வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மாதினி வேதனை°

ஊர் உலவ மனமேவி
உற்சாகம் பொங்க மனை ஏவி
தற்காப்பு கலசம் களைய
எக்காப்பு பூண்டேன்?

ஈசன் என்பார்.
ஈதலும் என்பார்.
நாக்கில் நாவூற
நாயகன் என்பார்
உறவாடி கெடுத்து என் உயிர்மைமை கொன்ற
இந்த
உடன் பிறப்பை என்னென்பேன்?

ஓதுகின்றார்
கந்த புராணாம்
ஓதுவதோ
எந்தன் புராணம்
சீந்த வழியின்றி என்
சீதளம்
புதைத்த


இந்த காந்தளர்கள் போதும் என்
"கா"
மலர்கள் கொள?
வேண்டாம்


இந்த
வைதினில்
விழுப் புண் ஏந்திய
மாததர்கள் தவிர
உடன் பிறப் எல்லாம்
உதிர்ந்துபோகட்டும்-

வல்ல பகை எதிர்த்த
புலமைகள் ஊர்வர
செல்லட்டும் -இந்த
செவிட்டு முண்டங்கள்._

தொடருவேன்
என்

வலைப்பதிவு காப்பகம்