வெள்ளி, 8 நவம்பர், 2013

நிலையில்லா நிர்ணயர்கள்

நிலையான உள்ளங்களும்
நியமான தொடர்பாளர்களும்
நியம் மறைத்து,
நித்திரையில்!

தெளிவான சில
விபரங்கள் கேட்டேன்-
அர்ப்பணிப்புடன்--?
தொலைபேசியிலும்
நியம் கேட்டேன்.
தொடு நியமான முகப்பு நூலிலும்
நிதம் கேட்டேன்.

ஆயினும்
தொலை முகம் காட்டி
தொலைந்து போன தோழமைகள்-
யாது
பகரப்போகின்றார்கள்?

முற்றமது காய்ந்த பின்
என்ன
முகமலர்ச்சி மலரும்?
அற்றே போனது எனதான அயராத உழைப்பு என
அரற்றும் என் கனதிகள்
காலத்தால் அழியாத கவளமாக

தொடும் தூரம் இனி யாக்க யாருமே இல்லாமல்
படுதூரம் போனது காண்.
முற்றத்து தோழமைகளே!
புற முதுகு காட்டி என்ன பயன் கண்டீர்?

வேற்று முகம் காட்டும் வேதனைகளால்
தோற்றுவாய் பெற வேண்டிய
பாலகர் பாடசாலை பயனற்றே போயிடுமோ?
இனி
யாதும் ஆற்றும் நிலையில் யான் இல்லை.
போதும் உங்களின் பாராமுகம்.
வெறும்
பயனாளி சீட்டில் பயனே பற்றுங்கள்.
வெளியேறுகின்றேன்
இந்த
வெற்று முத்தத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்