ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.


அஞ்சாத தளம் இது,
ஆர்ப்பெடுத்த நிலையிது,
இயல்பினிலே ஈர்க்கும்.
உறவது உரிமையை உரைக்கும்.
ஊக்கமாய் உறுதி ஊட்டும்.
எதிர்ப்பதில் அது ஏணமே ஏற்றும்.
ஐயமகற்றி ஆவன ஐக்கித்தே,
ஒப்புரவாக்கி ஓதாமல் ஒப்பித்தே,
ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.

எங்கள் கொற்றவனை!
வெஞ்சமர் நாயகனை,அரசியல் ஆற்றலனை,
துஞ்சாத அந்த சூரிய தேவனை,
விஞ்சாத அந்த விற்பனனின் வீரிய வரவை!
மிஞ்ச முடியயாத அந்த மூத்தவனை,

எங்கள் களமிறக்க வேண்டுமெனில்,
ஏற்ற காரியம் ஏற்றமாய் முடிப்போம்.
திண்ணியமாய் அந்த,
தீர்மானத்தை திடமாய் முடிப்போம்.
வழுவில்லா வரம்பாய்,
பழுவில்லாமல் இத் தரணியில் தாக்குதல் செய்வோம்.

உருத்திரனின் உயர்வான ருத்திரங்களை,
ரூபமாய் ஆக்குவோம்.
நரித்தனம் இனியும் ஞாயிக்க விட்டிலோம்.
பரித்தலம் பற்றும் பாதையை விலத்தி,எங்கள்
கைத்தலம் பற்ற கனதியை கலப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்