வெள்ளி, 8 நவம்பர், 2013

தீபாவளிக்கென்ன தீ எமதான உளப்பரப்பில்.

தன் இனத்தையே அழித்தாதய்
தகடு விடும் இந்த தரமில்லா நாளை
எந்த
தகத்துடன் பார்ப்பேன்?

தனைப் புரியாத அந் நாட்களில்
எதனையும் அறியாவிடாமல்
தீத்தப்பட்ட புராணக் புனைவு கதைகளில்
ஆழ நான் துயின்றதை
இன்று
எந்த இன் முகப்புடன் நினைவெழுதுவேன்?

விழிப்புணர்வு
இன்னமும் இல்லாத இந்த
ஈன இனத்தில் நானும் ஒருவன்?
நினைக்கவே நினைவுகள் கொழுந்தாய்
கனல் கக்கும் நாட்கள் இவை!

பின்
ஒரு காலத்தில்
முள்ளி வாய்க்காலில் எம் இனம்
சிதைவுண்டு போனதுவும்
நவீன தீபாவளி என
ஆரியர்கள் அரற்றும் ஒரு நாள் உலவும்.

அதையும் ஆர்வமுடன்
அகமாய் தொழும் இந்த தமிழினப் பரப்பு
எதையும் ஆராயாமல்
அப்படியே விழுங்கும் விழுமியம்
கொண்டதல்லவா?
எம் தமிழ்குடி
வாழ்க!

இந்த
இலட்சணத்தில்
முகப்பு நூலின் நுனிவரை
வகை,தொகை வழுவேதுமின்றி
வாழ்த்தென எதையோ வதை(கை)கொளுத்தும்
வையகமே!
உனைப் புரிய விழி தொழ மாட்டாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்