திங்கள், 13 டிசம்பர், 2010


நேர் கொண்ட வார்த்தையும்,
நிமிர்வான
வாழ்வும்
தேர் கொள்ளும் உனை தோள் கொளும்.

பார் இந்த பாரில்
உனக்கான வாழ்வை
தோள் கொண்ட
தோழர்கள் யார்?

என்றும்,
மறைமுகத்திற்கு
அப்பாற்பட்வர்கள்-.

இன்று!
புல
வாழ்வில்
எத்தனை அறிவுரை ஆற்றும்
இந்த
முத்திலர்களை
புரிந்து கொள்.
முட்டாள்தனமாக
எத்தனையோ?
முத்திரையிடுவர்.
ஐயா
வினா மட்டும் வேண்டாம்?????

இவர்கள்
யாருமே
எம் நித்திலம் பகிரா பாவியர்கள் .---
அல்ல!
இவர்கள்
பவித்திரர்கள்

ஆம்!?
எமை!
காக்க!
அவதாரமெடுத்த
ஆரியர்கள்.

புத்தி கூறும்
புவித்திரர்கள்.

ஏய்!
முட்டாள்களே!
என்---?
தலைவனை விட
தரமெழுதும் த(ச)ரித்திரர்கள்
ஏற்றுக் கொள்.
மன்னிக்கவும்
நேரமாகுது

பூம்பாவை பாட
போ!
சோரம் போ!
பாடு
விடியும் காலையில்
தேசிய கீதம் பாடு.
அதையும்
சிங்களத்தில் பாடு.

இனி
உன் வாசலில்
திருவெண்பாவை+காப்பெல்லாம் விடுத்து
தேசிய கீதம் பாடு.
பாளி மொளியில் பாடு.
தமிழ்
விட்டு வடு.
இல்லை விடு.

மனிதா!
ஈனத் தமிழா!
இனி
மரம் நடும் வேளையில் அரச மரத்தை மட்டும்
தவிர்த்து விடாதே.
உன்
வீட்டு
முற்றத்தில்
அகதியாய்
மகிந்தையும்,மகிந்தாவும்.

அது சிறீலங்கா!
ஐரோப்பா அல்ல????????

செவ்வாய், 2 நவம்பர், 2010

ஞால சுற்றலில் ஞாயிறு வீழாது!


நெஞ்சமெலாம் நெருஞ்சி முள்ளாக,
இதயம் சுமக்கும் ரணம் சுமந்து,
உதயனை,எங்கள் இதயனை,
ஈழ விடுதலையை நெருப்பாக அல்லும்,
பகலும் ஈகத்தில் ஏந்தியவனின்-
நினைவு நாட்கள் நெருட -அவனை
ஆழமாக,நேசமாக,நெருப்பாக
இழைகளோட இதம் ஒற்றி!

தலைவனின் தாற்பாரிய புதல்வன்,
கலைகளை,மக்களை இணைப்பதில்
அலைகளாகி, நாதமாக ரீங்காரித்தவனை,
போராளிகளை போசிப்பதில் இனியனை,
மகளிரை மையப்படுத்தி கள உள்வாங்கல்களை
காத்திரமாகவே யோகித்தவனை,

ஈழ விடுதலையை மட்டுமே வாசித்தவனை,
தலைவனின் கட்டளைகளையே காற்றாக சுவாசித்தவனை,
அலை,அலையாக துயர் மேவினாலும்,
ஆளுமைகளையே தன் ஆவியாக ஆராதித்தவனை,
நேயமென்றால் என்னவென்பதை நேத்திரமாகவே
நோத்திரமாக்கிய எங்கள் தமிழ் செல்வனை!

உடலால் இழந்து,உள்ளத்தால் உயிர்ப்பித்து
ஆண்டு இன்றுடன் மூன்றாக -
கால வெள்ளத்தில் களங்கள் காத்திரமிழந்தாலும்,
கோல ஆட்டத்தில் கொலுக்கள் சரிந்தாலும்,
ஞால சுற்றலில் ஞாயிறு வீழாது .அதுவாகவே
பாலம் ஒன்றாக பாசமுடன் நினைவள்ளும்
ஈர இதயங்களின் இறுக்கமான நினைவுகள்
நாளும் பொழுதும் நித்திய செல்வனை
நித்திலத்தில் நினைவெழுதும்.

தமிழீழ காலக் கவிஞன்
ஐயா புதுவை பூச்சொரிந்தது போல்
நித்திய புன்னகை அழகன் நித்திலத்தில்
நினைவழியாமல் வாழ்வான்.
இவன் ஓங்காரமாக ஒற்றிய தாகம்
எமை இவன் வழித்தடம் மாறாமல்
ஒற்றி நடத்தும்.

பூத்த உன் புன்னகை இப் புவி உள்ளவரை,
பொலிவிழக்காது.
நீத்தது நீதானென எம் உள்ளமதுவும் ஏற்காது.
நீலியர்களின் நீசங்கள் நெடுநாள் தாங்காது.நேசமுள்ள
நேயங்கள் விடை தெறிக்க நாள் கூடும்.
நயந்திருப்போம் நாள் வரும் நெகிழ்ந்திருப்போம்.
நேசனே.
நினைவழியா நாம் நின் பாதையில்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நானிலம் நிறைந்த நல்லவர் ஒளிர்வார்.


காலக் கடவுளரால் கனதியாக படைத்து,
வைத்த பாமரத்தனங்கள்.
பாரில்-
பார்ப்பனமெழுதும் ஈனத் தனங்கள்-
ஈற்றில் இரவல்
தாயகம் தேடி
ஒளிந்தே ஓயும்.

இது
காலக் கட்டளையாய்
ஓலம் தறித்து உரமாகும்-நாளை
பார் என் நாயகனே-இது
வீர்ர்கள் விதைந்த விளை நிலம்.
வியப்பெழுத உலகம்
விரிந்தொரு தருணம்
வினையாகும்.

கட்டமைப்புக்கள் களைந்ததாய்-
கனதி படைத்த கயவர் நிலம்
களேபரம் சூடும்.
நிலவரம் பார்க்க-
நீயிருப்பியா அன்றி நானிருப்பேனா எம்
நிலமிருக்கும் –இந்த
நிழல் சூட எம் நாயகரிருப்பார்-
நானிலம் நிறைந்த நல்லவர் ஒளிர்வார்.

ஈழக் கடனொதுக்கம் நிறைவாக
ஈடு செய்யப்படும்.
துலாம்பாரமாய் இது துகிலெழுதும்.
ஈடாட்டமற்றதாய் ஈற்றில் ஈழம்.
எங்கள்
ஈசனின் வழிகாட்டல் மடலெழுதும்.அது
தமிழீழ தாயகத்தை தாலாட்டும்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எங்கோ ஒரு நுகர்வு என் தகம் ஆசிக்கும்.


எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.
சங்கேதமேதுமின்றி அது சாளரம் திறக்கும்.
பங்கமேது இல்லாததாய் அது பாசுரம் பாடும்.
அங்கம்,
அந்த அங்கம் அது போதும் எனக்கு -என்
ஆக்கம் தேக்கமது தவிர்க்கும்.
பூக்கும், அது-
பூக்கும் தொடர் பூபாளம் இசைக்கும்.
உனக்கும் அந்த நெருக்கம் உளமாலை சூடும்.அதை
வனப்பம் ஏற்று வாசல் வசந்தம் ஊ(கூ)டும்.

சிந்தனை செய்யென்றால் நிந்தனை செய்வோரே!
வந்தனை வாசம் பெற வாயிலை திறக்காரே!
நிந்தன் நியம் நியமம் ஊற சுய ஊக்கம் ஆய்ந்தீரா?
பந்தமது பரப்பெழுத பண்பலை வாசித்தீரா?

சொந்தமது சொத்தல்ல என்று சித்தமது நிறைத்தீரா?
மந்தமான மனக் கணக்கில் மணிக்கணக்கில் சீராய்ந்தீரா? -
உந்தனது குணக் குன்றில் என்ன வன(ள)ம் யாசித்தீர்?
மைந்தன் -எங்கள் வைகுந்தன்-
எம் மண்ணென்ற மாதவத்தை மறந்தீரோ? -நாளை
உன் மண்ணே உனை மற(று)க்கும் யாதகத்தை மறுதலிப்பீரா?.

எங்கோ ஒரு நுகர்வு என் தகம் ஆசிக்கும்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே!


எண்ண அலைகளில் என்றும்,
திண்ணமாய் திறனெடுத்து,
எண்ணாக் காரியத்தை எளிதாக்கி,
எரித்த ஏந்தல் நீ-
வரலாறு!
உன்னை என்றும் வரிந்து வகைத்திருக்கும்.

ஆடு,மாடு,பொன்,பொருளென,
ஓடித் திரிந்த எம் முற்றத்தில்,
நீ!
தேடியதுவும்,தெரிவெழுதி தேற்றியதுவும்,
விடியலின் முகவரியென முத்தாய்ப்பாய்.
சொல்லாமல் செயலாக்கமாக்கிய செவிலியனே!
உன் வைராக்கியத்தில் எந்த-
வரிகள் பொருதும்?இல்லை பொருந்தும்?

பாடு பொருள் இதுதானென,
ஊடு கூடி தேடும் உன் தெரிவில்,
எத்துணை உறுதி?
பேடு தேடும் தருணங்களில் உன் அகவை.
ஆனால் இந்த அகவையில் உன்-
ஆரோக்கியமான சிந்தனையில் உன்
கருக்கள் சீலமாக தக்கவைத்து!
உருவான உறுதியில் பிரபாகரனின் பிரமத்தை,
பிறழாமல் பின்பற்றிய பிதாமகன் நீ.

விழுப்புண் ஏந்தி!
அந்த விகாரமான பொழுதுகளிலும்- நீ
உதிர்த்தது தம்பி எனும் திருப் பெயர்.
உதிராத பிரமாணம்,
நெஞ்சகத்தில் நெருப்பாக,
நெகிழ்வெழுதிப் போனவனே!

வீரனே!
செல்லக்கிளி அம்மானான தீரனே!
ஞாலத்தில் எங்களின் நாயம் பிறக்க தீயான தீபமே!
ஒப்பாரிகளின் முதுகில்,
ஓர்மம் ஒட்டிய சிங்கள கிங்காதரர்களின் சிம்ம
சொப்பனம் நீ.

ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே
காலம் எமதாக்க கரந்தடியில் கலந்தாயோ!
வித்தாகி விழுதெறிந்த சித்திலனே!
முத்தாகும் எங்கள் முழு நிலம் ஒரு நாள்
சொத்தாகும் வரை சோர்வகற்றி
நித்திலத்தில் உங்களின் நினைவுகளுடன்
நெடும் பயணம் போகின்றோம்.
உங்களின் சத்தியக் கனவை அகத்தில் ஆழப்படித்தபடி.

செல்லக்கிளி அம்மானின் வீர நினைவு சுமந்து!
தமிழீழ விடுதலை வரலாற்றில் பெரும் பதிவில்-
வெல்ல வழி வகுத்த திருநெல்வேலி
கண்ணி வெடி தாக்குதலில் களப்பலியான
"மாவீரன்" சதாசிவம்-செல்வநாயகம் நினைவாக
இந்த நிழல் பதிவு.


வியாழன், 8 ஜூலை, 2010

அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்!


ஏந்திய கருவியை ஏலம் வைத்தான்-இவன்
எல்லோரையுமே சிதைக்க வைத்தான்.
சிந்திய இரத்தமது கொஞ்சமா?ஈழ
சிந்துகள் அழிந்தது இவன் வஞ்சமே.

உறவாடிக் கெடுத்த ஊழியன்- இவன்.
நவீன எட்டப்பர் கூட்டத்தின் நயவஞ்சகன்.
அறம் கொன்றது போதாதென்று,
இன்று -
வெறி
நட(ன)மாடுகின்றான்.தமிழர் குருதியில்-
ஆரியர் வீ(வி)தியில்.

ஆடு தாண்டவா ஆடு -ஆடு
கூட தாண்டும் நீ கூத்தாடு.
பேடு ஆன பேமாளி நீ-
பெருமை கொள்வாயா கோமாளி?

நாடு தாங்குமா உன் நர்த்தனம்?எந்த
நாவும் உனையே அர்ச்சனம்.
பீடு பிறழும் பிறப்பேந்தி-உன்
பீடம் யாவுமே இறப்பேந்தி.

பொழுது வருமே தன்னாலே அதை
உழுது கொள்வாயே உன்னாலே,
அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்-அது
விழுது எழுதும் வித்தகம்.

திங்கள், 5 ஜூலை, 2010

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?


ஈகையின் இமய வரம்பே!
நெடிதுயர்ந்த வீரக்கனலே!
துயர் தாங்கிய கொடிகளின்,
உயிர் நெருப்பே!
பகை எரித்து பாளும் அவர்
பாதமான பாதை அழிக்க,
உம்மை
புடம் போட்டு புனருத்தாரணம்,
பூட்டிய பூம்புனல் புனித திருவே!

-நீவர்
தொட்ட பகையின் உளப் பரப்புக்கள்,
எல்லாமே உன் பெயருக்குள் அணுவாக,
கரு எனும் வார்த்தையில் அவை கரியாக,
வரும் பகை திருப்பிய திருவாக,
உருமறைத்து,
உளம் செருக்கி,
சொல்லாப் பெயர் சுருக்கி,
சுயம் எரித்து,
கயம் கலைக்க கரும்புலியமான
கார்த்திகர்களே!

இன்று உன் நினைவெழுதும் நாளா?
இல்லை,
நீவிர் தமிழீழப் பரப்பில் பிறந்த திருநாளா?
அல்லது,
பாரும் பகையே எந்த பரமத்திற்கும்
அடிபணியாத் தலைவனின் அகத்தில்
செருக்காய் குடியிருந்த பெருநாளா?
அஃதன்றி-
அகிலத்தில் தமிழீழத்தை யாகிக்கும்
அத்தனை தமிழர்களின் ஆவிதனில்
நீவிர்
உனது ஆன்மாவை நிறைவிருப்புடன்,
தமிழீழத்திற்காய் நிமிர்வெழுதி நிறைவாக்கி,
நிலைவெழுத்தாக்கிய நிறைநாளா?

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?
செத்திருந்த தமிழினத்தை உயிர்த்தெழ வைத்த
வேதியர் நீவர்.
உங்கள் சொத்தனைத்தும்-
தமிழீழ தாகமென உயிரெழுதி-
உயிர் பரப்பி உன்னதமான இந்நாளை
ஆவிக்குள்ளும் அடங்கா எமை மேவித்திரியும்
உன்
மெட்டுக்கள் என்றும்
அணைந்து விடா கட்டுக்களாக -
எமது சந்ததிகள் உள்ள வரை
உம் வரைபுகள் வகையெழுதும்.

தமிழீழ யாசகர்களே!
தனை சான்றெழுதிய போசகர்களே!
உமை ஈன்ற மண்ணிற்கானவர்களே!
மனை மீளும்.
விழி சிரிக்கும்.
உன் குவியங்களின் குழிகள்-

இன்று ஓர் பாரிய இடைவெளியில்-
ஆயினும்-
ஓயாத,ஒப்புவமையற்ற ஓர்மங்கள்
சலனமின்றி,சந்தடியகற்றி சாவாசமாய்,
புலனேற்றி பூப்பார்கள்.
புண்ணியரே!
சேதிவரும் நாளுடன் -உன்
செந்தமிழாணை கலந்து.

பொதுமை வேணி நீர் ஏந்திய சிந்தனைகள்.
இனத்தின் தமிழினத்தின்,தமிழுணர்வின்,
இல்லை
தாயக விடியலில்,
தலைவனின் தார்மீக சமரில்,
ஏன்!
எல்லாவற்றிற்கும் மேலாக,
சுதந்திரத்தின் அந்த சுந்தர,
விடியலில் நீவிர் கொண்ட வேட்கைகள்
எந்த வேதத்திற்குள்ளும் இடிபடாமல்
விடுதலை உச்சாடனத்திற்குள் மட்டுமே
உறைந்திருந்த உணர்வுகள்.
சந்தனக் காற்றாய் என்றும் எம் நினைவில்.

சரித்திரர்களே!
சாந்தி கொள்.
நல்ல சங்கதிகளுடன்
சஞ்சரிக்கும் நாள் கூடும்.

சனி, 3 ஜூலை, 2010

பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.


இந்த
வக்கிரம் வகைத்தவரா -உன்
உத்திரம் வகுப்பார்?
முத்திரமான எங்கள் சத்திரியர்களின்
சித்திரம் பார்.

எத்திரை வந்தபோதும்,
பத்தரையான பவித்திரர்கள்.
விதித்திரை விண்ட வீரியர்கள்-அவர்
தேசத்திற்காய்
வீரச் சமர் கொண்டவர்கள்,அவரைக்
கொன்ற பின்னும் சேடம் வரையும்-
ஆரியத் தரை அகம் ஆய்ந்தாயா?

தினமும்,
வன்மையாய் முகம் மறைக்கும்-
மூர்க்கம் காண்.
வெறும் தரை வழிப்பாதையில்,
பார்வை வேண்டாம்.
புனர் வாழ்விற்கு வகையில்லை,இவர்
அபிவிருத்தியென்று எதை ஆய்கின்றார்?

அடுத்த வேளை கஞ்சிக்கு அதரம் அற்று,
படுத்த வேளை கிஞ்சிதமாய் கிராகதர்கள் கிள்ளும்-
இராணுவ சக்கரம் எந்த சதங்கை கட்டும்?
புராணம் பாடும் புலமே உன் உலவலிற்காய்,
உறுப்பறுத்து உசாவல் நலமென்னும் நர்த்தனம் அறு.

வெறும் வெளிகள் உள்ளம் உலவாது.
ஊடுகள் உணர சிலாகி.
தாறு மாறாய் தடம் புரண்ட தமிழ் நிலம்.
ஊறு கொடுத்த தேறுகள் தேச வீதியெங்கும்.

ஆனால் நீவிரோ!
வெற்றுக் காட்சியில் வேகம் கரைத்து,
எம் வேதம் மறைத்து,
இப்படியா உரைப்பாய்?
உல்லாச பயணத்திற்காய் உன் உறுப்பமைக்கும்
சல்லாபத்திற்காகவா?
சவக்காடானது எம் தேசம்?

சுய நல சூத்திரர்களே!
நலமானதாய் நாடு என-
நா ஒளித்து நடுகல் நடாதே.
நீதி,நியம் ஒளித்து எதையும் ஒவ்வாதே.
எதையும் நாட்டிற்காய் ஒப்பாத சுயமே!

உன்-
சுவடனைத்தும் பாவியர்கள் பாதம்.
பதகழித்து பாகை சரித்து பல்லாயிரமாய்-
பாடை விரித்தவர் தடமது.
பரணியிலும் பரவும் பதமது.

உன் சாவால் கூட மறக்க முடியாத,கூடாத
மனக் காயமது.
சொகுசு பேரூந்து பிரயாணத்திற்காய் எம்
தேசப் புதல்வர்கள் பிராணன் விடவில்லை.
அன்று எரிந்தது அவர் களம்-நாளை
அது உன் மனையின் மீதும் பெ(ம)ருகும்.
மறக்காதே நிச்சயம் இதுவும்-!

பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.
அது பணமாக,கருவியாக,படைபலமாக
பலவித முகம் கொள்ளும்-அற்ற போதே
அத்தனையும் அடிவருடும்.அதுதான்
இன்று சிறீலங்காவில் ஆரியக் கடைவிரிப்பு.
ஈழத்-
தமிழரின் அவலச் சரிவு.

ஆக மீண்டும் பலம் கறுக்க
கே.பி யின் கேனத்தனம்,கோத்தாவுடன்
கோமயம்.
புலமே சுதாகரிக்கும் சுயம் வேண்டும்.அன்றேல்
ஆதியுடன் அந்தமாக அத்தனையும்
கதி அதோ கதிதான்.
அரசியலையும் ஆத்தமார்த்தாமாய் அகம் கொள்.
தூரத்துப் பச்சை பசுமையே இல்லை.

செவ்வாய், 29 ஜூன், 2010

செவ்வரத்தம் பூவில்!


செவ்வரத்தம் பூவில்-
எவ்விரத்தம் பார்க்க அது
இவ்வளவு சிகப்பாக?
-உன்
இரத்தம் சீராக்க இதுவும் ஓர்
மார்க்கமே.

ஆம்!
இதில் மருத்துவ குணம்
நிறைவே.
உண்டவர்களும்,அதன்
நிலையை அறிந்தவர்களும்
கூறும் அறிவுரை.

பசுந்தலாக அரைத்து உண்ண
பறக்குமாம் பல நோய்கள்.
பச்சையாக உண்ணுதல்,
பலா,பலன்கள் நிறையவே.

இதய நோய்க்கு இதமான மருந்து.
மார்பு வலியுள்ளவர்கள் பூவை,
நீரில் இட்டு கொதிக்க வைத்து,
காலையும் மாலையும் அருந்திவர-
நிவாரணம் காணலாம் ரணமகற்றி.

தெரிந்தவர்கள் கூறுங்கள்.
இன்னமும் இதன் சிறப்பை.
செம்பருத்தி பூவா?செவ்விரத்தப் பூவா?

ஞாயிறு, 27 ஜூன், 2010

சுற்றமே உனை சுதாகரித்து,


பேசுவது பெருமை,
பூசுவது (திரு)நீறு,
மாசுவது மனதில்,
கூசுவது உறவில்,

நீசுவது புலவில்,
காசு அது கலப்பில்,
தூசு என நினைத்து,
வீசுவது சரியா?

தூது அது துலைவில்,
மாது அது கனவில்,
தாது உனை குழப்ப,
மீது எது மீதம்?

வாது எது நிலையில்,
கூதுவது குலவில்,
பாசுவது பரணில்,
பேச வரும் பரப்பில்.

பேசு அது தமிழ?
பேரம் எது உறவோ?
இறைஞ்சி அது இந்து.
மிஞ்சியது எது?ஏந்த.

துஞ்சிய போதே-
தூக்கம் அது!
கலைத்திருந்தால்,
விஞ்சியதுவும்,மிஞ்சியதுவும்
மீதம் மிதந்திருக்கும்.

புரிந்தால்!
பதிவெழுது,இல்லையேல்
பசப்பெழுது.
வதி களை(லை)ந்த முகப்பெழுத-
பதிவேது பாடுபட?!

வரிந்ததுவும்,வகைத்ததுவும்,
பரிவெழுதும்.
பாதை பார்.
முகாரியின் முகவரியில்,
முத்தாய்பேதும் முடிவுறா?

பற்றுமே உனை பதகழித்து,
கரித்ததுவோ உந்தன் உசா தொலைத்து?
குற்றமே எனினும் இது-
உன்-
முற்றமே.
மறந்தும்,மறைத்தும் விடாதே.

திங்கள், 14 ஜூன், 2010

தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.


பாதாளம் வரையுன் பாதம் படியும்.
பரமனென்றுன்னை பரணியே பாடும்.
தெரிவான எந்த செல்வத்திலும்,பொழிவான போக்கு நீ-
இதனால்தான்-
எந்த தெரிவிலும் முதன்மையாக நீ.
எல்லா அசைவின் இசைவு நீ.

புவியில் நீ இல்லா இடமோ,வழியோ இல்லை.
இப்பொதெல்லாம் உன் அமைவு அரூபமாக,
வெறும் அட்டையில் உன் காத்திரமான அமர்வு.
மின் காந்த ஒளிர்வில் உன் ஓங்காரம்.
"ஓ"மென்ற மந்திரத்தை விட வலிமை நீ.
"ஓம்"இதற்கு உள்ளக வலிமை உண்டோ?இல்லையோ?

உனக்கு உள்ள வலிமை ஊரெல்லாம் வலியாய்,
உன்னால் பெற்றவளை தவிர்த்து மற்றெல்லாம்-
கொள் முதலாக்கலாம் என்பர் பலர்-ஆம்
மறுதலிக்கவே முடியாத "மா" செல்வம்-நீ
அதனால்தான் என்னவோ நீ இருக்க வேண்டிய-இடம் தவிர்த்து-
உலக மயமெல்லாம் உறுதியாய் இருக்கின்றாய்.
நீ கைமாறும் போதினெல்லாம் உரிமைகள் எல்லாம்,களம் மாறுகின்றது.
முள்ளியவளை கொடுந் துயரத்திலும் உன்-கொடிய பங்கு நெடியது.
உன்னை படைத்தவன்தான் கடவுளரையும் படைத்தான்.

உன் இருப்பில் ஏந்த எந்த கருவிகளும் இல்லை.
உன்னை சுற்றி எந்த தோத்திரமும் இல்லை.
பாலாபிசேகம் முதல் பூச்சூடும் புன்னங்கள் இல்லை.
ஏன் உனக்கு கருவறை கட்டி காப்பு சாத்தும் களேபரம்கூட இல்லை.
உனக்கு நேர்த்தி வைத்து நேருவோரும் இல்லை.ஆனால்
உன்னையே நேர்த்தியாக்கும் சூத்திரம்-
உன்னால்உனக்கே ஆன பாத்திரம் உண்டு.

நீ வசமாக வேண்டுமென்று எள்ளெரிப்போரும்,
சனிக் கிரகத்தின் சாளரத்தினால் நீ தன் வீட்டு,சாளரம் ஏக!
உனை கைக்கொள்ள,சாத்தியமானதாக எண்ணி,
கருவறை கற்களை உன் காத்திரத்தால் முழுக வைக்க,
கடன் வேண்டி கற்பூரம் காட்டும்,காட்சியில் உன் பாகம்!
முகப்பு நீதான் என முகரும் போதே உனை கருப்பெரிப்போர்-கனருண்டு.
மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை,மட்டுமா வளர்த்தாய்?

அத்துடன்-
அறியாமை,தெரியாமை,தெளியாமை,கல்லாமை,
கற்றதை கைக்கொள்ளாமை, பேராண்மை
என்ற போர்வையில் பேராசை,
இன்ன பிற ஆசைகளின்,ஆமைகளின்- ஆசானே!

உன் உடன் இருப்பிற்காய்!உலக வலத்தில்
உறுப்பறுக்கும் உரிமையை என்று
கனதி குறைப்பாயோ? அன்றே மனிதமும் மானிடம் சூடும்.
யாரில்லா போதும் இயங்கும் பிரபஞ்சம்-இனி
என்றுமே நீயின்றி அசையா வரம் பெற்றாய் வாழி.

நேரம் இருக்கும் போது என் வீட்டு முற்றத்திலும்,
கொஞ்சூண்டு கொஞ்சம் ஓய்வெடு -
நானும்உன்னை நாணயமகற்றி "நா"நயமகற்றி,
நாலு நாட்கள் சுவாசிக்க வாசிக்க.
இதற்கும் நோ்த்தி வைக்க வேண்டுமென்றால்-
என் வாசலும்,வாசமும் ஏகாதே.

உடலில் வலுவும்,உள்ளத்தில் தெளிவும்,
பகுத்தறிவில் பாதையும் உண்டு .
எனவேஎன் வேர்வையின் துளிகளால் உன்னை
வேண்டியவரை வரை கொள்வேன்.
ஏந்த அர்த்தமற்ற ஆமைகளும்,ஆசைகளும் எனை அண்டாமல்,
அந்த தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.

வியாழன், 10 ஜூன், 2010

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.


சரியாசனம் சாசனமாகாததால்,
புரியாசனம் புதைக்கப்பட்டதால்,
எரியாசனமாய் எழுதப்பட்டு-அந்த
உரியாசனம் உதிர்ந்தே போகுமா?

கரியாசனம் காட்டும்-ஆள
நிலக் கரியாசனமாய் நாளை-
அது தோன்றும் போதினிலே அதன்
வரியாசனம் வைடூரியமாய் மிளிரும்.

"தெரியா"(ஆ)சனம்,தெரியாத்தனம்
"வரியா"(ஆ)சனம் வரியாத்தனம்
வெறியாசனம் இலங்கும் சிங்களனால்,
கறையாசனமாய் இன்று புதைகுழியில்-ஆனால்

இவை யாவும்!
கரையாசனமாய் கனதி அள்ளும்-புவி
நிரையாசனமாய் எங்கள் மேனி தளிர
விபராசனமாய் விதி கீறும்-அன்று புரியும்
அவர் வரித்த புதியாசனம்.

பெளதீகாசனம் பகரும் பதிமுறை புரிவீரோ?-அந்த
பெளத்தாசனம் பயிற்றும் பாடையாசனம்-என்றோ அன்றி
பகுத்தாசனமாய் பரணியில் மறுதாக்காசனம் மரபெழுதும்
விகுத்தாசனம் நிச்சயம் எங்கள் வீரம் ஏற்கும் "விகுதா"(ஆ)சனமாய்-இது

"மா"வீராசனத்தின் மேல் நின்ற மெளன சாசனம்-எல்லா
"சா"ச(க)னத்தையும் எகிற்றி ஏறேறுமாசனமாய்-தமிழாசனம்
தரணாசனத்தில் தன் தகு சாசனம்!
தர்மாசனமாய்
சினையாசனம் சிறப்பேந்தும் சீர்காணீர்.

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.


பாதிக்கப்பட்ட பாவிகளின் பரந்த நன்றிகள்.

தென்னிந்திய திரைப்பட கர்த்தாக்களிற்கு!
வன்னி மண் தின்ற வணங்கா மக்களின்
வந்தனை கூறும் நன்றிகள்.

ஈழத் தமிழரின் இதயம் தின்ற,
பாழும் சிங்கள பாவிகள் தங்கள்-
மன அழுக்கின் மகத்துவம் கலைக்க-
இனமானம் சுமந்து ஈர்ப்புடன் இலங்கி
இலங்கையில் இன்றுவரை நெடுத்த,
ஐ.ஐ.பா விழாவை வாகையுடன்-
தோல்வியுற செய்த செம்மல்களே!

ஈழத் தமிழினம்!
நாளும்,பொழுதும் நலிந்து,
வலி சுமந்து மாளாத் துயர் பருக,
சிறீலங்கா ஆரியன் ஆதங்கித்து மகிழ,
எந்த விதி வரைந்தானோ -அதை
சிந்தையில் சிதைத்து சீரிய அடி கொடுத்த,
சிங்காரத் தமிழுணர்வுடன்-
திண்மையாய் முன்னெடுத்து,
எங்களின் கரம் பற்றி ஏங்கும்-
தமிழ் மனம் சுரக்க ஏந்திய,
ஊடகமாம் சினிமாத் திரையுலகினர்க்கு,
தமிழீழ மக்கள் சார்பாய்!
புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.

மங்காத வடுவிருக்க,
மனமெல்லாம் சினமிருக்க,
தினவெடுத்து சினையீன சிங்களம்
வினையிட,
பொங்காத தமிழனாய் பொறுப்பறுக்க நினைத்தீரா?-எங்கள்
தொப்பிள் கொடியுறவை கொக்கென்று நினைத்தீரா?

சனி, 5 ஜூன், 2010

ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!


பூத்திருந்தாய் எங்கள் புவனத்தில்,
புனித விடுதலை ஒன்றையே யாத்திருந்தாய்.
புத்த நித்தியம் எங்களிற்கு விதைத்த-
சித்த வைத்தியத்தையே சீர்-
தூக்கியிருந்தாய்.

அதனால்!
அவர்தம் ஆயிலியங்களை களைய,
தூக்கினாய் கருவி-அது
எம்!
ஆயுத எழுத்தாக,
அதையே விடுதலை-
எழுத்தாணியாய் ஏற்றவனே!
பாயும் பொழுதிற்காய் உன்னையே பதித்திருந்தாய்.
சாயும் நிலை வரினும் சிங்களன் கையில்
சாயாத கலையல்லவோ காத்திரமாய்-
உன்-
காயாத கனவது.

புறச்சூழல் உனை புரியாத பொழுதாய்,
உறவுகள் உனை அரவணைக்கா கணமாய்,
உன் கண்ணியமான,கடப்பாடு,
திண்மையான செயற்பாடு,
உண்மையான யோகமாக உணரும் பொழுதில்!

நீ!
சத்திய வேள்வியாய்
தமிழீழ மண்ணில் சாவால் சரித்திரம் எழுதி.
புண்ணியனே!
பிறப்புக்களின்
அர்த்தம் ஆரத் தழுவிய வித்தியனே!
விடியும் ஒவ்வொரு கணமும்,
உன் வீரம் சாற்றும் விகற்பத்தில்,
எம் விழி(ளி)ப்புக்கள் உமைத் தழுவும்.

சூழல்!
இன்று சூனியமாய் வரம்பு அள்ளியதாய்,
ஓரு பார்வை அவ்வளவே!
குருதிகள் சிந்தாத குதம் ஏதும் உண்டோ?
இது!
விடுதலை வேள்வி.இதில்
ஆகுதிகள் சாதாரணமான ரணம் சரிக்கா,
எல்லாமே!
இங்க அசாதாரண ஆயிலியம்
இத்தனையும் சுதந்திரம் விடுதலை என்ற பெருங்கனவின்-
இடுகுறி.

ஆம்:
சொல்லணத் துயரம் எம்
பூமிக்கு மட்டும் இல்லை எங்களின்
புதல்வர்களினதும்,
புனிதர்களும் மாவீரக் கனவெழுதும்.

எங்கள்-
தாயகத்தை சிதைத்து,
பிச்சு உதறி,சகலதுவும் பிணக்காடாய்!
வார்த்தைகளிற்குள் அடங்காத அட்டகாசம் அது.
மனிதம் தின்ற கோரத்தின் அரிச்சுவடியது.

இன்றும் அதன் தாரணங்கள் சூடிய வடுக்கள்
அனு தினமும் உள்ளம் அரித்து வெளிவரும்.

ஆயினும்!
புனிதனே உன் பாதம் ஆர்ந்து,அகோரணமாய்
உறுதி பூண்டோம்.
மலரும் தமிழீழத்திற்காய் நாம் மடி சுரப்போம்.
அந்த மகோன்னதம் மிளிரும்.
அரூவமான ஆத்தமங்கள் விழி விரிக்கும்.
விடியும் திசை எம்பால் ஒளிர,
உன் சத்திய வேள்வியின் வழியில்-
எம் வாசல் பூப் பூக்கும்.

சுதந்திரம்,
விடியல்,
எந்த இரத்த வடுவின்றியும்-
விடியாது.
விழி விரித்து,வழி பார்க்கும் பக்குவம் விகற்போம்.
வீழ்ந்தது எழுவதற்கே!
வேதம் படித்தோம்.
பாரில் உன் பாதை செழிக்கும்.
செந்தூரமாய் செந் தமிழீழம்.

வெள்ளி, 4 ஜூன், 2010

தொலை நோக்கு!



முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-
முதுகு நேர்த்து சொறிந்த வன்னகைகள்-தமிழ்
இனத்திற்கு செறிந்த வஞ்சனையின்றி-எந்த
இகத்திற்கு இழைத்த பஞ்சணையாகும்.


தொலை நோக்கு!
தொலைவல்ல,
கலையால் கரம் தொடு.
விலை போனார்கள் சிலர்:
விதண்டா வாதம் செய்ய சிலர்.
கண்டதையும் கக்கி காசாக்க சிலர்.
விண்டதாக விவாதிக்க வித்தையேற்று சிலர்.
அண்டா,அண்டாவாக அளக்க சிலர்.
கொண்டதெல்லாம் தாம் விடுதலையின் தலையென்பர் சிலர்.

அன்றலர்ந்த மலராய்,
ஆளுமையாய் அண்ணனுடன்,
சென்றிந்த செம்பகையை,
பொடியாக்கி போனார்களே. அவர்கள:
பொடிகளல்லர் தமிழுடன் தன்னை,
ஆகுதியாக்கிய கரும்பூ இவர்கள்.

இந்த-
கல்லறையின் கனதிகளையும்,
அதன் காத்திரத்தையும்,
கொண்ட கொள்கையின் கொற்றங்களையும்,
தன்
சுயத்திற்காக
கொன்று
இங்கு
பிரிந்து நிற்கும் பீடர்கள்
என்று இவர் உறுதியாய் எங்கள்
உழவன் கரம் கொடுத்தான்.

உறவாடி கெடுக்கும்
உறவு.
இதுதான் அன்று வரை இன்று ஈறாக
தொடரெழுதும்
ஒட்டு,
எட்டப்பர் க(ஓ)டை.
முள்ளி வாய்க்காலில் விழ்ந்தாலும்
கள்ளிப் பால் தெளிக்க எங்கள் இனமே
கனதியாய்.
இழி நிலையேற்ற கொடியோரின்
கும்பம் கண்டோம்.

பிரித்தகற்ற முடியா பிடாரிகள் எல்லாம்
இன்று தானாவே தன்னை பிரிகையாற்றிய
பிம்பம் ஒரு சுத்திகரிப்புக்குள்
சுதாகரித்து.
தன் பீடத்தை தானே தகற்ற வரலாறும் இங்குதான்.

நன்றே.
பிரிவில் ஊறும் உறுதியற்ற உருவம் கண்டோம்.
பிறளாத எங்களின் திண்மையான திண்ணம் கண்டோம்.
இனி
விதி அளி(ழி)க்கா வீரியம் பெறுவோம்.
எமக்குள்
களையற்ற காளையரும்,
கனதியான,
தாளையரும்---வலம் வரும் தலம்.

விடிவெள்ளி இனி தூரமும் இல்லை.
சோரம் போகும் சாரமும் இல்லை.
தோள் தொடும் தோழர்கள் இனி
தேற்றம் பெறுவர்.ஈழத் தோற்றம் வரைவர்.

செவ்வாய், 1 ஜூன், 2010

பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.


எந்த நினைவுகளையும்,
எங்கள் உறவுகளையும்,
எந்தன் சுற்றத்தையும்,
எங்களான முற்றத்தையும்,

நினைவுகளால் என்றாலும்,
களையும் நினைவிருந்தால்,
எல்லாமே அல்,ஆன்,ஒடு,ஓடுவாக
ஓர்மம் களி(ழி)த்தால்!
நாம் தமிழராய் தலை நிமிர்வதில்
எவ்வித யோக்கியதையோ,பாத்தியதையோ
அர்த்தமோ இல்லை.

எனவே!
எனக்குள்,உனக்குள்,எம் எல்லோர்க்குள்ளும்
குமுறும் குரலாய் நான்
இங்கு குறியிடும் குவியத்தை குலைக்க
யாரும் கனவிலும் சுடுகலன்
மொள்ள வேண்டாம்.

இது!
தர்மத்தின் குரலாய்
குறி சுடும்.
சூடப்(கற்பூரம்) புத்தியுள்ள
சூட்சுமம் உள்ளோரே!
சுகிப்பீராக!?

என்னைத் தாழ்த்துவதாய்-நீ
தாழ்ந்து போகாதே,நீ
நுணலானால் ஒரு போதும்
அரவமாய் அறம் தீண்டேன்.
மறவாதே மானிடமே!

அனுதினமும்,
உறங்கும் முன் ஒரு கணமாவது
உன் முற்றத்தின் அவலத்தை
உள் வாங்கு!
சிலாகி!
உற்ற வழி தேடு உனக்குள் உறங்கும்.
பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.

ஒரு திவ்விய ஒளி உன் அகம் சூடும்.
கனவுகள் காண்,
அதை தினமும்
புனருத்தாரணம் செய்.
சமூக சிந்தனை அகம் ஊட்ட,
ஏதோ,
ஏதோ ஒன்று உன் இலங்கலில்
இயங்க மடி தேடும்.அந்த
மனிதம்,
அதுதான் உன் இயல்பாக முடி சூட.
எது உன்னால் முடியுமோ?
அது தானாக உனை இயக்கும்.

ரத்தத்தின் சத்தத்தில்
முற்றங்கள் முகை அவிழ!
கேட்குதா!
எங்கள் முற்றத்தின் அழுகுரல்.
இதையும்
பத்தோடு பதினொன்றாய் நீ
எண்ணினால் என் பதிவுகளில் இருந்து -உன்
...பதியங்களை களை-இது
விநயமான வேண்டுகோள்.

சனி, 29 மே, 2010

காலமது நொடித்திருக்க காயம் மாறும்.


நான்!
காத்திருப்பேன் ஒரு கதை படிக்க,
காலமது நொடித்திருக்க காயம் மாறும்
காலம் காத்திருப்பேன்.

கோலம்
அது கோடிட்ட கோலங்கள் கோர்வைகள்
...மடிந்திருக்க,-
நான்
யாத்திருப்பேன் அதன் யதி,
அணை தரும்
சுதி, லயம்
லாயிக்கும் லயங்களில் லாவண்யம் பூத்திருக்க.

நான்
வேர்த்திருப்பேன் அந்த வேதனை தந்த ரணம்
இதில் வேடிக்கை மனிதங்கள் கோடிட்ட
கொய்யங்கள்,
கொத்தடிமைகள்,
கொடுமைகள்
அவை யாவும் அரண் மீட்கும்
உரிமங்கள் உயர்வாகும்.

நாம்
பூத்திருப்போம்-புவி வாழ்வில்
புனருத்தாரணங்கள் புடம் சூட
மனுதாரங்கள் மதிப்பளிக்க -நாம்
மகிழ்ந்திருப்போம்.
எங்கள் கொற்றங்கள் அன்று
கொலுவீற்றிருக்க.
புல வாழ்வு எந்த நிம்மதியையும்,மகிழ்வையும் தைப்பதில்லை.ஒன்றின் இழப்பில்தான் மற்றொன்றின் உயிர்ப்பு.
ஆம்!
மண்ணையும்,ம(மா)னத்தையும் இழந்து
பொன்னையும், பொருளையும் கூடவே
இருளையும் பெற்றுள்ளோம்.
மானசீகம் ஒன்று உண்டல்லவா?இது
மண்ணைப் பற்றிய சிந்தனையும்,அதன் வாசம் தடவிய வந்தனையுமே தவிர வேறென்னவாக
வளத்தை எண்ணமுடியும்.

அனுதினமும் இந்த யாப்பு மனவெரிவான ஏக்கமாக அதன்தாக்கம் அதுதான் நீங்கள் காணும் எனதான ஆக்கம்.
ஆயினும் அதுவும் ஒரு தாக்கத்தின் பிரதி விளைவாக காலம் அது காட்டும்.
வெறும் விளம்பரங்களில் குளிர் காயும் எண்ணம் தரித்திலோம்.

பகிர்ந்து கொள்ள பல விடயங்கள் உண்டு.எனினும்
காலத் தயக்கம் எம் க(ன)ணம் மொள்ளும்.

தொடரும்....

சனி, 22 மே, 2010

யார் இறந்தால்,யாரிழந்தார்?


வலி!
அது எனக்கு வலிக்கவேவில்லை.இந்த
பலி சுமந்து ஆற்றிய வேதனையின்,
சுவடுகள் கூட என்னை சுடவில்லை.
ஏனெனில்!
...நான் அந்த மண்ணிலும் இல்லை.ஏன் இப்போதும்
நான் அம் மண்ணின் மைந்தனும் இல்லை.

எப்படி இந்த வேதனைகளின் கொடுமைகள்
எனை சுடும்?
அல்லது-
எப்படி என்னால் அந்த ரணங்களின்
கதங்கள் எனை கவ்வும்?நான்
வெளிநாட்டின் வேதகன்.

துப்பாக்கி குண்டின் சத்தங்கள் கூட,
என் செவி மொள்ளவில்லை.ஈர
காற்றில் கலந்த கந்தக நெடிகூட
என் நாசி நுகரவில்லை.
அவர்களின் உத்தமமான,உயர்வான
போராட்டத்தின் பொறிகூட என்னை பாதிக்கவில்லை.
நான்தானே பக்குவமாக புலம் பெயர்ந்து விட்டேனே?
எனக்கென்ன ம(ரண)னக் கவலை?

இராணுவத்தின் வக்கிரகங்கள் எனை-
வலமாக்கவில்லை.பேரினவாதிகளின்
ஆழிக்கூத்து எனை சீண்டவில்லை.ஆகவே
அதுவரையில் அவர்களின் அனந்தம் நன்றே.

ஒரு முடறு நீர்க்கு அந்த
உறவுகள் பாடாய் பட்டதை,அதன் ஐீவித
வேதனைகள்--
பாலுக்கழுத பச்சிளம் பாலகரின் அழுகுரலும்,
எந்த பாலுக்கும் வழியின்றி அந்த தாயவள் பட்ட
வேதனைகள்,
வாழும் வயது முற்றி இயங்க முடியாமல்
அந்தரித்த எங்களின் முதியவர்கள்,
சுந்தர வயதில் சுகவாழ்விற்காய்
சுந்தரிகளின் அவலங்கள்!
வாலிப வயதில் வளமாக்க வாழ்வை
வையத்தில் வகுக்க வாய்த்த என்
வாலிபர்கள்,

அத்தனை உறவுகளும் போட்டதை போட்டபடி,
அடுத்த விநாடியில் எந்த நாடிகளை,
இழப்போமன அறியாமல்,அடுத்த வேளை கஞ்சிக்கு கூட,
கூடமில்லா கூடறுந்த என்-
உறவுகளின் எந்த வேதனையும் என்னை பாதிக்கவே இல்லை.

ஏனெனில்,
நான் இங்கு வசந்தம் விரித்த,
வயலில் அதன் வயப்பில்,
என்னை கறுப்பனே வெளியேறென,
எனை விரட்ட துடிக்கும்,
நாசிகளின் கொதிப்பு எனக்கு பழகி,
உடலும்,மனமும் அதனதன் இயல்பிலேயே
எருமை மேல் பெய்த மழையாக,
காலம் செல்ல அதுவே இயல்பாக --

உணர்வுகளின் சூட்சுமமும்,
உணர்ச்சிகளின் லயமும் எனக்கு எந்த ரீதியிலும்
எனை வதைக்கவில்லை.
எனக்கு எப்படி பிறக்கும் ரோசமும்,மானமும்,வெட்கமும்
உப்பு போட்டு தின்றதே எல்லாம் தின்பதற்கே தவிர,
உணர்வினிர்க்கில்லையே!

இல்லவே இல்லை-
எந்த கருமாந்த உணர்வும் எனக்கு
இல்லவே,இல்லை.
என்னமோ நடக்குது,நடந்தது.
யார் இறந்தால்,யாரிழந்தார்?
எதை இழந்தார்?ஏன் இழந்தார்?
எதற்காக இப்படி?
இவைகள் எல்லாம் எனக்கு சம்பந்தமே
இல்லாத கேள்விகள்.

நான் புலத்து குடிமகன்.
என் சுற்றமும்,முற்றமும்
ஏன் சகல உறவுகளும்,உணர்வுகளும்
இந்த புல முற்றத்து கொற்றமே.

முள்ளியவளை எங்குள்ளது?அதன்
பாரிய சரிதம் இப்போ யாது?அங்கு இறந்தவர்கள்
என் உறவும் இல்லை,அதனால் எனக்கு ஏந்த
உணர்வும் இல்லை.

நான் புலத்தில் மலர்ந்த புதியவன்.
என்னை எந்த உணர்வுகளும்,
ஏன் எதுவுமே!
எனை பாதிக்கவில்லை.
நான் இந்த நாட்டு குடிமகன்.
யார் அழுதாலும்,யார் செத்தாலும்
எவர் முட்கம்பிக்கள் வதைந்தாலும்.
எந்த புதைகுழிக்குள் எவரை புதைத்தாலும்,

எவரை சிங்களன் பாலியல் வன்புணர்ந்தாலும்,
யாரின் மார்பகத்தை அவன் அறுத்தாலும்
அரிந்தாலும்,
எவன் பெண்டிரை ஆமி புணர்ந்தாலும்,
எனக்கென்ன!
நான்
புலத்தில்
பிரசாவுரிமை பெற்ற,
ஈன(ழ)த் தமிழன்.
எனக்கு எதுவுமே வலியில்லை.ஆரியன்
தின்று,குதறி,எரித்து,புதைத்த,வன்புணர்வுகளின்
வலிகள் அதன் அலங்கோலங்கள்,
வலித்தெடுத்த வதைகள்--இன்னபிற
இழவுகள்.

எதுவுமே என்னை ஆக்கிரமிக்கவில்லை.
ஆனால்
எனக்கு என் மண்வேண்டும்.
யார் குத்தியென்றாலும் எனக்கு
அவலமில்லா அவல் வேண்டும்.

ஒன்று தெரியுமா?
நான்
தமிழனே இல்லை.
யேர்மனிய,கனடிய,பாரிசு,சுவிட்சர்லாந்து,
ஏன் சர்வதேச குடியுரிமைக்காய்
களம் தேடும் புலக் குடிமகன்.
வாழ்க சிறீலங்காவின் பேரினவாதம்!???!

நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.


வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயா
வீணர்கள் விளையாடும் வீதியல்லவா ஐயா
விபூதி பூசினாலும் வினை விடுமா ஐயா -நாம்
எந்த சந்நிதியில் தரிப்பெழுத சதி விழும் ஐயா?

நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.
பாழும் பரமர்கள் பதிலற்று பாவிகள்.
வேரும், விழுதுமாய் வேய்ந்த பகை நாள் குறிக்க,
ஆருமற்ற அனாதியாய் யார் ஆய்ப்பார்?

இத்தனை அவலமும் சுமந்த எந்தன் சுற்றம்.இன்னும்
எத்துணை சுமை,சுமக்க அவர் வாழ்வு பறித்தான்?
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல்,
நெஞ்செரிக்கும் நியங்கள் எந்த கொம்பன் எமை அணைப்பான்?

விடிவு நொடிகளுக்கு மட்டும்தானா?
நொடிக்கும் எமக்கில்லையா?
வல்ல எம் வயலர்களை வார்ந்தெடுக்க பகைக்கு
பாதை விரித்த பாரதமே பதில் இறுப்பாயா?

உனையே துணையென தலைவன் துய்த்த-
பெரும் கணையை,
துப்பிய பெருந் துரோகத்தின்,
வேரே நீதான்.
இத்தனை அழிவின் அரூப அற்பனே!
கால ஓட்டத்தில் உனதான காத்திரமான பதிலாய்
எம் பாதத்தில் நீ இறைஞ்சும் பாத்திரம் ஏற்பாய்.
பார் இது ஒன்றும் பாஞ்சாலி சபதம் இல்லை.

செவ்வாய், 18 மே, 2010

கரி நாள் இன்று.



வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்
வாழ்ந்த இனம்,
வாகையே வகையாய் வயல் மீட்ட வள்ளல்கள்,
தோகை விரித்தாட தோட்டம் அமைத்த தோகையர்கள்,
பாகைகளால் பருதி பருத்து பரவி,விரவியிருந்த
பரிவுகள் எல்லாம் பாவிகளால்,
பறி்தெடுக்கப்பட்ட,
கரி நாள் இன்று.

மாற்றம் அதற்கு மட்டும்தான் மாற்றம் மையல் விரிக்காது.
ஆனால்!
மாற்றம்!
சுழலும் இந்த பூமிப் பந்து
சுமந்து வரும்....
நாள் ஒன்று நயக்கும்.
நலிந்து கொய்யப்பட்ட எங்கள் தோட்டம்-
நயப்பெழுதி நயனம் நயக்கும்.

ஈகத்தார்க்கு இரப்பெழுதும் மனம்,
இகத்தில் இதயத்தில் மட்டுமே எழுதட்டும்.
சொல்லிற்கு முன் செயலாக்கும் சேடியர்கள்,
செய்கை நியம் மொய்ய நாம்-
பொய்கை பொலிவுற போற்றும் எம் வழி செல்வோம்.

நேற்றைய போலவே பொழுது மட்டுமே விடியும்,
நாம் பொருதும் போக்கில் மாற்றம் மருவ,
பொலிவுற ஓா்மம் ஓங்க உலகொழுங்கு மாறும்.
விதைத்த உடன் எதுவும் அறுவடையாகாது.நாம்
விரிந்திருந்தால் வினைகள் விடையிறுக்காமல் ஓயாது.

நீதிக்கு தண்டனையை எந்த நிர்மலன் தொகுப்பான்?
போதித்த புத்தனின் பொய்மையில் உலவ?
சாதிக்கும் சரித்திரம் தர்மம் நிலை நாட்டும்.
பாதித்த எங்கள் பரப்பெழுதி ஊட்டும்.

சனி, 15 மே, 2010

கோவணமும் ஆவணமின்றி அகலும்.


வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,
எத்தகம் மூடி சிதைத்தார்கள்?
உன் சித்தகத்தில் சிறக்கல்லையா?
பித்தகங்கள் பிறவியாக பிடரி வழி
பிறழ்ந்த சிங்களனவன் பிஞ்சு முதல்-எங்கள்
உறங்கு குழிவரை உயிர்த் தண்ணி பறித்தான்.

பொது மக்களின் புதை குழியில் நாளை இவர்
"மா"?வீரக்குதூகலம் கலக்க -எந்த
"பா" ஏந்தினார்கள்?ஆம்
அரக்க சிந்தையர்கள் கால,காலமாக... களி(ழி)க்கும்,
அனந்த நிலையது அவர்கட்கும் பொருந்தும்.
எந்த போதினி போற்ற பொய்கை கலந்தார்.

எம் இன அவல "சா"க்களில்:இவர்கள்
"சா"க்கடை திறப்பு.நாம் தீக்குளித்து
எரிந்த மேட்டில் சாம்பல் இன்னமும்
கரையவில்லை.
காயவில்லை!
கல,கலக்கின்றான்
சிங்களக் காடையவன்-பேரினவாத
தெருக் களத்தில்.

புலத்து நண்பனே!
என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்?
உன் கடனாற்ற!
வழமைபோல்
வேற்று முகம் காட்டி எந்த தோற்றுவாயில்
உன் வரப்பெழுதுவாய்?

இப்பவும் நீ தூங்க நாளை
உன் வீட்டு முற்றம் மட்டுமல்ல-நீ
கட்டியிருக்கும் கோவணமும் ஆவணமின்றி அகலும்.
விழித்திருக்க,
விவேகமாக செயலாற்று.அஃதின்றேல்
உன் முகவரியை மாற்றினாலும்-உன்
பிறப்பதை மாற்றமுடியாது.அது
உன் ஆயுள்வரை வரையறையின்றி
சந்ததி வரை வரப்பிளக்க வழியாகும்.

பசித்திரு!
பாரில் எப்போதும் விழித்தெழு -நாளை
ஊரில் உன் உறுப்பெழுத.

நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.


நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.
நிதம் அதை மனமது சாடும்.
பேரவலச் சாவதை இனமது மறக்குமா?
ஈனச் சாவென்றே மாற்று முகம் சூட்டுமா?
துரோகம் பெருந் துரோகம்,
எங்கள் இன மக்களை இழந்ததை நினைக்கால்
பெருந் துரோகம்.
இதயத்திற்கு மட்டுமல்ல!
இனத்திற்கே இழைக்கும் பெருந் துரோகம்.
ஈனச் சிங்களன் எங்கள் பெரு நிலத்தில்
ஈற்றில் ஈத்தியதை, வகை,தொகையின்றி வதைத்ததை,
எரித்ததை,உழக்கி எம் வயலெரித்ததை,
ஈகச் சுடர்களின் ஈர நிலத்தையும் இன்றும்
இழிவாக கரைத்ததை,
ஊர் கூடி உலகறிய உணர்வால் ஒன்றி,
உரத்து சொல்லாவிடில் பெருந் துரோகம்.
நமக்கு நாமே உந்தும் பெருந் துரோகம்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம்.


விழி மூடாக் கனவைய்யா -இது
வழி திறந்து வாசல் பூத்து-வயல் காற்று
வாகை பாட வாசமெல்லாம் நுகர்ந்திருந்த
திருக் கோலம் திடம் பூண்ட கொற்றம்.

பேரவலத்தால் இன்று பேயாட்சி-எங்கள்
தேரோட்ட வீதியெல்லாம் ரத்தாட்சி
நீரோட்டம் அங்கே வறட்சியாக்கி-எங்கள்
வாசலெல்லாம் வைத்தானே நெருப்பபாக்கி
சாம்பலாகி போனதுவோ சந்ததிகள்-அங்கே
ஆம்பலாக விழையாதோ ஆத்மாக்கள்

நீண்ட கொடைகளால் நிமிர்ந்த கொற்றம்-
தாண்ட தாண்டவம் ஆடினானே சிங்களம்
கொண்டதெல்லாம் இந்தி ரத்தம்-அதில்
இழிந்து போனதய்யா எங்கள் ரத்தம்-பாவி
பல தேசம் இணைந்து பலியெடுத்தான்-நாம்
பந்தயக் குதிரைகளாய் பலி கொடுத்தோம்.

எத்தனை இழவுகள் எம் வலம் விரித்தான்-அதில்
சித்தனைத்தும் சிதைத்து எரித்தான்
முத்தியவன் கொண்டானா முகிழ்வெரித்து வென்றானா?
பத்தியவன் பறித்ததெல்லாம் பாவி எம் உயிர்களையே-பாரத
புத்தியவன் புதைத்தானே புத்ததேசத்திற்காய்-எந்த
யுக்தியில் அவன் வென்றான்?எதை வென்றான்?

புதைத்தது,நஞ்சு குண்டால் எரித்தது,
விதி மீறி கொன்றது,வீதியெல்லாம் தின்றது
பதை,பதைத்து சரணடைய சண்டாள சிங்களம்
விதை பிதுக்கி,விரையிறுக்கி எத்துணை அட்டகாசம்?
வெற்றியின் குரல் இப்படித்தான் என்பதாக,
வெங்களச் சீனனுடன் வேடிக்கையாக எங்கள் வேதனைகள்
ஆரியனிற்கு.

ஆரிய கிட்டலரிம் இல்லாத மதை,மதைப்பு
ஆனாலும் எதை அழித்தான்?
ஆணவம் தலைமீற ஆயிரம் அவனிற்குள்,
அவனியும் சேர்ந்தே அத்தனையும் அறுவடையாய்,
ஆனாலும் ஆனதா ஆன்மாவில் விதைத்ததை அழிக்க
ஆக்குவோம் நாம் நாடு கடந்த தமிழீழம்-அதனால்
நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம்.

வியாழன், 8 ஏப்ரல், 2010

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-மா வீரத்தால் வளர்ந்த தீ


போகும் வழி போகின்றோம்-
போர் சுமந்து செல்கின்றோம்
சாகும் வரை நாம் தொடர்வோம்.எங்கள்
சாசனங்கள் நிறையும் வரை,

ஆவி வழி சொந்தங்கள்
ஆயிரங்கள் இழந்தாலும்
மீதி எழும் பந்தங்கள்-வீதி
கீற விழுமியங்கள்.

ஊர் அழிந்து போனாலும்
உறவழிந்து போனாலும்
உறுதியாகிப் போகின்றோம்-எங்கள்
உறுதி எழுதப் போகின்றோம்.

இலட்சியங்கள் சாவதில்லை-எங்களை
இழைத்தவர்கள் ஓய்ந்ததில்லை
வறட்சி ஒன்றும் வரைவதில்லை-இந்த
புரட்சி என்றும் புரள்வதில்லை.

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-"மா" வீரத்தால்
வளர்ந்த தீ
விருப்பாற்றி எரிந்த தீ-புலி வீரர்களால்
மலர்த்திய தீ
சுதந்திர தீபம் ஏந்தாமல் சுரம் குன்றி
குமைந்திடுமா?
சுந்தரத் தீ மழுங்க சுரைந்திடுமா?

மங்காத ஒளி வீசும்-அது
மாவீரம் காத்திருக்கும்
ஓங்காமல் ஓயாது ஒளி தீபம் ஏற்றாமல்
மாமாங்கம் போனாலும் மலராமல் போகாது.எங்கள்
மண் விடுதலை கீதம் இசைத்தேகும்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

சுயபரிதாபம் சூனியமே சுரக்கும்


இருத்தலையும்,நுகத்தலையும்
நாடும் மனம்-எந்த பொறுத்தலையும்
போற்ற போகம் மறுக்கும்
திருத்தலம் நாடும்-இவர் திருந்தார்
உருத்தளம் அமைப்பார்-ஏந்த
உவப்பெதுவும் மொள்ளார்-ஏதோ
பெருந்தலை சாத்தானாராக பெருமை மொய்வார்.

கருத்தல்,கறுத்தல்,உறுப்புக்களின்
உசா கருக்கும்.
பெருத்தல் என்றும் பெருமைக்கு உரியதில்லை.அது
வெடித்தலையும் வேகம் வெய்யும்.ஆக
உருத்தல்,உறுத்தல் உலவல் எல்லாம்
மாற்றத்திற்கு உரித்தானதே-எனவே
கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல்
காரியத்தின் கனதியை கைக்கொள்ளல்-அதன்
காத்திரத்தை காக்கும்.

வேகம் என்பது வேதம் கொள்ளலும்,
பாதம் அதை பதிக்க பார்வை கூர்மையும்,
விரிந்த நோக்கமும்,விரியா சுயமும்,
சுரந்த போதில் சுமையது குறையும்.
கரந்த எந்த கயமையும் கலைய
குறைந்திடாத குவலயம் வேண்டும்.

இயலாமை என்பது உதாசீனமாகும்,
முயலாமை அதன் முதற்படியாகும்,
செயலாற்ற என்றும் செம்மைகள் சேர்த்து
புயலாக நீயும் புயங்களை பூட்டு
வயலாக விரியும் வளமது வருடும்-வந்த
பனியாக யாவும் பரவலாய் மடியும்.

சுயபரிதாபம் சூனியமே சுரக்கும்-தன்னை
சுயபரிசோதனை ஆற்றல் சூத்திரம் சூட்டும்
நம்பிக்கை என்பது ஐந்தெழுத்து மந்திரமாய்
ஐயமது போக்கி ஆளுமை நோக்கு
பையவென்றாலும் வையகம் போற்றும்.

புதன், 24 பிப்ரவரி, 2010

கனடிய வர்த்தகர்களின் அரிதாரம்.

அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடாத்திய கனடா வர்த்தக சம்மேளனமும், வைத்திய சங்கமும் இன்று மஹிந்தவுடன் சந்திப்பு. அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டங்கள் நடாத்திய இந்த கூட்டம் புலியை வைத்து அன்று பிழைப்பு நடாத்தியது. புலிகளின் தலைமை கடந்த ஆண்டு மே மாதம் மெளனிக்கப்பட்ட நிலையில், தற்போது மஹிந்த அரசுடன் உறவு கொண்டு தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவ் குழு அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சு நடாத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.(படம் இணைப்பு)


புலிகள்-ரணில் சமாதான காலகட்டத்தின்போது கனடாவில் இருந்து லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம் கரியான்ஸ், டிரக் லீ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்து சென்று பிரபாகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களான வைத்திய கலாநிதி சிவாஜி, கணேஸ் சுகுமார், குலா செல்லத்துரை போன்றவர்கள் பிரதானமாக செயற்பட்டவர்கள் ஆவர். தமது பிழைப்புக்காக அன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை துரோகிகளாகவும், தீண்டதாகதவர்களாக கூறிவந்த இந்த வர்த்தக சமூகம் இன்று வன்னி இறுதி கட்டபோர் மூலம் தமிழினத்தின் அவலத்திற்கு காரணமான அரசுடன் ஊடல் கொள்வது மிகப்பெரும் துரோகமானது.

இது கனடா வாழ் வர்த்தகர்களின் இரண்டகமா?அல்லது பச்சோந்தி தனமா?இல்லை எல்லாமே இப்போ வியாபாரம்.சுயநலமிகளின் சூத்திரம் எப்போதும் இப்படித்தான் இயங்கும்.கேட்பவன் இல்லையென்றால் ஈசலும் ஈசன்தான்.
பலமிழநதோம் பேரம் பேசும் சக்தியும் அற்ற போது எல்லாமே?????

ஆயினும் அற்றதான இத்தனையும் வினையறுக்கும்,விதி என்பது மாறும்.மாற்றப்படும்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வசிட்டர்களிற்காக காத்திருக்கும் வயல்.


பிரீத்தோதும் பிறவிகளால்,
பிரிந்திருக்கும் தமிழ் கூட்டமைப்பு.
எந்த தெரிவேந்தி இன்று தேர்தலில்?
சிந்தாத சிந்திப்புக்கள் சிதைந்தொழிந்து,
சின்னா பின்னமாக பின்னலிடும் பிறழ்வில்.

அண்ணன் இல்லையெனில்,
ஆளுமையும் அரோகரா!
தண்மையான தகமெல்லாம்,
தடம் புரண்டு அரோகரா!
திண்மை அங்கே தீ எழுதும்,
திடமெல்லாம் தீக்கிரையே அரோகரா!

வண்ண, வண்ண வளமெலாம்,
வயலறுந்து செயல் குலைந்து,
திண்ணைப் பேச்சாக திடகாத்திரம் தீய்ந்ததினால்?
பலமற்றப் போனதால் பகை-
வாசல் எம் "பா" எழுதுமா?

ஆளுமையற்ற அரசியலால் என்ன தகம்
நாம் குவிப்போம்?
சூனியமாய் அங்கு சுடரெரிந்து அணைந்ததுவா?
கூனியம் எம் குன்றாக குலமேந்துமா?
அன்றிலிருந்து இன்று வரை இந்த
பேரினவாதம் எம்மை பெயர்த்தெடுத்ததே தவிர
எந்த ஆளுமையையும் எமக்காற்றவில்லை.
இது என்றும் எம் வரலாறாக வழி காட்டும்.

ஆயுதம் இழந்தோம் அதனால் அத்தனையையும்
இழந்தோம்-ஆனாலும் மாற்று வழி ஏதும்
இல்லை.
எனவே மாற்றமான களமேந்தி
மீண்டும் நாம் தரிக்க தளம் ஒளி கூட்டும்-இதுதான்
தாற்பாரியம் இதற்கு வருடங்கள் கூட ஆகலாம்.

இதை எதிரியே தீர்மானிப்பான்-அது
எங்கே?,எப்போது?எப்படி?ஏன்?
விடை தெரியா வினாவாக இது நீட்சி காட்டாது.
காலம் களம் திறக்கும்.
கோலமிது மாறும் கொற்றங்கள் குழுமும்.
ஞாலத்தில் எமதான ஞாயிறு உதிக்கும்-அது
உலவும் இந்த உகைப்பெல்லாம் உறுத்தறுக்கும்.

எம் இடையே விசுவாமித்திரர்கள் அதிகமா?
துரோணர்கள் அதிகமா?
ஒட்டுக் குழுக்களே அதிகமாகி போனார்கள்.
எமக்கு தேவையானவர்கள் வல்ல வழி காட்டும்
வசிட்டா்களே.
இருப்பெழுதும் இவர்கள் இழைவார்கள்-எம்
உறுப்பெழுதி மிளிர்வார்கள்.

மாறும்,களம் மாறும்
நிச்சயமாய் இத்தனையும் மாற்றம் பெறும்.
சுழலும் பூமிப் பந்து இந்த மாற்றத்தை
அங்கீகரித்து எம் ஆயிலியம் வரைய மாறும்
எல்லாமே மாற்றம் பெறும்.
புறச் சூழல் இந்த புதுமையை புகுத்தும்.
பொறுத்திரு அதுவரை உன் தேசியக் கடமையில்
கரம் கொடு.எல்லாமே ஆகும்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

மறக்கக் கூடாத மயானம்.

நடந்து முடிந்ததாக கூறப்படும் அத்தனை அழிவுகளும் நெஞ்சில் அணையாத தீயாக என்றுமே எரியவேண்டும்.மறக்கவோ,மறைக்கவோ முடியாத வெஞ்சினமாய் உள்ளத்தில் அனல் எரிய வேண்டும்.இதை மறந்தால் தமிழன் என்ற தார்மீக எண்ணத்தையும் எரித்து விடு.இந்த இகத்தில் எந்த நுகமும் அற்ற,அறமுமற்ற அனாதியனாய் அலை.தாய் நிலத்தையம்,தர்மத்தின் அறத்தையும் அழித்தவனை எந்த முகாந்திரத்திலும் உன் மனம் கொள்ளாதே.சுழலும் இந்த பூமிப் பந்து மீண்டும் எங்கள் கொற்றத்தை கொலுவேற்ற அயராமல் உழை.இணையங்களில் நாளொரு திரிப்பும், பொழுதொரு பழிப்புமாய் சில,பல சுய நலமிகளால் தொப்பி பிரட்டி தோரணம் வேயும் ஒட்டர்களை,இந்த கூத்தர்களை பிரித்தறிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்டு உனதான தேசியத்திற்கு தோள் கொடு.நாளை விடியலின் சந்நிதியில் எம் அவலங்கள் முடிவு முகரும்.

புதன், 17 பிப்ரவரி, 2010

அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.


ஒரு கரம்,
ஒரு கணம்,
திரும்பவும் தரிசனம்.
திகைப்பெழுதும் திமிர்த்தனம்.
வரும் வரை விழித்திரு,
வழியெலாம் முட்புதர்.

முற்றம்!
எப்போதும் தானா வளர்ந்ததில்லை.
முகமெழுதும் வயற் கட்டும்
தனியாக விளைவதில்லை.
பூத்திருக்கும் பூங்கா வனம்
பூமியில் உழைப்பின்றி
உதித்ததில்லை.

ரணங்கள்,
வலிகள்,
மாபெரும் இரத்த ஆறுகள்,
மனிதரின் மகத்தான
உரத்திறனால் எழுந்தவைகள்-இதில்
எதுவுமே ஏற்றம் இழைய
இழந்தவைகள் ஏராளம்.

இழப்புக்கள் தான்-
உதிப்பனவுகளிற்கு உந்து சக்தி.
தோல்விகளின் தோரணமே-
வெற்றிகளின் படிமானம்.

மீண்டும் முழைக்காதென,
வேரோடு அழிந்தவைகளும்,
வேகம் முதிர்த்து எழுந்ததுண்டு.
பதினேழு தடவை கயனி முகமது-
படை எடுத்து வென்றதுவும் வரலாறு.
பல ஒட்டு குழுக்களால் வலை திரித்து,
நிமிர்ந்ததுவும் எங்கள் வரலாறு.இன்று
ஏதும் அற்றதாக எல்லாமே அழிந்ததாக -ஆம்
ஏன் எரிந்ததாகவும்,

ஆயினும்!
எரிவிலும்,முற்றான அழிவிலும்
தோன்றாமல் தோய்வெழுதாது எங்கள்
தேசியம்,
களம் இன்று கனதி அற்றதாயினும்-
தளம் தரமேறும்,
விதைத்த உடன் எதுவும் விழையாது.
எரிந்த நிலம்,உழக்கிய மண்
பிய்த்த பிசிறிய கோலம்-கொஞ்ச காலம்
நிதானிக்க தானம் தேவை.

எனினும் எங்கோ உறுதி,
ஒன்று இதற்கான காய் நகர்த்தலில்,
அருவமாக,நாள் நகர உருவகமாக
உதிக்கும்-அது ஓர்மத்தின்,வீழ்ந்த வடுக்களை
மீள்,சுய மீளாக்கத்தால் மிடுக்கேற்றும்.
சோழ ராச்சியத்தின் தொப்பிள்கள் தொட்டில் கட்டும்.
வளி ஒன்று வகையாக்கும் அந்த வல்லோனின்,
விழியசைவில் வழி திறக்கும்.

வெறும் நம்பிக்கையில்,
வெற்றான எதிர்பார்ப்பில்,இது அசைவியக்காது.
வியாபங்கள் வித்தியாசமானவை.
விசுவரூபங்கள் இப்போதும் அவை மொய்யாது.
கால ஓட்டங்களில் இவையும்
பெரும் ரூபம் தரிக்கும்.ஈழ விடுதலையாய்.-
அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.


இளமையின் கனவுகள் கலைவது வாழ்க்கை-அதற்காக
கனவுகள் காண்பதை கலைப்பது முறையா?தோல்விகளில்
கற்றல் வாழ்வின் பிடிப்பாக பிடிமானம் நுகக்கும்.
ஆக!
வெற்றிகளில் மட்டும் களிப்பெழுதுவதை கழித்து
தொலை நோக்கில் தோகை விரி.
தோல்விகள் தோள் தட்டும் போது
முதலில் தன்னைத் தானே தட்டி.
கொடுத்தல் தன்னம்பிக்கையின் முதற் படி.

துவளாத மனமும் எதிலும்,
எதிர் நீச்சல் போடும் வீரியமும்,
முதன்மையாகும்.
சுய பரிதாபம் சூட்டுதல் சூனியம் வரையும்.
எப்போதும், எதுவும் நிகழலாம்.
எனவே முன்னேற்பாடு நயத்தல்
நயமாகும்.

வரும் போது காத்தலும்,வந்த பின்
நோ(ர்)த்தலும் காத்திரமான களமல்ல எதையும்
தொலை நோக்கோடு யாத்தல் விவேகமாகும்.
விதி சொல்லி விழுவதை வதைத்து
கதியல்ல காதையென விழித்திரு.

ஆளுமைகளை அகம் கொள்ளுதல்-அதை
ஆத்ம சுத்தியுடன் அணைத்தல்,
பேதமைகளை களைத்தல்,மடமைகளை
கழித்தல்,
விடையிறுக்கும் விவேகத்தை கட்டிகாக்க.

சந்தர்ப்பம் என்பது
எப்போதும்,எங்கேனும் இலங்காது.அதை
இலங்கும் போது நலங்கிடுதல் நயம் நாட்டும்.
விலங்கது என்று வில்லங்கம் சூட்டினால்
மலங்கி,கலங்கி,மாய்தல் மானம் கரைக்கும்.

எனவே!
கூடும் தானங்களை தரம் பற்றி,
ஊடும் உலைப்புக்களை தரம் பிரித்து,
வாடும் வனப்பெழுதாமல்,
பாடும் மனம் கொள்க,பாதை அது திறக்க.

வெற்றிகளில் கரம் கொடுப்பதை விட
தோல்விகளில் தோள் கொடுத்தல்
நியாயமான செயற்பாடாகும்.
அது ஆரோக்கியமான ஆதார்சமாகும்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதிக்க,அதை
வேடிக்கை பார்த்து நக்கலடிப்பதைவிட,
அவனை கைகொடுத்தெழுப்பி உற்சாகப் படுத்தல்,
கோடி கிடைத்தாலும் கிடைக்காத உவப்பது.
வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

இன்னா செய்தாரை ஒறுத்தல்!

இன்னா செய்தாரை ஒறுத்தல்-அவர்
நா நயம் செய்துவிடல்.

இரண்டகமும்,எதிரி பாகம்
இணைந்திருந்து தன் இனத்தையே
அழித்தவனிற்குமா?
இதை வள்ளுவன் வரைந்தான்?

இப்படியும் இயம்பும் ஈனர்களை
எந்த லயத்தில் இருத்தி
இலங்கல்களை இழைப்பது?
தம்படி நிலம் கூட எங்கள் தரத்தில்
தரணியிலற்று போனதால் தகமெல்லாம்
ஈரமற்று போய் விடுமா?

விலங்கிலும் இழிய வாழ்வேற்று
துலங்குமா எங்கள் துயரமும்,வேதனையும்?
மலங்க விழிக்கும மானிடரானோம்!
குலங்கெளெல்லாம் குடியற்று,குவிவற்று
கொடியவரால் குதறப்பட்டு
மடியும் இந்த மானிலத்தில்-எந்த
விடியலாற்ற வீணர் எம் களம் கலைத்தார்?

இருப்பதை விட்டு பறப்பதை பற்ற எண்ணும்
பேதமை என்று விலகும்?
நெருப்பாற்றில் நீந்திய எம் நேத்திரர்கள்
விருப்பாற்றி வீதி கீறிய விதிகள்
இதை விட்டால் வேறு வழியில்லை என்பதை
மீண்டும் மதி கீறும்
பேரினத்தின் விறுமம் கரைக்க
ஓரினமாய் எங்களினம் மீண்டும் இணையுமா?
ஈர்க்குமா?

இல்லை வேறு வழியில்லையென
சரணடையும் சாரம்தான் சங்கதியாகுமா?
போனதில் போக்கற்று வீர வரி கீற
விறுமம் இனி வரையுமா?
எங்கள் வீதி வெறிச்சோடி,எங்கள் வானம்
வெளிறி,எங்கள் கடல் குருதியில்?

நாளும்,பொழுதும்
காணாமல் போவோர் எத்தனை பேர்?
கிராமத்து கிணறுகள் விழுங்கும்
இளைஞர் எத்தனை பேர்?
இருட்டிற்குள் இன்னல்களே வாழ்வாய்
உருக்குலையும் எங்கள் குமர்கள் எத்தனை பேர்?

பலமாய் தமிழர் பாலம் அமைத்த அந்த
இளவேனில் ஈழத்தில் இந்த அவலம் இறைந்ததா?
இரவில் இளைஞிகள் இன்கலற்று திரிந்த
அந்த
ஈரமான நிலத்தில் என்றாவது இந்த இழவுகள்
இழைந்ததா?

ஆனால் இன்று
ஈழத்தில்,யாழில் நடக்கும்
சிங்களரின் சின்னகத்தனங்கள்
பலமற்று போனோம் ஆகவே
வலமற்றும் போனோம்.
எண்ணத்தை,எதிர்ப்பை,
எந்த வகையிலும் வார்க்க முடியாத
வகையற்று போனோம்.

இன்னும் எத்தனை நாள் இந்த அவலமும்,
அரியண்டமும்,ஆக்கினையும்.
மீண்டும்-
மகிந்தா என்ற மனிதமற்ற பேயாட்சி
மந்திகள் எல்லாம் எங்கள் மயிலாசனத்தில்?
சிந்திப்பானா தமிழன்?சினமாற்ற
சீற்றம் தொகுப்பானா?
தொகுத்தால் தொகுதி மீண்டும்-இதை
பகுத்தால் எங்கள் பருதி நிச்சயம்
ஆரை ஆர்க்கும்.

இப்போது
இன்னா செய்தாரை ஒறுப்போமா இல்லை
ஒன்றிணைந்து ஓர்மம் ஒற்றுவோமா?

வியாழன், 28 ஜனவரி, 2010

அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.


சிரிக்கும் மலர்களிலே,அது
விரிக்கும் இதழ்களிலே-அறமிழக்க
மரிக்கும் கண்ம் உண்டு.அதுபோல்
எவர் தரிசிக்கும் அறமற்ற அரியாசனத்திலும்-
அழிவுண்டு.

ஆற்றும் திறனது அழியாது.
பிறரும் போற்ற பின் விழைவினை,
முன்பே தெறிக்கும் தெரிவுகள் ஆற்றினால்,
தெம்பே தெளிக்கும் செழிப்புக்கள் செப்பனிட.

தேர்வுகளில் தெளிவற்று,
பார்க்கும் பார்வைகளில் பரிவற்று,
ஊற்றெடுக்கும் உணர்வுகளை!
புரிவகற்றி,ஆற்றல்கள் அமைத்தால்
வலுவற்ற பாதை வாதைகளையே வார்க்கும்.
போகும் பாதை தெரிவற்று???
என்ன தேர்ச்சியை எவர் தேர்ப்பார்?

புரியாத பரிவெழுதும் புதர்களிலே!
வலியான எம் பார்வை எந்த வலுவேற்றும்?
வலுவெல்லாம் வதைமுகாமில்!
தெளிவெல்லாம் புறமுதுகில்!
வழியெங்கே?
வரித்தெடுத்த தெளிவெங்கே?
அத்தனையும் மெளனத்தில் மரிப்பெழுதுமா?

இல்லை!
இறைதலும், இலங்குதலும்,இயங்குவதும்
எந்த இழையை இனி இரப்பேந்தும்?
தளமும் அற்று,களமும் கலைந்து,
ஏந்த ஒரு உலையும் அற்று!
இப்படி எல்லாமே அற்றதாய்!?-
சூனியமே சுவடாய்!

இங்கிருந்து எந்த காரியத்தை?
மங்களமாய் நாம் மதிப்போம்?
வெங்களத்தில் எங்கள் வேதினியர்
சங்காரமாக்கிய சங்கதிகளை??
இங்கிதமகற்றி இந்தியனுடன் இன்ன பிற
வெங்களாந்திகளும்--

எம் களங்களை இனி
எந்த சந்தம் ஏற்றி?
ஆயுதம் அற்றபோது நாம் ஆளுமை இழந்தோம்.
இதனால் நாம் ஏதும் ஏந்தும்
ஏதனமும் இழந்தோம்.
பலமற்றவன் பவனிவர எந்த
பார்வையிலும் பாதை இல்லை.

இப்போ நாம்!
வெறும் வாய்.
மெளனமாக,
அவல் மட்டுமல்ல-
அவலமும் கூட மெல்கின்றோம்.
மெளனம் மேதினியில் மெய்சிலிர்க்க,
மேவும் நாள் கை கூட.அதுவரை
வரைமுறையற்ற வன்மங்கள்
மனமொழுக.

எம் மாவீரக் கல்றைகளே!
உற்றவன் இல்லையெனில்,
யாவும் அறமற்று அற்றே போகும்.
ஆயினும் எம் மனங்களில்
மாதவமாய் நீவிர் வாழும்
வேதத்தை எந்த வேமனும்
அழிக்கவோ,அகற்றவோ முடியாது.

நீங்கள் வாழ்வது,
எங்களின் ஆத்மார்த்த ஆன்மாவில்.
உங்கள் புன்னகைப் பூக்கள் என்றும்
கருகாது.
கால,காலமாய் கனதியாய் வாழும்.
மீண்டும் இந்த மேதினியில்
கல்லறை மேனி கலவரமின்றி
களமேற்றும்,
கலமேந்தும் எங்கள் காலக் கடனால்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.


அழுகைக்கு நிறமில்லையா?
அது உந்தன் ஆளுமைபோல் அல்லாது போயினும்,
உணர்வுகளின் உறைவிடமாக,
உணர்ச்சிகளின் கனதியாக ஓர்
உறுத்தல்,
இல்லை
இயலாமையின் இறைஞ்சல்.
அல்லது
துணையற்ற ஓர் தூரத்தில்
ஏதும் ஆற்றமுடியாமல்,அற்ற சூன்யத்தில்
இதுதான் என்பதான எந்த வழியும்,விழியும்
ஈற்ற முடியாத ஓர் கையாலாகாத் தனத்தின்
காவுகை,

அழுகை!
இடம்,பொருள்,ஏவல் சார்ந்ததாக
இப்படித்தான் என ஏதும் வெளிப்படுத்த முடியாத
அல்லது வெளிக் காட்டக் கூடாத ஒரு குவியம்.
ஆயினும் நிறமற்றதாக அழுகையை
ஆளுமை ஆற்றல் அது என்றோ ஓர் நாள்
பெரும் ரூபம் தரிக்கும்.

அழுகை
சந்தர்ப்பம் சார பழி வாங்கும்.
ஏன்?
அது அதமங்களை ஓர்மத்துடன்
வசதியாக அணிவகுத்து வன்மம் இறைக்கும்.
ஏற்ற அந்த இலங்கல் இழைய கொலையாக கூட
கூர்ப்பேற்றும்.

அழுகைக்கு நிறம் உண்டு.
இதை இலக்குவோர் இணைந்திருப்பர்,
தனதான தேவைகளையும்,சேவைகளையும்
கூவையாக குவித்திருந்து
கூர்மையான புலம் பருவ
தீர்மையான திடம் தீற்றும்.
அஃதின்றேல் அது அழுகையல்ல.

அழுகை மன்னித்தலை மனம் கொள்ளாது.நான்
இங்கு கோடிட்ட அழுகை
மாந்தர் எம் மைந்தர்கள் மையித்த
மறக்கவே,மறைக்கவோ,
ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத
ஓர்மத்தின் வேரை.

அழுகைக்கு நிறமுண்டு -அது
தொழகையகற்றி,தொய்வகற்றி
திடகாத்திரம் செதுக்கி திண்மையாய்
தீர்வாக தீட்ட தண்மையாய் தனை தகம் கொள்ளும்.
அந்த கொள்ளிடம் கொலுவேறும் வரை
கொய்யம் ஏதும் கொற்றம் காட்டாது.

வியாழன், 21 ஜனவரி, 2010

உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.


உடலையும்,உணர்ச்சியையும்
கொன்று குவிக்கும்
கோலோச்சிகளே-எங்கள்
உணர்வுகளையும்,ஆத்மார்த்த
உறுப்பான தாகத்தையும் எந்த
தர்ப்பணத்தில் தகித்தெறிவீர்?

மானிடம் கலைத்த ஊனர்களே!
என்றோ ஓர் நாள்-அந்த
சாளரத்தை நீ சாசுவதமாய் சுகிக்க
அந்த அந்திமத்தில் எந்த கோணத்தில்
உன் சுயம் செரிப்பாய்?எல்லாம்
ஆட்சி தரும் ஆவணம்,
ஆணவம்-
மிட்சியற்று நீ மிதிபட எந்த மீந்தனத்தில்
உனதான மிதப்பு?

உனக்குள் உறங்கும் மனசாட்சியே!
கனக்கும் உன் கனதியாக -நீ
சுவாசம் சரிக்கும் முன்னே முகிழும்
சகவாசம் உனதான பரிவிற்குள் ஏந்த எந்த
பச்சோந்திகளும் உன் பாதம் பார்க்கார்.

உனக்கான பருதி குன்றும்.இது
தனக்கானதாக ஏதும் விட்டம் வரையா
ஆரையை உந்தன் அகம் அருக்கியதால்
அழிவில் உன் அழிவில் எந்த
ஏற்பானும் உனை ஊக்கான்.

புரிதலை பதவி புறந்தள்ளும்-இது
உனதான தனி பாதையல்ல!
உலகில் ஈழ உலகில்
அரசென்னும் சிரசில் இத்துணை அழிவாற்றிய
அத்தனை அரக்கர்களும் ஆதித்த ஆற்றலது.
வரலாற்றில் அவர்கள் வற்றல்களையே தம்
சந்ததிக்கு சிந்தாக சிந்தினார்கள்.

விளைவு குருதி சிந்தும்
குவலயமாய் ஈழ நிலம்.எனினும்
தரிசாகிப் போயினதாய் தம்பட்டம் தட்டும்
சகட்டு மேனியரே!
செவிடன் காதில் சங்காய் உங்கள் சேந்தல்கள்.
நாளை மீண்டும் நுகை மிளிர,
மாண்டதெல்லாம் மெருகேந்தும்.
தோன்றும் தொய்வில்லா சோதிகள்-உந்தன்
மன்றத்தில் மெளனம் கலைக்கும்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.


நினைவெரியும் நீங்கா நியம் எரியும்-
தணலெடுத்து இந்த தளத்தில் தகிக்கும்,
உணர்வுகளை உலையிறக்க நெகிழும் எம்-
மூச்சுத் திணறல்களை எந்த மூலிகையில்
புனருத்தாரணம் புனைக்க?

கனவிருக்கும்,காத்திரமான களமிருக்கும்.
நினைவிருக்கட்டும் நீலியர்களே!உந்தன்
கானல்கள் உங்கள் கழுத்திறுக்கும்.
காலம் கலம் சுருக்கும் கனதிகள் உன்-
கண்களில்,
தேர்தல் தேற்றத்தில் உந்தன் ஊர்தலுடன்
உணர்வுகள் உற்ற உரமேந்தி--

ஒற்றர் குல ஒத்தடம் இன்னும் எத்தனை நாள்?
கற்றல் என்றும் உன்னில் கருக்கொள்ளாது.
விற்பனங்கள் அற்ற விதையற்ற வீணர்களே!
சொப்பனங்களை இனி என்ன செய்வதாக உத்தேசம்?
நெருங்கும் நாளது உற்ற உன் நெற்றியை உறுதியாய்-
விறுமங் கொள் விபரமாக --

புத்தனின் அகத்தில் எந்த முகைப்பிருந்ததோ?
அது-
எந்த சித்தனின் சிரசிலும் சிறப்பெய்யவில்லை.
அது
நுகைகூட நோக்க தேற்றம் கொள்ளாது.
எத்தனின் ஏகாந்தம் ஆக நீ
எந்த மூலையை முகர்ந்தாலும் முகத்தில் ஒளி உமியாது.
பக்தனாக நீ எந்த பகடையான பட்டுடையுடுத்தாலும்,
வித்துக்களை எங்கள் வியூகம் யூகிக்கும்.

சற்றே பொறு போக்கற்ற இரண்டகர்களே!
முற்றிலும் மாற்றான முகை நீ இளைக்க,
வெந்தணலில் வெந்ததான உன் வெளிகளை
வெற்றிச் சங்கூதி எம்மவர் மேதினியில்
வேலியோடு வதைப்பர்.

முடிவல்ல!
இது முகிழ்வென எம் முற்றம் முகம் பூரிக்கும்.
அழகல்ல!
அளவளாவும் அத்தியாயமுமல்ல!
சரிவல்ல!
சங்கம் வளர்த்த தமிழ் சாதிக்க இன்னமும் இழையோடும்.
வரிவெல்ல!
கரிகாலன் காலம் உரைத்த களம் மெல்ல,
மேதினியில் மேவ.
உளம் பூண்டு உறுதியுடன் புலம் பூத்த
புவனம்.

எடுத்த காரியம் எதுவும் உடன் அறுவடையாகாது.
எந்த வித்தும் நட்டவுடன் பலனளியாது.
அடுத்த அசைவுகள் ஒவ்வொரு ஓர்மத்திலும்
ஓசையற்று நகரும்.
நர்த்தனங்கள் நடனத்தில் மட்டுமல்ல -ஈழ
கட்டுமானங்களும் அதே கனதியில்.
விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.

புதன், 13 ஜனவரி, 2010

ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-

ஆதவனின் ஆதங்கக் கதிர்கள்,
ஆரமது வெளித்து ஆனந்தமாய் அரங்கேற,
புள்ளினங்கள் புவி மீது பூபாளம் இசைக்க,
வண்டினங்கள் ரீங்காரித்து செண்டினடி சேர்ந்து,
பண்ணிசைக்கும் வேளையிது 'பா' இசைக்க வாராயோ?

விடியலின் வேதினியில் படிமங்கள் பல உண்டு.
மடியல் அதை விலக்கி மாண்பு பல இயைந்திங்கு,
படையலதை பக்குவமாய் பரந்திங்கு பரப்ப வேண்டி,
உடையன,அறுவடையில் அரிந்தன,செடி,கொடியில் சேர்ந்தன,
செங்கதிரோன் செவ்வடியில் சேமமாய் செதுக்கி வைத்து,
நன்றிக் கடன் நயக்க வேண்டும் நாம் அதை செபிக்க வேண்டும்.

உழவர் திருநாளில் உவகையாய் இவைகளெல்லாம்-சூரிய
உதயத்தின் முன்னே உளமாக இயக்க வேண்டும்.
இதயத்தை நெக்குருக்கும் நேயங்கள் நேர்த்தபடி,
அவயங்கள் ஆதவனை அர்ப்பணிப்புடனே அணைக்க ஏவும்,
தூயமலர் துலங்க அவன் தாளடி அடிபணிந்து,
வேணவேண்டும் அவன் வேதனம் எமக்களித்ததை.

ஆண்டாண்டு இக் காரியத்தை ஆதங்கத்துடன் அர்ப்பணித்தோம்-
ஆனால் ஆண்டு 2009ல் யாண்டு கொன்று,கொண்ட
யாத்திரத்தை நினைவேந்தும் நேத்திரங்கள் எமை வதைக்கும்
சூத்திரத்தின் வேதனையில் சூரிய வணக்கமது வனக்கவில்லை.

பிணக்கது தீராமல் எந்த பிண்டத்தில் பிதிர்க் கடனாற்றுவோம்?
இணக்கமது இன்றுவரை வரைபின்றி எங்கள் சுற்றமெல்லாம்,
சுணை ஏதும் இல்லாமல் சுற்றிவர முட் கம்பி வலைக்குள்ளே
பிணை எடுக்கக் கூட பிறப்பின்றி வெறிச்சோடி வேகின்றார்.

உற்றமே,உறவே!
உனக்கிது புரியுங்கால் சுற்றத்தின் சுவாசத்திற்கு
என்ன கடனாற்றுவதாய் இன்று உறுதி கொள்கின்றாய்?
ஆக்கி படைப்பதுவும்,ஆனபின் மூச்சு முட்ட உட் கொள்வதுவும்,
ஆசுவாசமாக பின் அரட்டை அடித்து,அயலவரை நக்கலடித்து,

இப்படியே உன் பிறப்பின் பயனெய்து!
எப்படியும் சுரக்காத உன் சுவாசத்தால்-எந்த
செப்படி வித்தை செய்வதற்காய் சேந்தனடி தொழுகின்றாய்?
அப்படியே உன் ஆத்மார்த்த ஆண்டவனடி சென்று இவர்கள்
ஆன "பயனென்கொல் வாலறியான் நற்றாள் தொழார்" எனின் என்று
உச்ச குரலில் உனை மறந்து குரல் கொடு -அத்தனையும் சேமம்

அடுத்த ஆண்டும் தை பிறக்கும்-ஆனால்
எங்கள் முற்றத்து மல்லிகையின் முகைகள் பிறக்குமா?
ஆரியனின் ஆழ சிறைதனில் அந்தரிக்கும் அவர்கள் ஆத்மா தரிக்குமா?
ஐயனே!
ஆற்ற உன்னால் ஏதும் ஆகாதெனில்-அவர்கள் முக(கா)ம் தரிசி
ஆக்கி படைக்க,புதுப் பட்டாடைக்கு நீ நுகர வைத்திருக்கும்
பணமோ? இல்லை உன் மனதோ எதுவாகிலும் அவர்கள் உளம் தரிசி.

உன் அரவணைப்பு!
ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
ஆயிரம் ஆசிகள் உன் அகம் கொள்ளும்.
புலத்தில் வாழும் என் அகத்தோரே!
உங்கள் புலவில்
தை திருநாளில் செலவாக்கும் லயத்தில்
புழங்கும் பணத்தில் பாதியையாவது -அங்கு
எந்த உலவுமற்று உலங்கும் உன் உறவிற்கு,
உதவ மதம் கொள்.
மனம் கொள்.

ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?


நீ வர நினைவெழுதும் என் புலர் முகம்-நீ
வந்த பின் அது வாடும் வயப்பு என்ன?
போன பின்னே உன் போக்கங்கள் புனையும்,
பாவனைகளை எந்த பக்கங்களில் பயனாக்குவேன்?

வாசம் தரும் பூவெல்லாம் வசமிழந்து வாட,
நேசமெல்லாம் உன்னாலே நெக்குருகி போனதடி.
பாசமதின் பவித்திரங்கள் பாழாகிப் போகுமுன்னே-
ஊசும் என் உயிர்ப்பெழுத உற்றவளே உயிர்க்காயோ?

வீசும் தென்றலிலே விரக தாபம் எனையேந்தும்!
கூசும் இந்த கூர்ப்பெழுத குயிலே நீ குரலாலே,
பூசும் உன் புன்னகையில் புதிர் கரைத்து புலவாயா?
நீசர் சிலர் எம் நித்திலங்களை நிர்ணயிக்கும்,
நிலைகளிற்கு நீயேன் நிறைவெழுதிப் போகின்றாய்?
நிந்தனது ஞாயங்களை நீயே பரிவெழுது.

காயம் அது காயும் காலம் அதை ஆற்றும்-ஆர
மாயம் அதை வரையும் மன்றங்களை நீ கலைத்து,
ஆயம் அதை ஆக்கி அனந்தவளே எனை அவைப்பாய்
யாகம் அது மிளிர யாக்கும் என் யாகசகங்களை,
பாகம் அதில் பகிர்ந்து பாவையே நீ பரிவாய்.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.


விரட்டு!
ஓட,ஓட விரட்டு!
எங்கள் ஓர்மங்களை,அதன் வேர்வரை,
பிடுங்கி,எம் உறவுகளை உலைத்தவனை,
விரட்டு ஓட,ஓட விரட்டு.

உந்தன் நாட்டை விட்டு மட்டுமல்ல- முடிந்தால்
உலகை விட்டே!
உரசும் உள்ளங்களில் நாளும் கெழிக்கும்,
நஞ்சின் நர்த்தனங்கள் என்றுமே சயனிக்காது.
விஞ்சும் நாளொன்று விடையெறியும்-அதுவரை
எஞ்சி நிற்கும் எம் உறவுகளே!
விரட்டு இந்த விதை விடைத்தவனை,
ஓட,ஓட விரட்ட உமக்கு கிடைத்த-
ஓலை எழுதும் இந்த ஓர்ப்பினால் விரட்டு.

மற்றவனை நாம் மன்றத்தால்,
மருவும் ஓர் வலைப் பின்னலில்,
உருவி ஒட்டி ஒரு வகை பண்ணுவோம்.இப்போது
உடனடித் தேவை உலையன் மகிந்தாவை,
உரிந்து அவன் உடமைகளை உறுப்பாய் உருவி,
வரிந்து வகையற்ற வக்கணை வகுத்து,
விரட்டு அவனை விரட்டு!

கால,காலமாய் தமிழனை ஏமாற்றும் இந்த-
பேரினவாதியின் பேச்சை மறுத்து,ஊரினை விட்டே,
ஒரேயடியாய் விரட்டு.
ஈழத் தமிழனே!
இப்போது கிடைத்த இந்த சந்தர்ப்பம்-
இனியும் உன் வாழ்வில் இலங்கவே மாட்டாது.எனவே
சிந்தனை ஒன்று உனக்கு உவகையாய் சீண்டும் இந்த-
சீலாக்கியத்தை சிறப்பாய் சிரத்து.

அதற்காக பொன்சேகாவை போற்றென்று-
அர்த்தமற்று அர்த்தம் கொள்ளாதே-காலத்திற்கு ஏற்ப
சாதகமாய் சில சந்தர்ப்பங்களை சரக்கேற்ற வேண்டும்.
பூதாகரமாய் இந்த புலையன் புவி கொள்ள பூண்டிருக்கும்-இந்த
மீதாரத்தை மிகையாய் மிளிர்வகற்று.

அன்றேல்!
சனநாயகம் அந்தோ பரிதாபமாய்-
சன,சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
ஆதலால்!
எம் அன்பான ஆற்றல் மிகு என் இனமே!
ஆவன செய்வாயென ஆதங்கமாய் நாம் இங்கே.

மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றுதான்.
தேற்றம் இதுதான் தேய்வில்லை தேம்பி அழுதல்
மார்க்கமும் இல்லை,மாயவனை தொழுதலும் தோற்றம் இல்லை.
துர்க்கனை இந்த துருப்புச் சீட்டாம் உன் வாக்குச் சீட்டால்-
வகுந்தெடுத்து வாகையை மாற்று.
இப்போதைய,தற்போதைய தேவையான மாற்றம்.
மகிந்தாவை மனைக்கு மட்டுமல்ல விதைத்த
வினைக்கு வினையாற்ற! மறவாதே எம் மானிட தமிழரே.

திங்கள், 11 ஜனவரி, 2010

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!


ஈட்டிய வெற்றியின் ஏகாந்த முகப்பு நீ.
தீட்டிய திட்டத்தில் தீயாத தீம்பு நீ.
காட்டிய காத தூரத்தின் சுனையான கானல் நீ.
அப்படித்தான் நீ காண்பது கானலென கற்பித்தாரே-பின்
நீ சுனையென உன்னை சுற்றமெல்லாம் சுற்றக் கண்டோம்.

வெற்றிக் கொடிகள் பல நீ ஏந்தினாய்-அதனால்
கொற்றவனின் கொற்றத்தில் உன் முற்றங்கள் முனைப்பாக
கூற்றனாகினாய் பகை தொட, அவன் பரமங்கள் பங்கப்பட
புறமுதுகு காட்ட வைத்த கூற்றுவனே!
எத்தனை வெங்களம் கண்டாய் அதுவல்ல உன் திறப்பு
எத்தனை போராளிகளை பகை புலமேற்றி பங்கமில்லா
முகிழ்வனாய் பாதை நீட்சித்தாய்.



நீ கடந்த பாதை முற்றிலும் புதர்கள், புதிர்கள்.
நீ படைத்த பாதைகள் முற்றிலும் புதுமைகள்,புரட்சிகள்.
நீ கடிந்த்தால் போராளிகள் அத்தனையும் முத்துக்கள்,சொத்துக்கள்
ஆக்கி நீ வைத்ததால் ஆகினர் அஞ்சா நெஞ்சினராய்,வித்துக்கள்
உன் பாதையை,பார்வையை எத்தனை கல்லறை மேனியர்
கனதியாக உன்னால் பேணினர்?

விடுதலை காற்யையே மூச்சாக சுவாசித்தாய்-உன்
வடுக்கள் தாங்கிய மேனியால் அதையே வாசித்தாய்.
துடுக்கானதாக உன் சுவாசத்தை சுகித்த சுமைதூக்கா
தர்க்கர்கள் கூட உனதான தகமறிந்து தூக்கினர்
விடுதலை சுமையை.

ஆர்த்தெடுக்க அடிபணியா அறமேந்திய ஆற்றலே-உன்
இறுதி மூச்சை இந்தி ராணுவமா இயமன் கைவசப் படுத்த
இயலா இறுக்கம் ஈற்றது.

எழுந்த போதும்,எரிந்த போதும் நீ விரனாகவே எதிர் வினையாற்றினாய்-
பழுத்த விடுதலை பரமனாய் பாரிலே பரந்தாய்.
கொழுத்த உனை முடியாமல் கோழையர் களம் நழுவிட,
விழுத்தி உனை முடிக்க வீணர்கள் விழைய,வீரம் வினைத்த
விழா முடியே முகியே,
பகை மகிழ பாழும் இந்தியனால் இகம் இழந்தனையா?

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
கிட்டும் வெற்றியினை தொட்டு தாலாட்டிச் சென்றவனே
முட்டும் பகை வாசல் உன்னால் முற்றமிழந்து புறமுதுகு காட்ட!
எட்டுத் திசையிலும் ஏகாந்தனாய் ஏறிய உறுப்பனே.ஏந்தலே!

கொட்டும் மழையிலும்,கொளுத்தும் வெயிலிலும்,
சுடுக்கும் பனியிலும், சுற்றமறியா காடுகளிலும்,
களம்மைத்த கரிகாலனின் காத்திரனே!
உன் காலடிச்-
சுவட்டில் உளமேந்தும் உவகையர் உனதான,
பாதையில் உன்னதமாய் உருவமைப்பர்.

நீ
ஏந்திய தாகம்,ஏற்றிய சுடர்,வீற்றிய வீரம் எதுவும் விலை போகாது
சிந்திய குருதிக்கு மங்காத ஒளி சமைப்பாம்-நீவிர்
சிதை கொண்ட பள்ளியில் எங்கள் பாகம் பகற்போம்-
விதையான உங்கள் விம்பத்தாடு விலை போகா தலைவன்,
பாதையில் உனதான தாகம் தீர்ப்பாம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாகந்தான் என்ற
ஈடாத வேதம் எட்டும்வரை ஏறெடுப்பாம்.
பீடுடைய பிரமங்கள் பின் தங்கா.


தொடரும்

பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.


பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.

தமிழர்களாகிய நாம் இந்த விழாவை ஏன் விமர்சையாக கொண்டாடுகின்றோம்?தமிழர்க்கும் இந்த பொங்கல் விழாவிற்கும் என்ன சம்பந்தம்? இதன் சிறப்பு யாது?

இந்த உலகில் உயிரினம் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை சூரியனிடம் இருந்தே பெற்றுக் கொள்கின்றன.ஆம் இந்த அகிலத்தின் அசைவை நிர்ணயிக்கும் மூலகாரணியே சூரியன் என்றால் அது மிகையாகாது.
சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்தே இந்த பஞ்சபூதங்களின் அசைவு இயங்குகின்றது.
ஆம்! இந்த பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என்பன சூரியனின் சூட்சுமங்களில் இருந்தே இயங்க ஆரம்பித்தன என்பது ஆதாரபூர்வமாக பல அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.இதுவே யதார்த்தமும் ஆகும்.
ஆக சூரிய ஒளியின் கதிர்களால் இந்த பூமி இன்றும் இயங்கிகொள்கின்றது.

அதன் அசைவின் இலங்கல்களில் மழையும்,காற்றும் எம் வாழ்வின் இன்றியமையாத கூறாக உள்ளது.மனித மற்றும் எந்த சீவராசிகளிற்கும் உயிர்வாழ்வதற்கு உணவு இன்றியமையாததாகும் .மண்ணில் தாவர,மற்றும் எந்த உயிர்களின் வளர்ச்சிக்கு உணவு வேண்டும்.

பூமியில் உணவாக மிருகங்கள் மிருகத்தையும்,சில விலங்குகள் தாவரத்தையும்,வேறு சில உயிரினங்கள் இவ் இரண்டையும் உணவாக உட்கொள்கின்றன.அந்த வகையில் மனித இனமான நாங்களும் இந்த இரண்டு வகையான உணவையும் உண்கின்றோம்.

மண்ணில் உள்ள பலவிதமான கழிவுப் பொருட்களும் தாவரத்திற்கும்,மரத்திற்கும் பசளையாக அதாவது உணவாக அமைகின்றது.
இந்த உணவு மண்ணில் உற்பத்தியாக,தாவர மற்றும் யாவற்றிற்கும் சூரிய ஒளி வேண்டும்.
ஆக உலக வாழ் சகல உயிரினத்திற்கும் உணவு உற்பத்திக்கு சூரியனின் மிகப் பெரிய தேவையாக உள்ளது.
எனவே உணவு உற்பத்திக்கு சூரயனின் அளப்பரிய பங்களிப்பை மனதில் கொண்டு சூரியனிற்கு நன்றி செலுத்து முகமாக தமிழன் இந்த நாளை தேர்ந்தெடுத்து ஆதவனிற்கு தன் ஆகக்கூடிய மனித நேயத்தை காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளே தைத் திருநாளாகும்.

இன்னமும் விளக்கிக் கூறின் மழையையும்,சூரியனையும் நம்பி தனதான வயல்களில் நெற் பயிரை விதைத்து அதன் பலாபலனை அதாவது அறுவடை செய்த முதல் நெற்கூற்றை ஒரு பானையில் பொங்கி அதை அமுதாக ஆதவனிற்கு படைத்து தன் சுற்றம் சூழ மகிழ்வாக இருத்தலை தனது பண்பாக, தனதான இனத்துடன் சேர்ந்து ஆதி முதல் இன்றுவரை கொண்டாடி வரும் இத் திருநாளே தைத்திரு நாளாக இன்று நாம் கொண்டாடும் நாளாகும்.இது தமிழரின் கலாச்சாரத்துடன் தொக்கி எமது அடையாளமாக இன்றும் பலருக்கும் ஒரு முன்னுதரரணமாக விளங்குகின்றது.

„உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வரென“ ஒளவைப் பிராட்டியார் சும்மாவா சொல்லி வைத்தார்.
இங்கு புலம் பெயர் நாட்டிலும் சரி எமது தாயகத்திலும் நாம் ஓடியோடி உழைப்பது எல்லாமே இந்த வயிற்றுக்குத்தான்.
„ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாள் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாள்“,என்று வயிற்றுப் பசியை மேலும் ஓளவையார் நொந்து கொள்ளும் இந்த நிலைமை யதார்த்தமே.அதாவது ஒரு நாளுக்கு உணவை நிறுத்து என்றால் வயிறு கேளாது.ஒரேதாக இரண்டு நாளுக்கு ஏற்றவாறு உண்வென்றாலும் வயிறு ஏற்காது,அப்படியான இந்த வயிறால் நாமெப்படி வாழ முடியும்.அதாவது நேரம் தவறாமல் நாளும் மூன்று வேளைக்கும் உண்ணவேண்டும்.ஆக உணவு உயிர் வாழ்வில் முக்கியமான அம்சமாக எல்லோர்க்கும் உண்டு.
இந்த வயிற்றுப் பசிக்காக நாம் பயிரிடும் உணவு பதார்த்தத்தின் வளர்ச்சியை ஒழுங்காக பயன் படுத்த சூரியன் மிக முக்கிய பாத்திரமாகின்றான்.

நாம் இன்று சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாக கொண்டாடும் அதேவேளை எமது தாயகமாம் தமிழீழத்தில் எமது உறவுகளும்,உற்றார்களும்,சொந்த பந்தங்களும் இந்த நாளை மட்டுமல்ல எந்த கேளிக்கைகளையும்,திருவிழாக்களையும் என்றுமே கொண்டாட கூடியதாக ஈழத்தின் புற நிலை பாடுகள் சாதகமாக இல்லை.

இங்கு நாம் என்னதான் உற்சாகமாகவும்,உணர்வுடனும் இந்த நாளை கொண்டாடினாலும் என்று எமது தாயகத்தில் ஒரு விடிவு பிறந்து
எமது சுற்றம், உற்றம் எல்லாம் முற்றம் கூடி இந்த நாளை சுதந்திரமாக பொங்கி இந்த சூரியபகவானிற்கு படையலுடன் விருந்து படைக்கின்றோமோ! அன்றே ஈழத்தமிழரின் உண்மையான தைப்பொங்கல் திரு நாளாக விளங்கும்.உண்மையில் நாம் இங்கே இன்று மனதில் பெரும் பாரத்துடனே இந்த விழாவை சிறப்பிக்க விழைகின்றாம்.

எனதான உறவுகளே!
உங்கள் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள் மன நிறைவுடனா இந்த விழாவை புலம் பெயர் நாட்டில் இன்று கொண்டாடுகின்றீர்கள்?
ஆயிரம் இருந்தாலும் எமது இளைய சந்ததிக்கு எமது கலையுடன் கூடிய கலாச்சாரத்தையும் ஊட்டுவிக்க வேண்டிய பண்பாட்டு நாகரீகத்தை மனதில் கெளவ்வியபடி நாங்கள் எமது ஆழாத் துயரத்தையும் ஒரு பக்கம் ஒதுக்கி இந்த விழாவை சிறப்பிக்க கூடுகின்றோம் என்றால் அதிலிருந்தே புரிகின்றது இந்த தைப் பொங்கல் விழாவின் சிறப்பு.

இந்த விழாவினூடாக நாம் எமது இளையதலைமுறைக்கு ஊட்டும் பாடம்
1.நன்றி மறத்தல் நன்றன்று
2எத்தகைய துன்ப துயரங்களிலும் எமது கலை கலாச்சாரங்களை சீராக பேணவேண்டும்.
3.நாளைய விடியல் நல்ல பொழுதாக விடிய ஓயாமல் உழைக்க வேண்டும்.
4.எமது இவ் பண்பாட்டை புலம் பெயர் நாட்டில் வாழும் இளைய சந்ததிகள் ஒழுங்காக பேணுதல் மூலம்
தாயக உறவுகளை நாமும் தொடர்ந்து பேணி எமதான உறவுகளிற்கு நாம் உற்ற துணையாக என்றும் இருப்போம் என அவர்களிற்கு நன் நம்பிக்கை ஊட்டி எமதான தாயக தொடர்புகளை இன்னமும் வீச்சாக்க எம் கரங்களை தாயகம் நோக்கி நீட்டவேண்டும்.
5.அதாவது இளைய தலைமுறைகளிடம் எமதான வேரின் உறவுகளை சீராக பேண இதன் மூலம் வழி வகுத்து அவர்களையும் ஈழம் நோக்கிய பார்வையை விரிவுபடுத்த வேண்டும்..இதுதான் உண்மையும்கூட.

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனமும் தனதான பாரம்மரிய கலாச்சார வடிவமாக சில கலைகள் அல்லது கலாச்சாரங்களை,தனதான பண்பாட்டு விழுமியங்களாக இன்னமும் உள்வாங்கியபடி அதை தனதான அடுத்த சந்ததிக்கு விரிவுபடுத்தியபடியே உலக சக்கரத்தில் அதை சீரும் சிறப்புமாக பேணி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழர்களாகிய நாமும் எமக்கான தனித்துவமான பல கலை,கலாச்சாரம் தழுவிய பண்பாட்டு வினைகளை இன்னமும் பேணி வருகின்றோம்.இதில் சிறப்பு என்னவென்றால் எமது தாயகத்தில் சிங்களவரின் அட்டகாசத்தால் இனவழிப்புக்கு அதன் கோர முகத்திற்கு அஞ்சி அல்லது உயிர் வாழ்வதற்காக புலம் பெயர்ந்த எமது இனம் தனதான புலம் பெயர் வாழ்விலும்,எந்த இக்கட்டான சூழலிலும் எமக்கே உரித்தான சகல பண்பாட்டு விழுமியங்களையும் தொடர்ந்து பேணி அதை இளைய சமுதாயத்தின் மூலம் இன்னமும் வலுவாக ஊட்டி,
அதை அடுத்த தலைமுறைகளிடம் நேர்த்தியாக ஒப்படைத்து மகனே எங்குதான் நீவிர் வாழந்தாலும் உனது வேர், உனது மண்,உனதான சகல சமூகங்களும் ஈழப் பரப்பில்தான் என்பதை இப்படியான விழாக்கள் மூலம் எமதான மூலத்தை வேணி காக்க இந்த விழாக்களும் பல வகையில் உதவுகின்றன.

„திரைகடலோடியும் திரவியம் தேடு“ என்பதையும் தமிழரினம் இன்னமும் கடைப்பிடித்தபடியே வாழ்கின்றனர்.இந்த நிலை கேடுகெட்ட சிங்கள ஆரியனால் எமது சமூகத்திற்கு அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ எமது இனத்திற்கு நிகழ்ந்த அவலம் என்றும் கூறலாம்.எது எப்படியோ? உலக சக்கரத்தில் கச்சதீவைத்தவிர சகல எல்லைகளிலும் தமிழன் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், அவ்வவ் நாடுகளிலெல்லாம் தமது பாரம்பாரியத்தை தர்மமாக கடைப் பிடித்து அதன் படியே ஒழுகி தனதான கலாச்சாரத்தை இன்னமும் வீச்சாக கடைப்பிடித்து தான் தமிழன் எனும் இன வேட்கையை முறையாக ஒழுகுவதால் இன்னமும் அந் நாடுகளில் சிறப்பு பெறுகின்றான்.

எவனொருவன் தன் இனத்தையும்,அதன் மொழியையும் சிறப்பாக கைப்பற்றமறுக்கின்றானோ! அவன் தானாவே தனதான இனத்தில் இருந்து விலகும், அதேவளை உலக மக்களிடம் இருந்தும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டு அனாதையாக அவல வாழ்வையே அவனும்,அவனுடனான அடுத்த சந்ததியும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் கிட்டும்.இது நியதி, இந்த நிலை தமிழனிற்கு மட்டுமல்ல ,எந்த இனத்தையோ,எந்த மதத்தையோ,எந்த நாட்டையோ சார்ந்த யாராகினும் அவர்க்கு இது எழுதப்படாத ஆனால் கிடைக்கும் கீழ் நிலை தேர்வு இவ் அவல வாழ்வாகும்.இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

இந்த வகையில் புலம் பெயர் ஈழத் தமிழர்களாகிய நாம் இங்கு பிறந்திருந்தாலும், எமது சிறார்களை பெற்றோர்களும், ஆசான்களும் அவர்களை நல் வழிப்படுத்தி எமதான பாதையை ஒழுங்காக நெறிப்படுத்தி இப்படியான எமது பண்பாட்டு விழுமியங்களை அவர்களிற்கு போதித்து வெறும் பார்வையாளனாக இல்லாமல் பங்காளனாக தமிழீழச் சமூகத்துடன் ஒற்றி அவர்கட்கு எமது மொழியின் சிறப்பையும்,அதன் கலையின் தாக்கத்தையும் சீராக புலப்படும் வகையில் எடுத்தியம்பி, நாம் தொடர்ந்தும் எமது கட்டுமானமான பண்பாட்டை சீராக கடைப்பிடிக்க, இந்த பொங்கல் பெரு விழாவும் உதவிகரமாக விளங்கும் என்றால் அது மிகையாகாது.

ஆகவே எனதான உறவுகளே நாங்கள் எங்கு,எப்படி வாழ்ந்தாலும் எங்களின் இந்த அடி நாதமான பண்பாட்டு, கலாச்சாரங்களை மிகவும் நேர்மையுடனும், கண்ணியத்துடனம் கடைப்பிடித்து நாம் நல் வழிகாட்டலுடன் உலக ஒழுங்குடன் ஏகுவோம்.

மேலும் இந்த ஆண்டு முதல் தைத் திருநாளே தமிழர் தம் வருடப் பிறப்பாக தமிழக அரசு நடைமுறைப்படுத்துகின்றது.ஆக இந்த வருடம் முதல் சித்திரையில் கொண்டாடப்படும் புது வருடப் பிறப்பு இனி இல்லை என ஆகின்றது.இந்த புது வருடப் பிறப்பின்பால் தமிழீழத் தமிழர் தம் வாழ்வில் புது பூம் புனலை சுரப்பிக்கும் என நம்பிக்கையுடன் இவ் விழாவை இனிதாக வாழ்த்தி சிறப்பிப்போம்.

நம்பிக்கைதான் வாழ்வின் ஆதார்சம்,ஆயினும் நாம் அந்த நம்பிக்கையை அத்திவாரமாக அகக்கொண்டு எமதான தாயக தேசியக் கடமையையும் இன்னமும் வீச்சாக முன்னெடுப்போம் .இன்று போல்தான் நாளையும் விடியும், அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை.இருந்தாலும் நாம் இவ் வையகத்தில் பிறந்த நாள்போலதை மகள் பிறக்கும் ஆண்டாக பெரு நாளாக,எமதான ஐ தீகத்துடன் முன்னெடுப்போம்.

வியாழன், 7 ஜனவரி, 2010

உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.



திருவாளர் வீரசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களினுடைய நினைவுசுமந்து.

ஆற்றல் மிகு பெருந் தலைவனை-இந்த
அவனிக்கு அளித்தவரே-உமைப் போற்றி
உறுப்பெழுதும் மறத் தமிழினத்தின்
மாற்றுதலை காணாமல் மறைவெழுதிப்
போனீரோ?
தேற்ற இங்கு யாரும் இல்லை-உம்
துணையை தோற்ற அருகில் யாருமில்லை.
வேற்று கிரக மனிதர்களாய் நாம்-
வேலி இழந்து பரிதவிக்கின்றோம்.

இங்கிதங்கள் சிறிதுமற்ற இராணுவத்தின்
இரும்பு கரங்களில் உம் இறுதி யாத்திரையா?
ஐயகோ!
என அரற்றும் எங்கள் ஆயிலியத்தை
எங்கெறிந்து ஆசுவாசிப்போம்?எம்மவரே
உங்கிருந்த உந்தனது உணர்வுதனை யார் மதித்தார்?
பங்கமது நாளும்,பொழுதுமாய் உன் அங்கமதை
அயோக்கிய கிங்கிதரர்கள் எங்ஙனம் ஆராதித்தார்?
எவர் அறிவார்?

சாதுவான உங்களது சகவாசம் எவர் சுரப்பார்?
ஏதுவான சமர்க் களம் ஏதிலியாய் போனதனால்,
யாது மற்று யாம் யதார்த்தம் யாவும் இழந்தோம்-இன்று
பேத மாற்றும் பேய்க் குழிக்குள்,
பெருமிழவாய் தவிக்கின்றோம்.

ஊத பகை சாயும் இந்த ஊற்று இனி சுரக்கும்.
வேதம் எழுதிய எங்கள் வேதினியர் எழுவர்-இந்த
பாதம் வரை பாதகரை படு குழிக்குள் பரவ
பாதை அவர் வகுப்பர்.பகலவன் பாதை விரியும்-அந்த
பகுப்புக்கள் பாரில் தெரியும்-பார்த்தனின்
மெளன மொழி விழிக்க!

யாவும் இங்கு யதார்த்தயாய் பதிவெழுதும்-இது
சாவும் பொழுதாக உதிர்ந்தன உயர்வெழுதும்.
பூவும் புதுமலராய் பூம்புனல் பூக்கும்-புவி
நீவ காவியம் களிப்பெழுதும்-இவை
யாவும் இயங்கும் இனிதான மலர்வாய் இகம்
இதை வரையும்.

ஐயனே!
உந்தனது அந்தி பொழுதில் என்ன பாடல் இசைத்தீரோ?
"மா" வீரனை பெற்றதால் மகிமையாய் அதை இழைத்தீரோ?
இல்லை ஊழ்வினையென உந்தன் உதிரம் உயிர்க்க,
தொல்லை அகன்று தோகை விரித்தீரோ?வல்லை
மண்ணில் வகுத்த வாரியன் வகை வகுப்பானென!
புண்ணியமெழுதிப் போனவரே-உந்தன்
புன்னைகையின் பொற் பாதம் உந்தன் வீர
புதல்வனால் உயர்வு சொரிய உதயமாகும்.

நிறைவாக நிவிர் துயில- பிறையாக
நுதல்கள் நிமிர -
உறவான உறவுகள் உயிர்க்கும்-உங்கள்
உளக் கனவு உயர்வு சொரியும்.
துறவான தூயவர் துலங்க உறங்கும்-
உங்கள் உயர்வான கரங்களால்
உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.

புதன், 6 ஜனவரி, 2010

பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.


உள்ளத்தில் ஒன்று வைத்து புறமொன்று பேசும்
கள்ள மனதின் கருமாந்தர்களே!
வெள்ளத்தில் அடித்துச் செல்லும்
கழிவுகளாக உந்தன் காலமது கழிந்து விடும்.
பள்ளத்திலே உந்தன் பாதடிச் சுவடுகள்.

உள்ளும்,புறமும் உரசாமல்
துள்ளும் நெஞ்சமது வேண்டும்,அஞ்சாமல்
மனமது விரித்து ஆளுகின்ற ஆற்றலதுவும் வேண்டும்.
தோற்றமதில்,மாற்றம் மகிமை சுரக்க வேண்டும்.
ஊற்றெடுக்கும் உறவதனில் ஊசாத உறுப்பு உறையவும்,
தேற்றமது தெள்ளறிவாய் தேறவும்,சாரவும்
சரம் சேரவேண்டும்.

மெள்ளவும் முடியாமல்,கொள்ளவும் முடியாமல்
கோர்த்து நிற்கும் கோரம் குலைய வேண்டும்.
மெளனமாக வஞ்சிக்கும் வரைபுகளும்,
உதவும் தருணத்தில் விலகும் வியாக்கியானங்கள்
விலகவும் வேண்டும்.உலவும் உள்ளங்களில்
களிப்பெழுதும் கலை வேண்டும்.ஆக
கற்றதனால் ஆன பலனென்கொல் என்பதை
ஆசுவாசமாக பற்றவும் வேண்டும்.

பயன் பிறர் அடைய பற்றுதலும்,
மயன் கொள்ளா மாற்றுதலும்,
துயரெறிய தூக்கிவிடும் துடிப்பும்,மற்ற
மானிட மார்க்கமும் மனப்புற மடிப்பும் வேண்டும்.
ஊனிடும் உறவும்,கூனிட நிமிர்வும்,தானிட
தர்மமும் தரணியில் தரமாய் வேண்டும்.
இடு என்று இல்லா இறையிடம் இறைஞ்சல்
இதய பூர்வமாய் தவிர்க்கும் தர்மமும் வேண்டும்.

உனதான இதயக் கதவுகளை இது சாரும்-
தனதான இருப்புக்களும் இனம் சார் உறவுகளிற்காய்,
விரிக்கும் விசாலமது வியாபிக்க,
தரிக்கும் சாந்தம் சார சகமான உற்றத்திற்காய்,
உதவும் உயர்வும்,
உனதானதாக உளம் சிறக்க வேண்டும்.

மற்றெல்லாம் இந்த மகிமை மையிக்க,
தான் தோன்றும் சாலச் சிறக்க,என் வீட்டு-
முற்றத்தில் தினம் சுரக்கும் போதெல்லாம் இவை
மற்ற வீட்டு மனைகள் திறக்க மனம் கெளவ்வும்.
மானிடம் உயிர்க்கும்,மாதவம் மனந்திறக்கும்.

தூவ,மனிதம் தூவ ஏது இங்கே பாவ,புண்ணியம்?
பாவ, இவை பாவ பரவும் இங்கே செளபாக்கியம்,
இருப்பதை இல்லார்க்கு இணங்கி இலக்க,
செருக்கது அகலும்,செல்வாக்கு செழிக்கும்-
உருக்கது இழகும் இயக்கம் இங்கே இமயமாகும்.
ஒற்றுமை ஒற்ற வேற்றுமை விலக,
பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
பற்றுவோமா?

இல்லை
பரிதவிக்க எங்கள் உறவெல்லாம்
பரிதவிக்க விற்போமா?
விலை போவோமா?
எங்கள் பவ்வியங்களை எல்லாம் பரமன் பா(மா)ண்பென??-

வலைப்பதிவு காப்பகம்