செவ்வாய், 1 ஜூன், 2010

பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.


எந்த நினைவுகளையும்,
எங்கள் உறவுகளையும்,
எந்தன் சுற்றத்தையும்,
எங்களான முற்றத்தையும்,

நினைவுகளால் என்றாலும்,
களையும் நினைவிருந்தால்,
எல்லாமே அல்,ஆன்,ஒடு,ஓடுவாக
ஓர்மம் களி(ழி)த்தால்!
நாம் தமிழராய் தலை நிமிர்வதில்
எவ்வித யோக்கியதையோ,பாத்தியதையோ
அர்த்தமோ இல்லை.

எனவே!
எனக்குள்,உனக்குள்,எம் எல்லோர்க்குள்ளும்
குமுறும் குரலாய் நான்
இங்கு குறியிடும் குவியத்தை குலைக்க
யாரும் கனவிலும் சுடுகலன்
மொள்ள வேண்டாம்.

இது!
தர்மத்தின் குரலாய்
குறி சுடும்.
சூடப்(கற்பூரம்) புத்தியுள்ள
சூட்சுமம் உள்ளோரே!
சுகிப்பீராக!?

என்னைத் தாழ்த்துவதாய்-நீ
தாழ்ந்து போகாதே,நீ
நுணலானால் ஒரு போதும்
அரவமாய் அறம் தீண்டேன்.
மறவாதே மானிடமே!

அனுதினமும்,
உறங்கும் முன் ஒரு கணமாவது
உன் முற்றத்தின் அவலத்தை
உள் வாங்கு!
சிலாகி!
உற்ற வழி தேடு உனக்குள் உறங்கும்.
பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.

ஒரு திவ்விய ஒளி உன் அகம் சூடும்.
கனவுகள் காண்,
அதை தினமும்
புனருத்தாரணம் செய்.
சமூக சிந்தனை அகம் ஊட்ட,
ஏதோ,
ஏதோ ஒன்று உன் இலங்கலில்
இயங்க மடி தேடும்.அந்த
மனிதம்,
அதுதான் உன் இயல்பாக முடி சூட.
எது உன்னால் முடியுமோ?
அது தானாக உனை இயக்கும்.

ரத்தத்தின் சத்தத்தில்
முற்றங்கள் முகை அவிழ!
கேட்குதா!
எங்கள் முற்றத்தின் அழுகுரல்.
இதையும்
பத்தோடு பதினொன்றாய் நீ
எண்ணினால் என் பதிவுகளில் இருந்து -உன்
...பதியங்களை களை-இது
விநயமான வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்