வியாழன், 24 டிசம்பர், 2009

மானப் பரப்பில் மக்கள் திலகம் மையித்த மங்கலம்.


சிரஞ்சிவியான எம் சஞ்சீவியே
ரம்யமான ரகசியனே!-எமதான இதயக் கனியே!
ஈழ விடுதலைக்காய் இதயம் சுரந்தவனே;
எழுக விடுதலையென ஏற்றமாய் இழைத்தவனே'
தோழமையாய் எம் தலைவன் தோளேந்திய முதல்வனே-உன்
தோளேந்தும் ஈழத் தமிழினம் தரணியில் என்றும்--

ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல்-
உதவும் கரம் படைத்த உதயனே-நீங்கள்
உண்மையான உழவனை உளமார உணர்ந்து
ஒப்புவமைக்கு அப்பாற்பட்ட தொலை நோக்கின்-
ஈழவிடுதலையின் அவசியத்தை ஐயமின்றி நேசித்த
ஆழத்தை எந்த அரசியல்வாதி தமிழகத்தில் சிந்தித்தான்,
மெளனமாக மலைதாண்டிய உதவி.

தலைவனின் ஆழமான எதிர்பார்ப்பை எந்த இடையூறுமின்றி,
தானேந்தி தாளேந்திய தார்மீகத்தை என்னென்போம்?
திரையில் மட்டமல்ல நீவிர் புரட்சி படைத்தீர்,புடை
சூழும் எம் ,ஈழ தமிழர் இனத்திற்கே பசுமை படைத்தீர்.தமிழ்
விழாதிருக்க எம் விழுதேந்திய வீரனே நாம்
வழுவாதிருக்க வகை சூட்டிய வல்லோனே-ஈழ தமிழ்
இனம் இருக்கும் வரை வரையில்லா உம் வரைபிருக்கும்.

நன்றி மறவாத நல்லுள்ளம் ஈழத் தமிழருக்கு என்றும்,
குன்றிடாமல் உமதான நினைவெழுதும் குவலயம்.
கன்றிடாமல் காலமெல்லாம் கனதியெய்தும்.
வென்றிடும் நீ அரசாட்சியில் இன்றிருந்தால்-இந்த
ஈனம் அகற்றி ஈழம் இழைந்திருக்கும்-விதி
வழி உம் பயணம் ஒத்தி ஒப்பேறியிருந்தால்?

வஞ்சினம் கொலுவமைத்த வஞ்சி ஒன்றும்,
மிஞ்சி இந்தியில் இழவமைத்த இலங்கல் இணைப்பகற்றி,
இங்கிதம் அகற்றிய ஈனர்களால் நாம் இசைவகற்றி,
இழவேந்தி,
இராப்பகலாய் பழுதேந்தி பாரம் சுமந்து--?

அன்று போல் உன் அகலங்கள் எங்களின் ஆழப்
பரப்பேந்த யாருமில்லை ஐயா!இன்று
ஐயகோ என
நாமழ எமை தேற்ற,தோற்ற எந்த தோழமையும்-எம்
மனப் பரப்பில்கூட கூடவில்லையே,

வானவர் தேசம் வையத்தில் உண்டென்றால்-நீவிர்
எம்மவர் தேசம் கண்டு நெஞ்சம் பதறி,
சங்கறுக்க தமிழக சதிகாரரை சாய்த்திருப்பீர்-
வெங்களத்தின் வேதனையை,அதன் வெப்பியாரத்தை
வெம்பியே அறுத்திருப்பீர்.ஆனாலும் என்ன
துவண்ட ஈழத் தமிழினம் துயரறுக்கும்,
தூக்கணங் குருவிக்கும் தூங்க ஓர் தொட்டில் போல்
எக் கணமும் நாம் எமக்கமைக்க ஏற்றமாய் உழைத்திருப்போம்.

விழ,விழ வீரியம் சுரக்கும் விழுதுகள் எழும்.
தொழ,தொழ ஓர்மம் ஒழியும்,தொட்ட காரியம்
தொய்ய தோட்டம் அமைக்கோம்,
அமைப்போம்!
தரணியில் தமிழரின் தாயகம் எத் தடை வந்த போதும்-
எந்த வேளை வரினும் உம் நினைவெழுதி-
ஏந்தும் துயரறுத்து தூயவன்,எம் வேலுப்பிள்ளை
பிரம்மத்தின்,பிராயத்தை மீண்டும் மு(மி)டுக்கி.

நெக்குருகும் உன் நினைவுகளில் எம் துக்கம் உருகும்.
பக்கமிருந்தாய் பலம் தந்தாய்,பாங்குடனே பாரம் சுமந்தாய்.
துக்கம் தாக்காது துணையிருந்தாய் தூயோனே!
அகப் பரப்பில்,
ஆழ வேரோடி,
இங்கிதமாய் இலங்கியவனே,காலப்
பரப்பெழுதும் காத(ல) தூரம் கண்ணியமாய் எம் கருவேந்தும்.
விண்ணிலிருந்தும் நீ விசாலமாய் புறுவல் பூப்பாய்.
புலரும் பொழுது பூபாளமிசைக்க.
தமிழரின் தாகம் தமிழீழமாய் தர(க)மேந்த.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்