வெள்ளி, 6 டிசம்பர், 2013


மனம் நிறைய பேச எழும் ஆவல்கள்.
ஒரு
ஆதங்கத்தின் கீற்றாக அலைமோதும்
போதெல்லாம் அணைபோடும்.
துணை கூட அதை துய்க்கும்.
ஏணைகளில் என் எண்ணங்கள்
வரட்சியாக வற்றிப் போகின்றது.

ஏதுமே ஆவலற்ற உள்ளங்களால்
சாதுவான ஒரு துணைபோல
சதா காலமும் சஞ்சரிப்பதாய்
பதாகை தூக்கிய தோள்களையும் காணோம்?

ஒரு போக காலம் முடிந்ததுபோல் பின் வாங்கும்
பல உள்ளங்களின் முதுகுப் பார்வையால்---
தெருவோர பாடகனாய் மனம் பின்னும்
உணர்வுகளில் என் உளம் தேயும்.

நோகின்ற உள்ளம்
நோகாத இணைப்புக்கள்
பிணைப்புக்களில்
எந்த ஒரு பிரயோகமும்,
ஏன்


பிரியோசனமும் இல்லாமல்
தேடும் அலை மேல் துரும்பா?

எடுத்த ஒவ்வொரு அடியும்
வடு சுமக்கும்.
ஆதலால் திண்ணம் இன்னமும் துணிவேற்றும்.
சாதலாவதில்லை இந்த சதா நினைவுகள்
எண்ணங்களின் அடிச் சுவடு
பாதை செப்பனிடும்
நாள் வரும வரை
மனம் நிறையவே பேச எழும்
ஆவல்களுடன்-
அடிமைச் சாசனத்தின்
எழுதாத
தீர்ப்புக்ளை
அடியோடு மாற்ற இவன் எடுத்த
ஆயுதங்கள் பல!

அமைதி வழி ஆர்ப்பாட்டம்-
ஆக்கிரமிப்பு வெள்ளையனிடம்
வேகாதென புரிந்த போது
ஆயுதமே ஆயுதமாக
அரண் காட்டினான்.

அமைதிக்கும்
ஆட்சி கவிழ்ப்பிற்க்கும்
உடந்தையானானெ
மடந்தைதனை விரித்த
வெள்ளையனால்
தீவொன்றினுள் தீ ஆனான்.

மானிடத்தை நேசிக்க
கற்றுக் கொள்ள இந்த அகிலத்திற்கே
அறை கூவலை தன் செயலாக்கியதால்
செவிலியனான்.

பெற்ற விருதுகளை விட
கற்ற பாடங்கள் பல உண்டு இவனிடம்
அதில்
சுதந்திரமும்,
மானிடமும் மகுடம் சூட்டும் சுட்டிகள்.

கறுப்பு
வெள்ளை
இனம் யாபேரும் பெற வேண்டியது
சுகந்தமான சுதந்திரமான
அகிலமே அவன் கனவு.

அடக்கப்படும் இனத்திற்கு
இவன் ஒரு வழிகாட்டி!
இடர்படும்போதெல்லாம் தெம்பூட்டும்
நுகர் தடி.

தனதான இன விடிவில் முழுமையான
வெற்றிபெற்றானா?
இல்லையா?
அதற்காகவே வாழ்ந்து காட்டிய
இவன் வரலாறு கூறும் சேதியில்
அவன் வெற்றியின் யதார்த்தம் பிரதிபலிக்கும்.

போய் வருக!
இன விடுதலை பெருஞ் சுடரே!
ஏன் இறந்தான் தேவனென
உலகம் வடிக்கும் இரங்கலில்
உளம திறந்தது போல்
எம்
மண்ணிற்கும் ஒரு விடிவெள்ளியாய்
போய் வருக.
போற்றுதற் கரிய அடலேறே!

புதன், 4 டிசம்பர், 2013

                                    பெருந் தலைவ!



நன்நெறியுடன்
வல் பொறி முறை பூண்ட
வல்வை மைந்தனாய்
வையகம் வந்தாய்.

செல் நெறியுடன் நீ வகுத்த
பல் களங்களும் பல்கி பெருக
பிறவியெடுத்த பெருந் தலைவ
அகவை 59ஆக
புகும் உன் வாழ்வு நிறை
தகமையான அகமையாக
ஆளுமை தந்தவனே!
வாழி நீ
வாழ்த்தேவும் பெரும் பேறு
உனதான பிறப்பால் எனக்கும் தேறியதுகாண்.

வனப்பெழுதும் நீ வைத்த பார்வையின்
தினம் இன்று.
தனை எழுதும் பேறாக்கிய
நினை
நிந்தன் பெருஞ் சுவடியை
காலம் கருக்கொண்டு
ஞாலத்தில் உந்தும் ஒரு ஒளி புலர.

வாழி நீவிர் என
வையகம் வாழ்த்தெழுதும்
போதும் உன் பெருங் கனவை
நனவாக்க நாளை கூடும்
மாவீரக் கனலில் ஒரு
உறுதி கொள்வோம்.

அது!
தமிழர் கனவை மென் மேலும்
அமிழ்தாக்க ஒரு ஆக்கம் பேணும்.
மாறுதல்களில்
நின்
வார்த்தையால் அகவுவேன்.
போராட்ட வடிவம் மாறலாம்
கொண்ட கொள்கைப் போரது மாறதென
மீண்டும்
ஒரு பெருவொலி இவ் வுலகம் நெய்யும்.

"தமிழரது தாகம் தமிழீ(ழுலக)த் தாயகம்"

நினைவுகளின் தடத்தில்
ஒரு பாதம் பணிந்து
நீர்த் திவலைகள் பனித்து
இதயமே ஒரு மெளன ரீங்காரத்தை
ஓசையின்றி இழைத்தது.

மழையும்,அதன் சாரலும்
மெல்ல எம் தேசம் தழுவிய ஒரு
மாலைப் பொழுதில்
ஆலய மணியின் கணீரென்ற
ஒலியிழையில்
தேசத்து மலர்கள் யாவும் சிலிர்த்துப் போயின.
அது ஒரு காலமாக!

இன்று!
மூலைக்கு மூலை பல மூடர்களின் கண்காணிப்பும்
ஈரமாக்கவா இல்லையா எனும் உந்துதலில்
இயற்கையின் இசைவின்மையும்
மனதை நெருட--
நின்றொரு ஒலி கொட்டும் எண்ணம் மனதை உந்த
மனைகள் பலவற்றில் தீபாரதனையுடன் ஒரு மெளனாஞ்சலி
எது நடந்தாலும்-
ஏக்கம் சுமக்கும் நெஞ்சகம்
இயங்கத்தான் சாலவே தடமிடும்.

நடந்தது!
நனவாகவே சகல இதயத்திலும்.
இது
ஆரியர்களின் அடக்கு முறையால்
வீரியம் பெற்றது.
இது
குருதியோடும்,நரம்பினூடும்
இழைந்த சங்கமம்.

தேசத்தின் புதல்வர்களை
எம் நேயத்தோடும்,பாசத்தோடும்
என்றும் நினைவாக்கம் கொள்வோம் எனும்
நனவாக்கத்தின் நல்லிருப்பாய்.
உதிர்ந்து
தொலைந்து கோணாது இந்த
உயிர்ப்புக்களின் ஊடு தளம் எனும்
பயிர்ப்பாய்.


முகிழொன்றாய்
நெகிழ்வகற்றி நெறிகட்டிய விந்தை-இன்று
அகிலமெலாம் அவன் ஆளுமை.
தகித்த வேதனையிலும்,
சகிக்கவே முடியாத சோகத்திலும்
செழிப்பேற்றியது காண் இன்று
தமிழீழ,தமிழக உறவுகள்.

இது!
உலகெலாம் உலவும் உலவு.
கலப்பில்லாத உவப்பு -இது
காலம் காலமாய் எம்
கரிகாலனால்,அவனது
தரிசனத்தால் தாளொற்றிய சிறப்பு.

பொற்காலம் ஒன்றை போரால்-அதன்
பேரால் வேர் கொள வைத்த விந்தையது.
தொலை நோக்காய்
தொக்கிய வீரியம் -அதன்
ஆளுகைகள் இன்று அவன் பேருடன்
மாதவ வீரர்களையும் மையப்படுத்தி
உணர்வுகளை,இதன் தெறிப்புக்களை
அதனூடான விறுமங்களை நம்
ரத்த நாளத்தில் தறையும் விந்தை நாளிது.

அது!
தமிழர்களின் விருத்தம் என்றால்
வடக்கில்,கிழக்கில் ராணுவத்திற்கு கருத்தலாக?
அதன் பெயர்தான் "பிரபாகரன்"
மறு பெயர் மாவீரச் செம்மல்கள்.

விளக்குகளிற்கு விளக்கெதற்கு.
ஒவ்வொரு
இதயக் கூட்டிலும் தேசம் பூராகவும்,
நாளை ஒளிரும் ளெிச்சத்தை என்ன செய்வதாக உத்தே(வே)சம்?
பாவம் பயப் பிம்மங்கள்.
ஒரு தீபம் ஒளிர்ந்தாலே
பளீரென அறையும் தடமே
திடமான மாவீர இருப்பு.
மாதவம் செய்த மாநிலம்.

பூப்பந்தல்
பூம்புனலாய் நாளை ஓடியே ஒரு
புது வீச் செய்யும்.
இது காலத்தின் கட்டளை
கடைசித் தமிழன் இருக்கும் வரை இறவாது.
இது
நீதி மட்டுமல்ல நியதி(தீ)யும்.
இதயத்தால் உங்களின் ஈகங்களில் நனையும்
தேசம் பெரும் கங்கணத்தால் ஒரு கணம் வேயும்.
அது
காலப் பெரு வெள்ளத்திற்கு காத்திரமாய் கூறும்
கூற்றாக -----

உங்கள் உறுதிகள்
உறு தீகளாக உரிமம் சூடும்.
இத் திங்கள் தரும் சேதியது.
எத் திங்களிலும்,சிங்களத்தாலும்
வதைக்கவோ,ஒடுக்கவோ முடியா பெருந்தீயாக
மாவீர இல்லங்கள் ஒளிரட்டும்.
அவர் தம் ஈகையின் பேரால்.

உமது யாகங்களை,
எமது தாகங்களாக கையகப்படுத்தினோம்
எனும் தார்மீக சேதியாக.
தமிழரின் தாகம் தமிழீ(ழுலக)த் தாயகமாக!


தொழவே முடியாத
உங்கள் தொழுவங்களைவிட
எங்களின் ஆழ மனதில்
அமைதியாக உறங்குங்கள்..

அதிதியானாலும்-
ஆழக் கடல் கடந்தே நாம் வாழ்ந்தாலும்-
ஆழமான நேசத்தில்!
உங்களின் சுவாசங்களாக நாமிருப்போம்.
இருக்கின்றோம்.

ஆதலால்தான்-
சில கால குழப்ப,கலக்கங்கள்
ஒருவகை கலகங்களும் கூட -
கலைந்தது.
கலைத்தது உங்களின் தியாகங்களும்
யாகங்களும்.
போகும் பாதை தூரம்தான்.
பெரும் இன்னல்கள்
இடர்கள் சூழ்ந்ததுதான்.

பெரு நெருப்பாற்றை கடந்தவர்கள்-நீங்கள்
சொல்லற்கரிய சாதனையாளர்களாய்
வழி காட்டினீர்கள்-இந்த சுவடே
எமது பாதையாய்
இயங்கு நிலை வேறு.ஆயினும்
இலக்கில் மாற்றமில்லை.

அமைதியாக உறங்குங்கள்-
அதிதியானாலும் அறுதியாய் இலங்குவோம்.
இதுதான் நேற்றைய நாளில்
நேர்த்திய நோற்றல்கள்.
கார்த்திகைப் பூவில்
களங்கமில்லாமல் காப்பாய் இயங்கும் காத்திரர்கள்
காட்டும் கனதியான வீதியில்-
புது விதியெழுதுவோம்.
பூப்போம்.

எம் முற்றத்து முறக் கவிஞனே!
இன்று உனக்கு அகவை ஒன்று கூடும்
அரிய நாளாம்.
வாழ்த்தெழுதி உனை சேவிக்கும்
வரப்பில் எழும் அந்த இனிய பார்வையும்
நெகிழ்வும்
எனக்குள்
எனதான நினைவுப் பள்ளத்தாக்கில்
பெரும் பார,பாராத தழும்புகளாய்.

நிதம் நின் பாக்களையும்
பரவும் வரிகளையும்
மனக் கொண்டவன்.
ஆதலால் தமிழ் நிரவக் களை கொண்டவன்.
இப்படி எனைப்போல் எத்தனை பேரை
உளக் கொண்டவனே!

உலைக்கள வியாசனே!
கலை,பண்பாட்டுக் கழகத்தால்
களத்தையும்,தளத்தையும் மெருகேற்றி
உணர்வேற்றிய உலைக்களமே!

எங்குளாய்?
எப்படியுளாயோ?
யாமறியோம்
எனினும்
ஏடுகளிலும் எழுத்துக்களிலும்
நின் தகமையான தரிசனமாய்
என்றும் எம்முடன் வாழ்வாய்.

வரலாற்றில் நீ ஒரு பெருஞ் சுவடு.
அந்த தொடு தளத்தில்
நின் பேராண்மை.
தமிழுலகம் வாழும் வரை
வரையறையின்றி வாழ்வாய்.
வரும்
இளைய தலைமுறையின்
இடுகையான சுவட்டில் ஓர் பேரொளியாய்.

பெருஞ் சுடரே!
ஈழ அக்னிக் களத்தில்
தாழாமல் வேங்கைகளை சுரந்தவனே!
அரும்பாகிய பலரை
இரும்பாக்கிய
ஈகையே நின்
கருப் பொருளெல்லாம்
ஈழப் பிரவசத்திலென
வசமாகிய
வையகனே!

நிதம் சுவாசித்த தேசக் கந்தகக் காற்றின்
அலை வரிசையாகி,
ஆழப் புதைந்திருந்து ஆழ் மனதில்
என்றும் வல்ல பெருந் தீயாக
தென்றலின் சுகந்தத்துடன்
அழகாக என்றும் அனலாக!
ஈழ நேச நெஞ்சகங்களில்
குடியிருப்பாய்.

நினதான இந்த கம்பீரமும்,
மிடுக்கான,தெளிவான பார்வையும்
திசையெலாம் விசை எழுப்பிய
திடமான வரிகளும் நின் வாசம் பூசும்
இந்த பாரில் என்றும்.

சனி, 23 நவம்பர், 2013


வேதனைகளின் விளிம்பில்
வெம்புகின்ற இதயங்களின்
சோதனைகளை யார் அறிவார்?
அறிந்தவாரக ஒருவர்
இருந்தார்.

இரும்பொத்த இதயம்
யாவையும் புரிந்த தகயம்.
கரும்பான காணிக்கை.
பாரில்!
நெருப்பான வேள்விக் கணை
நு்ண்ணிய தலைமை
நுனி வரை ஏகிய தகமை
தன்னையே
தந்த காணிக்கை

தந்தை என்றும்
தனயன் என்றும்
தமிழீழக் கொள்கையை வேரறுக்க நின்ற
ரத்தங்களையே வேரறுத்த வேதியர்கள்கள்

கொண்ட இலட்சியத்தால்
சூழ தமை ஈய்ந்த எம்
செம்மல்களே!

உமை மறந்தா எம் வாழ்வு
உலகில்
ஈடேறும்.
மறத்தல்
மானிடத்தில் மனதப் பண்பல்ல
தான் ஈன்ற உயிர்க்கு தானமாய்
தமை
ஈடாக்கும் பேரியல் பெற்றோம்
காண்.

உனை இகத்தில் எக் கணமும் ஏற்றி
தொடருவோம்
விடுதலை பயணம் காண்.

வெல்வோம் எனும்
பாத்திரத்தில் காத்திரம் கொள்வோம்.
சாலவே தொடரும்
சாலை நாளை எமதாகும்
சொல்லாத காரியமும் நாளை
செழிப்பேறும்.

வீதியெங்கும் விடுதலை கானங்கள்.
விதி ஏற்றி எம் விடுதலை பயணங்கள்
ஒரு சேதி சொல்லும் அகவலயம் கொள்வோம்.
மாவீரங்களிற்கு
இந்த
மாதவ நாளில் எம் அர்ப்பணங்கள்.
கண்களிற்க்கு தெரியாத
காரியங்கள்
கனதி சூடும்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

என்னை சுவாசிக்கும்
எனதான உயர்வுகளே!
முதலில்
உங்களை
யதார்த்மாக வாசியுங்கள்.
சுகவாசி வாழ்வா?
சுதேச வாழ்வா?

சுகவாசி வாழ்வில்
ஒர்
சுதேச வாழ்வெழுத
எம்முடன்
கரம் சேருங்கள்.

எமதான வாழ்வின்
அர்த்தத்தில் ஒரு அடையாள நெறியை,
ஒரு ஆளுமையை,
எம்!
கிராமத்தில் எமதான கி(வ)ழக்கில்
உதயமாகும் உ(தி)ரத்தில்,
பொட்டிட்டு போய்ச் சேர்வோம்-

நாளை எம்
இளைய கூடுகள்
எமை
இழிவாக இயம்பாமல்,

ஏந்தும் எப் பழிச் சொல்லிற்கும் தகமை சாராமல்,
இயற்கை எய்தியபின்பும்,
இட்டுச் சென்றார்கள்-எம்
இதயமான இயல் வாழ்வாக
புலர்த்திய புயமாக!

தடம் தாங்கிய தககையர்களான -எம்
இடம் பெயர் நம் உறவுகளென
ஒரு ஓலியும்--
ஒளியும்--
உம் சுவட்டையும்,சூழலையும் தழுவ.
ஆசுவாசம் உமைத் தழுவும்.

இது!
வேரடி மண்ணுடன்
தேரடி சுவைத்த நேயமெனும்,
ஊரடித் தேட்டத்தின்
உயர்வான வலுவாகும்.

எமதான ஊரக அரும்புகளின்-
உகமான பள்ளி
உதயமாக-
தகம் தரும் பதிவு.
ஈகம் முக்கியம் என்
ஈரமான நெஞ்சகர்களே!

வியாழன், 21 நவம்பர், 2013


நெருப்பெரிந்த நிலம்
இன்று முதல்
மீண்டும்
கொழுந்தெரித்துப் போகுமென்று
ஒரு போகம்.
இந்த
பெரும்பான்மை சிங்களத்திடம்
ஆதலால்
பல கலை பாட திடல்
விடுமுறையில்

பயம்!
பயம்?
பலமகற்ற பல நாடுகளின்
நிழலில் வந்த நியம்
ஆதலால்
பலமற்ற சமூகத்திடமும் பயம்
தலம் பற்றி
நாளை
ஒரு கலம் சூடும்
காலமது வந்திடுமென்றே பயம்.

சிரிப்பதா-
அழுவதா?
உரிமைப் போரது
ஓயாது எனும் வெப்பகக் காற்றில்
என்றும் ஓயாது தமிழினம் எனும்
பெரு விருப்பகத்தில்
சிங்கள வெங்களத்தை நினைக்க
சிரிப்பதா-
அழுவதா?

கங்குல்கள்!
என்றுமே அணைந்தபோகாது
எனும் யதார்த்தைத்தை பேணாத
பேரினவாதம்
அங்குலமாக எதையுமே அழிக்க முடியாது
எனும் யதார்த்தத்தை எண்ண
சிரிப்பதா
அழுவதா?
இல்லை
சினப்பதா?

சினைகள் பற்றியதே எம் தேசியம்
சிதைக்க முடியாததே எம் தாயகம்
பனைகளாக நிமிர்ந்த யாசகம்-இதில்
யாப்பதே எம் நாயகம்.

மாவீர நாளிற்கான சிறப்பது -எம்
நாயகர்களே
உங்களது நிழலிற்கே பயந்தோடும்
சிங்களம்.
அந்த வெங்களத்தில் சந்தித்ததை என்றுமே
மறக்காது.
ஆதலால் கூறுகின்றேன்.
உங்களது நியம்
எங்களைவிட
இவர்களிற்கே நினைவு கூறும் நாளாகும்
இந்த மாவீர வாரம்.

நாமே மறந்தாலும்
மறக்காமல் எமை ஞாபகப் பந்தலிற்குள் தள்ளும்
உங்களது நியமும்
நியாயமான போராட்ட வல்லமையும் வலிமையும்
இவ் ஆரிய சமூகத் திடல்-

இதுவே எமது தீபாவளி
இங்கு
புத்தாடைகள் இல்லாமல் உங்களின்
புனிதங்கள் மேல் ஒரு சத்திய வேள்வி
எம்
ரத்தத்தில்
ராகமாக எழுதும்
தீப வழிபாடு.

மனக் கோட்டிற்குள் ஒரு சித்தரம் வரைந்த
சரிதர்களே!
விரிவடைந்தே
பரிவாகும் ஒரு கனவு நாளிற்குள்
உங்களின் பாங்குகளுடன் எங்கள் பற்றுதலும்
தேற்றதுலுடனான தோற்றுவாய்கள்.

மாவீரம் என்றுமே மாசடையாது- என
மானிடத்தில் ஒரு "மா" காவியம் தந்த காத்திரர்களே!
எமதான புனித வணக்கங்கள்
பனி படர் தேசத்தில் வாழ்ந்தாலும்
புனிதமானதே எம் தேசியமும்
தேசமும் என
நாளும் உரைக்கும் ஞாலத்தின்
தேசத்தின் குரலாக!

வெள்ளி, 8 நவம்பர், 2013

எதிர் பார்ப் பூ

சிரித்து
சிதறிய
சிந்தனைகள்
வந்தனம் வருடிய வருடல்கள்
எல்லாம்!
பூரித்து போய்
புவனமாய் ஓர்
பூடகம் காட்டின!

இன்று
அலர்ந்து போயினவாய்
அத்தனையும் என
ஒரு பொய்த்தலம் காட்டின?

எதுவாகினும்
மலர்ந்த
தலம்
என்றும் மலினம் காட்டாதென
ஒரு கைத் தலம் பற்ற கண்டோம்.
இது
காணிக்கை எம் காலக் கதிரவர்க்கு
என்று
ஊது சங்கெடுத்து.

பொறுப்பெடுத் பொழுதுகள்
ஓயாது
காண்
மறு
தலம் பற்றார்-
மையல் அது காண்.

தைத்த புண்களில் என்றும் ஓர் காயம்
மைத்ததுவும்
மையல் காண நினைத்ததுவும்
ஒரே ஒரு காயம்தான்
ஆறாத செயலிகள் ஆறாது.
ஆற்றாமல் தீராது காண்
ஆண்டு 2014 ல்
ஒரு ???

உலைக்கள வியாசா?

உலைக் கள வியாசனை தேடுகின்றேன்.
அவன் தந்த உறுதியை நாடுகின்றேன்.
நிலைக் களத்தில் நிதம் நியம் எழுதியவன்.அவன்
வலைத் தளத்தில் என் வயம் நாடும்.

திணைக் களமெல்லாம் தீர்ந்தே போயினவோ?
திண்ணைப் பேச்சை திசையாலேயே வெறுத்து
உண்மைத் தன்மையை உறுதியாய் படைத்த எம் தேசத்து
அரசபைக் கவிஞன்?
என்னானான்?

தலைக் கனம் சிறிதேனும் இலா தவக் கவிஞன்.
தலைமையின்: திசையில்
விசைகூட்டிய வீரியன்
மலைபோல வெற்றி குவிய மனமிசைத்து கவி எழுதிய
காலக் கவிஞன்.
என்னானான்?
எங்குள்ளான்?

ஏங்கும் என் மனம்போல் எத்தனை பேரின்
இதயக் கூட்டில் குடியிருக்கும் தாயகக் கவிஞன்.
புதுவையே
எங்குளாய்?
எப்படியுள்ளாய்?
மாவீர நாள் நெருங்கும்போதெல்லாம்
புதுப் பொலிவுடன் பொங்கும் உனதான கவி கேட்க
ஆவும் எம் மனம் அறியாயோ?

தீபாவளிக்கென்ன தீ எமதான உளப்பரப்பில்.

தன் இனத்தையே அழித்தாதய்
தகடு விடும் இந்த தரமில்லா நாளை
எந்த
தகத்துடன் பார்ப்பேன்?

தனைப் புரியாத அந் நாட்களில்
எதனையும் அறியாவிடாமல்
தீத்தப்பட்ட புராணக் புனைவு கதைகளில்
ஆழ நான் துயின்றதை
இன்று
எந்த இன் முகப்புடன் நினைவெழுதுவேன்?

விழிப்புணர்வு
இன்னமும் இல்லாத இந்த
ஈன இனத்தில் நானும் ஒருவன்?
நினைக்கவே நினைவுகள் கொழுந்தாய்
கனல் கக்கும் நாட்கள் இவை!

பின்
ஒரு காலத்தில்
முள்ளி வாய்க்காலில் எம் இனம்
சிதைவுண்டு போனதுவும்
நவீன தீபாவளி என
ஆரியர்கள் அரற்றும் ஒரு நாள் உலவும்.

அதையும் ஆர்வமுடன்
அகமாய் தொழும் இந்த தமிழினப் பரப்பு
எதையும் ஆராயாமல்
அப்படியே விழுங்கும் விழுமியம்
கொண்டதல்லவா?
எம் தமிழ்குடி
வாழ்க!

இந்த
இலட்சணத்தில்
முகப்பு நூலின் நுனிவரை
வகை,தொகை வழுவேதுமின்றி
வாழ்த்தென எதையோ வதை(கை)கொளுத்தும்
வையகமே!
உனைப் புரிய விழி தொழ மாட்டாயா?

எதிர்பார்க்கும் ஏளனம்?

உளம் உலர்ந்து போனது
களங்களில் காத்திரமற்ற சூத்திரத்தால்
தளங்களில் ஏனோ
தளம்பல்கள்?

நிறைவான
உயர்வான உவப்பகற்றிப்போனதுவோ?
தயவாக இனியும்
தாழ்மையாக வேண்டுதலில்
உவப்பில்லை காண்
உயரட்டும் அவர்களின்
உன்னதம் சார் உவப்புக்கள்.

நெடுதுயிர்க்கும் நினைவுகள்.


  • மன்னிக்கவும் காலம் கடந்து விட்டது.எனவே என்னால் இதுபற்றி இயங்க முடியாது.
    புரிந்து கொள்ளவும். "காலத்தால் பயிர் செய்யா மண் பாழ்"
    ஏற்கனவே கூறியதுபோல் ஐப்பசி 15ற்கு பின் வேகமாக இலங்கவும்,இயங்கவும் பல தடவை முயன்றேன்.இதில் சங்கர் முதல் குமணன் ஈறாக நீங்களும் ஒத்துழைப்பு தரவில்லை.
    நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை. எனினும் என்னால் இனி இதுபற்றி எதையும் ஏகமாக எழுதவோ,நிதி வேண்டி ஏற்கனவே இதயத்தில் புதைத்து வைத்த ஆதங்கங்களை பதிவேற்ற மனம் ஒப்பவில்லை.
    காலம் கடந்து விட்டது. ஏலவே நான் இப் பணியின் நிலையிருந்து சகல விடயங்களிலும் இருந்து விலகிக் கொள்கின்றேன்.
    பட்ட அவமானங்களை பட்டயமாக ஏற்ற என்னால் பட்டயம் ஏற்ற வேண்டிய நேரத்தில் கிடைக்காத பாட்டயங்களால் ஏதும் ஆற்றும் நிலையில் இல்லை.
    நன்றி தங்களின் இன்றைய தொடர்பிற்கு -
    மேலும் வேலைப்பழுக்களும்,வீட்டுப் பொறுப்புக்களும் என்னை துரத்துகின்றன.
    தனிப்பட்ட சில குடும்ப நிலைப்பாடுகளால் என்னால் தொடர்ந்தும் இயங்க முடியவில்லை.
    எனினும் தங்களின் முயற்சிகள் வெற்றியளிக்கட்டும்.
    காலங்களும் நேரங்களும் இதற்கு துணையாகட்டும்.
    காலக் கதிர்கள் தொடர்ந்து துலங்கட்டும். ஞாலத்தில் இவனின் ஈடுபாடு தேவையெனில் காலம் கட்டம் கீறும்.
    நன்றிகள். என்றும் ஊரகனாக. மேலும் இதற்கு பதில் தேவையென எதிர்பார்க்கவில்லை.

நிலையில்லா நிர்ணயர்கள்

நிலையான உள்ளங்களும்
நியமான தொடர்பாளர்களும்
நியம் மறைத்து,
நித்திரையில்!

தெளிவான சில
விபரங்கள் கேட்டேன்-
அர்ப்பணிப்புடன்--?
தொலைபேசியிலும்
நியம் கேட்டேன்.
தொடு நியமான முகப்பு நூலிலும்
நிதம் கேட்டேன்.

ஆயினும்
தொலை முகம் காட்டி
தொலைந்து போன தோழமைகள்-
யாது
பகரப்போகின்றார்கள்?

முற்றமது காய்ந்த பின்
என்ன
முகமலர்ச்சி மலரும்?
அற்றே போனது எனதான அயராத உழைப்பு என
அரற்றும் என் கனதிகள்
காலத்தால் அழியாத கவளமாக

தொடும் தூரம் இனி யாக்க யாருமே இல்லாமல்
படுதூரம் போனது காண்.
முற்றத்து தோழமைகளே!
புற முதுகு காட்டி என்ன பயன் கண்டீர்?

வேற்று முகம் காட்டும் வேதனைகளால்
தோற்றுவாய் பெற வேண்டிய
பாலகர் பாடசாலை பயனற்றே போயிடுமோ?
இனி
யாதும் ஆற்றும் நிலையில் யான் இல்லை.
போதும் உங்களின் பாராமுகம்.
வெறும்
பயனாளி சீட்டில் பயனே பற்றுங்கள்.
வெளியேறுகின்றேன்
இந்த
வெற்று முத்தத்திலிருந்து.

திசை பிரியாள் இசைப்பிரயா?

வெருகம் புல் கூட
வெகுளும்
அருவிகளாய் அணைத்த அவள்
கருவிகளும் காவியம் இழந்தன.ஐயகோ
என்
சொல
ஏதும் எழவில்லை எழுத
இவள்
புனிதங்கள் காந்தளாய் கனதியிழந்ததை
எந்த காவியத்தில்
ஏற்றி வைக்க.

மனிதங்கள் மரித்து மாதமே 4X365 ஆக
கனிமங்களும்
காரியங்களும் கனதியழந்தன-காண்
வெறுங்கைகளும் அற்று எம் வேதியங்கள்
நொதியங்களும் இழந்தன:
கதிகள் இனி
காயங்களாக?
மேனி சொரியும் இடர் பற்றி
எந்த சேதி இனி
சோகம் தீர்க்கும்.

சென்றனையோ
எம்
பிரியமானவளே!
சொல்லற்கரிய வேதனைகளாய் வடிந்த நின்
நிணம்?
ஓர் நாளும் நீதி வழுவா நிலை தருமோ?
தர்மம் சாகதென்பரே
தர்மத்துடன் ஓர் நீ "தீ" வடிப்பீரா?

,இசைப்பிரியா"

தெளிவற்ற தெளிவு.

காலங்கள்
திடமானவை.
காத்திருப்புக்கள் ஏதும் இன்றி
காலக் கடமைக்காவே காத்திருப்பவை-
இல்லை
அவற்றி தன் காலக் கண்ணாடியில்
காத்திரமாக வரையக் காத்திருப்பவை.

கிடைக்கும் சந்தர்ப்பங்களையும்
புற சூழலையும்
தடையகற்ற
புடைசூழ்ந்தவை-
நாமோ
ஏற்புடைய அத்தனையையும்
ஆழப் புதைத்து விட்டு
ஆலய சராணகதி செய்பவர்கள்.

ஏலவேதான்
இன்னமும்
சாலச் சிறப்பெழுதாத சாத்திரர்களானோம்.
கேட்டால்
தன் மானத் தமிழரென
வன்மம் காட்டுவோம்.

யதார்த்தத்தில்
அடிமைச் சாசனத்தின்
ஓலை(ல)ச் சுவடிகள்.
தர்சனம் தந்த காத்திரர்களை
இன்னமும் ஆழச் சுவாசிக்கவே
கூசும் குறும் சுவடிகள்.

காலம்
தந்த சுவட்டில்
ஓலைச் சுவட்டைகை் கூட
சாலச் சிறப்பாக ஓங்கி தூக்க உவப்பற்ற
ஆரியச் சுவர்கள்.

திங்கள், 1 ஏப்ரல், 2013

நிர்வாகத்தினரின் நிறைவாக!

                 நிர்வாகத்தினரின் நிறைவாக!



திரு குமார் குடும்பத்தினருக்கு 

      புலம் பெயர் நாடுகளில் வதியும் எம் மினிய உறவுகளே ,அன்புடை நெஞ்சங்களே,
                       எமது நன்றி கலந்த வணக்கங்கள்

                    பலகால் பலவிடமும் மாறிமாறி நின்றும்
                    சிலகால் செயலிழந்து சேடம் இழுத்தும்  

                                          68
வருட காலம் பல இடர்களை எதிர்கொண்டவாறே இயங்கி வந்த எமது சனசமூக நிலையம்  சொந்த  நிலத்தில் கட்டபட்ட கவினுறு மாடிக்கட்டடத்தில் இயங்குகின்றதாயில் அதற்கு முதற்காரணம் புலம் பெயர் நாடுகளில் வதியும் எமது உறவுகள் மனமுவந்து வழங்கிய பெருநிதிப்பங்களிப்பே என்பதை மறுப்பார் எவருமிலர்.

                ஜேர்மனியில்  இருந்தவாறே நிதி திரட்டும் பணியில் முனைப்புடன் உழைத்தும் உச்ச தொகை நிதி வழங்கியும் பேராதரவு நல்கியவர் நீங்களே என்பதை குறிப்பிடுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.அத்துடன் அமையாது "சமூகநாடி" மலரையும் இறுவட்டுக்களையும் விற்று நூல் கொள்வனவிற்கும் பெருந்தொகைப்பணம் அனுப்பியவர் நீங்களே . நீங்கள் இவ்விடம் வருகை தந்த போது உரையாடல் மூலம்  வேறு நபர்களிடமிருந்து பெற்றும்சொந்தமாகவும் பங்களிப்பு வழங்கத் தயாராக உள்ளீர்கள் என்பதை உணரக்கூடியதாகவும்  இருந்தது.

                நான் தலைவராக பதவி பெற்ற ஓரிரு நாள்களில் திரு.சதாசிவம் ஸ்ரீகாந்த் என்னுடன் கதைக்கும் போது "எமது விளையாட்டுக்கழகத்தின் மீது வீணான அபாண்டப்பழிகள் விழுந்துள்ளன.நாம் சனசமூக நலன்களில் அக்கறையுடையவர்கள் இவ் வருடத்திற்குள் 3 கணனிகள் வழங்கவுள்ளோம்.பின்பும் 3 வழங்கவுள்ளோம் கணனிகள் என 6 கணனிகள் வழங்கவுள்ளோம் என்று கூறினார்.என்னைப் பொறுத்தவரை கணனிப்பயிற்சியோ வேறு எந்த செயத் திட்டமாயினும் அகலக்கால் வைக்கக்கூடாது.ஏனெனில் தொழில்நுட்ப கல்லூரி,கல்வித்திணைக்கள முறைசாராக் கல்விப்பிரிவு தனியார் நிறுவனங்கள் பல எனப் பல கல்வி நிறுவனங்கள் பயிற்சி நெறிகளை நடத்திச் சான்றிதழ்களும் வழங்குகின்றன.அத்தகைய நிலையை நாம் எளிதில் அடைந்து விடமுடியாது. 3,4 கணனிகளுடன் ஆரம்பித்து நிலைமையைப் பொறுத்து விசாலிக்கலாம் என எண்ணியிருந்தேன்.பல்வேறு செயற்குழுக்களை தெரிவு செய்து செயற்படத்தொடங்கியபோது கமலசுதர்சன் 1கணனி,ஸ்ரீகாந்த் 1கணனி என 2 கணனிகளை  வழங்கவுள்ளதாக ஜனார்த்தனன் கூறியிருந்தான்.திரு.புலேந்திரன் நாற்சந்தி நண்பர்களும் 1கணனி வழங்கவுள்ளனர் என கூறினார்.நானும் தந்தையின் நினைவாக 1கணனி வழங்கினால் ஆரம்ப நிலைக்கு திருப்தியானது என என நினைத்திருந்தேன்.
                                      விளையாட்டுக்கழக ஓரிரு உறுப்பினர்கள்(கூட்டம் நடைபெற்ற போது இங்கு நிற்காதவர்கள்)பின்பு ஊர் வந்து போலிக் காரணங்கள் கூறி கல்விக்குழுகலைப்பண்பாட்டுக்குழுக்களை மீள அழைப்பதாகக் கூறி வெளியேறினர்.அதற்கு பிரதான காரணம் ருக்மணி என ஊகிக்கமுடிகின்றது.அவர் ஆரம்பத்திலிருந்தே விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் மீது காழ்ப்புணர்வுடனேயே செயற்பட்டார்.ஆனால் பின்பு நாவலர் விளையாட்டுகழகத்தைச் சேர்ந்த சனசமூக நிலைய செயற்குழு உறுப்பினர்களான திருவாளர்கள்,தி.சந்திரசேகரன்..தேவராஜேந்திரன்,வி.ஜெயந்தன் ஆகியோரும் விவேகானந்தா விளையாட்டுகழகத்தின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாலும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.ஆயினும் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினர் கடிதமூலமும் நேரடியாகவும் ருக்மணியை கண்டிக்க தொடங்கினர்.இவ்வாறு விளையாட்டுக்கழகம் பிரிந்து சென்றமை மன வருத்ததிற்குரியதே.பிரிவதற்க்கு முதற்காரணம் அவர்களது வெளிநாடுகளில் வதியும் மூத்த உறுப்பினர்கள் நிதி அனுப்பி வைப்பதேயாகும்.
               அவர்கள் பிரிந்து சென்றதால் நாம் சோர்ந்து விட முடியாது.நான் மிக விரைவில் கணனி ஒன்று வழங்கவுள்ளேன்.
கோயிற்கும்பாபிடேகம் நடக்க உள்ளதால் வெளிநாட்டு உறவுகளிடம் இருந்து அதிக நிதியை எதிர்பார்க்க முடியாது.உங்களை பொறுத்தவரை கோயிலுக்கு என ஒரு பிரச்சனை இல்லை.எனக்கும் கோயிலுக்கு வழங்க விருப்பமில்லை.தொல்லைக்காக அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஐயாயிரம் வழங்கவுள்ளேன்.அதற்கு மேல் வழங்க மாட்டேன்.வேண்டுமாயின் சனசமூக நிலையத்திற்கு வழங்குவேன்.ஐயர்மார் வருமானத்திற்காக 13 வருடத்தில் கும்பாபிடேகம் நடத்த வேண்டும் என்று கூறினால் கேட்பவர்களுக்கு என்ன மதி.தெய்வம் இருக்குதோ இல்லையோ பிரச்சனையில்லை.கிரியைகளுக்கு நான் ஆதரவளிக்கத்தயாரில்லை.

                                           
நீங்களும் இயன்ற நிதி உதவி வழங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும்படி வேண்டிக்கொள்கின்றேன்.விரைவில் எனது கணனி மூலம் skype இல் கதைப்பேன்.

                         
எமது சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் வரலாறு பற்றி எழுதியது போல் சனசமூக நிலைய வரலாற்றையும் எதிர்கால சந்ததியினருக்காக ஆராய்ந்து எழுதவுள்ளேன்.அதன் போது தீவிரமாக செயற்பட்ட வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் பற்றி விபரமாக எழுத வேண்டும்.இதற்காகவும் பலரிடம் விபரங்கள் பெரும் வேலையை ஆரம்பிக்கவுள்ளேன்.

                                                                  
நன்றி 
                                                                                                                                                                                              அன்புடன் 
                                                                                                                                                                              செ.சிதம்பரநாதன்



வலைப்பதிவு காப்பகம்