வெள்ளி, 22 நவம்பர், 2013

என்னை சுவாசிக்கும்
எனதான உயர்வுகளே!
முதலில்
உங்களை
யதார்த்மாக வாசியுங்கள்.
சுகவாசி வாழ்வா?
சுதேச வாழ்வா?

சுகவாசி வாழ்வில்
ஒர்
சுதேச வாழ்வெழுத
எம்முடன்
கரம் சேருங்கள்.

எமதான வாழ்வின்
அர்த்தத்தில் ஒரு அடையாள நெறியை,
ஒரு ஆளுமையை,
எம்!
கிராமத்தில் எமதான கி(வ)ழக்கில்
உதயமாகும் உ(தி)ரத்தில்,
பொட்டிட்டு போய்ச் சேர்வோம்-

நாளை எம்
இளைய கூடுகள்
எமை
இழிவாக இயம்பாமல்,

ஏந்தும் எப் பழிச் சொல்லிற்கும் தகமை சாராமல்,
இயற்கை எய்தியபின்பும்,
இட்டுச் சென்றார்கள்-எம்
இதயமான இயல் வாழ்வாக
புலர்த்திய புயமாக!

தடம் தாங்கிய தககையர்களான -எம்
இடம் பெயர் நம் உறவுகளென
ஒரு ஓலியும்--
ஒளியும்--
உம் சுவட்டையும்,சூழலையும் தழுவ.
ஆசுவாசம் உமைத் தழுவும்.

இது!
வேரடி மண்ணுடன்
தேரடி சுவைத்த நேயமெனும்,
ஊரடித் தேட்டத்தின்
உயர்வான வலுவாகும்.

எமதான ஊரக அரும்புகளின்-
உகமான பள்ளி
உதயமாக-
தகம் தரும் பதிவு.
ஈகம் முக்கியம் என்
ஈரமான நெஞ்சகர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்