வெள்ளி, 8 நவம்பர், 2013

தெளிவற்ற தெளிவு.

காலங்கள்
திடமானவை.
காத்திருப்புக்கள் ஏதும் இன்றி
காலக் கடமைக்காவே காத்திருப்பவை-
இல்லை
அவற்றி தன் காலக் கண்ணாடியில்
காத்திரமாக வரையக் காத்திருப்பவை.

கிடைக்கும் சந்தர்ப்பங்களையும்
புற சூழலையும்
தடையகற்ற
புடைசூழ்ந்தவை-
நாமோ
ஏற்புடைய அத்தனையையும்
ஆழப் புதைத்து விட்டு
ஆலய சராணகதி செய்பவர்கள்.

ஏலவேதான்
இன்னமும்
சாலச் சிறப்பெழுதாத சாத்திரர்களானோம்.
கேட்டால்
தன் மானத் தமிழரென
வன்மம் காட்டுவோம்.

யதார்த்தத்தில்
அடிமைச் சாசனத்தின்
ஓலை(ல)ச் சுவடிகள்.
தர்சனம் தந்த காத்திரர்களை
இன்னமும் ஆழச் சுவாசிக்கவே
கூசும் குறும் சுவடிகள்.

காலம்
தந்த சுவட்டில்
ஓலைச் சுவட்டைகை் கூட
சாலச் சிறப்பாக ஓங்கி தூக்க உவப்பற்ற
ஆரியச் சுவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்