ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெள்ளி நிலா தெறித்த நிலம்
விடிவெள்ளியில் விளைந்த பலம்
கல்வியில்,கேள்வியில் கலந்த வளம்-இன்று
கலவியிலும்
களவியலிலும்---?

பள்ளி செல்லா பாலகரை
காணாத பட்டயம் எம் நிலம்.
முள்ளில் நடந்தாலும்
முடங்காமல் சென்று
கள்ளமகற்றி கல்வி பயின்ற பாட்டயம்.

இன்று
வேலிகள் சரித்த,
வேள்வியால்,
பாலியலிலும், பாடலியலிலும்
பாடை காவுவது
பெளசாகுமா?

நாளெல்லாம் நலிவான சேதி தாங்கி
நாணயம் இழந்த நடை தளருமா?
தளர்த்தும் தாயமில்லா தகமெங்கள்
தாங்கு நிலம் கொதித்தெழுமா?

அஃதன்றி
இதுதான் விதியென
வீதி பரவி-எம்
பாரம்பரியக் கல்விகள் களைந்து
குறியில்லா குதமெழுத குவியுமா?

எம்
நிலம் எங்கள் வசமில்லா பொழுதெல்லாம்
பலமிழந்த பாசறையாய் பறை தட்டும்
பார்ப்பனியம் புரியுமா?
அது அவாளின் வதிவிடமில்லையென
வாசிப்புக்கள் களர
காத்திரம் பேணும் கனம் வேண்டும்.

யார்?
எப்போது?
எப்படி?
ஏனங்கள் ஏந்த ஒரு விடிவெழுதும்
வேதியர் வருவாரா?
நாளெல்லாம்
நாளமெழுதும் நாணங்கள் இவை.
நா நயங்கள் சுரக்க
நாணயமெழுதும்
நாயகர்களை தேடுகின்றேன்.

நாடிகள் இப்படித்தான்
சுற்று வட்டத்தில் சுரம் தேடுகின்றது.
பேடிகளை களையும் பேழம்
கபடிகள் ஆடாது.
மூக்கணங் கயிறறுத்து
முதுசம் பேணும் பாதைகள் அழுகின்றன!

அருவங்களிற்காய் -நாம்
காத்திருப்பது?
தெரிவெழுதி தேடுவதுபோல்
மருளது அகல "மா"
அருளர்கள் அருளது சொரிய
சாலை
சலனமாய் காத்திருக்கின்றது.

விடியுமா
எம் தேசமென
தாயவள் கலங்கும்
சாவொலியில் எம் சாசனங்கள்
சங்கமம் களைந்து, கலைத்து
கரிக்கப்படுகின்றன.

எந்த ஒரு சாமியினதும்
சாபமில்லாமல்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நிறைவெழுதிப் போகும் என் வீதியில்
பெயர்
பெயராமல்
சில ஆத்மங்களின்
குடியிருப்பில்
என் குதங்கள்
உயிர்ப்பெழுதும் போதினில்
என் இருப்பிருக்கும்
இவர்களின் பெயரில்
என் நெருப்பிருக்கும்


இதை
நாளையே என்
நா
வண்மையால்
நாடி எடுத்து
பொடிகளற்றி ஒரு பொய்கை வரையும்
பேறில்
என் பொறுப்பின்
இருப்பு
இறுமாப்பெய்யும்.

வசிட்டர்களை
வரலாற்றில்
படித்த எனக்கு
விசிட்டர்களாக
என்
தொடர்பில்
வகுப்பெடுக்கும்
வருணர்களிற்கு
வசந்தமான
வருடல்களுடன்
வாழ்த்தெழுதும் பேறகற்றினால்
என்
பெயர் தவிரும்.
 
துயர் தரும் சேதிகள் தவிர்க்க
துஞ்சாமல் என் தொடர்பெழுதலில்
படரும் ஒரு பாக்கியம்.
வெட்டொன்று துண்டிரண்டென
வேய்தலில் அவன் பாங்கில்
நெஞ்சகம்
நெருடி
வாயார
வருடுகின்றேன்.
பஞ்சாட்சரம்*
சரம்
மொய்ய
சுரம் பாடும்
இவன்
சரங்கள்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அறிந்ததுவும்
அறியாததவுமாய்
அகிலத்தில்
ஆயிரம் பாயிரங்கள்
ஓராயிரமிராய்
ஒன்றித்து
ஒப்புவமையற்று
ஒருக்க(ளி)ழித்து
விழித்து
விழுமியம் காணும்
விற்பகர்கள் அற்றதாய்
வினைகள்

இங்கு
விளையாடும் விகற்பத்தில்
விதி சொல்லி
வீதி அழித்து
மதியழிக்கும் மடமையின்
மகிமையின் கோலங்கள்
ஞாலங்களில்
எத் தீர்ப்பும் இன்றி
தித்திப்புக்கள்
திசை மாற
தீ
ஆசைத் தீயில்
அவனியின் அவலங்கள்.
ஆறாமல்
அவலக் காலங்களின்
மாயங்கள்.

மலங்கும் மடமையில்
துலங்காத தீபங்களாய்
சீலங்கள் சீரிழியும்-
சிறப்பதன் திறப்புக்கள்
துருப் பிடித்து
இன்று
மதம் பேசும் மடமையின்
கரங்களில்
மனிதம் விழித்தாலும் சாகும்.

விதியென ஓலம் போடும்
ஒரங்களில்
மதத்தின் மருமைகள்
மெதுமையாய்
சிரிக்க
வாழ்வறுத்து போகின்றது
மனிதக் கோடுகள்..

சனி, 4 ஆகஸ்ட், 2012


மனித சமூக வியாபாரத்தின்
மிகப் பெரிய மூலதனம்
கடவுள் எனும் கற்பனைக் பொருள்.

இந்த வியாபாரமும்
அதனூடான மூட நம்பிக்கையும்
இதனூடாக விழையும்
இம்மியும் பயனற்ற
இடரும்
எந் நாளும் அற்றுப் போகாது.

வலிமையற்ற வலிமையது
பலனே அற்ற பாதையது
புலனே ஏற்காது -ஆயினும்
புடம் சரியாத பூர்வீகமது.

ஏமாற்றுபவர்கள்
இருக்கும் வரை ஏமாறுபவர்கள்
இருப்பார்கள் என்பதன்
எளிமையான விளக்கவுரையிது.

தாற் பாரியமும்
தர்மம் என்பார்
தகமும் இதுவென்று தாயக்கட்டை வீசும்
தப்பான சமூகத்தின்
ஒப்புவமையும்
ஒவ்வாமையும்
ஒற்றி நிற்கும் சாரம் இதுதான்

இத் தளை
கவிழ்ந்தால்
தார்மீக சமூகம்
தளைத்தே ஓங்கி விடும்.
சுனை பாயும் சுகலயம்
சுட்டு வீழ்த்தப்பட்ட
தட்டுக்களின் த(ட)டையம் புரிவீரே!

மனித சமூகத்தின்
மூலப் பொருளின் பெரு வியாபாரி
கடவுள் எனும் கற்பனைக் காண்டமே.
மூடப் பழக்கம் முடங்க
தேடாமலே எம் சுதந்திரம் சுகிக்கும்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012


 மனக் கணக்கில்
ஏதோ மதி மயக்கம்?
கனக்கும் நினைவுகளால் வந்த தயக்கமா?
உவக்கும்
இது
உனக்கும் எனக்குமென எண்ணுவது பேதமை.
அது
தனிக் கணக்கு.

மனிதக் கணக்கு எப்போதுமே தவறுமா?
இல்லை
மாந்தர்களின் மையல்களில்
சாந்தமற்ற சந்தங்களில்
வசந்தமற்றுப் போனதாய்
வகுக்கும் சில நிலைகளில்
எந்தன் சிலை தவறி வீழ்ந்திடுமா?
இல்லை
எமது
சிலைகளும் சில்லான சிலிர்ப்பான
எண்ணங்களும் அதன் வண்ணங்களும்-

மனம் விட்டு
மதி திறந்து உரையாட
இரையாகிப் போனதாய்
தம்
உணர்வென சில மானிடங்கள்
தம் மதியை ஒரு
குச்சொழுக்கில் விரவி விட்டு
விதண்டாவாதம் பண்ணுவது விதியா?

இல்லை
புரிந்துணர்ணை புதை குழி தோண்டி
பரிந்துரை செய்யும் வையகங்களில்
மனக் கணக்கும்
மானக் கணக்கும்
சிலரின்
இரைப் பைகளில்
எம்
துரவுகளை துளாவி
அலசி
அவித்தெறிந்து போன தடயம் ஆறாமல்
அடுத்த அசைவில்
என்ன இசைவு வரும்?

நேற்றைய உரையாடலில்
தெளிவான சேதி ஒன்று
வீச்சற்றுப் போய்
திசைக் கொருவராய் தசை பிடுங்கி
தாளம் போடும்
யாலங்களினால் உன் மனக்கணக்கை
மரக்கையிலிட்டு மசித்து விடு
சேதி இதுவாக
என் செவிப் பறை நாண
தணலில் இட்டு என் சந்தங்களை -----??

புதன், 1 ஆகஸ்ட், 2012


ஏகாந்தம் ---
காந்தமானதாக கனக்கும் மனம்.
ஏகாந்தம் இனிமையானதா?
ஏந்தும் எந்த வழியிலும் சிலுவையானதாகவே
எனக்குபடுகின்றது.

தனிமையில் என்ன இனிமை காணமுடியும்?
தயாரிக்கும் தார்மீகமெனில்
அப்போதும் தனிமை எனக்கு கொடுமையானதே.
ஏது
செய்தாலும் யாராவது அரற்றுவதற்கு
எனக்கு ஒரு பக்கத் துணைவேண்டும்.
அன்றேல்
ஏதும் என்னால் ஆற்ற முடியாது.
எழுதும் போதும்
இடையிடையே ஏதாவது கதைத்தால்
தடையாக இருந்தாலும் ஒரு
உடை ஒன்று ஒன்றும்.

கற்பனைக் குதிரையில்
நான் என்றுமே சவாரித்ததில்லை.
வெறும் விற்பனங்கள் சூடி
வறுமையை வேய்ந்ததில்லை.
ஆதலில்தானோ
தனிமை
எனக்கு
கனிமையகற்றி போகின்றது?

உண்மையில்
தனிமையில்
இனிமை காணுபவர்கள்
காணலாமென காதலிப்பவர்கள்
என்
களத்தில் தளமிடுங்கள்.
தனிமை
ரொம்பவும் கொடுமையே எனக்குள்.

செவ்வாய், 19 ஜூன், 2012

வினைத் திறன் வேண்டி
வினையாற்ற
விளைவோ விடியலகற்ற
உளையும் மனம்
செல்லரிக்கும் நியங்களால்
இதயம் கழுவ
இறைந்து உறைந்தே போகின்றது மனம்.

இயலாமை என ஏதும் உண்டா?
தினம்
வினவுகின்றது சுயம்-என்
இனம்,அதன் முற்றம்
காலாவதியான கலத்தை
இரைமீட்டு!--

இவர்களிடை
சில மோதல்களை தவிர்க்க
ஏது செய்யலாம்?
விடை உண்டு.
அதற்கான தடைகளை
எப்படி அகற்றுவது?

நாமோ இங்கு
ஆற்ற வேண்டிய செயலோ அங்கு
இங்கிருந்து பார்த்தால்
கடல் வானத்தை தழுவுவது போல் தோற்றம்.
நான் போகினும் நாள் போகினும்---ம்
மடல்களினால் ஆகலாம்.
ஆனது பல நியங்கள்.
ஆயினும்!
திடமான செய்கையெனில்
தோட்டத்தில்தானே தேடணும்.
எம் தேட்டங்கள் உணர்ந்தால்??___
தேடலே தேவையில்லை.

தேட்டம் உணர்ந்ததாக நானும்
உணர்கின்றேன்.
பாட்டமாய் அது பதட்டம் நீங்கும்.
காட்டமாய் வாதித்தார்கள்.
இல்லை ஆழமாய்
சுவாசித்தே வாசித்தார்கள்
ஆதலால்

ம்!
பார்ப்போம்.
கலங்கி தெளிந்தாயிற்று.
கலமும் உடனாயிற்று.
இனி
களத்தில்தான் தடம் வேயணும்.
வேய்வார்கள் எம் வேதியரெனும்
நன் நம்பிக்கையில்
திடமாகவே நான்.

திருப்பம் வரும்
அது
விருப்பேற்றி வரும்.
எரிவதை எடுக்க
கொதிப்பு தானாகவே மதிப்படக்கும்.
இப்போ
அனலை மட்டும்-
அதன் கனலை மட்டும்
அகற்றவா?
ஆற்றவா?
இல்லை
அடுப்பையே தகற்கவா?

சற்று பொறுத்தே பொதி உடைக்கலாம்.
சுமக்கலாம்
ஆசுவாசித்தே ஓயும் மனத்தை என்ன செய்ய?
உறக்கத்திலும்
உசாவான வேலைத் திடலிலும்
நினைவுகளும்
நியங்களும் தீண்டும்
இந்த வடத்தை???

திங்கள், 18 ஜூன், 2012



http://www.youtube.com/watch?v=LNdsa7GfM04&feature=player_embedded

சனி, 9 ஜூன், 2012

நினைவுகளை உறுத்தும்
செயற்பாட்டை வலியுறுத்தா
நனவுகளை உனை சிதைக்க
நியமெழுத ஊடுகின்றேன்.

யாரையும் சாடும் எண்ணம் அறவே இல்லை.
ஆயினும்
யாரும் சாராமல் யதி சூடியவனை வரையாமலும்
இருக்க முடியவில்லை.
பேரிற்காகவோ அன்றி
பெயர்ச்சிக்காகவோ அன்றி
ஊரிற்காக உதவும் கரம் நீட்டிய அந்த
நீட்சியை
தரவிறக்காமல் தணிவதில்லை என் தகவிறக்கங்கள்.

நிலையில்லா இடம் தேடி
நிரந்திர இடம் நாடி
பரந்த மனங்களின் பதம் நாடி
நிறைந்த நிமிர்வால் நிலையெழுதிய
தரத்தில் தாகம் நிறைத்த சன சமூக
திறப்பு விழாவின்
சிரத்தையில் அகம் நிறைய
அட்சய பாத்திரமாய்
அன்று பெரும் பதிவெழுதிய பாக்கியம்
பெற்றவன் பாலேசன்.

கணணி ஒன்று
காலத்தேவை கருதி
கடமையாற்றிய காலக்கடனில்
பெருமை மிகு பேறு பெற்றவன்
விழாவன்று
உண்டிகள் ஊருக்கு உவந்தளித்த சேவையில்
தனித்துவம் ஆற்றியவன்

கட்டுமான தேவை கருதி
கனதியான நிதியும்
நெருடா உளமும்
நேர்த்தியான நெடுவான் வளமும்
நோக்கிய நின்மதிக்கு
எனதான தொடுதள நன்றிகளை
உவப்பாக உரித்தாக்க
தெளிவான தெரிவெடுத்தேன்.

உரித்தானவனே
உளக் கொள்
உவந்திருப்போம்.
உடமைகளை கடமையாக்கி
கடந்தவனே
காரியம் கைகூட என் கரந் தந்தவனே
நேரிய வழியில்
நெய்ந்தாய் நேர்கொள்வோம்.

புதன், 23 மே, 2012


மூடினாலும் இமை திறந்தாலும்
மூடினாலும் இமை திறந்தாலும்
தேடித் தேடி அலையுதே
உனைத் தேடித் தேடி அலையுதே

மனத்தை வென்று மானம் காத்த
மறவர் கூட்டமே-எம்
தானைத் தலைவன் வழி ஆய்ந்த
தர்ம மேகமே
ஊனம் அழித்து உயர்வு ஏந்திய
உணர்வு சின்னமே
உன்
உயர்வை மறக்கும்
உளங்கள் என்றும் உலகில் இல்லையே
பூவுலகில் இல்லையே.

 வாடி நின்ற பயிர்களெல்லாம் பசுமை போர்த்தது.
அவன் பாசுரங்கள் பழமை வாதம் அழித்து வென்றது.
நாடி நின்ற நன் நிலமே பாடி நின்றது.
அந்த பால் நிறத்து பயன் பரப்பு வெள்ளி திறந்தது.
விடி வெள்ளி மலர்ந்தது.

அகலாத கால் பதித்த ஆன்மம் சித்தியே
நீ அகிலம் வாழும் வரையும் வாழ்வாய்
என்றும் நித்தியே.
ஆய்வுகளில் ஆர்ந்தெடுத்த அமர காவியம்.எங்கள்
ஆத்மாவில் அமர்ந்து கொண்ட ஐீவ ஓவியம்.



ஈழ
நிமிர்வின் நித்தியன்.

தொடரப்போகும் தொடர் நாளை தொடு வானமாகும்.

சனி, 3 மார்ச், 2012

என் எண்ணக கனப்பு?


மெல்லவும்,சொல்லவும்
துணை வேண்டும்.
செல்லிடம் சேர நற்துணையும் வேண்டும்.
எங்கு தேட?
எதில் நாட?
எல்லாம் அரிதாரம் மூடிய அற்பனங்கள்.

ஆம்
சொல்ல முடியா வேதனை*
மெல்லவே முடியாத இழப்புக்கள்
செல்லெரிக்கும் நினைவுகள்
ஏன்
சொல்லரித்துப்போன துணைகள்
மலரும் நினைவுகளில்
மரித்துப்போன பல பயன் பாடுகள்
தரித்த இடம் தவறி
பாதை தவறிய பலா பலன்கள்

குறித்த இடத்தில் குவியம் மேய
தறித்துப்போன பல தடயங்கள்
வெறித்த பார்வையில் வேய்ந்ததான
குறிப்பிடவே தயக்கம் காட்டும் உணர்வுகள்
மதியிழப்பில் மானம் சூடிய உறவுகள்.

மாண்புகளை தொலைத்த
இல்லை
தொலைக்க வைத்த
நண்பர்கள் எனும் பெயரிலான
உறவுகள்
பண்புகளை பாழடித்த படித்த ஆனாலும்
படிப்பறிவற்ற பாளங்கள்.

சொல்லி ஆற்ற சொப்பனத்தில் மட்டுமே
வல்லினம் காண முடியும்.
பல்லி பலன் பார்க்கும்
பாழடைந்த சமூகத்தில்-நான்
பார்ப்பனரை வெறுக்கும்
நாத்திகனாம்.

கற்களிற்கு பாலாபிசேகம்
கனவில் கூட காட்டினால்
காயமாறும்.
கனவு நனவாகும் என
ஏற்றமிறைக்கும் இந்த
மாற்றமமைக்கா மானிடவர்க்கத்தில்-----???
என்
தாற்பாரியங்களை
அதனதன்
தோற்றங்களையும்,தேற்றங்களையும்
அதனூடான மாற்றங்களையும்
மறுதலிக்கும் இந்த
ஆற்றலற்ற சமூகம் என் உடன் பிறப்பு????

ஆதங்கம்
வெறும் வினாக்களையும்
வினையாற்றா
விகற்பங்களையுமே என்றும் சாரும்.
தூணகன்ற அத்திவாரமாய்
ஓரத்தில் நான்
ஓர்மங்களை கழுவேற்றி
பாரம் த(க)னைய பழுவேறுவேற்ற!
ஈரமில்லா இதயனாம்.
இழைக்கிறது இனம்???
இளைக்கின்றது மனமும்,மானமும்

வியாழன், 23 பிப்ரவரி, 2012


எழுதியதுவும்,உழுததுவும் போதும்.
இனி
விழுதுகள் தொடரெழுதட்டும்.
பழுதுகள் இல்லா பாட்டாக
பொழுதுகள் பொருதட்டும்.
மழுப்பல்கள் அகற்றி மாதோங்கும்
செழிப்புக்கள் பொழிந்து.

அற்ற உறவுகள் இனியும் வேர் கொளார்.
ஏன்
உற்ற உவப்பாக தேர் இழார்.
பற்றறுத்த போன பாதை தொழுபவர்
உற்றுப் பார்ப்பார் என இனியுமா இனியன கொள?
நெற்றிப் பொட்டில் நெறி வைத்து
வெற்றிப் புன்னகை ஈயாத
வெற்றுறவுகள் வேதினியில் எதை வேண்டுவார்?
இவை(வர்)கள்
அற்ற குளமாய் எமை தீண்டினாலும்.
நாம்
வற்றாத சுரபிகளாய் எம் வாசல் வேய்ந்தோம்.

எனவே!
எழுதியதுவும்,
உழுததுவும் போதும்-இனி
விழுதுகள் தொடரட்டும்.
வீரியம் சொரிய--

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஒளி முகம் சொரிய வழியது காட்டு.

மறைமுகம் காட்டும்
திரு முகங்கள் மலர.
திருமறை ஓதிடவா?
சிறை முகம் காட்டும் சிதைவுகள் பறக்க
முறை முகம் ஏற்றிடவா?
புற முகம் நீங்கி அக முகம் காட்ட
நியமதை விளங்கிடடா -நீ
புயமதை ஒதுக்கி பயமதை மேயும்
கயமையை விட்டிடடா -அதில்
ஒருமையை மேவி பெருமையை வடிக்க
திருவுளம் ஏற்றிடடா -வெறும்
பணமதே வாழ்வென பயனது எழுதும்
பாகத்தை அறுத்திடடா -பலன்
கடமையை கவ்வ காதறு தோறும்
உடமையை பெற்றிடடா.உன்
உரிமையை வென்றிடவா!!__

புரிவது உனக்கு தெரிவதில் இல்லை-இந்த
ஊனத்தை உடைத்திட வா -என்றும்
பதிவதில் பொழியும் பாகத்தை விளங்க
மதியதை மொழிய வா.அதில்
பல ரக ராகம் பசுமையாய் விளங்கும்
பாவத்தை புரிந்திட வா .

புரிவதில் உனக்கும் தெரிவது வேண்டும்.
பரிவது வேண்டாமே.ஏகி
ஏற்றிட வரியும் வகையது புரிந்து
திறனது ஒளிர்ந்திட வா.நீ திரிமுகம் நீக்கி
திடமுடன் திறனேற்றி வா.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பிரபஞ்சமே ஒரு பிரமிப்பு.


பட்டம் விடும் பாரம்பாரியம் அல்ல
பொங்கலின் தாற்பாரியம் பரிகாரமும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செயா
எந்த வளவும் ஏந்தாது.
நல்ல விளைவு ...

வீட்டுத் தோட்டம் செய்தவன் நகிலட்டும்
விவசாயியின் வீர்யத்தை.
இதன் பரிமாணத்தை ஆதலால் கிடைத்த பவுசை.
நன்றிக் கடனாற்றும் நயனம் சூடுவதே
பொங்கலின் சிறப்பாம்சம்.
ஆயின்!
வயிற்றை நிரப்ப வாய்க்காலில் தனை முகிழ்த்த
விவசாயிக்கு நாம் செய்த நன்னெறிக் கடன் யாதோ?

மலரும் நினைவுகளா?
எப்படி உய்யும் எம் மரபு??--
வேண்டாம் இனியும் ---

கடற்கரை காற்றும்
கலம் கொளா பட்டத்தின் பறப்பும்.
இள வயதின் கோலங்கள்.
உண்மை.
அது -
ஒரு பரவசக் காலம்.

விடுப்புப் பார்ப்பதுவும் விண்ணை முட்டும்
விண்ணும் விழி பரவும் வியப்பும்.
காற் சட்டையுடன் மூத்திரம் போனதுவும்
மேற் சட்டையில்லாமல் மேதினியில் ஆடியதுவும்
ஆக
பருவத்தே ஆன பழுப்பும்
காலங்கள் ஒவ்வொரு விளையாட்டையும் நிர்ணயிக்கும்.

உழவுனிற்கு நாம் என்றாவது
உளப் பூர்வமாக ஏதாவது ஆற்றினோமா?
களங்களும்,களனிகளும் கால்படாமல் போயிருந்தால்
உண்ண உணவிற்கு உலர்வுற்று
காட்டுவாசியாய் கலமேந்தியிருக்கும் கணம்.

இயற்கையில் மனிதம் படைத்த மனிதன்
ஈவுகளற்றி ஈடற்ற விளை நிலமாய்
ஈர உளம் கொண்ட கற்பகமல்லவா விவசாயி
இக் கணமென்ன எக்கணமும் ஊடும் நன்றிகள்
இகமியங்கும் இவர்களால் இயற்கைக்கும் எம் நன்றிகள்.

உழவர் திருநாள் பெரு நாளாக என்றும் ஓங்கட்டும்.
ஊனக உள்ளங்கள் தவிர்த்து.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

value="http://videozer.com/embed/9x85ggbk" >

வியாழன், 12 ஜனவரி, 2012

இழையும் ஆதங்கம்.


என்று பூர்த்தியாகும் என
என்றும் எழும் கேள்விக்கு

நன்றான பதில் நவில நாநிலத்தில்
நம்மவர்கள் யாருமே இல்லையா?

குன்றாக நிமிர்வெழுதும் குவியமிது
கூடவே மன்றமாய் எம் மதியர்கள்
நின்று கூடுவர்.
நிலையெழுதுவர் என்ற ஏக்கமது குலவ
தலை கொள்ளும் தளைகளாய் தரணியில்
ஒன்று கூடி வடமிழுப்போம்.
ஒய்யாரமாய் இதை நிறைவு கொள்வோம்.
சித்திரைக்குள் என சிலிர்க்கும் நனவுகளுடன்...

நண்பர்களே!
அன்பர்களே நினைவில் கொள்ளுங்கள்
நிதி வேண்டும் இன்னமும் 14 இலட்சமென்பதை
இலட்சியமாய் இதயத்தில் கொள்வதுமட்டுமல்ல

ஈதலாக ஈயணும்.ஈசனாக மாறணும்.
ஈடில்லா இலட்சியமாய் இவ் வருடமே முடிக்கணும்.

ஆயத்தமாகுங்கள் இறுதிக் கட்ட நிதி நல்க.
காரணங்கள் தேடி ரணங்கள் சூடாமல்
தோரணங்கள் கட்ட தோழர்களையும் இணையுங்கள்.
சோர்வகற்றி இலங்குங்கள்.
சேருமிடம் சேர.

திங்கள், 2 ஜனவரி, 2012

எழுதவா?_


எழுது
ஏதாவது
இல்லை எதையாவது???
எண்ணங்கள் எழுகின்றது.

எழுதவா?
விடவா?
வைகறையிலும் வானம்-
இருள் மொள்ளும் போதினிலும் எழும்
எண்ணங்களை என் செய?

யாருக்காகவும் பதியும் பதிவல்லை-
ஒரு வகையில் என் மன,மான திருப்திக்காகவா?
அல்லது எதையாவது சுட்டி என் எண்ணங்களை ஈடேற்றவா?

ஏதும் இல்லை என எனை நானே ஏ(ன்) மாற்றவா?
இல்லை பொழுது போக்கவா?

ஆதங்கம் சார்ந்த அங்கலாய்ப்பா?
தங்ககங்கள் தேடும் சந்தமா?
தங்காதவரை தடுத்திடும் தளமாக்கவா?
அங்கமதை அர்ப்பணிப்புடன் அளித்திட ஏங்கும்
பங்கமிலா பரிதவிப்பா?

புரிந்தவர்கள் பதிவெழுதுவார்.அஃதற்றோர்
அப்படியே விழி பிதுங்க நான்-
எதை எழுத?எதை விட?

எனினும் எழுதுவேன் என்கின்ற
தெளிவினில் என் தேடல்கள் தொடர எழுதுவேன்.
எது தேவையோ?
எதில் தேடலோ
என்ன தேடலோ?

அதையெலாம் எழுதுவேன்.என்
எதிர்பார்ப்பு தொடர --??!!
தொடரும் தொடரெழுத எழுதுவோம்
என எனையாரும் பிறழாதகற்றும் வரை.

வலைப்பதிவு காப்பகம்