ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.


காத்திருக்கும் கதை சாற்ற
காதலியை காணவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்
வீற்றிருந்தாள் வியாபித்திருந்தாள்-இன்று
விடியலில் காணவில்லை-இந்த
விந்தையும் புரியவில்லை.

காற்றுக்கு புரியும் காரிகையே ஏன்
காதலில் காணவில்லை?அவள் பூத்திருந்த
புன்கையும் பூமியில் புலரவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்-நோத்திருந்தாள்
எனை ஏற்றிருந்தாள்-இங்கு யாகத்தை காணவில்லை.

காதலில் வேதனை யாருக்கும் புரியும்
ஏன் இவளிற்கு புரியவில்லை?பூ
வீழ்ந்தபின் மிதிக்கும் மானிடம் சிரிக்கும்
வலி புரியா வஞ்சி நீயே! நாளை நீ நயக்கும்
நர்த்தனம் ஞாயிக்க நான் இருப்பேனா-நீயிருப்பாய்
நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்