வியாழன், 31 டிசம்பர், 2009

ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.


உலக ஒழுங்கை உற்றுக் கவனி.நீ
உலவ இதை உவப்பாய் அவதானி.
நிலவும் நீட்சியை நிர்மலாய் நிதானி.இல்லையேல்
பலவும் உன்னை பாழாய் படுத்தும்.சிலதென்று
எதையும் சினந்து புறம் தள்ளாதே.

எதனதன் ஆரம்பமும் என் வீட்டு-
முற்றத்தில்தான் முகிழ்க்கும்-எனதான
சிரத்தைகளை நாமொதுக்க.
அதனால்தான் ஆயிலியத்தை அகமாக பேண-
ஆவன நாமாற்ற அகமேந்த அரணமைப்போம்.
இல்லையெனில்!
தாமதமான தரமாக தானே சரணாகதி.
எல்லாமே எப்போதும்.எங்கேயும் என்றும்.

சாட்டுக்கள் சாட்டி சரமமைப்பதை,
சகமாக கூட சாலை வகுக்காதே.
இகமான வாழ்வில் இதமான அணுகு முறை,
ஒன்றது வேண்டும் இல்லாதெனில்,
ஒவ்வொரு விநாடியும் ஓயாத மன உ(ழை)ளைச்சல்
மதியூகம் கொண்டு மானசீகமாய் யோசி.
மற்றதெல்லாம் மாண்பாக மார்க்கம் அமைக்கும்.

ஒட்டுக் குழவாய் வாழாதிருக்க,
ஒற்றுமையை ஓர்மமாய் வளர்.
விட்டுக் கொடுப்பதை விவேகமாய் விதை.
தட்டிக் கேட்கும் தைரியம் பேண்,எதையும்
தார்மீகம் பேணி தரணியில் உழை.

வாசிக்கும் பழக்கத்தை வாழும் வரை பேண்.
வரலாற்றை அறிவதில் வாஞ்சையாய் வகைபாகம்.
தரமான தாக்கத்தை தண்மையாய் தெரிந்தெடு.
நேசிக்கும் நேர்மையை நேயமாய் நேசி.
சிந்தித்து செயலாற்றும் சீலத்தை கடைக்கொள்.
நிந்தித்து,வஞ்சினமாற்ற கிஞசித்தும் நினையாதே.

ஆம்!
இதெல்லாம் ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.
ஆயின்!
இன்று!
சுயநலமே தோழமையாற்றும்
கயவர்களால் எந்த
ஆயுதத்தை கலயமேந்தி கருவேற்ற?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்