வியாழன், 10 ஜூன், 2010

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.


சரியாசனம் சாசனமாகாததால்,
புரியாசனம் புதைக்கப்பட்டதால்,
எரியாசனமாய் எழுதப்பட்டு-அந்த
உரியாசனம் உதிர்ந்தே போகுமா?

கரியாசனம் காட்டும்-ஆள
நிலக் கரியாசனமாய் நாளை-
அது தோன்றும் போதினிலே அதன்
வரியாசனம் வைடூரியமாய் மிளிரும்.

"தெரியா"(ஆ)சனம்,தெரியாத்தனம்
"வரியா"(ஆ)சனம் வரியாத்தனம்
வெறியாசனம் இலங்கும் சிங்களனால்,
கறையாசனமாய் இன்று புதைகுழியில்-ஆனால்

இவை யாவும்!
கரையாசனமாய் கனதி அள்ளும்-புவி
நிரையாசனமாய் எங்கள் மேனி தளிர
விபராசனமாய் விதி கீறும்-அன்று புரியும்
அவர் வரித்த புதியாசனம்.

பெளதீகாசனம் பகரும் பதிமுறை புரிவீரோ?-அந்த
பெளத்தாசனம் பயிற்றும் பாடையாசனம்-என்றோ அன்றி
பகுத்தாசனமாய் பரணியில் மறுதாக்காசனம் மரபெழுதும்
விகுத்தாசனம் நிச்சயம் எங்கள் வீரம் ஏற்கும் "விகுதா"(ஆ)சனமாய்-இது

"மா"வீராசனத்தின் மேல் நின்ற மெளன சாசனம்-எல்லா
"சா"ச(க)னத்தையும் எகிற்றி ஏறேறுமாசனமாய்-தமிழாசனம்
தரணாசனத்தில் தன் தகு சாசனம்!
தர்மாசனமாய்
சினையாசனம் சிறப்பேந்தும் சீர்காணீர்.

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்