உறவுகளே!
ஒற்றும் இந்த ஓனம் ஒகர-நீ
ஏற்றுவாயா? தமிழ் ஒற்றுமையின் சாகரம்,
இல்லை உன்னால் அது என்றுமே இனி-இந்த
தளம் தகிக்காது.ஏனெனில்
வல்லாளன் பிரபாவின் வனங்கள் இந்த
பார்ப்பனர்களின் பாதையால் பரப்பிழந்து-
மீட்சிகள் எல்லாம் வெறும் காட்சிகளான பின்கூட-நீ
சாட்சிகளகற்றும் சாரளத்தில் தான் இன்றும்
எம் எதிரியின் கைக்கூலியாய் அவன்
கானமிசைக்கின்றாய்-போலிக்கு பிறந்த
போக்கற்றவர்களாய் அரிதாரம் மிக அழகாக,

மீண்டும் உங்கள் அகத்திற்கு ஆழமாய்
அறைந்து ஆரமிடுவது,
ஆயுத போராட்டமே மீண்டும் எங்கள்
களம் கனதியாக வேண்டும்,
தோல்வி என்பது எங்களின் படிக்கட்டுக்களாய்
தோழமை கொள்ள வேண்டும்,
அழுதலும், தொழுதலும் எந்த
ஆளுமைகளை அரங்கேற்றாது,
விழ,விழ எழுதலே எங்கள்
வலுவான வையகம்-இதை
மெனமையாய்,மேன்மையாய்
மீள மீண்டும் அகக் கொள்
ஆளுமைகள் மையம் தரிக்கும்,
ஆற்றல்களை இனி ஆதரவாய்
தேற்றி தோற்றம் கொள்,எங்கள்
பகலவனின் பாதம் எங்கள் பரப்பேந்தும்,
புவியே!

பிரபாவின் பிரம்மங்கள் களம் மீட்கும்
காலத்தை நாம்தான்
கலயமேந்த வேண்டும்-இனி
இழத்தல்கள் அற்ற இருப்புக்கள் வலயம்
இருத்தும் வன்மங்கள் வாகையாய்
தரமேற்றும் அந்த தாளங்கள்
உரமேற்ற உவகையாய்-உன்
கரமேந்த கருவிகள் களம் மொள்வோம்,

ஈழத் தமிழம் தகமேந்த
வேற்று வழி நிச்சயமாய்-அந்த
நரகத்தில் இல்லை,ஆற்றாமையை
அகமகற்று,கால வெள்ளம் இந்த
கலயத்தை மிகவும் நேத்திரமாய்
உந்தன் சூத்திரமாக்கும்,
நிச்சயமாய் இதுதான் நீதி பகற்றும்,
இது காலத்தின் கட்டளை,

ஸ்ரீ லங்காவில் என்றும்
சீதளக் காற்று வீசாது,எங்கள் களமெரிந்த
அந்த கலசத்திற்கு காத்திரமான
ஒரு முடிவேந்தாது எந்த ஒரு முச்சூடும்
முகிழ்வுகள் அதன் முற்றம் முகராது,
இது கால வெள்ளத்தின் கனதியான
கட்டளை,
இகமே!
இருந்து பார் இது ஈடேற்றாமல்
வையகத்தில் எமக்கு எந்த மூச்சுக்
காற்றும் முத்தாரம் சூட்டாது.

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள் இனி!

நமைச்சலின் நச்சரிப்புக்கள்
அமைக்குமா ஆனந்தம்?
குமைக்கும் குதங்கள் குங்கிலியம்,
கூட்டுமா?
எமை எமைத்தவன் அமைத்ததே
சமையலாகும்.
சாயல் இனி
எரிமலையாய் எழுந்தல்
உளம் சரிக்கும் சிங்களம்.

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள்- இனி
எந்த சாலையையும் சாராது.
உரிமங்களின் உரியாசனம் உலவாததால்,
பரிமாணம் பாற்றும் பகலவ பாதைகள்,
கரிசல் காட்டு கட்டமைக்கும் கனதிகள்,
விரிசலகற்றும்.
எங்கள் விபரம் விரிக்கும்.
புரிதல் இனி சகாயம் சதைக்கும்.
எங்கள் விரிதலின் வினைகளை வினயமாற்றும்.
பரிமாணங்கள் நிச்சயம் தரிசனமாக்கும்.

எரிந்தவைகள்!
எழும் ஏகம் கரிக்கும்.
சிரித்தவைகள் இனி சிந்திக்கும் முன்
இவைகளெல்லாம் புரிதலின் புன்னகையில்,
மரித்த மார்க்கம் சில் ஊடகத்தில்,
மீண்டும் பணம் பண்ண பண்ணசைக்கும்,
இந்த கூட்டங்கள் தங்கள் கூத கைகளை
கூச்சமின்றி மாற்றியோர் மாரணைத்து
மாமன்றம் மாற்றுவார்,
இவை அன்று போலவே என்றும்,

இன்றும்!
இவைகளில் மாற்றம் என்ற மாற்றம்,
என்றும் இணைந்திருக்காது.
மனிதாபிமானங்களே என்றும்
மாற்றங்களுடன்
கற்றகமாக வீரியம் சூட்டும்.

தோற்றமே இல்லாத மாக்களிடம் எங்கே
தேற்றமான தேர்விருக்கும்?
இவர்கள்
எங்கள் எரிதணலிலேயே தங்கள்
அடுப்புக்களை ஆனந்தமாக ஆலிங்கத்தவர்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக!

நிலவு சுடும் நெருப்பாக,
என் உணர்வகள் அதன் பாளங்களாக,
சீதளக் காற்று சில்லென்று வீச,இந்த
வேதனைக் காச்சல் கொல்லென்று,
மனம் காய்ச்சும்,

செய்திகள்!
சிந்தை வெள்ளத்தை தடம் புரட்ட,
விழ,விழ எழுந்த வீரியங்களை,
அப்படியே பாடையேற்றவே,
காதர்களுடன்,பாதகர்களும்,

விழுந்தவனை மாடு ஏறி மிதிக்குமா?
அழுந்தவனை ஆரியன் அப்படித்தான்,தன்
கொழுந்துகளால் கொல்கின்றான்,ஆக,
ஐந்தறிவு சீவனுக்குள்ள ஆளுமைகள்.
ஆற்றிவு சூடியதாக ஆர்க்கும்,அந்த
அங்கத நாட்டவனிற்கில்லை.

இது!
இன்று,நேற்று நோற்ற பாடம் இல்லை.
ஆனால்,
இன்னமும் இந்த ஈனத் தமிழனிற்கு ஏன்
புரியவில்லை?
அன்றே,
அல்லது,
பார்த்திபனின் பாதக் கமலங்கள்,
பாடை விரித்த போதாவது,
பாதிப் பேரிற்கு புரிந்த இந்த
மார்க்கம் ஏனோ?
இல்லையில்லை,
சிலரிற்கு புரியாமல் இல்லை,
எதுவும்
புரி விக்கவம் போவதுமில்லை.

தன் நயங்களுடன்,தன்னலங்களை
சூடினால்,அது
பொது நலமாகி விடுமா?
அப்படித்தான் சில தலைகள்
வலைகள் யாத்தன,
இன்னமும்,
அதே குட்டையில் யாக்க முனைகின்றன.

ஓடும் ஓட்டத்திற்கு தடை எப்படியோ,
கடை விரிக்கத்தான் கோகின்றது.
உராய்வுகள் என்று அதை நியூட்டன்
விதிகளாக விபரித்தது,
இயற்கையின்
இயங்கலது,
இயற்கைக்கே இந்த மூலம் விதி விலக்கல்ல,
ஆயின்
செயற்கையாய் இலங்கும்
இந்த செம்மறி கூட்டத்திற்கு?

பெளதீக பாடத்தில் மட்டுமல்ல-எங்கள்
பெளதீக மாடத்திலும் தான்,
சில இழப்புக்கள்தான்,
இந்த
உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக
ஆக்கமான பல இழப்புகளும் பங்கெடுத்தன,
இல்லையேல்
உருளும் பொருள் இடைஞ்சலின்றி
என்றுமே
ஓடுதளத்தில்

எந்த
மையமும் இல்லாமல்,
ஆரை என்ற குப்பில்லாத,
எந்த விட்டமும் இல்லா வீதியின்,
ஆடுகளம் இல்லாமல் இயங்கிக் கொண்டே
இகம் முழுவதும்.

நடை முறைக்கு
எதுவும் சாத்தியமற்று
சாலை விரிக்காது.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

தடையின்றி விடை இறுக்கும்..

சொல்லிற்குள் இல்லாத சொரூபங்கள்
மல்லுக்கு நிற்தில்லை.
வில்லுக்குள் என்றுமே அம்பு தூங்குவதில்லை-அது
கொல்லுமிடம் ஆர்த்தே கோலம் மொள்கின்றது.
வினைப்பவன் வினையாற்றமுன் வித்தைகளை,
தினைப்தில்லை,
காலம் நேரம் காத்திரம் கோலும்.
கனிந்துவர காத்திருத்தல் அவசியம்,
வேட்டை வெறும் வேட்கையல்ல-அது
கோட்டை விடாத கொலு வீற்றிருக்கும்.
பாட்டை பரிந்தெடுக்க பாத்திரமான,
பகுப்புக்கள் வேண்டும்-இது எல்லோர்க்கும்,
எந்நேரமும் கைகூடுவதில்லை,இதன்
நேத்திரங்கள் நெய்தலிற்கு அப்பாற்ட்டு,
தோத்திரங்களின் தோழமைகளை களைந்து,
ஆளுமைகளை மைக்கவேண்டிய கனகச்சிதமானது--,இதில்
கனிவுகள்கூட கால வெள்ளத்தால் களையிழந்து
போகலாம்.
பொங்கும் பொதியல்கள் குவியத்தை குறி
வைக்கும் போது கலயம் உடைவதுபோல்—உடைவது
கலயம் இல்லாமல் காவல்களே களையானால்,
எரிப்புக்களின் தகிப்புக்கள் அதிகமாக,அதிகமாக
அடுப்பே அனல் தாங்காமல் அழிவு நெய்தால்,ஆம்

எரிதலிற்கும் அளவு வேண்டும்-அது
எரிவாய்வாக எங்கள் களம் தீய்ந்தது,
பொஸ்பரசு எரிகுண்டாய் எங்கள் கனத்திரர்கள்,
பொசுக் குண்டாய்-----

எதிரி உண்மையில் வலுவுள்ளவனானால்,
நேரடி மோதலிற்குள் முகம் பூக்க வேண்டும்,அஃதின்றி
அயல் அட்டைகளுடன் அவனதன் ஆதிக்கத்துடனும்
களம் பொருதுதல் எந்த நீதி,நியமனங்களிற்கும் ஆகாது,
மனு நீதி என்பது நியமான போராளிகளிற்குள்ளேயே
குடிகொண்டிருக்கும்,அது
அற்றவனிடம் எதுவும் ஆற்றுமை மையாது,
அதுவும் ஆரிய வெறியனிடம் எந்த
வேதமும் வெயில் அள்ளாது.சிங்களவனிடம் எந்த
சிந்தையும் போர் முறை தழுவி இல்லை.
புணருதலிக்காய்,தமிழரை கொல்லுதற்காய்,
பிரேதத்துடன் பிதிராற்றும் பிடையர்கள்.

எல்லாமே நடந்தது எங்கும் பிணக்காடு,எங்கள்
பூமி ஒட்டுமொத்தமாக இத்தனை மைந்தர்களை,
எதிரியின் எத்தனத்தால்
மிகவும் பாரத்துடனேயே தன் பாயேந்தியது,
கருகியவர்கள்,காயங்களுடன் முனகியவர்கள்,
வயது வேறுபாடற்ற சமரசமாய் சாவு இவர்களை
ஆரியனின் கணக்கில் ஈடேற்ற இறுமாப்பு இந்தியனாலும்
இழைப்புக்கள் இலங்கியது,இல்லையில்லை,ஏதோ
ஒரு வகையில் அறவிடமுடியாக் கடனாக எங்கோ
ஒரு குரல் தன் குலம் காத்ததாக,கர்மம் ஆற்றியதாக
குரல் ஒடுக்கி நீலிக் கண்ணீர்-----???

உரிமக் குரல் உரிமைப்போர் உறவுக் களைவுகளால்
தன் இயக்கத்தை மாற்றி வழியின்றி மொளனித்துக் கொண்டது,
இது தாற்காலிக ஓய்வே நிச்சயமாய்,---ஆனால்
இதில் காலங்களின் காற்றசைவை எவரும்
கட்டியம் கூறமுடியாது,எனினும் அந்த ஈடிணையற்ற
தாகம் மீண்டும் தன் தவிப்பை தரணிக்கு தாக்கமாய்
தரவேந்த போகின்றது.

மொளனமான புயலாகவோ,அன்றி
மரண அவலத்தின் கடன் தீர்கும்,
புனலாகவோ ஏதோ ஒன்று இன்றோ,நாளையோ,
அப்போது தரணியே பார் புலத் தமிழனில்
புரையோடிப் போயிருக்கும்,அந்த
ரணகளங்கள்
ஒப்புவமைக்கு அப்பால்
இனி தடைஓட முடியாத புரவியாய்
தளம் அமைக்கும் தமிழரின் தாகம்
தடையின்றி விடை இறுக்கும்..

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

என்ன கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?

கருணை கொஞ்சம் வேண்டாதார்-எந்த
கருப்பையும் மனதில் தீண்டாதார்,
சுரணை மிஞ்ச சுரம் திண்ட சோகியவன்-எந்த
மரணையும் மருட்டி மகிழ் வெய்வார்,

பொருளை பிறன் பொருளை
காவு கொள்ளும் கடனாளி-சொந்த
மருளை மனதால் ஒறுத்து நிற்பான்,மீண்டும்
சரளை வீசும் கல்லாக அவன் கனவில்
தனியே தவித்து நிற்பான்.

ஒருவன் பொருளை மனதாலும்
சிறுமை பொங்க சுரண்டுபவன்,
கருமம் மறைந்தே மகிழ்ந்திடும்-இந்த
மார்க்கம் என்றும் நிலைத்திடுமா?

கற்ற கல்வி கலந்திட்டால்
பெற்ற யாவும் கலந்திடவே
மற்ற மக்களை மனம் கொள்ளும்,
உற்ற துணையாய் உறுப்பமைப்பான்,

ஆதலால்,
கல்வி ஒன்றே காலமெல்லாம்
உலவி உந்தன் உறவு கொள்ளும்,
நிலவும் இந்த நிலைகளை நீட்சி கொள்ள
புலவிலும் கல்வி கல்,ஏந்தி நிற்பாய்.

எனவே,
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,
அந்த மொழியை நிறைவாய் கற்றிட்டால்,
பொழிவு உந்தன் வாழ்வாகும்-நல்ல
கொழிவாய் நாளும் அகம் மொய்யும்,

தங்கி வாழ்வது வாழ்வல்ல-நீ
தாங்கி வாழ்வதே வாழ்வாகும்,
தூங்கி விழித்தால் தூபம் இல்லை-இதை உள்
வாங்கி உவப்பாய் உலவிடுவாய்.

பிச்சை ஏற்கினும் கற்றல் நன்றே,
உச்சமான வார்த்தையிது,
கொச்சை படுத்தி வாழ்வதிலே- என்ன
கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?

மிச்ச நாளையாவது -நீ
கற்கையில் கவனம்
செலுத்திடு-அது சகவாசம் உன்னில்
தனைக் கொடுக்கும்,ஆள சகாயம்
உன்னில் உருத்திடும்.

எம் இதய உளவுரண் அசையாது,

இருண்டதெல்லாம்
மரு அளிக்குமா?நாம்
மனத் திடம் கொண்டால்
ஒளி மறையுமா?
கருக் கொண்டதெல்லாம்
கரு அழிக்குமா?காலன்
விருக் கொண்டாலும் விதை அழியுமா?

ஒருக் கொண்டு ஒப்பாரில்லா
கரிக் கொண்டாலும்-மெருக் கொண்ட
திருக் கோயில் வீதி விலக்குமா?கால
வெள்ளம் அதை கரை ஏற்ற எம்
ஞாலக் கதிரர்கள் ஞாயிறாக அங்கு.

சீலம் சிந்தும் எங்கள்
ஞாயம் அஞ்சும் வழி அறியா
விழி பிதுங்கும்,மொழி ஆக்க
பழி ஏற்கும் பார்த்திபங்கள்
பரமங்களை மிகவும் பாத்திரமாய்
அரண் கொள்ளும் வேளையிது

எத்தனை வேலி இழந்ததாய்
இங்கு எத்தனை பேர் தம் அரிதாரம் களைந்தார்
தம் உத்தமமான உழைப்பென்று
அவர் தரித்த ஆடைகளை எம்மை
அம்மணமாக்கி அவர் நாணாமல்-எம்
நாணங்களை அவர் தம் நாணயமாக்க,
நம்
நாயகர்களின் நாமம் நரித்தார்,


இத்தனை காலம் சூடிய
அடையாளம் அகற்றி தம்
முகத்திற்கு அஞ்சியதான வேசை முகம்
முகர்ந்தார்,பரிபாலனாய் எம்
பார்த்தனை பாரெழுதும் பரிணாமம் களைந்தார்.
பலம் இங்கே பழுவேந்திய போதே தன்
பக்கங்களை கலசமாய் களைந்நெடுத்த
இந்த
இடும்பர்பளாலே எம் இதய உளவுரண் அசையாது,

விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…

சின்னத்தின் சிகரங்களே-என்றும்
சினங்களாக,ஏங்கும்
வன்மங்களின் வதைப்புக்களே-மனதின்
வாதைகளாக-ஏந்த
அகம் சீந்த இகம் என்ன வேள்வியை எங்கள்
வேலிக்குள் வேயவிடுகின்றது?

உன்னதங்கள் அதன் உரிமங்கள்
கன்னக் கதப்புக்களில் காஞ்சலாக
விஞ்சமுடியாத வேதனைளின்
வெப்பியாரங்கள்,துஞ்சாதா?
சோகம் துகிலாதா? எண்ணங்களிற்கு
எப்போதுமே வெட்கங்களை வேய்வதில்லை,
ஏனோ?

துன்பங்களின் சோபனமாய் வாழ்வரிக்கும்
மன்றங்களாய் எம் மனதரிக்கும்,
யதார்த்த கிண்ணங்களாய் அதுவே
இனி காரமும், காலமாய், கிரமங்களாய்,
கிள்ளி எம் சோலைகளை தமதான
சொப்பன வாழ்விற்காய் நிதமும்,நிதமும்

சின்னத்தனங்களின் சிற்பமாய்,சிரமமாய்
சீதளக் காற்றளைந்த எங்கள் சிம்மாசனங்கள்
ரணங்களை இனியும் சீரணிப்பார் சிறக்க
விவரணங்கள் சூட்டி வீராணங்களை விதைப்பார்.

தாக்கத்திற்கு மறுதாக்கம்,பெளதீகம் பகருகின்றது,
தாக்கமான தாக்கம் மொண்டு தகர்க்காமல் தரமெய்யோம்,
ஊக்கமான உளவுரனுண்டு ஊடறுத்து உருவெய்வோம்.
தீர்க்கமான திடம் கொண்டு தீர்த்து வைப்போம்,
எமதாக்கம்.

சர்வம் எங்கும் சாவிரித்தாலும் எம்,
சாந்தங்களை நாமே சகாயமாக்கவேண்டும்.
வர்மமான வளைகள் உண்டு. கர்மமாய் கடன் முடிப்போம்,
ஓர்மம் எங்கள் உடன் பிறப்பு ஓயாது அலைகளென,
சிந்தாத ரத்தம் சிறப்புறாது.
விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…

சனி, 3 அக்டோபர், 2009

எள்ளெரிக்கப் போகல்லையோ?

எள்ளெரிக்க போகல்லையோ?நீங்கள்
எள்ளெரிக்கப் போகல்லையோ?
கொள்ளி வைத்து உந்தனது கொற்றங்களை
எரிக்கின்றான்—நீங்கள் எள்ளெரிக்கப் போகல்லையோ?
எள்ளெரிக்கப் போகல்லையோ?

வெள்ள முள்ளி வாய்க்காலில்
வேதனாயால் உன் இனம்
வேண்டாத
கொற்றம் இல்லை அவன் வேதனையை
வேய்க்கவில்லை-நீங்கள் எள்ளெரிக்கப் போகல்லையோ?
எள்ளெரிக்ப் போகல்லையோ?

அங்கு கொற்ற சனியினின்,
சங்கூதல் கேட்கல்லையா,நாங்கள் இங்கழுது
பங்காத பாட்டெடுத்தோம் `பா` கேட்கல்லையா?
வெங்களத்தில் வேதனையில் வெந்த சனம்
கொஞ்சமா?இங்கு வேர்த்தழுது நாம் கோர்த்த
கோரங்கள் கொஞ்சமா?
நீயெடுத்து கல்லதனை கடவுளாய் படைத்துவிட்டு,
அதை காப்பதற்கு காத்திரமாய் கோயிலதை கட்டி விட்டு
அங்கு காப்பதற்கு காவலனும் காக்க வைத்த,
பேதனைகள் முடிவதற்கு
எள்ளெரிக்க போகுமையா,
எள்ளெரிக்க போகுமையா,

இல்லாத ஒன்றதைனை எத்தனை காலம்
காத்து நிற்பாய்?
உன்னை உண்டாக்கி வைத்துவிட்ட
காப்பரணை என்ன செய்வாய்?
நாடது இல்லையென்றால் நானும் கூட இல்லையல்லோ,
காடது காத்திருக்கும் காலம் எல்லாம் என்ன செய்வாய்?
பாடக எங்களை பாடையிலே ஏற்றி வைத்தான் பகைவன்
பாடையிலை ஏற்றி வைத்தான் நீ பாங்காக பாட்டெடுத்து
பள்ளி கொள்ளும் பார்ப்பனக்கு எள்ளெரிக்க ஏக்கம் கொண்டாய்.

ஈழத்து தமிழனிற்கு நாளெல்லாம் சனி பிடிக்க-நீ
நாகரீகமாய் நாளெடுத்து எள்ளெரிப்பாய்,உன் மூத்த குடி
எரித்து வைத்த எள்ளதனால் ஏது சுகம் கண்டு கொண்டாய்?
-உன் வருங்கால
சந்ததிக்கும் நீ எள்ளெரித்து ஏற்றம் வை.
காலமது காலமாய் காவியாக நீ இருந்தாய் அதனால்
கண்டதெல்லாம் என்னவென்று
காவலாய விளக்கு வைப்பாய்?
எள்ளெரித்து வாழ்வதற்கு ஏற்ற பாதை எங்கு உண்டு?
உன் காலெரிக்கும் நோயதற்கு காத்திரமாய்
மருந்து உண்டு,
காலகாலமாய் காவித்திரியும் மூடமான முட
நம்பிக்கைக்கு
எள்ளெரிக்க நியமம் உண்டோ?
பகுத்தறியும் உன் புத்திக்கு என்னதான் பகுப்பாய்வு வைத்தாய்?
வகுத்தாய்ந்து உன் வைப்பகத்தை
வையத்தில் விரித்தெழு, விருத்தம் எழுதும் உன்
வேதனைக்கு விரிவாகும் இந்த பிரபஞ்சத்தின்
விஞ்ஞானத்தின் ஞானம் கோர்,

அவனவன் இன்று சனி கோளதில் சாரளம் திறக்க
சாலைதனை வகுக்கின்றான்,
ஈன தமிழ இன்னமும் ஏனோ?
ஆதி கால ஆய்வகற்றி ஆழமான பாதை அகற்றி
மீதி உள்ள காலத்திற்கும் மிளகெரிக்க
ஐயகோ!எள்ளெரித்து நீ உள்ளெரிந்து வாழுகின்றாய்.
பரிதாபத்திலும் அரிதாரம் பூசும்
இந்த கலி கால நாயகர்களே
கரிகாலந்தான் களம் மீட்கும்,எரிக்கும் உன்
எள்ளு உன் ஏகாந்ததிற்கு கூட எள்ளுப்போடாது.

சந்திரனில் இன்று தண்ணீர் வளம் உண்டாம்,
தன் சடையில் வைத்த உன் சாகசனிடமே இனி
வருங்காலம் வையகம் கொள்ளும்,இது விஞ்ஞானத்தின்
வீரிய காலம் இன்னமும் ஏனோ,
இந்த சைவம் என் அசைவம் சூடும் மூட
நம்பிக்கை வைரவர்களே!

பலமே என்றும் பால் அமைக்கும் உன்
இந்து மத்திலும் இதுதான் பாலர் பாடம்,
வலம் வா`` வரம் தரும் இந்த
வையகம் அறி ஆற்றாமை என்ற மையை ஆற்றில் எறி.
தாயகம் என்ற தாகத்தைஉன் கண்ணில் விரி.
எள்ளை எள்ளி விதைக்கும் நுட்பம் நூண்,இந்த
விதை கூட நாளை உன் இளைய சந்ததிக்கு,
ஒரு விறைப்பான விதை கொள்ளும்.

நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,

இங்கு பதியம் பகுப்பவைகளால்-எமது
விடியல் ஒன்றும் விளங்கப் போவதில்லைதான்,
ஆயினும்,
உள்ளத்தில்,
உணர்வில்,
ஆதங்கத்தில், எம் மக்களின்,
அவலத்தில் அவர் தாங்கொணா தவிப்பதில்,
என்னால் ஏதும் ஆக்க பூர்வமாய் எதையும்,
எந்த ரீதியிலும் எந்த முகூர்த்தத்தாலும்,
எதையும் ஆற்ற,தேற்ற எவ்வித,
தோற்றமும் தேற்றமிழைக்க முடியவில்லையே!

இந்த ஆர்ப்பனவுகளை,
அதன் அங்கலாய்ப்புக்களை,
அனலூடலான அந்தரிப்புக்களை,
அவையெல்லாம் எம் அகம் எரிக்கும்,
ஆர்ப்புக்களை!
எந்த கலயத்தில் ஒதுக்கி கவசம் சூடுவோம்?

வெந்தணல் புழுவாய்,இவ் வேதினியில் எம்
ஆத்மங்கள் அங்கே அனு தினமும்,
ஆற்றுவாரோ,தேற்றுவாரோ,போற்றுவாரோ.,
யாருமின்றி அவமானங்களின்
உச்சத்தில் அது ஊட்டும் அச்சத்தில்

வாழ்வாதாரம்?
வதைகளாக,பதை,மதைப்புக்களாக,
எந்த,
பத்ம வியூகத்தில் எம் காலக் கடனை
காப்பரணாய் களமிறக்குவோம்?
வேதனை சூழும் வேளத்தில் என்
வேதாகமங்கள்,
ஆழிப்பரப்பின் அக்கறையில் ஒர் நாள்
அடுயோடழிந்த அந்த அனர்த்தங்கள்,
ஆமியின் அக்கிரமத்தால்,அடாவடிகளால்
இன்று
அருவருப்பாய் தினமும்,

ஏதாவது என்றென்ன?
இப்படி எம் ஆற்றாமைகளை!
அனலெடுத்து எழுத்துக்களாய்,
தினம்,
வினையெடுக்க முடியாத என் முடிச்சுக்களை,
எழுத்துக்களில் வெப்பகம் ஊற்றி,
எனதான விடுதலையின் எமக்கான மறுகரையினையும்,
எமதான உறவுகளின் விடுதலையின்,
விகற்பத்தையும் ஏந்த ஒரு நல் வழி இயற்றும்.
நாயகனின் வருகைக்காய்,அந்த தலைவனின்,
தர்மத்திற்காய்,

இந்த எழுத்துக்களை பவுசேற்றும் வரவேற்பில்,
உணர்வுகளின் அந்தரிப்பில் கருத்தரித்த,
இந்த காயப கல்பங்களை காத்திரமாய்.
பதிவேற்றி எம் பாமர,மக்களிற்காய் பதியமிடுகின்றேன்,
வார்த்தைகள் வாழ்க்கையாகாதென்றால்,
பா எதற்கு?,பத்திரம் எதற்கு?
புத்கமாய் புவியில் பூமி சாத்திரம் எதற்கு?

புரியாத பதர்கள் எப்போதும்,
வரிக்கும் வன்மங்களை எங்கும் கண் கொள்ளார்.
வலிக்கும் வார்த்தை தொடுத்து எம் வைகையர்களை
வதம் கொள்ளும் வக்கணையே இவர் தேர்வு,
புற நானூற்றை புரிந்து படியென்றால் இவர்கள்
புறம் கூறும் நாள் நூற்று அறம் கூற வித்தை கொண்டார்.

எமதான சமூகத்தில் அடிப்படை வாழ்வே
வேலி ஊடி, ஒட்டு கேட்டு, ஓதி வாழுதல்-இதில்
எங்கே திருத்தல்கள் திவ்வியம் கொள்ளும்?
மற்றவரை சுட்டி காட்டி,குறை கறைத்து,கரித்து,
எம் சமூகம் வரைந்த வார்ப்புக்கள்,
எதற்கெடுத்தாலும்,
அயலவனை அர்ச்சித்து,அவனின் வீழ்ச்சியில்
எழுச்சி கண்டதுவே இந்த தமிழ் சமூகம்,
இது முற்று முழுதான மூச்சடைக்கும் உண்மை.

மனம் வலிக்கும் உண்மை இதை ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இன்றி பலர் இன்றும் புல வாழ்வில்
இது நாளும் பொழுதும் இன்றும் ,இப்போதும்,
எல்லா ஐரோப்பிய,அமெரிக்க கண்டத்திலும்
இதுதான் இன்றும் அவலமாய் ஆர்த்தெடுத்து
ஐயகோ!
அனுபவம்
கண்டத்தில் எல்லாம் கச்சிதமாய்,
காத்திரர் வாழ்வதனை கண்கொள்ளா,
மானிடமும் கனடா முதல் அமெரிக்காவரை,
இதையே இங்கு கோர்த்தெடுக்க கோகிலம் கொண்டு
நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,
நோத்திரம்,
தோத்திரமாய் தோரணை சூடி!

இராமரிற்கு அணில் ஏதோ,
அதனாலான சிறு அர்ப்பணிப்பு,
ஒப்பிற்காய் இதை ஒற்றவில்லை
ஒடுங்கும் என் இனம்
ஒடுங்கா மனம் வேண்ட
ஓர்மமாய் ஓர் ஓலை வேண்டும்,
கூர்ம அவதாரமோ அன்றி
வர்ம மனுதாரமோ,
எந்த மயிலிறகும் எம் மானம் காக்கா,

பசிக்கு உணவு எப்படியோ?நோய்க்கு
மருந்து அவ்வாறே,அதேபோல்
விடுதலைக்கு கருவி அத்தியாவசியம்.
அதை எதிரி தீர்மானிக்கும் போது,நாம்
அதையை ஆர்த்தெடுத்தல் அவசியமான,
ஆணையாகும் அன்றி விதையற்றுப் போனது.
ஈழசரிதம். இதை ஆழ நினைத்தல் ஆள,எமை
அழ புதைக்கும் ஆரூடம்,ஆக

ஊசியை ஊசியால் தடுத்தல் பக்க
விழைவற்றதாகும்,
இங்கு
ஊசி என்பதை கூர்மமாய் கவனி
வீசி எறிந்து வேளை தகர்க்கும் வேள்விக்கு வேளை குறி.
அஃதின்றேல்
ஆழி தின்றது போக,மீதி ஆமி அழிப்பது போக
இனி மீதி வேள்வி ஏந்தாவிடில்
மேதினியில் நிச்சயமாய் ஏதும்!
நிறைவினிலே நிழல் ஒற்றாது.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடிக்க!

பரத்தில் என்ன பாரம் உனக்கு-புலத் தமிழா
பகலவன் பாரமேந்திய களமதை
சற்றேனும் நினையடா,பரத்தையர்
கூட்டமொன்று மென்று துப்பிய எங்கள்
கலத்தையும் கலையில் கொள்ளடா,

விலைமாதர் கூட்டமொன்று எங்கள்
விதை அழித்த சுவடு உன் சுவாசத்துடன்
சூழட்டும் அது கனலாக,கலமாக உன்
நெஞ்சகக் கூடதனில்!
வெறும் கூடாகாமல் அவன் விரித்த
கூறுகளை கூற்றுக் கொள்ள குதம் கொள்ளடா,

கரத்தில் நல்ல கலவு மொள்ளு-உன்
சரத்தில் அதன் சாரம் அள்ளு,இகத்தில்
இந்த
ஈன,ஊனம் சுமத்திய சூரர்களை,அவன்
சூதகமது சூல்(ள்) கொட்டிய ரணங்களெல்லாம்
உன் கரங்களாலேயே கறை அகற்ற வேண்டும்,
சுரமது உன் சுத்தமான சுதி கொள்ளட்டும்,விதி
வரைந்தோமென்று கரைந்தவன் களம் கலைக்கட்டும்.

வீழ்ந்தெல்லாம் விளைவதற்கே என்ற-எங்கள்
வேதங்கள் அங்கு வெங்களம் ஏந்த
சூழ்ந்தெல்லாம்,சுரந்தெல்லாம் சுதந்திரத்தின்
சுனைகளென்ற சுரம் சுகிக்கட்டும்,
மாய்ந்த எங்கள் மாமனிதங்களின் மரண
ஓலையின் மேலொரு சுவடு பதித்து.எங்கள்
சுதந்திர சன்மானங்கள் ஆங்கே மதிப்பேந்த
நிரந்திரமான நீதி அங்கு நியமாற்ற,

நிர்மலான அந்த மேகங்களின் மினுக்கில்
மாவீர மனங்கள் ஆதங்கங்கள் அசையும்
கர்மங்கள் உன் கடனாக கயமற்ற கலயமேந்தும்,
வர்மங்கள் வலு ஏந்த வாகை உன் யாகமாகும்,
வலு ஏற்று அன்றி எந்த வலுக்களும் உன்
வயல் மீட்க வகை தகைக்காது.

சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடிக்க!

ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல,

நீராடும் நினைவெல்லாம்
ஊராடும் எங்கள் உறவாடும்-போராடும்
போது என்ன போகம் கொண்டாயென
தீராத வலியென்னை திசையெல்லாம் திட்டும்,
வேரறுந்த மரம் போல் என் வெற்றுடம்பு,
ஊறு கொட்டி வேறென்ன வலயம் வர
காதறுந்த பட்டமாய் பரவலற்ற வெளியில்?

தேரோடும் தெருவின்று,
தேசக் கோயிலிழந்து,தேமாங்கான
மணியிழந்து,அதன் மரகந்தகத்துடன்,
மகிழ்வெலாம் மதியோடிழந்து,
முகிழ் வெய்தும் முகரம் முறித்து,
பகழ,பகர பாதையிழந்து,பலமிழந்த
பம்பரமாய் பகலிழந்த பாரத்தை-எந்த
பரத்தையவன் பாதை தறித்தானோ-அவன்
பரமறுக்க விறுமமேற்ற விகல்பத்தை
வீரியமாய் விவேகமாய் என்றாவது
விழுதெறிந்து விசாலம் வீற்றும்---

காலக் கனவுகளாய் எங்கள்
களம் அகன்று போகுமா?அன்றி
ஞாலத்தில் வேறற்ற வழியென்று
கோலமது மீண்டும் கோத்திரமாய் கோர்க்குமா?
கீலமது கிளிஞ்சல்களாய் சிறகிழந்து மூசாமல்
வேலமது வீற்றிருக்க வேந்தனது கொற்றமேந்தி
சாலமது சற்றேனும் சலிக்காமல் சரிவகற்றி
வேளமேந்தும் வேளை பொதிய போகம் அகமறுக்க
போர்க் களம் ஏந்தும்,சேந்தல்கள் அலுங்காமல்
ஆர்ப்பரிக்காமல் ஆற்றும் அஞ்சல்கள்—நாளை
விடிவானேந்தும் வினை ஆற்றும்.

பூத்திருக்கும் பூ சிணுங்க
பார்த்திருப்போமா?கரிகாலக் கனவதன் கச்சிதத்தை
போற்றும் போர் வழியகற்ற மனம் விஞ்சுமா?
மாற்றுப் பாதை அதை மாற்றான் திறந்து வைக்கான்,
வீற்றிருந்த வீரியத்தை வினையாற்ற அறைகூவல்
காற்றகலாக கங்குலமாய் கரு வேங்கை களமேந்தும்
காலம் வெகு விரைவேந்தும்,கனவு கலையா நனவாகும்.
வேர்த்த எம் இனமே,
வேங்கை வெங்களம் பாயும் எம்
குருதி குடித்த கடன் மீட்கும்,
காலக் கடன் காத்திரர்கள் தீர்த்து வைப்பார்—அப்போ
மொளனம் காத்த மொளத்திர்கள்,எந்த
மங்கலத்தை நம்மில் மைப்பிப்பார்?

வெறும் எதிர்பார்ப்பல்ல இது
கூறும் கல்லுலகில் இதுவே களம் வேயும்,மேயும்.
பாறையாய் ஆனதாய் பத்திரம் இனி வரையா
பக்குவம் இகம் பரத்தும்,பார்ப்பனர்
சொப்பனங்கள் சொதம்பலாகும்,
செமிப்படைய,
எம் பாடைகளை கிளறுவார்,பார்
இது பரவலாய் எம் பாத்திரம் மொய்யும்,

அண்டை அயல் நாடு நாளை,
பண்டையமாய் இந்த பாகம் மொய்வார்,சீற
சீனன் சீற்றும் சித்திரங்கள்,அங்கத நாட்டின்
அசல் கிளறும்,பாரத பாத்திரம் சிதறும்,
கூற்றுவன் களம் மாறி எங்கள் கொற்றவன்
பாதை மேய்வான்,அது பாங்காய் பகடை கலக்கும்.
கொன்றதெல்லாம் கொற்றமேந்தும்,மென்ற
குன்றமெல்லாம் எங்கள் குதம் கலக்கும்.

இன்றைய
காலை களலள்லும் வேளை வெந்தணல்
அள்ளும்,
ஆக்கம் அமரர் களமாய்,
அரண் கீறும்,
ஆக்கம் அது நாளை ஆர்க்கும்
சிந்தை கொள்ள ரொளத்திரம் பழகு,
தமிழ,
நாளை விடியலின் பாதை உன் வெஞ்சினத்தில்
என்னும் வினைகளை பரம் கொள்.
பாதை உனதாக பக்குவம் கொண்ட
பகலவன் பாதை விரிக்க வினையாற்று.

ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல!

திங்கள், 28 செப்டம்பர், 2009

உறங்கா கண்மணிகளின் உன்னதத்தை உயிர்த்து.


களங்கமில்லாமல் துலங்கிய புன்னகை இது,
காலமெல்லாம் காத்திடும் காவியப் புன்னகை,
இதயம் இழைந்து வழியும்
ஈடில்லாப் புன்னகை,இமயமாய் இகம் நிறைந்து,
ஊடில்லாத உதயமாய் உலகொல்லாம் உயிர்த்த,
பாடு பொருள் புன்னகை_தலைவனின்
தாரகப் புன்னகை பார்,
பாரே பார்.

கயவனைப் பார்,புலையன் புறம்போக்கு,போக்கிரி
எந்த கல,கலப்பும் இல்லாமல்,
எத்துணை வஞ்சம் கொண்டான்—இல்லை
வஞ்சமல்ல,
அது வாய்க்காது எந்த வளத்திலும்
கொஞ்சம் கூட வலையாது..

என்னே! கோர நெஞ்சம் கொண்டான்_எங்கள்
கோத்திரமெல்லாம் குதறி,மனத்தின் வளத்தில்
சாட்சி இல்லா சாத்திரன் இவன்_
இவனை,
தூற்றுவதில்லை எண்ணம்_என்னவோ?
இந்த
ஒளிப்படம் என்னை எங்கோ எல்லாம்
அலைப்பதால் எழும் சீற்றம் அவ்வளவே,

ஆயினும்!
அடங்க மறுக்கும் மார்க்கம் தேடி நினைவுகள்!
துடித்து,துடித்து,
ம்,ம்,
எந்த பெரு மூச்சை,
எந்த காற்றில் கலக்க,
உறவாடி கெடுப்பது உயர்ந்த ராஜ தந்திரம்
என்றோ எங்கோ கேட்ட,
மனம் விட்டு அகலமறுக்கும்,மறக்க நினைத்தாலும்
மறையாத,
ராஜாங்க வார்த்தை இது,

இந்த சொல்லாடலே எங்கள் களத்தின்
வல்லாடலை வரித்து வைக்க,
என் சொல்ல,
நெஞ்சிற்கு தேவை மனசாட்சி அது அற்றபோதே,
நாமும் ஆகுதி அற்றுப் போனோமா?
அறவிடமுடியாக் கடன்போல் இதுவும்
அறுக்கேவே முடியாத கடனாக போயிடுமா?

இல்லை,
இந்த சென்மத்தில் இந்த துரோகிகளின்
நிழல்கூட நித்திரையில்,
நிலைக்க விடக்கூடாது.
எண்ணங்கள் மட்டும் எவ்வளவு ஆரோக்கியமானவை,அது
நியமாக ஆகக் கூடாதா?
இந்த ஆதங்கம் என் ஆத்மா பிரிவதற்கு முன்
எந்த பிரம்மன்
இவன் பிறப்பறுக்கப் போகின்றானோ?
அன்று ஆத்ம சாந்தி கொள்ளும்,
ஆயிரமாயிரம் ஆயிலியங்கள்,

சிம்ம சொப்பனமாய் இவன் சீவித்தல் தகுமோ?
வன்மம் எனக்கேறுதே,
வாய் கூசுதே,
சின்னத்தனம் சீந்தினால் சிறுக பொறுக்கலாம்_ஆனால்
எங்கள் சித்திரங்களின் நித்திலத்தில்
நீங்காத கறையான இந்த கறையை
எந்த காயகல்பத்தில் கழுகேற்றப் போகின்றோம்?
சொப்பனமே வாழ்வாய்,
சுவையான சுவையெல்லாம்
வெறும் கனவாக,கானலாக
கலனள்ளி வாழ்வோமா?

இல்லை!
களம் காத்த காவியரின் காலம் வெல்ல,
கனல் வீசி விழைப்போமா?எங்கள்
உளம் ஏந்தும்,
உன் மத்தங்கள்,
உரசும் இந்த வலங்களின் வயல்கள் பின்ன,
சிரசேந்தி சீற்றுவோமா?

கலையாத கனவது,
யாராலும் கலைக்க முடியாத,
களம் இது.
விலை போகா வீரியங்கள் விழையும்,
வித்தகம் ஏற்றி இழைக்காமல்_ நாம்
இழைப்போம்,இலங்கும் இந்திரியங்கள்
இமை மூடா இளையங்கள் நாளை எம்
சூரியனின் சூத்திரத்தை
சீரியதாய் சிறப்பேந்த வளம் அள்ளி வளர்ப்போம்,

அந்த அந்தகன் முதல் கொண்டு_எங்கள்,
விந்தகம் பிரித்த விலங்கினமதை வகைத்து,
குந்தகமில்லா குதமதாய் குளிர்வோம்_கந்தக--
சந்தத்தில் சதை,நரம்பதாய் சாய்ந்தவர் மீதோர்,
சத்தியம் சாற்றி சாக்களம் மீட்போம்.
உறங்கா கண்மணிகளின் உன்னதத்தை உயிர்த்து.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

குலையாத கொற்றம் கொலுவேச்சும்.


நீ என்பதும்,
நான் என்பதும்,
உறவு என்பதும்,
உற்றார் என்பதுவும்,-,சூழ
உள்ள சுற்றம் என்பதுவும், மற்றெல்லாம்
உயிர் இனம் என்பதுவும் எவ்வளவு உண்மையோ!.

அந்தளவும் உள்ள சுதந்திரம்,
சுகம், துக்கம் கவலை ஆதரவு,
ஆலிங்கனம்,அரவணைப்பு,தானே தீர்மானிக்கும்,
தகவுகள்,மற்றும் மரபுகள் எல்லாம்,
அங்ஙனம் அகமேந்தும் ஆர்ப்புக்கள் எல்லாம்!

ஏன்?
என்னினம் இழந்தது,
தமிழனாய் பிறந்ததா?
இல்லை நிச்சயமாய் இல்லை,நாம்
அடிமையாக அன்று ஆழுமைக்கு சிக்கியதன் சாரமே தவிர
வேறில்லை,
அடிமையாக,
வாழ்ந்து,வாழ்ந்து சுதந்திரத்தின் சூட்சுமம்_
சுகிக்க சுரணையற்று போனதே அன்று_
வேறில்லை ஏதுக்கள்,
சரித்திரம் இதைத்தான்,
தாக்கமாய் எம் சிரசறைந்து எம்மைப் பார்த்து
ஏளனமாய் உரசுகின்றது,

ஏ!
தமிழ,
சுயமான சிந்தனையை உன்_
அகம் பற்றினால்,
சரித்திரம் சாற்றும் சங்கதி புரிந்து கொள்வாய்,
சுயத்துக்காக எம் முன்னோர்கள்,
எமை ஆழப் புதைத்து,அடிமை விலங்கு பூட்டி
அவாள் மகிழ்ந்த அந்த ஆயிலியத்தை,
அதன் சுரத்தை
அடியொற்றி இன்று ஆரியன் எமதான எல்லாவற்றையும்
வேரோடு பிடுங்கி வெற்றலாக்க.

நாமோ!
இன்றும்
நாச்சியாரின் நாமம் நனைந்து,
எம் ஆரோக்கியமான அதிகாரத்தை,
அடுப்படி விறகாய்,
நிதம் எரித்து எம்மை நாமே?

ஆடிய பாதமும்,பாடிய பாட்டும்
அதன் ஆள வேரதை சட்டென அறுக்காது.
சொறியலில் உள்ள சுகம் போல
அது சொறிவதிலேயே செறிவாய்
ஆதலால் தான் இந்த வாய் எமக்கு!

அடக்கப்படுவதையும்,
அழிக்கப்படுவதையும்,
இன்னமும் கண்டும் காணாததுமாய்,
கோடரிக் காம்பாய் இன்னமும் எம்மில் பலர்,

இந்த இழி நிலை ஏந்தும்,
துரோகிகளை தூரெடுத்து துரத்த இன்னமும்,
வக்கில்லா எம் இனமே!
என்ன செய்வதாய்,
உன்மத்தம் உனக்குள் அகமேந்தும்?

ஆக!
தமிழனாய் இத் தரணியில் தர்மம் அகன்று,
பிறவி எடுத்ததாய் தாழ்வு தரம் கொள்ளும்,
தகம் அறு.
உனக்குள் உறங்கும் ஆளுமையை அரங்கேற்று,
ஒட்டுப் புழுக்களை நன்றாக இனம் காண்,
இன்றை இவ் இழி நிலைக்கு ஒட்டுப் புழுக்களும்
காரணம் என்ற கசப்பை உள் மனக் கொள்,

எமதான,
அன்றைய அரசு கவிழ்ந்தற்கும்,
இன்றைய எம் கொலுக்களெல்லாம்,
பிசிறேந்தி பொதிழிழந்து பொற்பாதம் அகன்றதற்கும்.
நாம் பிறழ்வதற்கும்!
நாளும் பொழுதும் நரம்பேந்தி எம் நாணயங்கள்
நரபலி ஆவதற்கும்,

எனினும்,
விழ,விழ
எழும் வீரியம் எமக்குள் மீண்டும்
விழிதெறியத்தான் போகின்றது,
அதற்கான ஆளுமையான புற ஏது நிலைகள்
இதைத்தான் நாளும்,பொழுதும்
எம் நரம்பேந்துகின்றது.

நாள் கொஞ்சம் ஆகலாம்,
என்றபோதும் இந் நிலைதான்,
கருக் கொள்,
காலம் எமக்கு கனலெடுத்து,
கற்றுக்கொள்ள கை காட்டி_
களம் காட்டும் சேதி இது,

போதும் இனி
போதி மரத்து வேர்கள் அங்கு
மண் பார்த்து,
மடம் கோர்த்து
ஆளுமை கொளமுன்
ஆர்த்தெடுக்கும் அனல் கொள்
இல்லையேல்

கட்டி இருந்த கோவணமும்,
இந்த காடையர்களால்
வெட்டி எறியப்படும்
வேளையே இங்கு நுகம் கொள்ளும்,
விழித்தெழு
விலை போகா மீண்டும் தலைக் கொள்ள
நிலையான எம் நித்திலம் மீட்க,

குலையாத கொற்றம் கொலுவேச்சும்,
நாள் குறிக்க,
மலையாக மனுக்கொள்வோம்.
வலையாத வழு நீக்கி,
விழுதான வீர விற்பனங்கள் வீதியேந்தி,
மருக்களம் மாற்றி எங்கள்
செருக்களம் செதுக்க.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

விழலாய் விதைந்தே வீரியம் விதையுமா?


அயல் அறியாதா?—இந்த
வயல் செழியாதா?-எந்த
கயல் மறைக்க கயவர் ஈன
செயல் இறைக்க கீறுகின்றார்.

புயல் பூத்த எம் தேசம்-நிதம்
புண்ணியர் ஆடிய பூந்தேசம்-இன்றோ
சித்தமெல்லாம் சிதைந்ததாய்,
ரத்தம் ஈந்த எம் தாயக தேசம்,

விழலாய் விதைந்தே வீரியம் விதையுமா?
குழலாய் நித குரலாய் திரும்பும் திசையெல்லாம்,
வளமாய் எம் வானம் வனைந்த வரம்,
காலக் கிரணத்தில் ஞாலம் இறைந்ததால்-அதன்
ஞாயம் கரைந்து போமா?

மழையாய் வானம் மத,மதத்தாலும்,கோர
இடியாய் இந்த கோலம் கொடி வளைத்தாலும்,
சோர,இனமானம் கோரம் மெளவ்வ நாம்
கொய்யம் குலைந்து,
கொலுவாற்றும் முகம் கரைப்பதா?

புலமே,
என் உறவே,
ஈழ மலரே,
நம் இளைய தலைமுறையே,நாளைய
நம் வாசல் வரையும்,
நல் வித்துக்களே!ஈழ நல்முத்துக்களே
உம் முன்னால் விரிந்து பரந்து,
இன்று பார் கெளவ்வும்.
காலக் கடமை கரம் இணைத்து,
உன்னை கனத்த மனத்துடன்,
கடனாற்ற கட்டளை கூர்த்துள்ளதை,
காலக் கடனாய் கொள்.

விடாக்கண்டனாய் உலக வீதி வா,
விரிந்து விடை கேட்கும் வீதி,
உன் வலம் வேண்டும்.
வைரியின் வைகுலத்தை நீதி கேட்கும்
ஞாயம் ஞாய்க்க,

புல உறவே!
புன்னகை மறந்த தேசத்து பூவை உன்
கையில் எடு,
பார் முழுதும் அதன் பாதை கேள்,
நாளும் பொழுதும்
நம் உறவு கரையும் சோகம் கூறு,
ஆரியன் அழித்த அத்தனை சொத்தனைக்கும் நீதி கேள்,
வையப் பரபபெங்கும் வாதை கூறு,
எம் பாதை கேள்,

நீதி நிமிர்வெய்ய நியாயம் கேட்போம்.
நிச்சயம் எம் பாதை விரிப்போம்.
பாரிலே எம் தேசம் சமைப்போம்.எம்
பாதகம் கரைத்து ஈழ பாகம் மீட்க.

புதன், 23 செப்டம்பர், 2009

மகிந்தா தேசம் மறைத்தே மகிழுதோ?


கலங்கும் காலங்கள்,
உலங்கும் உறவுகள்,
துலங்கும் துயரங்கள்,
மலங்கும் மானிடங்கள்,
விலங்கு ``மா`` மானிதர்கள்.
விபரமற்றதா உலகம்?
விந்தையானதே எங்கள் தளங்கள்.
கலங்கள்.

கலங்கிய காலங்கள்,
காத்திரர் கலைத்தார்.
விலங்கிலும் கீழாய்
உலங்கியவர் உறைந்தார்—இன்றோ!
மலங்கல் எல்லாம்
மறைந்தே போயினதோ?இல்லை
மகிந்தா தேசம் மறைத்தே மகிழுதோ?

விலங்கிலும் கீழாய் என் இனம்—இதை
விளங்கியும் மதியார்—இது என்ன மானிடம்?---பாரில்
பலமில்லை என்றால் எந்த பாதையும் விரியார்-எதை
பரிபாலிக்க இந்த பாரது பகிரும்?

விடியலற்று போனதா?விவேகமற்று வினையாற்ற,
முடியிழந்து போவதா? மூத்த தமிழ்க்கொடி---எந்த
குடியிழந்து போகிலும் கொண்ட கொள்கையதை மாற்றவா-
இத்தனை மாதவங்களை இழந்தது?
இல்லை என்போர்
இணைந்தே எழுக!

இலங்கும் ஈனத்தை அழிப்போம் இணைக,
பொல்லாப் பகையதை போர்க்கொடி ஏந்தியே
இல்லாதொழிப்போம் இறுமாந்து எழுக!
வல்லாளன் வகுத்த வாரியமே வலம் கொள்ள,
சொல்லா துயரம் துலைத்து எழுக,

இணைந்திங்கு ஈர்த்தல் ஈழம் இலங்கும்,
பிணைந்திங்கு தூங்கல் துயரத்தையே வகுக்கும்,
பிணந்தின்னி பேய்களே பேரவலம் சூட்டும்-இதை
உணர்ந்திங்கு உழைத்தல் உபத்திரவம் கலைக்கும்-
களமங்கு திறக்க காத்திரரே எழுக,
கனலான கங்குகளே காத்திரமாய் எழுக.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க,

மனமெரியும் நினைவுகள்தான்-எனினும்
மரணம் எழுதும் பாவியரை பார்த்திருத்தல் தகுமோ?
இனமெரியும் வேளையிது இங்கு நாம் இயங்கல்
தவிர்த்தல் தகுமோ?

எரிந்த கலம் மொண்டு-எங்கள்
விரிதல்களை வியாபிக்க
சரிந்த தலம் மீண்டும் சாதிக்க,
செருக்க வேண்டிய சேதிகள் பல உண்டு.

உரிந்துதான் உச்சம் கெட்டோம்.ஆயினும்
வரிந்து எங்கள் வயல் மொள்ள
கரிந்ததான கயங்களை காலக் கிரமம் மேவி
பரிந்தெடுத்து விரியல் தைப்போம்.

ஆயிலியங்கள் என்றுமே அகம் அதைக்காது.
போலியானதான பொக்கங்கள் அதை தரம் கொள்ளலாது.
வேலிகள் எங்கள் வெங்களங்கள் வெகுத்தெடுக்க-புல
தாலிகளும் தங்கள் தரம் தைக்க வேண்டும்.

வலி தந்த வரிகளை வயம் வகுத்து,
கலி கட்டின காயங்களை கலம் கலைத்து,
புல புத்திரர்கள் தங்கள் புயம் பூக்க வேண்டும்-ஆங்கு
வலம் வகுக்க வெங்களம் வேர்த்திருக்க புயல்
இங்கிருந்தே மையம் கொள்ள வேண்டும்.

புனலாக,அனலாக எங்கள் அலகெரிக்கும் ஆங்காரத்தை
கனலாக,களமாக்க அங்கத தளமெரிக்க,
வனமானதான எங்கள் வளம் மீட்க, நல் வாகை சூட
கனமான எங்கள் காத்திரர் மீண்டு
நனவாக்க நல்ல நயம் நீட்ட,

கனவாகா களம் அது கண் சிமிட்ட,
வானக வையர்கள்,மாவீரர்கள் வாழ்த்துரைக்க,
சேனை கொள் தமிழ் வீரர் தோள் கொள்ள,புல
கானகங்கள் அங்கே கரம் சுரக்கும்,அன்று

விதி சுமந்த வீணர்களின்
விழி பிதுங்க பழி கலைத்து,பண் இசைக்கும்
வழி விரிக்க விழித்திருப்போம்,
எங்கள் அகம் சுரப்போம்.

சனி, 19 செப்டம்பர், 2009

இதயமிழக்கா,இரவல்சுரக்கா!


கோழி வளர்த்த கிளவிகளாய் சிலர் இங்கு
விடியல்களை விமர்சிக்கின்றனர்,
வாதை இவர் வகுத்தார் என முகுகில்
உபாதை கலந்து குத்தும்
மோடிகள் சிலர்,
அன்று!
பகலவனின் பாதையில் பரிந்துணர்வுகளை பற்றினார்கள்.

புலி தூங்கினால் எலியும் ஏறி விளையாடும்,
வலியறியாது,
வறுமையென்று வக்கணையாய் கதை பகரும்,
துதி பாடி எம் தோட்டங்களையும்,
தேட்டங்களையும்,
தனதான விட்டங்களாய் வனம் பொழியும்
பலி(ரி) காணார்,
சுகம் தேடும் பாவிகள்!
இவர்
கலி கால காத்திரராய்
கனவெய்வார்,

காலம்
என்றும்
கறுப்புக்களை களம் சுமப்பதில்லை என்ற
யதார்த்தம் மொய்யா
பொய்யர்கள்
போதிப்பது சித்தமல்ல,
பித்தம் மென்ற
ஞானம் என்றும் யோகம் சுரக்காது,

இயற்கையின் பல இழப்புக்களே
இன்றைய புது யுக பிரவாகம்.
சரித்திரம் ஒன்றும் குருதி சுரவாமல்,
இந்த
வனப்பெய்தவில்லை
ஒன்றின் இழப்பே
மற்றொன்றின் பிறப்பென்ற
வேதமறியா வெட்டிகளே

இதயமிழக்கா,இரவல்சுரக்கா
சேந்தல்கள் செப்புவது ஏதும் இல்லை-அது
துப்புக் கெட்ட துரியோதனமாகும்,
பகலவனை சுட்டதாக,
என்றும் எந்த சோதிகளும்,
மகிழ்வெய்தவதில்லை-சுய
பரிசோதனைகள் என்றும் சுகமிழக்காது,
சுயம் இறக்க சூட்டிய,
சுதந்திரம் என்றும் தரமிழக்காது.

வலைப்பதிவு காப்பகம்