வெள்ளி, 8 நவம்பர், 2013

திசை பிரியாள் இசைப்பிரயா?

வெருகம் புல் கூட
வெகுளும்
அருவிகளாய் அணைத்த அவள்
கருவிகளும் காவியம் இழந்தன.ஐயகோ
என்
சொல
ஏதும் எழவில்லை எழுத
இவள்
புனிதங்கள் காந்தளாய் கனதியிழந்ததை
எந்த காவியத்தில்
ஏற்றி வைக்க.

மனிதங்கள் மரித்து மாதமே 4X365 ஆக
கனிமங்களும்
காரியங்களும் கனதியழந்தன-காண்
வெறுங்கைகளும் அற்று எம் வேதியங்கள்
நொதியங்களும் இழந்தன:
கதிகள் இனி
காயங்களாக?
மேனி சொரியும் இடர் பற்றி
எந்த சேதி இனி
சோகம் தீர்க்கும்.

சென்றனையோ
எம்
பிரியமானவளே!
சொல்லற்கரிய வேதனைகளாய் வடிந்த நின்
நிணம்?
ஓர் நாளும் நீதி வழுவா நிலை தருமோ?
தர்மம் சாகதென்பரே
தர்மத்துடன் ஓர் நீ "தீ" வடிப்பீரா?

,இசைப்பிரியா"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்