சனி, 28 நவம்பர், 2009

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.


அருகிருந்த துணையின்றி
அழுவதில் சுகம் வருமா?
மனம் விட்டு அழுவதில்
மானசீக சுகம் உண்டு. நெஞ்ச பாரமதை,
இறக்கிவிட பஞ்சாகும் நிறைவுண்டு.

செயலது எம்மாலே நாமே இயக்கவேண்டும்.
எமக்காக நாமே எம்மையும் இலக்கவேண்டும்,
இழப்புகள் இலங்குவதும்,இயற்கையாய் நடப்பதுண்டு,
ஈடாட்டம் கொள்வதுவும் இயல்பாய் இலங்குவதுண்டு:

ஒன்றனதன் இழப்பிலே ஒன்று மலர்வதுண்டு.
நின்றனதன் நிலைப்பதனை நித்திலத்தில் நீயும் உணர்.
கொன்றதன் கோலத்தை கோபுரமாய் கோர்த்துவிடு.
அன்றனதன் காரியத்தை அன்றன்றே ஆற்றிவிடு.
ஆனது ஆகட்டும் ஆர்வமாய் அகன்றுவிடு.

சிந்தனையின் சூட்சுமத்தை சீராக நீவி விடு.
நிந்தனை செய்பவரை நிட்சயமாய் விலக்கிவிடு.
சொந்தமென்று சொக்க வைக்க சோபனமாய் உறவு வரும்.
பந்தமென்று பதவிசாக பாங்குடனும் உலவி வரும்.
உந்தனது உற்பவத்தை உருவவும் கோலமிடும்.
உற்சாகம் ஊட்டுவதில் உறவறுக்க உலவிடும்.ஆகவே
அற்பர்களே இப்படி அடுக்கடுக்காய் அனலிடுவார்-உந்தன்
அற்புதமான ஆற்றலினால் அத்தனையும் தவிர்த்து விடு.

உற்றார்,உறவினரை உள்ளத்தாலும் மறவாதே.
சுற்றம் சூழத்தாரை எந்த சூழலிலும் சுரண்டாதே.
குற்றம் குறை கூறாமல் குன்றாத உதவி செய்.
மாற்றம் எந்த வேளையிலும் தோற்றமின்றி தோன்றி விடும்.
மாநிலத்தை புரிந்து விட்டால் மார்க்கமதும் தேற்றி விடும்.

சுகமான வாழ்வுனக்கு சூத்திரமாய் எண்ணாதே.
அகமான வாழ்வில்லை அடிக்கடி மறக்காதே.
முட் கம்பி வேலிக்குள்ளே உன் முதுசங்கள் அகதியாய்
முடிவுறாத வேதனையில் முடிச்சுள்ளான் எதிரியவன்
முடிவெடுக்க நீயும் முகாந்திரமாற்ற வேண்டும்.முடிந்தவரை
அவர்கட்கு முனகாமல் உதவி செய்.

வியாழன், 26 நவம்பர், 2009

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.


பூபாளம் புலரும்
பூமிப் பந்து மெல்ல அசையும்
புள்ளினங்களும் மெல்லிசை இசைக்கும்
நீர்ப் பரப்பெங்கும் நெகிழும்
ஆலோலம் பாடும் செடி,கொடி,மரங்களெல்லாம்
ஆலிங்கனமாய் ஆரோகணிக்கும்,
வான் பரப்பை மென் முகில் வையப் பரப்பெங்கும்
நெகிழ்த்தி பரவசமாய் பாவும்.
இந்த இயற்கையின் இந்த பரப்பளையும் முகையை
பரவசப்படுத்த பகலவனின் பார்வையே முகாந்திரம்
முகிழ்த்த மூல காரணம்.

சூரியனற்ற பூமிப் பந்தை
யாராலும் கற்பனையிலாவது காணமுடியுமா?
ஆதவனில்லா அவனியை அகப்படுத்த முடியுமா?
மேய்ப்பானில்லா மேனியர் மேதினியில் மேன்மை கொள்ளல்
மேய்ந்தவர்கள் காண்டீரா?
ஆலிங்கனமற்ற ஆனந்தம் அவனியில் ஆர்ப்பதுண்டோ?
ஆயிழையாள் அற்ற அறமெங்கும் உண்டோ?
அவர் தம் மழலை இன்றி அரனேதும் உண்டோ?

இத்தனைக்கும் மூலம்
ஆதவனெனறால் மறுப்போர்தான் உண்டோ?
இதைவிட வலிமை உள்ள வையவர் யாரும் யாண்டால்
பூமிப் பந்தே புவனத்தில் பூண்டே.
இத்தனை மகிமையின் மையலை ஒத்தவன்
ஈழத் தமிழர்க்கு இளையோன் எங்கள்
கிழக்கின் கீர்த்தனன் வல்வை மண் ஈன்ற
மைந்தன் ஈழ வேந்தல் பிரபாகரன் தவிர வேதம் உண்டோ?

தமிழ் இலக்கியத்திற்குள் அடங்கா இலக்கணமவன்,
ஈழ விடுதலைக்காகவே அவதரித்தவன்,ஈழ வானின்
பகலவன்,பகைவர்க்கு சிம்ம சொப்பனவன்,பாங்கானவன்
தமிழீழ விடுதலை வேட்கை பூத்தவர்க்கு பா“ அவன்
எழுத,எழுத இனியவன்,பகை பரப்பளந்தவன் பாரில்
பூக்கும் புவன தமிழீழ கட்டுமானத்தின் கரை கடைத்தவன்:

ஆதலால்தான்
அயலவர்க்கு அமுதமானவன் அவர்தம் ஆளுமையில்
பெரும் வீச்சேந்திய அசகாய நர்த்தனம் நாட்டினான்.
இவ்வளவு கட்டுமானங்களின் ஒப்பீட்டளவற்ற ஓங்கார நாயகனின்
ஒவ்வோர் அசைவிலும் கட்டுண்ட காத்திர நாயகர்கள்தான்
எத்தனை பேர்,
அத்தனையும் எங்கள் மாவீரச் செல்வங்கள் என்றால் மிகை ஏது?
இதில் வகை என்று வேறுண்டா?

விடியல் ஒன்றே இலக்கு
ஈழம் விடியும் இமாலய நாயகனின் பெயர் உச்சரித்து
எம் பூமியை புனிதமாக்கிய சரித்திர நாயகர்களே!
உங்களின் தியாகத்தை எந்த மொழிகளிற்குள்ளும் கட்டி,
அவை
சொரியமுடியாது.
ஆம் இதுதான் யதார்த்தம்.

தமிழினம் என்றால் அது தலைவன் பிரபாகரன் பெயரின்றி
அசைவை ஆர்க்காது.
உதிக்கும் திசை பார்க்கும் எம் உத்தமர்காள்.
ஆதவன் யார் சொல்லி ஆழிக் கரை ஏகுவான்.
இடம்,
பொருள்,
ஏவல்,
காலப் புற யதார்த்தம்,
இத்தனையையும் அறியும் ஞானம் படைத்தவன்
ஈழ ஞாயம் அறிவித்தவன்,
அவனறியா கால,நேரம் யாதும்
உண்டோ?
ஆகவே என் இனிய ஈழ தேசத்துறவுகளே!

எங்கள் அன்னையிலும் மேலான பூமிப் புதல்வர்களாம்
எம் மாவீரர்களை நெஞ்சார அவர்கட்கு புனிதமான
வீராஞ்சலி மானசீகமாக மைத்து வீர சபதம் செய்வவோம்
வாருங்கள் அணி,அணியாய்,
இன்று நாம் பேரணியாய் செலுத்தும் பேராண்மையான அஞ்சலிதான்,
எம் பேராளனாம் அண்ணன்,பெருந்தலைவன் பிரபாகரனிற்கு கூறும்
பிறந்த நாள் நற் செய்தி ஆகும்.

நெஞ்சம் கலங்குமா?
நினைவு சிதையுமா?
துஞ்சும் கோலத்தை தூமணி துய்க்குமா?
இல்லை!
கலங்கும் நாளல்ல,
காத்திரமான,நேர்த்திணை நீட்சிக்கும்
நேரிய நாள் பூத்திருப்போம்!
புது வாழ்வு புலவ யாத்திருப்போம்.
ஒப்பாரும்,மிக்காரும் அற்ற பெருந் தலைவனின் வீர --
வரலாற்றிற்கு வித்திட்ட இந்த வீரிய நாளில்
எம் ஆயங்களை அகன்றெடுப்போமென சித்திக்கும் சித்தம் கொள்வோம்.

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.

புதன், 25 நவம்பர், 2009

அகமாக உற்பவத்தில் உரமேற்ற!


அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
என்ன கடனாற்ற போகின்றோம்?அவர்
தூய உள்ளம் புளகாங்கிம் புலவ என்ன,
கருமமாற்ற பாத்திரமேந்துவோம்?

ஆத்ம சோதிகளின் மூல தானத்தில் என்ன,
முதுசம் முகிழ்விக்க முன் நிற்கப் போகின்றோம்?
அவர் முன்றலில் முகம் புதைத்து எம்
ஆற்றலை ஒன்றாக்கும் வரம்கேட்போம்.

அவர் தம் தாகம் தீர்க்க வலு கேட்போம் –அந்த
உறுதியின் உறைவிடத்தில் முகனமர்ந்து எம்
ஈழ தாகம் இழைக்கும் சத்தியம் சாற்றுவோம்,
சோர்ந்து போகா வல்லமை யாப்போம்.

எம்!
இனிய தேசத்து தேமாங்கின் முத்துக்களின்,
முகாந்திரம் மீட்கும் பணியை இன்னமும்,
இன்னமும் ஆக்ரோசமாய் முன்னெடுப்போமென,
இங்கிதமான சங்கீதத்தின் சாத்தியம் சாற்போம்.
வாருங்கள்!
எம் இனத்தின் விடுதலை விரும்பிகளே.

அந்த புண்ணியர்களின் பூர்வாங்க சந்நிதியில்,
ஆத்மார்த்தமாய் ஆழ புதைந்து,
அவர் யாகங்களை,
ஆழமாய் தொழுது,
அவர் மன சாந்தி கொள்ள,
பாதி வழி பயணத்தை நாம்
சீராய் முன்னெடுப்போமென
எம்!
சத்திய வேள்வியின் சாரங்களை,
சாத்தியமாய் வெல்வோமென,
நித்தியமான உங்கள் ஈழக் கனவை
நிச்சயம் வெல்வோமென ---அந்த
உத்தமர் மூலத்தில் முகங் கொள்வோம்.

ஈழக் கனவுடன்
ஈகையான உம் உறவுகளினதும்
வித்தகமான விதை குழி மீதொரு
சாசனம் எழுதுவோம்,அதுவரை
இந்த!
சாகித்தியமான சாகரங்கள் சகக் கொள்ளும்.
விதி வெல்லும் விற்பனங்களை விசாலமாக்குவோம்.
வாருங்கள்
எம் தேசத்து புலர்வுகளே,
„மா‘‘ வீரர் சந்நியில் எங்களின் ஆதங்கத்தை
அரங்கேற்ற அமரரான அந்த ஆத்மர்களிற்கு நாம்
அகமாக விளக்கேற்ற.

விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.


மனிதம் கொன்றவன் மனிதம் பேசுகின்றான்.
மா“ பலி கொண்டவன் மாறு வேடம் பூணுகின்றான்.
நரபலியை எப்போதும் நாணாக கொண்டவன்,
நாட்டில் நாணயத்தை நாற்றிடப் போகின்றானாம்.

உலகம் போகும் ஊற்றைப் பார்த்தால்,எதுவும்
புலவுவதான பூடகமும் புரியவில்லை. ஏனோ?
நிலவுவதெல்லாம் நீதியின் நீட்சிபோல் கலவுகின்ற,
தலங்களெல்லாம் தாங்கியே போமோ? தமிழரின் துயரை,

தமிழனிற்கு துயரம் சிங்களவன் சூட்டியதில்லை,ஆம்
வரலாறு அதைத்தான் வலிமையாய் வகைக்குது,திரும்பி
சரிதம் தரிசிக்க சதிகள் புலவுகின்றது.இது இன்றும் தொடரும்
தொடர் வரலாறு பாரே பார்க்குது.எள்ளிச் சிரிக்குது.
தமிழன் கோடாரிக் காம்புதான் மாற்றுக் கணுவில்லா
காலக் கலமத்து.

ஒல்லாந்துகாரன்!
எந்தையர் மண்ணில் காலடி
வைத்த காலம் முதல் இன்று கரிகாலனின்
பொற்காலம் ஈறாக -----
தன் இனத்தை தானே அழிக்க முதுசம் சூட்டிய மூதேவிகாள்.
மதம் புனைந்தான்—மறைக்க ஈன இனம் புனைந்தான்.
சாதி, பேத, வர்க்கம் வரைந்தான்.கூடவே தமிழர்க்கு
நாக்க எலும்புத் துண்டினையும் அன்றே எறிந்தான்,
நில,புல ஆக்கிரமிப்பாளன்.

மான தன்மான சிந்தனையால்,
இன விடுதலையின் ஈர்ப்பால்,தன் சுயம் இழந்து
தன் மூச்சையே ஈழ விடுதலையின் பால் இறுமாந்து
காட்டியவர்களின் காலமிது.,
அவன் அந்த தார்மீகத் தலைவனின் அணியாக,
எத்துணை கட்டுமானங்களை காத்திரமாய் கட்டியெழுப்பி,
இவ்வளவு காத தூரமும் காவியமாய் சுமந்தானே,
எத்துணை ஈக,ஈர மாவீரங்களை இந்த மண்ணிற்காய்,
அதன் விடுதலைக்காய் ஈடு,இணையற்ற எங்கள்-
தலைவனின் ஏன்?
எங்களின் தேசிய இலட்சியத்திற்காய்---

இன்னமும் இந்த தேசிய மண்ணை நேசித்ததினால்
அத்துணை சொந்த,பந்தங்களை நாம் இன்றும்
இழக்க!
வழி வகுத்தவன் சிங்களனா?இல்லையே
இன்னமும்
தன்னையும் டமிழர் என தனக்குத்தானே தாம்பாளம்
தூக்கும் இந்த கோடாரிக் காம்புகள்,என்றால் தவறென்ன?
யார் சாற்ற முடிவுறும்?

இன்றும் முட்கம்பி வேலிக்குள்,
முகம் புதைக்கும் எம் மேனியரின் துயராற்ற,
எந்த பிதாமகன் பிறவிக் கடனாற்றுகின்றான்?
சுய நலத்திற்குள் சூடாற்றும் இவர்கள் சூரணர்களாம்.
இன்னமும் சிலதுகள் இன்றும் சிலம்பம் சுற்றுகின்றனர்.
சூடு சுரணையற்ற சிங்களரின் குதம் நக்கும் குரங்குகள்.
இந்த இலட்சணத்தில்
தேர்தலாம் அதற்கோர் கூட்டமாம், கொற்றமாம்.
சா“ வீடே இன்னமும் முடியவில்லை,விடியலில்லை.

இற்றைவரை தாய் மண்ணிற்காய் ஈகையான
எம் „மா“ வீரம் மீது தலை சாய்த்து அவர் மீதொரு
சாகித்தியம் தீட்டி எங்கள் தேசக் கடனாற்ற
தேர்ந்த புயலாய் மீண்டு(ம்) எழவோம்.
எமதான தேச ஈகையர் எமக்கான உந்து சக்தியாய்,
விழி நீட்டி வழி காட்ட,தேசத் துரோகிகளையும்,
எட்டப்பரான, ஒட்டப்பர்களையும் ஓர்மத்துடன்,
ஓணமான ஓர் ஓரம் கட்டி!

எங்கள் ஈகையர்களின்,
சந்நிதியில் தலை வணங்கி,
அவர் தம் தாகம் தீர்க்க,ஓயாமல் ஒழியாமல்,
ஒளிர்வோம்,அவர்தம் நினைவால் நிமிர்வெய்வோம்.
புலம் பெயர் எம் இனிய,
ஈழ இளைய தலைமுறையே!
தேசத்தை நேசிக்கும் எம் ஆத்மார்த்த இனிய உறவே!

தீப்பொறியாக உனக்குள்,
அனல் கக்கும் ஆளுமையை,அந்த ஆற்றலை
தேசத்தை நிர்மாணிக்கும் உன் உறுதியை
உன் ஆத்மார்த்த கீதார்த்தமாய்,
சுகமான சுமையாக சூரியத் தேவனின் சூத்திரத்திற்குள்,
சூசகமாய் சுரமூட்டு.
அகம்!

அந்த ஆளுமைக்காய்,அணையாமல் ஆறாக
ஆங்காரமாய் அனந்தமாய் எரியட்டும்.
விடுதலையின் விறுமம் எங்கள் வீதி கீறும்வரை.

செவ்வாய், 24 நவம்பர், 2009

துணைக்கு நீயும் சுமை தூக்க தூயவர் பாதை சேர்.


வலி தந்த வேதனையின் வாசலை துடைத்து,
பலி கொண்ட பாதகரின் பாதங்களை கடைந்து,
புலி கண்ட பாதையினை புனருத்தானம் புகுத்தி,
கிலி கொள்ள வைப்போமடா கீசக வதம் படிப்போமடா.

வலிமை என்பதை வாசகமாய் கொள்ளாமல்,
வார்த்தெடுக்க வேண்டுமே எம் வாசலதை மீட்க,
புலம் பெயர் மக்களெல்லாம் புது வேகமேற்றி,
வலம் வரவேண்டுமே வாசலது நிறைய.

முட் கம்பி வேலியடு தானாக திறவாது,எங்கள்
கட்டுமானம் கனதியாய் சுரவாமல்,
தொட்டுச் சொல்லும் வேளையில்லை,பகையை
சுட்டுக் கொல்ல கோலம் கோர்க்கும்.கொண்ட-
கோலமெல்லாம் கொலுவாய் மாற்ற.

விட்டுச் செல்லும் வேளையில்லை-விதியென
கட்டுக் கதை இட்டுச் செல்ல,சுற்றும் பகை சூழ,
எட்டாத பாதையெலாம் எம்மவர் எரித்தே வென்ற,
காலமழியா காவியமாக்கி வைத்த சுவடதை அழியவிட.

விதி சொல்லி விகன்றழ வீரியம் விரியாது,
எதிர்த்தால்,எழுச்சியுடன் போரிட்டால்,
உதிக்கும் உறுதி,இல்லையேல் அழிவெனினும்
மதிக்கும் மானுடம் மறு பிறப்பேந்தும் போராட்டம்.
விழிப்புணர்வு ஏற்ற வேண்டும் வீதியெலாம் அதுவே வேண்டும்.

விகன்றினி எழும்பா விட்டால் வீதி கூட-
விதியாய் ஏற்காது,
அகன்றிதை அகமே ஏற்று ஐயத்தை அகற்றி எழு.
பகன்றிடும் பாதை பரக்க பாரமிறக்கி பாதை கீறு.
தகன்றிடும் தர்க்கமெல்லாம் தாளாமையும் தானே விலக.

உனக்கான பாரத்தை நீயே தாங்கணும்-
ஊர்கூடி தேர் இழுக்க நீயும் உதவணும்.
தனக்கான பாதை இல்லை ஈழ தமிழர்க்கான பாதை இடு.
மனக் கணக்கம் பார்த்தாயானால் மரணமே மையல் பூணும்.
தனக்கென வாழா நெஞ்சம் தன் தாயவர் நிலம் மீட்க.

மாவீரர்க்கு எமதான மாவீர வணக்கம்.


மானசீக மார்க்கமாய்,
ஞாலமதில் ஞாற்றுகின்ற ஞாயம் கொண்டோம்.
சீலமவர் சிந்தையில் சீட்டி சுரந்த சீவியத்தை,
காலமதில் கனம் கொண்டு,
காத்திரமாய் காத்து நிற்போம்.

போராளிகள்.
இவர்கள் போர் ஆழிகள்.
வேரோடிய எங்கள் வேதனை களைய,
ஊராடி, உறவோடி, சீரடி சேர்ந்த சீர்காளர்காள்.
நீரோடி போகாமல் எங்கள் நியமங்களை நிர்ணயித்து,
நார்த்து நிற்கும் நாயகர்கள் ஈழத்திற்கான,
வேதாகமத்தை வேதித்த வேதியர்கள்.

உறைகின்ற உயிர்ப் பரப்பில்,
உயிர் இழைத்த இனியோர்கள்,இளையோர்கள்.
கறை படிந்து போகாமல் காலக் கடனாற்றிய காவியர்கள்.
ஆதலால் இவர்கள் ஈகம் இழைந்த இனியோர்கள்.
வேர்த்திரா வேதியர்கள் வேங்கைகள்.
பெரு வெற்றிகளின் நாயகர்கள்.

ஐயா!
உமை உரைக்க உரை கல்லும் உதிரும்.
உமை எழுத மனப் பரப்பு விரியும்.
ஒப்புவமையற்ற ஓங்காரம் ஒலிக்கும்.
ஒற்ற முடியாத ஓர்மங்கள் ஓங்கும்.
வற்றாத சீவிதங்களாய் உங்கள் வாகைகள்-
வரையும் வேற்று விகார மனங் கலைந்து,
வெட்கைகள் வெட்கும்.

காற்றிடை கலந்தோரே,
ஆற்றிடை அலைந்தோரே,
ஆழியின் ஆழத்தை அகத்திற்குள் புதைத்தோரே,
நதியின் சல,சலப்பாய் உங்கள் நர்த்தனங்கள்.
போதிப்பிற்கு அப்பாற்பட்ட „ஆ“ தித்தியாகங்கள்,
தானைத் தலைவனின் தார்மீகத் தாற்பாரியங்கள்.
உங்கள் கனவுகள் எங்கள் வசப்படும்—வான்
பரப்புக் கூட அன்று எங்கள் வாசல் வரும்.

தெய்வீகப் பிறவிகளென்றான் எம் தலைவன்.
ஆம்!
தேசப் பற்றாளன் தன் தேசத்திற்காய் தேகத்தையே,
தேர்ந்து தந்தவர்கள்,
ஈழத் தாயின் இனிய பூப் புதல்வர்கள்.
முகரும் தென்றலெல்லாம் முகிழ்ந்துள்ள முகையர்கள்.

நாமிருப்போம் என்றில்லை,
நாடிருக்கும் அந்த நாளிருக்கும்,என்ற
ஞாயம் ஞார்த்த ஞானியர்கள்.
நேர்த்த நேத்திரத்திற்காய்
ஈழ தோத்திரத்திற்காய்,வீரிந்த சூரிய புதல்வர்கள்.

வித்தகர்களே!
தீர்க்க தரிசனம் தீட்டிய திவ்வியர்களே!
தீக்கும் தியாகத்தின் திரவியம் தீட்டிய தீரர்களே!
தாங்கிகளே!
ஈழ தியாக தூமங்களே!
ஈழக் கனவுகள் எங்கள் காத்திரமாய்-
கனியும்வரை,
எங்கள் வயல்கள் எங்கள் எல்லையாக,
வரைபுகள் எங்கள் வாசல் வரும்வரை,
ஓயாது எங்கள் போராட்டம் ஓயாது.

உங்கள் தியாகத்தின்-சுவட்டில்
ஓர்மத்துடன் எங்கள்,
ஓசைகள் ஒலிக்கும்.அது ஈழ வாசல்
உங்கள் வாசலாய்,வலிமையாய்,
சிங்களத்து வெங்களம் விழலாக,
ஈழ பூமியாய் புவி வரையும் பூபாளமாய்.

சிந்திய குருதியின்,
குவியங்கள் அந்த அந்திமத்தை-
சூட்சுமமாய் சுவீகரித்து,
எந்தையர்களின் ஏணங்கள்,
தந்தையர்களின் தார்மீகங்களை,
சிந்தாமல் தரணி தரவு நுகர- வரும் ஈழம் மலரும்.
அதுவரை-
ஓயாத எங்கள்
தார்மீக தாரக மந்திரம் தரணியெலாம் ஒலிக்க.

திங்கள், 23 நவம்பர், 2009

அன்பாக நீ இருந்தால்
அருவியாக சுகம் இருக்கும்.

வலைப்பதிவு காப்பகம்