வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம்.


விழி மூடாக் கனவைய்யா -இது
வழி திறந்து வாசல் பூத்து-வயல் காற்று
வாகை பாட வாசமெல்லாம் நுகர்ந்திருந்த
திருக் கோலம் திடம் பூண்ட கொற்றம்.

பேரவலத்தால் இன்று பேயாட்சி-எங்கள்
தேரோட்ட வீதியெல்லாம் ரத்தாட்சி
நீரோட்டம் அங்கே வறட்சியாக்கி-எங்கள்
வாசலெல்லாம் வைத்தானே நெருப்பபாக்கி
சாம்பலாகி போனதுவோ சந்ததிகள்-அங்கே
ஆம்பலாக விழையாதோ ஆத்மாக்கள்

நீண்ட கொடைகளால் நிமிர்ந்த கொற்றம்-
தாண்ட தாண்டவம் ஆடினானே சிங்களம்
கொண்டதெல்லாம் இந்தி ரத்தம்-அதில்
இழிந்து போனதய்யா எங்கள் ரத்தம்-பாவி
பல தேசம் இணைந்து பலியெடுத்தான்-நாம்
பந்தயக் குதிரைகளாய் பலி கொடுத்தோம்.

எத்தனை இழவுகள் எம் வலம் விரித்தான்-அதில்
சித்தனைத்தும் சிதைத்து எரித்தான்
முத்தியவன் கொண்டானா முகிழ்வெரித்து வென்றானா?
பத்தியவன் பறித்ததெல்லாம் பாவி எம் உயிர்களையே-பாரத
புத்தியவன் புதைத்தானே புத்ததேசத்திற்காய்-எந்த
யுக்தியில் அவன் வென்றான்?எதை வென்றான்?

புதைத்தது,நஞ்சு குண்டால் எரித்தது,
விதி மீறி கொன்றது,வீதியெல்லாம் தின்றது
பதை,பதைத்து சரணடைய சண்டாள சிங்களம்
விதை பிதுக்கி,விரையிறுக்கி எத்துணை அட்டகாசம்?
வெற்றியின் குரல் இப்படித்தான் என்பதாக,
வெங்களச் சீனனுடன் வேடிக்கையாக எங்கள் வேதனைகள்
ஆரியனிற்கு.

ஆரிய கிட்டலரிம் இல்லாத மதை,மதைப்பு
ஆனாலும் எதை அழித்தான்?
ஆணவம் தலைமீற ஆயிரம் அவனிற்குள்,
அவனியும் சேர்ந்தே அத்தனையும் அறுவடையாய்,
ஆனாலும் ஆனதா ஆன்மாவில் விதைத்ததை அழிக்க
ஆக்குவோம் நாம் நாடு கடந்த தமிழீழம்-அதனால்
நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம்.

வியாழன், 8 ஏப்ரல், 2010

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-மா வீரத்தால் வளர்ந்த தீ


போகும் வழி போகின்றோம்-
போர் சுமந்து செல்கின்றோம்
சாகும் வரை நாம் தொடர்வோம்.எங்கள்
சாசனங்கள் நிறையும் வரை,

ஆவி வழி சொந்தங்கள்
ஆயிரங்கள் இழந்தாலும்
மீதி எழும் பந்தங்கள்-வீதி
கீற விழுமியங்கள்.

ஊர் அழிந்து போனாலும்
உறவழிந்து போனாலும்
உறுதியாகிப் போகின்றோம்-எங்கள்
உறுதி எழுதப் போகின்றோம்.

இலட்சியங்கள் சாவதில்லை-எங்களை
இழைத்தவர்கள் ஓய்ந்ததில்லை
வறட்சி ஒன்றும் வரைவதில்லை-இந்த
புரட்சி என்றும் புரள்வதில்லை.

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-"மா" வீரத்தால்
வளர்ந்த தீ
விருப்பாற்றி எரிந்த தீ-புலி வீரர்களால்
மலர்த்திய தீ
சுதந்திர தீபம் ஏந்தாமல் சுரம் குன்றி
குமைந்திடுமா?
சுந்தரத் தீ மழுங்க சுரைந்திடுமா?

மங்காத ஒளி வீசும்-அது
மாவீரம் காத்திருக்கும்
ஓங்காமல் ஓயாது ஒளி தீபம் ஏற்றாமல்
மாமாங்கம் போனாலும் மலராமல் போகாது.எங்கள்
மண் விடுதலை கீதம் இசைத்தேகும்.

வலைப்பதிவு காப்பகம்