வியாழன், 31 டிசம்பர், 2009

ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.


உலக ஒழுங்கை உற்றுக் கவனி.நீ
உலவ இதை உவப்பாய் அவதானி.
நிலவும் நீட்சியை நிர்மலாய் நிதானி.இல்லையேல்
பலவும் உன்னை பாழாய் படுத்தும்.சிலதென்று
எதையும் சினந்து புறம் தள்ளாதே.

எதனதன் ஆரம்பமும் என் வீட்டு-
முற்றத்தில்தான் முகிழ்க்கும்-எனதான
சிரத்தைகளை நாமொதுக்க.
அதனால்தான் ஆயிலியத்தை அகமாக பேண-
ஆவன நாமாற்ற அகமேந்த அரணமைப்போம்.
இல்லையெனில்!
தாமதமான தரமாக தானே சரணாகதி.
எல்லாமே எப்போதும்.எங்கேயும் என்றும்.

சாட்டுக்கள் சாட்டி சரமமைப்பதை,
சகமாக கூட சாலை வகுக்காதே.
இகமான வாழ்வில் இதமான அணுகு முறை,
ஒன்றது வேண்டும் இல்லாதெனில்,
ஒவ்வொரு விநாடியும் ஓயாத மன உ(ழை)ளைச்சல்
மதியூகம் கொண்டு மானசீகமாய் யோசி.
மற்றதெல்லாம் மாண்பாக மார்க்கம் அமைக்கும்.

ஒட்டுக் குழவாய் வாழாதிருக்க,
ஒற்றுமையை ஓர்மமாய் வளர்.
விட்டுக் கொடுப்பதை விவேகமாய் விதை.
தட்டிக் கேட்கும் தைரியம் பேண்,எதையும்
தார்மீகம் பேணி தரணியில் உழை.

வாசிக்கும் பழக்கத்தை வாழும் வரை பேண்.
வரலாற்றை அறிவதில் வாஞ்சையாய் வகைபாகம்.
தரமான தாக்கத்தை தண்மையாய் தெரிந்தெடு.
நேசிக்கும் நேர்மையை நேயமாய் நேசி.
சிந்தித்து செயலாற்றும் சீலத்தை கடைக்கொள்.
நிந்தித்து,வஞ்சினமாற்ற கிஞசித்தும் நினையாதே.

ஆம்!
இதெல்லாம் ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.
ஆயின்!
இன்று!
சுயநலமே தோழமையாற்றும்
கயவர்களால் எந்த
ஆயுதத்தை கலயமேந்தி கருவேற்ற?

சனி, 26 டிசம்பர், 2009

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.


அகிலத்தை அசைத்த அசைவது அதன்
ஆள(ழ)ப் பெயரே சுனாமி-உலகில் எத்தனை,
அக்கிரமங்களை ஆட்சியாளர்கள் ஆக்க,
அற்ப நிமிடத்தில் அதை மீறிய அனர்த்தனம்!
ஆக்கிய ஆழியின் ஆர்ப்பு நர்த்தனமே!உன்
அசைவின் புனர் பெயர்தான் பூமியில் சுனாமியாக
சுகந்தங்களை சுருட்டியதோ?

வறட்சியின் வையகத்தை மடக்கும் மாண்பூ _நீ
திரட்சியாய் திடகாத்திரமாய் திறன் ஊட்டி-இத்
தீவினை மட்டுமல்ல திறந்து,விரிந்து பரந்திருக்கும்
அவனியை ஆட்சி செய்யும் ஆர்ப்பு நீ-
அன்று!(26.12.2004)
பவனி வந்த பாரை பாறையாக்கிய போர்ப் பரணியை!
இன்று வரை யாரும் இறுமாந்து அழிவாற்றவில்லை.
ஊழிப் பெரும் ஊற்றே ஆழிப் பேரலைக்கு ஏன் இந்த
கோரப் பசி?

எத்தனை மக்களை எவ்வளவு இலாவகமாக--
இவ் வையகததில் வளமாக வாழ வைத்த வனப்பு நீ!
உன்னால்-
அன்றும்,இன்றும் ஆரோக்கிய வாழ்வதனை,
செளபாக்கியமாக்கிய செளதாமினியே!
செளந்தரியே!
ஆழ,அகல நீ ஆர்ப்பரித்து அலைகளாக அசைவெடுத்து,
மீள,மீள மிதமாக மீட்டிய உன் ஆதங்க கரம் தழுவ,
சோளகக் காற்றின் தோகை வரிப்பில் எங்கள் தேசம்
தழுவிய கடலம்மையே-ஏன்?
அன்று இந்த கோர ஊழி தாண்டவமாடினாய்?

உன்னால் உவப்பெய்த அத்தனை ஆத்மர்களையும்,
உனையே நாளும்,பொழுதும் உரசி,ஊடி நின்ற உவப்பான
உனதருமை உத்தம மைந்தர்களையும்,
ஏனிந்த தாளாச்சினமேந்தி
எக் காளமாய் கொன்றேகினாய்?
வயது,பால்,மறைத்து
புலர்ந்தது,
மலர்ந்தது,
வளர்ந்தது,
வாழ மடி தேடும் வஞ்சியர்,
நேற்றுத்தான் நேச மடி குடி புகுந்த-
கோவையர்கள்,கோமகர்கள்,
வாழுதலின் வசப்பெழுதி வையத்தில் தன்-
வாரிசுகளை வனப்பெழுத வசந்தமாய் வார்த்தெடுக்க,
வளம் தேடும் வாசலில்!நீ
வகித்த வதை பாகம்!

தனதான சந்ததியின் மழலை குரலேந்த,
இன்றைய விடியலில் இரத்தல் தவிர்த்து
இதமான வாழ்வெழுத,
நாளைய பொழுததினில் மங்கல நாணேந்த,
நாணம் நயித்த நங்கையரின்
ஞாயத்தை,
இராப்பொழுது இதமாக விடிந்ததால்!
இரவெல்லாம் இமை விழித்து இணையாளனை!
எதிர்பார்த்த மனைவியின் ஏக்கங்களை,
அவர் தம்-
மழலைகளின்,மையல்களை-எந்த
கூர்ப்பெழுதி குலைத்தழித்தாய்?

அடித்து நீ ரணப்படுத்தியிருந்தால்!
இதன் இலங்கலை இதப்படுத்தியிருப்போம்-ஆனால்
அத்தனையையும் அலங்கோலமாய்,குதறி,கிழித்து
வதைத்து,உன்னோடு கொண்டு,கொன்று
ஏக்கப் பரப்பில் நீ ஏகாந்தமாய் பறித்த
இந்த பரப்பளவை எந்த பரப்பில் நாம் நிமிர்ப்பெழுப்ப முடியும்?

ஆக்கிரமிப்பாளனின் பாளத்தில் நாம் அனுதினமும்,
ஆர்தெடுக்க ஆயிலியம் சுரப்போமா?
இந்த
வேதனையின் வேகமையில்,அதன் சுமைகளின் சுமையை
நின்று நிதானித்து, ஆசுவாசப்படுத்த, ஆர்த்த இந்த
இமைப்பொழுதிலா-நீ
இந்த இணையற்ற வேகம் தரித்தாய்,
எம் ஏற்றமெல்லாம் இழுத்தழித்து இழவெழுதினாய்?

ஏய்,
ஆழிப் பேரலையே!
ஆயுள் முழுவதும் நாம் ஒப்பாரி எழுதி-எங்கள்
ஒய்யாரம் அழிக்கவா?உன் ஓங்கார சங்கூதல்?
ஆரியனின் அதமத்தில்,அந்த ஆக்கிரமிப்பில்,
வெங்களத்தில் எங்கள் வேதம் தரித்தோம்.ஆனால்?

உந்தன் உற்சவத்தில் நாம் சவமாகவே சகம் தரித்தோம்.
நிந்தன் பொற்பாதத்தில் எங்கள் வாழ்வேந்த
தந்தனை உந்தன் ஈகபாகத்தை,
ஈய்ந்தனை இறைந்தனை,
சந்தன மேனியரின் சாகச களமே,விந்தனைத்தும்
சிதைத்தோம்-ஆயினும்
விடியலையும் இழந்தோம் அல்லோம்.

ஒவ்வொரு இழப்பிலும்,
இன்னொரு உயிர்ப்பிருக்கும்,
உணவுச் சங்கிலிபோல் உணர்விருக்கும்.
உயிர்த்தெழும் உரமிருக்கும்,உறங்காத
உணர்ச்சியிலே உற்சவமெழுதும்,
உயிர் இருக்கும்.
உந்துதலிலே உறுப்பெழுத உரமாக இன்னமும்
இந்த ஏகாந்த வெளியில்!

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.

வியாழன், 24 டிசம்பர், 2009

மானப் பரப்பில் மக்கள் திலகம் மையித்த மங்கலம்.


சிரஞ்சிவியான எம் சஞ்சீவியே
ரம்யமான ரகசியனே!-எமதான இதயக் கனியே!
ஈழ விடுதலைக்காய் இதயம் சுரந்தவனே;
எழுக விடுதலையென ஏற்றமாய் இழைத்தவனே'
தோழமையாய் எம் தலைவன் தோளேந்திய முதல்வனே-உன்
தோளேந்தும் ஈழத் தமிழினம் தரணியில் என்றும்--

ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல்-
உதவும் கரம் படைத்த உதயனே-நீங்கள்
உண்மையான உழவனை உளமார உணர்ந்து
ஒப்புவமைக்கு அப்பாற்பட்ட தொலை நோக்கின்-
ஈழவிடுதலையின் அவசியத்தை ஐயமின்றி நேசித்த
ஆழத்தை எந்த அரசியல்வாதி தமிழகத்தில் சிந்தித்தான்,
மெளனமாக மலைதாண்டிய உதவி.

தலைவனின் ஆழமான எதிர்பார்ப்பை எந்த இடையூறுமின்றி,
தானேந்தி தாளேந்திய தார்மீகத்தை என்னென்போம்?
திரையில் மட்டமல்ல நீவிர் புரட்சி படைத்தீர்,புடை
சூழும் எம் ,ஈழ தமிழர் இனத்திற்கே பசுமை படைத்தீர்.தமிழ்
விழாதிருக்க எம் விழுதேந்திய வீரனே நாம்
வழுவாதிருக்க வகை சூட்டிய வல்லோனே-ஈழ தமிழ்
இனம் இருக்கும் வரை வரையில்லா உம் வரைபிருக்கும்.

நன்றி மறவாத நல்லுள்ளம் ஈழத் தமிழருக்கு என்றும்,
குன்றிடாமல் உமதான நினைவெழுதும் குவலயம்.
கன்றிடாமல் காலமெல்லாம் கனதியெய்தும்.
வென்றிடும் நீ அரசாட்சியில் இன்றிருந்தால்-இந்த
ஈனம் அகற்றி ஈழம் இழைந்திருக்கும்-விதி
வழி உம் பயணம் ஒத்தி ஒப்பேறியிருந்தால்?

வஞ்சினம் கொலுவமைத்த வஞ்சி ஒன்றும்,
மிஞ்சி இந்தியில் இழவமைத்த இலங்கல் இணைப்பகற்றி,
இங்கிதம் அகற்றிய ஈனர்களால் நாம் இசைவகற்றி,
இழவேந்தி,
இராப்பகலாய் பழுதேந்தி பாரம் சுமந்து--?

அன்று போல் உன் அகலங்கள் எங்களின் ஆழப்
பரப்பேந்த யாருமில்லை ஐயா!இன்று
ஐயகோ என
நாமழ எமை தேற்ற,தோற்ற எந்த தோழமையும்-எம்
மனப் பரப்பில்கூட கூடவில்லையே,

வானவர் தேசம் வையத்தில் உண்டென்றால்-நீவிர்
எம்மவர் தேசம் கண்டு நெஞ்சம் பதறி,
சங்கறுக்க தமிழக சதிகாரரை சாய்த்திருப்பீர்-
வெங்களத்தின் வேதனையை,அதன் வெப்பியாரத்தை
வெம்பியே அறுத்திருப்பீர்.ஆனாலும் என்ன
துவண்ட ஈழத் தமிழினம் துயரறுக்கும்,
தூக்கணங் குருவிக்கும் தூங்க ஓர் தொட்டில் போல்
எக் கணமும் நாம் எமக்கமைக்க ஏற்றமாய் உழைத்திருப்போம்.

விழ,விழ வீரியம் சுரக்கும் விழுதுகள் எழும்.
தொழ,தொழ ஓர்மம் ஒழியும்,தொட்ட காரியம்
தொய்ய தோட்டம் அமைக்கோம்,
அமைப்போம்!
தரணியில் தமிழரின் தாயகம் எத் தடை வந்த போதும்-
எந்த வேளை வரினும் உம் நினைவெழுதி-
ஏந்தும் துயரறுத்து தூயவன்,எம் வேலுப்பிள்ளை
பிரம்மத்தின்,பிராயத்தை மீண்டும் மு(மி)டுக்கி.

நெக்குருகும் உன் நினைவுகளில் எம் துக்கம் உருகும்.
பக்கமிருந்தாய் பலம் தந்தாய்,பாங்குடனே பாரம் சுமந்தாய்.
துக்கம் தாக்காது துணையிருந்தாய் தூயோனே!
அகப் பரப்பில்,
ஆழ வேரோடி,
இங்கிதமாய் இலங்கியவனே,காலப்
பரப்பெழுதும் காத(ல) தூரம் கண்ணியமாய் எம் கருவேந்தும்.
விண்ணிலிருந்தும் நீ விசாலமாய் புறுவல் பூப்பாய்.
புலரும் பொழுது பூபாளமிசைக்க.
தமிழரின் தாகம் தமிழீழமாய் தர(க)மேந்த.

புதன், 23 டிசம்பர், 2009

திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே!


திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே-உன்
திரு முகம் காண திசைகள் திரும்புமே.உன்
ஒரு விழி கூறும் ஓர்மம் பகைவர் பெரு விழி மிரளும்-உன்
இரு விழி இயம்பும் இலங்கல் புரிய இலங்கை அதிருமே.
குரு விழியாக குவியம் குவிக்க குல மகனே குதிராயா?

இரும்பு இதயம் கொண்டாய் இருளர் இலங்கல் இரைந்தது-நீ
கரும்பு உள்ளம் கரைசலாய் கவித்ததில் களமே நிறைந்தது.-உன்
கரிசனங்கள் கலந்தபோது ஈழக் கலயம் கனிந்தது-உந்தன்
உரிமைச் சங்கு ஊதியபோதே உலகம் உணர்ந்தது.நிந்தன்
பரிவு பார்வை பகிர்ந்தபோதே பவனி புரிந்தது.

இரண்டகம் புரிந்த ஈனர்களை இனம் காண நீ படைத்த,
இமாணயர்கள் எத்துணை இடுக்கண் வரினும்,
எத்தனை ஈனர் கண்டாய் களத்தில் உன் கனதி தெரிந்தது.
இழைந்து,
சித்தம் கலந்து சிதைக்க சினந்தாய் சிலர் திமிரே சி(தி)ரைந்தது.
அத்துணை ஆற்றல் அலையாய் உன்னில் அமரர் அணைத்தனர்-அவர்
ஆவி,உடல் பொருளெல்லாம் உன்னால் உதித்தது-மாவீரக்
கனல்களெல்லாம் மாதவம் செய்ய உனையே சூழ்ந்தது.

இராச தந்திரம், அரசியல் ஆவணம், ஈழக் கட்டுமானம்,
இராசாதி ராசன் சோழப்பெரு வேந்தனின் தோகையை தொட்டதாக,
ஈழம் களித்தது.தமிழீழம் களித்தது.
தேசக் கட்டுமானம்,
தேவையான சேந்தல்கள்,
விஞ்ஞானத்தின் விதைப்பு,
சாதி ஒழிப்பு,சீதனக் காப்பு சட்டம்,
விதியின் வரைபூ உன் மதியின் தெளிவு.
ஈழ செளமியத்தின் செளபாக்கியம்,ஈனமாக இழைத்த
இழிவுகள் இறைந்தே கழிந்தது.

மனிதாபிமான மரபுக் கட்டளை,
மனித நேயம்,மாந்தர் உள்ளம் மதிக்கும் தன்மை-அதில்
பூத்த தண்மை,மென்மை,பதித்த மேன்மை-இத்தனை
வித்தகமும் விதைத்த வீரியா -- இன்று
உன் அன்பான முகம் காண,ஆசியான வார்த்தை கேட்க
விகசிக்கும் எம் மனம் மானசீமாய் மருகுகின்றது.

வார்த்தைகட்கு அப்பாற்பட்ட வைராக்கியம்-ஆளுமையின்
ஆர்ப்பு வசீகரப் புன்னையின் புறுவல்.
தேர்ந்த தேசியம் தேவையின் தேடல்-ஆதலினால்
அகமெல்லாம் ஆக்க வேண்டிய ஈழத்தின் ஆதங்கம்.
அரிய,பெரிய ஆவலின் ஆதாரம்,அவதாரம் ஆக
உரியவர்களின் உள்ளக் கிடக்கறிந்து ஊக்கம் உருத்த தெரிவுகள்,
மலரும் மணம் அறிந்து வேர் நாட்டிய வேதம் நீ.
பரிவுகளின் பாகம் உதிரிகள் ஆகக் கூடதென்பதான
ஊக்கம்,
உள்ளதெல்லாம் உதயமாகும் ஈழப்பரப்பிற்கே என்பதில்-
எள்ளளவும் ஐயம் திரிபுற அர்ப்பணிக்கும் ஆதார்சம்
எந்த இனத்திற்கு இப்படி ஒரு தலைவன் என்பதில்
அகிலத்திற்கே ஆளுமையற்ற பொறாமை.

ஐயனே!
என ஆரும் அழைப்பதில் பெருமை தவிர்க்கும் பெரும் விம்பம் நீ.
ஈழ இனத்தின் இயலாமையை ஒட்டு மொத்தமாக கரைப்பதில்-
ஈகமான பெரும் கருணை.
தன் கடமையை தட்டிக் கழிப்பதில் தமிழனிற்கு நிகர் தமிழனே.
இதை இயல்பாக சுட்டி இயலாமையை இகழ்ந்ததில் நீ இமயம்.
ஈர்த்தெடுத்து இனத்தின் ஈகத்தை இகம் மலைக்க வைத்த இயல்பன் நீ.

அவலத்தை தந்தவனுக்கே அதை ஆசுவாசமாக திருப்பி,
ஆர்த்து கொடுக்க ஆளாக்கியதில் அவனி அவதானிக்க வைப்பதில்,
அலாதியாக தைரியம் தைத்த தைலவன்.
தாற்பாரியத்தை தக்க வைப்பதில்-
தாண்டவன்.
எதிரிக்கு என்றுமே எமன்-அவன் படை கட்டும் கட்டுமானம்
சுட்டுவதை சூத்திரம் சுதாகரிக்கா சுமையவன்-என்றும்
உதிரிகளுக்கும்தான்.
உரியவன்-
உவப்பான உரிமையின் உலகவன்.உலவவன்.
தெரிவான பாதை தெளிக்கும் உதயம்.
உரிய நேரம் உதயமாகும்-எங்கள் உதய உரிமம்.
அன்று தெளிவாகி சேமம் விசாரிக்கும்-உலக தேசமெல்லாம்
தெவிட்டாத சேதிகளாக,சோதி ஒளிர சோகம் அகல ஆருடமா எமக்கு தேவை?
அல்ல அல்லும்,பகலுமாய் அயராதுளைத்த ஆளுமைகளே நாளை,
எம் வயல் வகுக்கும்
தொடரும்)

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.


காத்திருக்கும் கதை சாற்ற
காதலியை காணவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்
வீற்றிருந்தாள் வியாபித்திருந்தாள்-இன்று
விடியலில் காணவில்லை-இந்த
விந்தையும் புரியவில்லை.

காற்றுக்கு புரியும் காரிகையே ஏன்
காதலில் காணவில்லை?அவள் பூத்திருந்த
புன்கையும் பூமியில் புலரவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்-நோத்திருந்தாள்
எனை ஏற்றிருந்தாள்-இங்கு யாகத்தை காணவில்லை.

காதலில் வேதனை யாருக்கும் புரியும்
ஏன் இவளிற்கு புரியவில்லை?பூ
வீழ்ந்தபின் மிதிக்கும் மானிடம் சிரிக்கும்
வலி புரியா வஞ்சி நீயே! நாளை நீ நயக்கும்
நர்த்தனம் ஞாயிக்க நான் இருப்பேனா-நீயிருப்பாய்
நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.

சனி, 19 டிசம்பர், 2009

பொய்மை பொய்க்க பொதியல்கள் போதிக்க.

மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?


சுழலும் பூமிப் பந்து எவரை சுவீகரம் கொண்டது?
உழலும் மனமதை யார்தான் வென்றது?
சுழியும் சூன்யமாக சூத்திரம் யார்தான் வகைத்தது?
மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?
மதமும்,நிறமும் ஏன்தான் முண்டியது?

மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை-இது
மார்க்கம் பூண்டதால் மதம் என்ற போர்வை.
ஆதலால் வேர்த்தது பூமித்தாய் என்ற பாவை.
பூமியெல்லாம் குருதியின் பார்வை.இது
பலமுள்ள பராக்கிரமன் பண்ணிய நுண்ணிய கோ(ர்)வை.

வரலாறு இதை வகை,வகையாய் ஆய்ந்தது.
மனிதாபிமானம்,எல்லோரும் ஒருதாய் மக்கள் என்பதை
ஓங்கியே ஒப்பித்தது,
ஆய்வு இதை ஆரோக்கியமாய் ஆய்ந்தது.அதை
அகிலம் இங்கு ஐக்கியமாய் ஆரோகணித்தது.ஆயின்
அவனியில் ஏன் இந்த அவலம் வலம் வார்த்தது?

பிரபஞ்சம் தோன்றி பில்லியன் ஆண்டுகள்-இங்கு
எங்கே பிரம்மனும்,பிதாக்களும்?
மதத்திற்கு இங்கு என்ன ஆளுகை?
சீவராசிகளின் பரிணாம வளர்ச்சியின் அதி உச்ச
பிரமாண்டம் மனித இனம்-பகுத்தறிவு அதன் பிரம்மம்
விஞ்ஞானமாக இங்கு விழுதெறிந்து மனிதன் நாளை
நிலவில் குடியேற நீட்சித்து நிற்கும் நியம் புரியா பிறவிகளே!

இன்னமும் இந்து என்றும்,புத்தமென்றும்,
இசுலாமிய இனமென்றும்,கிறித்துவ கீர்த்தியென்றும்
ஈனமியற்றும் இழியோரே!
வாருங்கள் எம் இனம் அதன் வளம் எல்லாமே
வகுந்தெடுத்த வன்மையாளனின் புயம் தறிக்க
புதுப் பூபாளம் இசைப்போம்.

ஆவணத் தமிழனின் கோவளங்கள் மீட்க,
பூபாளம் பூட்டிய எம் புண்ணியரின் தடம் ஒற்றி,
பேதங்கள் களைந்து எங்கள் பேதமை கலைத்து,
சாதி,மதமென்ற சங்கடங்கள் களைந்து,நாம்
தமிழீழ மக்கள் ஓர் இனமென்ற மகுடம் தரித்து.

மனிதாபிமானம் சுடர மனிதராய்,
ஒற்றுமையாய் ஓரணியில் ஒத்தடம்
ஒற்றிய கல்லறை கனதியரை--
காத்திரமாய் எமதான களங்களில் சுமந்து.

அழுது ஆர்ப்பழித்து அவதி எழுதும் அவயங்களை.


அகத்தோடு வந்த என்னகத்தவளே!இன்று
நுகமெறிந்து மெளனம் ஏனோ?
யுகமெல்லாம் எனதான யாகம் என்றவளே-இன்று
எந்த யுகமேந்தி யூகம் யூகித்தாய்?அன்று நீ
யாகித்த யாகமெல்லாம் இன்று யதி கலைந்து
சுதி எல்லாம் சுரமேந்த நான் சுகிக்கும் சுரம்
பூப்பிழந்து புலர்வழுகி புன்னமெல்லாம் புகையாக??

எழுதும் ஏணமெல்லாம் என்றும் நீ நீராகராமா?
உழுதும் ஊனமெல்லாம் ஊன்றும் உசாவாக- நீ
அழுதும் தொழும் ஆரமெல்லாம் ஆயிழையே-உன்
பழுதில்லா பாசமெல்லாம்-இன்று பவ்வியம் பாதிப்பதேனோ?
பொழுதுகள் போனதிசை போர் கலந்து விழுதுகளாக உன்
செழுமைகளில் என் சேணமெல்லாம் செவிடு தரித்து!

குலவும் கூடிழந்து கூனமது தான் குடி கொள்ள,
உலவும் உள்ளம் அரித்தவளே!
ஆர்க்கும் அபிலாசைகள்-
அபிநயம் ஆய்ந்து அந்தரத்தில் எம் ஆலிங்கனங்கள்.
களம் கொள்ள கலயம் தேடும் கனங்கள்-என்
கண்களுக்குள் கூடு கட்ட குவலயத்தை குலைத்தவளே-என்
அகத்தவளே!

ஆர்க்கும் என் 'ஆ' சுவாசம் சூடு விட்ட பின்
பேர்க்கும் என் பிணவாசல் தரியாதே. ஏனெனில்
இழந்தபின் இருப்பெழுதும் ஈனத்தை
என் இறப்பின் பின்னாவது!?

இந்த
பிறப்பின் பின்னல் பிரிக்கும் பீரிகைகள்
பிறை எழுதட்டும்-இருக்கும் போதே இன்னல்களையும்,
இனியவைகளையும் இதமாக இனம் காண,
இலங்கும் இதயம் கொள்ளா என் கொலுவிருப்பே!
இனியாவது பூப்பெய்தும் புரிந்துணர்வுகளை புறந்தள்ளாமல்
இயங்கும் இனங்காணும் இலவல்கள் இருப்பெழுதட்டும்.

வாழ்வில் இன்பமும்,துன்பமும்
காலநிலைபோல் காத்திரம் இல்லாதது.
குளிரும்போது வெட்கை கேட்கும் உடல்
வெட்கையின்போது குளிர் கேட்கும்-அதுபோல்
துன்பத்தில் இன்பமும், துன்பத்தில் இன்பமும்
தெரியாமலே எம் தோள் சேரும்.குறைகளை
நிறையாய் கொள்ளும் மனம் உண்டாக்கின்,
மருவும் மையங்கள் மாயமேந்தும்.

உருளும் காலங்கள் எந்த வேதனையையும்
மருளகற்றி மாயம் அகற்றும். எதையும்
நேரான மனமேற்றி முறையாக ஆய்ந்தெழ,
அத்தனையும் அகம் விரிக்கும்.ஆக புரிதலின்
புளகாங்கித்தை சிறகொடித்து சிதைத்தவளே!

இனியும்,
விதைத்தவைகளை வினையறுக்க அகம் கொள். என்றோ
ஓர் நாள் உன் நுகங்கள் உனதான இருப்பெரிக்கும்-அன்று
அழுது ஆர்ப்பழிக்கும் அவயங்களை,
என்ன செய்வதாக உத்தேச உறுப்பெழுதியுள்ளாய்?

திங்கள், 14 டிசம்பர், 2009

தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.


நிமிர்வெழுதிய எம் நித்திலனே-தரணியில்
எம் சாரம் சாற்றிய சத்தியனே
உரிமைக் குரலின் உருத்திரனே-நீ
கருமம் ஆற்றிய கச்சிதத்தால்-நாம்
விறுமம் பெற்றே வீரியம் வீற்றோம்.

அரசியல் ஞானியே!
உன் ஆளுமைகளே எங்கள் அரண்களாக,அதன்
சாரங்களின் சாளரங்களே சத்தாக!
உந்தன் உலக வலத்தில் உறுப்புக்கள்
உயிர்ப்பெய்தே "உசா´ வந்தன.-ஆயின்
மனிதமற்ற பிண்டங்களால் எல்லாமே????

தனக்காக வாழாமல் தமிழீழத்திற்காக வாழ்ந்த
தத்துவஞானியே!
சத்தியனே!
பார் இந்த பாரில்--
எம் பரப்புக்கள் எல்லாம் வரப்பிழந்து-
பாறி,
அரசியல் அனாதைகளாக அவனியில் எங்கள் பவனி—
யார் ஆற்றுவார் எங்கள் யதார்த்த யாதகத்தை?

உனதான உறுப்புக்களை உலகறியும்—எமதான
தரப்புக்களை எவர் அறுப்பர்?
கானகங்கள் கருகுகின்றது.
உனதான இழப்புக்கள் ஆற்றாமைக்கு அப்பாற்பட்டது.
விழுதாக நீ எறிந்த வியர்ப்புக்கள் என்றாவது
நுகம் நூர்க்கும்.
நம்பிக்கையே வாழும் நமக்கு ஓர்மம் தரும் ஓணம்.

உன் நினைவுகளை எங்கள் கரம் என்றும் இறுகப்பற்றி
நாளைய விடியலிற்காய் நாம் உழல்கின்றோம்,இல்லை
உயிராக உழுகின்றோம்,உலகப் பரப்பில்
எங்கள் உரிமம் கோரி-
உளதான உனது பாதப் பரப்பில் உதயம் தேடி.

உத்தமர்கள் எத்தனையா நாம் இழந்தது.எல்லாமே
நாளை ஓர் நர்த்தனம் எம் ஈழப் பரப்பெழுதும்.
விடியல் தேடும் விடுதலை களம் காண
நாம் நாளும் பொழுதும் நயமாக உழைப்போம்.
ஆதலால் நாம் ஆழும் அழுகலை ஆர்ப்போம்.

ஈழ தேசத்தின் எழ குரலே!உன்
ஆர்ப்புக்கள் அழுகலாகிப் போகா,
சத்தியவேள்வியின் சாரங்கள் சங்கூதும்-நாளை
வித்தகராம் எம் மாவீரம் சந்தித்த சாரங்களாய் சாரல் தூவும்,
அது தமிழுக்கு உண்டு நாடென்றே நாயனங்கள் ஊதும்.

எம் தேசத்தின் தேமாங்கான தேசத்தின் குரலே,
உமதான அரசியல் தத்துவம் அன்று அரங்கேறும்.
நாட்டுக்காக தனை ஈன்ற செம்மலே உன் தாபனத்தின்
மேல் நின்று எமதான அந்த அழகிய தேசம்-உன்
பெயரெழுதி பெருமை சேர்க்கும் பொய்கை கூடும் வரை
எங்கள் குவலயம் சோராது.

பூமிப் பந்தில் புலரும் உந்தன் கனவுகள்-அந்த
கலயம் காவும் கனதியாக எங்கள் கனவு நனவாகும்,
அந்த பொன்னான நாள் புலர புலம் பெயர்
உறவுகள் நாம் உங்களின் ஓர்மமான நினைவுகள் புடை
சூழ ஓயாமல் உழைப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இந்த வேதங்கள் உலகொலிக்க,
உங்கள் ஞானங்கள் வழி சமைக்க,
தூங்காத கோணங்கள் கொலுவமைக்க,
ஈழ இதயத் தூயவன் வலுவூட்ட,
நீங்காத நினைவெழுதி நேர்மையாய் நெய்வோம்.
தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.

திங்கள், 7 டிசம்பர், 2009

இவ் வையகம் எந்த உவப்பள்ளி முன்னுரை எழுதப் போகின்றது?


மனையாளை நினைக்கின்றேன்
மற்றும் எமது மக்களை எண்ணுகின்றேன்-என்
சுற்றம்,உற்றார் உறவினரை உற்றே நோக்குகின்றேன்,
சூழலில் சுகமாற்றும் சமூகத்தை சார்ந்து பார்க்கின்றேன்.

எவரிடத்தும்,ஏதோ சோகம்,
கவழ்ந்திருப்பதையே காணக்கூடியதாக--
சுவரிடத்து ஒட்டப்பட்ட கறைகளாக,
ஏதோ களங்கம் சுரப்பதாக---
இடர் தாங்கி இழையோடும்,
சொல்லவெண்ணா துயர் துலங்குவதாக--
படர்ந்திருக்கும் பார்வையே என் படரலில் பரவுகின்றது.

போலியான புன்னகை,
விரக்தியான பார்வை,
இலக்கற்ற இழப்புக்களின்,
இன்னதுதான் என்ற இயல்பை கூறவும்,
கிரகிக்கவும் முடியாத,
ஒரு உன்னத இழப்பை உயிரினும் மேலான ஊட்ட சக்தியை
உறுதியுடன்,இரும்பை ஒத்த இருப்புடன்
உலாவர உவப்புக்களை, உரசவிட்டூ--

உலகப்பரப்பெங்கும் உறைந்திருக்கும்--எம்
உன்னதங்களின் ஏக்கப் பெரு மூச்சில்-ஈழ
மண்ணின் மகோன்னத,மருவற்ற,
மகோற்சவர்களின்-
தியாகங்களின் வரையறைக்கு அப்பாற்பட்ட-
உதயங்களின்,உற்பவங்களின் இலங்கல்களிற்கு -இவ்
வையகம் எந்த உவப்பள்ளி,
முன்னுரை எழுதப் போகின்றது?

அவலம் விதைத்தவனிற்கே அதை ஆவணமாக்க.


சிரிப்பெழுதும் நேரம் எம்
சிந்தை கொள்ளுமா?இந்த
விரிப்பெழுத எங்கள் களம்
வியப்பேத்துமா?

ஆகும் என்பதாக எந்தன் ஆவி அள்ளும்
அனந்தம் வெறும் ஆசைதானா?இல்லை
ஆக்கினாரே என்று இணையம் அரற்றும்
ஆக்கம் மெய்தானா?

குழப்பம் குடி புகும் குதர்க்கம்
குலம் சூடுமா?இது என்ன மாயை என்றே மனம் இருள் சூடுமா?
ஏதா ஒன்று ஒளி கூட்டும் என்ற உத்தி உயருதே.காலம்
கருவூட்ட காத்திரு என்றே புத்தி புலருதே.

யார் குத்தினாலும் ஆரியப் பழு தீர்க்க அனல்
அரியும் அவை கூடுமே! இந்த அரிய நீதி அகம் ஆற்றுமே.
அவயம் புனையும் ஆக்கமான இந்த தேற்றம்
அனிச்சையாகவே அவனியில் அரன் அமைக்குமே.

வெங்களம் இப்பா வேறு திசைதான்,ஆனாலும்
வேட்கைகள் சுமந்த அந்த நேத்திரர்கள் நேர்த்தியை முடிக்கும் காலம்
கண் அசைவிற்காய்,
உறங்கு நிலை யாத்த அற மெளனர்கள் இயற்றும் இந்த
துறவு நிலை தூரமகற்றி தூர் அள்ளுவர்,துலங்கும் துயரம் துடைப்பர்.

இது தொலைதூர கனவாகாது,
நனவாகும் லயம் லாவகமாக இலங்கும் இணைப்பிற்காய்
இருளிற்குள் எங்கள் இளையோர்கள்,நாளை ஒன்று கூட்டி
நாட்டுவர் நலங்கிடும் நமது கொடி.

புரிதல் என்றும் தெளிவானால் குழப்பம் குன்றும்.
தெரிதல் அதில் தேர்வானால் உறுதி ஊன்றும்.
சரிதல் உலகில் சாசுவதமில்லை புரிதல் வேண்டும்
விரிதல்,விழ,விழ எழுதலே சரியென்ற தைரியம்
எரிதலை அழிக்க விழுதேந்தலே-அக
அரிதலை அழிக்க ஆற்றலான ஒளவ்வியம்.

செரிக்கும் மனம் வேண்டும்,உரிக்கும்
உணர்வேந்த உய்விக்கும் உரிமையேந்த
புனருத்தாரண புது வித்துக்கள் புலம் ஏந்த
சீவாருத்தாரண சீவியம் சுரக்க,
எரிதலை எரிதணலாலே!
எந்த ஏகாந்தத்திலும் ஏந்தவே வேண்டும்.
அவலம் விதைத்தவனிற்கே அதை ஆவணமாக்க.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.


அஞ்சாத தளம் இது,
ஆர்ப்பெடுத்த நிலையிது,
இயல்பினிலே ஈர்க்கும்.
உறவது உரிமையை உரைக்கும்.
ஊக்கமாய் உறுதி ஊட்டும்.
எதிர்ப்பதில் அது ஏணமே ஏற்றும்.
ஐயமகற்றி ஆவன ஐக்கித்தே,
ஒப்புரவாக்கி ஓதாமல் ஒப்பித்தே,
ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.

எங்கள் கொற்றவனை!
வெஞ்சமர் நாயகனை,அரசியல் ஆற்றலனை,
துஞ்சாத அந்த சூரிய தேவனை,
விஞ்சாத அந்த விற்பனனின் வீரிய வரவை!
மிஞ்ச முடியயாத அந்த மூத்தவனை,

எங்கள் களமிறக்க வேண்டுமெனில்,
ஏற்ற காரியம் ஏற்றமாய் முடிப்போம்.
திண்ணியமாய் அந்த,
தீர்மானத்தை திடமாய் முடிப்போம்.
வழுவில்லா வரம்பாய்,
பழுவில்லாமல் இத் தரணியில் தாக்குதல் செய்வோம்.

உருத்திரனின் உயர்வான ருத்திரங்களை,
ரூபமாய் ஆக்குவோம்.
நரித்தனம் இனியும் ஞாயிக்க விட்டிலோம்.
பரித்தலம் பற்றும் பாதையை விலத்தி,எங்கள்
கைத்தலம் பற்ற கனதியை கலப்போம்

இயற்பது இயல்பாய் அது இலங்கும்.


சிலிர்த்தவைகள் என்றும் சிரிக்கும்,
இயற்பது இயல்பாய் அது இலங்கும்,அங்கு
உதிர்ந்தவைகளும் ஓர் நாள் உயரும்,இது
ஓர்மங்களில் ஒளிர்பவை,எனவே
தர்மங்களின் சாட்சியாய் தடயமாய்
தரை விரியும்.

நிமிர்வுகள் உடனே நிர்ணயிப்பதில்லை எதையும்
அவை அவைகளின் அலுப்புச் சலிப்பிலேதான் உயிர்த்தெழும்
இது காலச் சக்கரத்தில் காத்திரமான காட்சிகள்,காடுகள்தான்
இன்று நகரம்,அது இந்த நிலை பூக்க இழந்தவைகள் எண்ணிலடங்கா,

எத்தனை உயிர்,உடமைகளில் எரிந்தவைகள் ஏராளம்,
அத்தனை இழப்புக்களையும் ஈய்ந்தவர்களையும்
இலக்கற்று,இழைத்தவர்களையும்,ஈனத்தனங்களால்
இயக்க மறந்தவரையும் இலக்கற்று இந்த யுகம்?????

இன்று இமயமாய் சனநாயகம் பேசுகின்றது.
பேடித்தனமான பேகம் இல்லை போகம்
பலவற்றின் பாமரத்தனமான,அல்லது ஈனத்தனமான
மனிதாபிமானம் மரத்த போக்கில் எல்லாமே,
ஒன்று மட்டும் நெடுதான உண்மை
நாம் நடமாடும் உலாத் திசையெல்லாம்
இரத்தமும்,சதையுமாக
அழுகையும்,ஓலமுமாக,
எதிர் பரப்பெல்லாம் பரத்து,
விழுதெறியா,விழுதறியா
விகல்பாய்,விதை சிதறி.

நெஞ்சம் நெகிழ்வேத்த,ஏந்த
இந்த வையப் பரப்பு இராகு காலம் பார்ப்பதில்லை,
அதன் இயங்கு தளம் அதன் பலத்தில் இல்லை.
பலமான பார்ப்பனர்களிடம் இந்த வையத்தின் மையங்கள்.

இங்கு பலமான பாத்திரர்களே பாதை விரிப்பார்,அஃது
அற்றவர்களெல்லாம் அற(ர)வாணிகளே.
கனிம வளங்களெல்லாம்,கற்றவன் பாதையில்
காசு பணத்துடன் பத்திரமாய் பற்றேந்தும்.

இனமான உணர்வெல்லாம் இந்த வையத்தில்
வளமேற்றாது,
கனதியான உணர்வேந்த அதை பயங்கரவாதமாய்
இப் பரப்பு பரப்பெழுதும்.
ஈடாடிப் போனாலும்,இந்த இகம் இலங்க மனமெழுதாது.
வாழும் பரப்பிழந்து நாம் ஆயுள் பூராய்
அக நாட்டிலும்,புல வாழ்விலும் பரி பூரணமாய்
நாம் புலமேவிலும் புதிய அகதிகளே.

எனினும்
இப்போதும் நாம் ஒன்றாய் இயங்க மறுத்தால்
மாற்றுக் கருத்தென்று வடம் இழுக்க வகை இழந்தால்
போற்றும காலம் பொலிவிழக்கும்,
தோற்றம் இனி தோரணை இழந்து
மீண்டும்,மீண்டும்
தோணி ஏறவே சோரம் சேரும்.
இணைந்திங்கு இயற்ற மறுத்தால்.
வேண்டாம் வேதமெழுத வேகமாய் வா.
சிலிர்த்தவைகள் என்றும் சிரிக்கும்,
இயற்பது இயல்பாய் அது இலங்கும்.
இலங்கவா --இழக்கவா?
இருதயம் இதந்து இயங்க வா.

வலைப்பதிவு காப்பகம்