ஞாயிறு, 6 ஜூன், 2010

புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.


பாதிக்கப்பட்ட பாவிகளின் பரந்த நன்றிகள்.

தென்னிந்திய திரைப்பட கர்த்தாக்களிற்கு!
வன்னி மண் தின்ற வணங்கா மக்களின்
வந்தனை கூறும் நன்றிகள்.

ஈழத் தமிழரின் இதயம் தின்ற,
பாழும் சிங்கள பாவிகள் தங்கள்-
மன அழுக்கின் மகத்துவம் கலைக்க-
இனமானம் சுமந்து ஈர்ப்புடன் இலங்கி
இலங்கையில் இன்றுவரை நெடுத்த,
ஐ.ஐ.பா விழாவை வாகையுடன்-
தோல்வியுற செய்த செம்மல்களே!

ஈழத் தமிழினம்!
நாளும்,பொழுதும் நலிந்து,
வலி சுமந்து மாளாத் துயர் பருக,
சிறீலங்கா ஆரியன் ஆதங்கித்து மகிழ,
எந்த விதி வரைந்தானோ -அதை
சிந்தையில் சிதைத்து சீரிய அடி கொடுத்த,
சிங்காரத் தமிழுணர்வுடன்-
திண்மையாய் முன்னெடுத்து,
எங்களின் கரம் பற்றி ஏங்கும்-
தமிழ் மனம் சுரக்க ஏந்திய,
ஊடகமாம் சினிமாத் திரையுலகினர்க்கு,
தமிழீழ மக்கள் சார்பாய்!
புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.

மங்காத வடுவிருக்க,
மனமெல்லாம் சினமிருக்க,
தினவெடுத்து சினையீன சிங்களம்
வினையிட,
பொங்காத தமிழனாய் பொறுப்பறுக்க நினைத்தீரா?-எங்கள்
தொப்பிள் கொடியுறவை கொக்கென்று நினைத்தீரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்