ஞாயிறு, 28 மார்ச், 2010

சுயபரிதாபம் சூனியமே சுரக்கும்


இருத்தலையும்,நுகத்தலையும்
நாடும் மனம்-எந்த பொறுத்தலையும்
போற்ற போகம் மறுக்கும்
திருத்தலம் நாடும்-இவர் திருந்தார்
உருத்தளம் அமைப்பார்-ஏந்த
உவப்பெதுவும் மொள்ளார்-ஏதோ
பெருந்தலை சாத்தானாராக பெருமை மொய்வார்.

கருத்தல்,கறுத்தல்,உறுப்புக்களின்
உசா கருக்கும்.
பெருத்தல் என்றும் பெருமைக்கு உரியதில்லை.அது
வெடித்தலையும் வேகம் வெய்யும்.ஆக
உருத்தல்,உறுத்தல் உலவல் எல்லாம்
மாற்றத்திற்கு உரித்தானதே-எனவே
கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல்
காரியத்தின் கனதியை கைக்கொள்ளல்-அதன்
காத்திரத்தை காக்கும்.

வேகம் என்பது வேதம் கொள்ளலும்,
பாதம் அதை பதிக்க பார்வை கூர்மையும்,
விரிந்த நோக்கமும்,விரியா சுயமும்,
சுரந்த போதில் சுமையது குறையும்.
கரந்த எந்த கயமையும் கலைய
குறைந்திடாத குவலயம் வேண்டும்.

இயலாமை என்பது உதாசீனமாகும்,
முயலாமை அதன் முதற்படியாகும்,
செயலாற்ற என்றும் செம்மைகள் சேர்த்து
புயலாக நீயும் புயங்களை பூட்டு
வயலாக விரியும் வளமது வருடும்-வந்த
பனியாக யாவும் பரவலாய் மடியும்.

சுயபரிதாபம் சூனியமே சுரக்கும்-தன்னை
சுயபரிசோதனை ஆற்றல் சூத்திரம் சூட்டும்
நம்பிக்கை என்பது ஐந்தெழுத்து மந்திரமாய்
ஐயமது போக்கி ஆளுமை நோக்கு
பையவென்றாலும் வையகம் போற்றும்.

வலைப்பதிவு காப்பகம்