புதன், 23 மே, 2012


மூடினாலும் இமை திறந்தாலும்
மூடினாலும் இமை திறந்தாலும்
தேடித் தேடி அலையுதே
உனைத் தேடித் தேடி அலையுதே

மனத்தை வென்று மானம் காத்த
மறவர் கூட்டமே-எம்
தானைத் தலைவன் வழி ஆய்ந்த
தர்ம மேகமே
ஊனம் அழித்து உயர்வு ஏந்திய
உணர்வு சின்னமே
உன்
உயர்வை மறக்கும்
உளங்கள் என்றும் உலகில் இல்லையே
பூவுலகில் இல்லையே.

 வாடி நின்ற பயிர்களெல்லாம் பசுமை போர்த்தது.
அவன் பாசுரங்கள் பழமை வாதம் அழித்து வென்றது.
நாடி நின்ற நன் நிலமே பாடி நின்றது.
அந்த பால் நிறத்து பயன் பரப்பு வெள்ளி திறந்தது.
விடி வெள்ளி மலர்ந்தது.

அகலாத கால் பதித்த ஆன்மம் சித்தியே
நீ அகிலம் வாழும் வரையும் வாழ்வாய்
என்றும் நித்தியே.
ஆய்வுகளில் ஆர்ந்தெடுத்த அமர காவியம்.எங்கள்
ஆத்மாவில் அமர்ந்து கொண்ட ஐீவ ஓவியம்.



ஈழ
நிமிர்வின் நித்தியன்.

தொடரப்போகும் தொடர் நாளை தொடு வானமாகும்.

வலைப்பதிவு காப்பகம்