செவ்வாய், 29 ஜூன், 2010

செவ்வரத்தம் பூவில்!


செவ்வரத்தம் பூவில்-
எவ்விரத்தம் பார்க்க அது
இவ்வளவு சிகப்பாக?
-உன்
இரத்தம் சீராக்க இதுவும் ஓர்
மார்க்கமே.

ஆம்!
இதில் மருத்துவ குணம்
நிறைவே.
உண்டவர்களும்,அதன்
நிலையை அறிந்தவர்களும்
கூறும் அறிவுரை.

பசுந்தலாக அரைத்து உண்ண
பறக்குமாம் பல நோய்கள்.
பச்சையாக உண்ணுதல்,
பலா,பலன்கள் நிறையவே.

இதய நோய்க்கு இதமான மருந்து.
மார்பு வலியுள்ளவர்கள் பூவை,
நீரில் இட்டு கொதிக்க வைத்து,
காலையும் மாலையும் அருந்திவர-
நிவாரணம் காணலாம் ரணமகற்றி.

தெரிந்தவர்கள் கூறுங்கள்.
இன்னமும் இதன் சிறப்பை.
செம்பருத்தி பூவா?செவ்விரத்தப் பூவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்