புதன், 23 டிசம்பர், 2009

திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே!


திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே-உன்
திரு முகம் காண திசைகள் திரும்புமே.உன்
ஒரு விழி கூறும் ஓர்மம் பகைவர் பெரு விழி மிரளும்-உன்
இரு விழி இயம்பும் இலங்கல் புரிய இலங்கை அதிருமே.
குரு விழியாக குவியம் குவிக்க குல மகனே குதிராயா?

இரும்பு இதயம் கொண்டாய் இருளர் இலங்கல் இரைந்தது-நீ
கரும்பு உள்ளம் கரைசலாய் கவித்ததில் களமே நிறைந்தது.-உன்
கரிசனங்கள் கலந்தபோது ஈழக் கலயம் கனிந்தது-உந்தன்
உரிமைச் சங்கு ஊதியபோதே உலகம் உணர்ந்தது.நிந்தன்
பரிவு பார்வை பகிர்ந்தபோதே பவனி புரிந்தது.

இரண்டகம் புரிந்த ஈனர்களை இனம் காண நீ படைத்த,
இமாணயர்கள் எத்துணை இடுக்கண் வரினும்,
எத்தனை ஈனர் கண்டாய் களத்தில் உன் கனதி தெரிந்தது.
இழைந்து,
சித்தம் கலந்து சிதைக்க சினந்தாய் சிலர் திமிரே சி(தி)ரைந்தது.
அத்துணை ஆற்றல் அலையாய் உன்னில் அமரர் அணைத்தனர்-அவர்
ஆவி,உடல் பொருளெல்லாம் உன்னால் உதித்தது-மாவீரக்
கனல்களெல்லாம் மாதவம் செய்ய உனையே சூழ்ந்தது.

இராச தந்திரம், அரசியல் ஆவணம், ஈழக் கட்டுமானம்,
இராசாதி ராசன் சோழப்பெரு வேந்தனின் தோகையை தொட்டதாக,
ஈழம் களித்தது.தமிழீழம் களித்தது.
தேசக் கட்டுமானம்,
தேவையான சேந்தல்கள்,
விஞ்ஞானத்தின் விதைப்பு,
சாதி ஒழிப்பு,சீதனக் காப்பு சட்டம்,
விதியின் வரைபூ உன் மதியின் தெளிவு.
ஈழ செளமியத்தின் செளபாக்கியம்,ஈனமாக இழைத்த
இழிவுகள் இறைந்தே கழிந்தது.

மனிதாபிமான மரபுக் கட்டளை,
மனித நேயம்,மாந்தர் உள்ளம் மதிக்கும் தன்மை-அதில்
பூத்த தண்மை,மென்மை,பதித்த மேன்மை-இத்தனை
வித்தகமும் விதைத்த வீரியா -- இன்று
உன் அன்பான முகம் காண,ஆசியான வார்த்தை கேட்க
விகசிக்கும் எம் மனம் மானசீமாய் மருகுகின்றது.

வார்த்தைகட்கு அப்பாற்பட்ட வைராக்கியம்-ஆளுமையின்
ஆர்ப்பு வசீகரப் புன்னையின் புறுவல்.
தேர்ந்த தேசியம் தேவையின் தேடல்-ஆதலினால்
அகமெல்லாம் ஆக்க வேண்டிய ஈழத்தின் ஆதங்கம்.
அரிய,பெரிய ஆவலின் ஆதாரம்,அவதாரம் ஆக
உரியவர்களின் உள்ளக் கிடக்கறிந்து ஊக்கம் உருத்த தெரிவுகள்,
மலரும் மணம் அறிந்து வேர் நாட்டிய வேதம் நீ.
பரிவுகளின் பாகம் உதிரிகள் ஆகக் கூடதென்பதான
ஊக்கம்,
உள்ளதெல்லாம் உதயமாகும் ஈழப்பரப்பிற்கே என்பதில்-
எள்ளளவும் ஐயம் திரிபுற அர்ப்பணிக்கும் ஆதார்சம்
எந்த இனத்திற்கு இப்படி ஒரு தலைவன் என்பதில்
அகிலத்திற்கே ஆளுமையற்ற பொறாமை.

ஐயனே!
என ஆரும் அழைப்பதில் பெருமை தவிர்க்கும் பெரும் விம்பம் நீ.
ஈழ இனத்தின் இயலாமையை ஒட்டு மொத்தமாக கரைப்பதில்-
ஈகமான பெரும் கருணை.
தன் கடமையை தட்டிக் கழிப்பதில் தமிழனிற்கு நிகர் தமிழனே.
இதை இயல்பாக சுட்டி இயலாமையை இகழ்ந்ததில் நீ இமயம்.
ஈர்த்தெடுத்து இனத்தின் ஈகத்தை இகம் மலைக்க வைத்த இயல்பன் நீ.

அவலத்தை தந்தவனுக்கே அதை ஆசுவாசமாக திருப்பி,
ஆர்த்து கொடுக்க ஆளாக்கியதில் அவனி அவதானிக்க வைப்பதில்,
அலாதியாக தைரியம் தைத்த தைலவன்.
தாற்பாரியத்தை தக்க வைப்பதில்-
தாண்டவன்.
எதிரிக்கு என்றுமே எமன்-அவன் படை கட்டும் கட்டுமானம்
சுட்டுவதை சூத்திரம் சுதாகரிக்கா சுமையவன்-என்றும்
உதிரிகளுக்கும்தான்.
உரியவன்-
உவப்பான உரிமையின் உலகவன்.உலவவன்.
தெரிவான பாதை தெளிக்கும் உதயம்.
உரிய நேரம் உதயமாகும்-எங்கள் உதய உரிமம்.
அன்று தெளிவாகி சேமம் விசாரிக்கும்-உலக தேசமெல்லாம்
தெவிட்டாத சேதிகளாக,சோதி ஒளிர சோகம் அகல ஆருடமா எமக்கு தேவை?
அல்ல அல்லும்,பகலுமாய் அயராதுளைத்த ஆளுமைகளே நாளை,
எம் வயல் வகுக்கும்
தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்