வியாழன், 23 பிப்ரவரி, 2012


எழுதியதுவும்,உழுததுவும் போதும்.
இனி
விழுதுகள் தொடரெழுதட்டும்.
பழுதுகள் இல்லா பாட்டாக
பொழுதுகள் பொருதட்டும்.
மழுப்பல்கள் அகற்றி மாதோங்கும்
செழிப்புக்கள் பொழிந்து.

அற்ற உறவுகள் இனியும் வேர் கொளார்.
ஏன்
உற்ற உவப்பாக தேர் இழார்.
பற்றறுத்த போன பாதை தொழுபவர்
உற்றுப் பார்ப்பார் என இனியுமா இனியன கொள?
நெற்றிப் பொட்டில் நெறி வைத்து
வெற்றிப் புன்னகை ஈயாத
வெற்றுறவுகள் வேதினியில் எதை வேண்டுவார்?
இவை(வர்)கள்
அற்ற குளமாய் எமை தீண்டினாலும்.
நாம்
வற்றாத சுரபிகளாய் எம் வாசல் வேய்ந்தோம்.

எனவே!
எழுதியதுவும்,
உழுததுவும் போதும்-இனி
விழுதுகள் தொடரட்டும்.
வீரியம் சொரிய--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்