ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பிரபஞ்சமே ஒரு பிரமிப்பு.


பட்டம் விடும் பாரம்பாரியம் அல்ல
பொங்கலின் தாற்பாரியம் பரிகாரமும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செயா
எந்த வளவும் ஏந்தாது.
நல்ல விளைவு ...

வீட்டுத் தோட்டம் செய்தவன் நகிலட்டும்
விவசாயியின் வீர்யத்தை.
இதன் பரிமாணத்தை ஆதலால் கிடைத்த பவுசை.
நன்றிக் கடனாற்றும் நயனம் சூடுவதே
பொங்கலின் சிறப்பாம்சம்.
ஆயின்!
வயிற்றை நிரப்ப வாய்க்காலில் தனை முகிழ்த்த
விவசாயிக்கு நாம் செய்த நன்னெறிக் கடன் யாதோ?

மலரும் நினைவுகளா?
எப்படி உய்யும் எம் மரபு??--
வேண்டாம் இனியும் ---

கடற்கரை காற்றும்
கலம் கொளா பட்டத்தின் பறப்பும்.
இள வயதின் கோலங்கள்.
உண்மை.
அது -
ஒரு பரவசக் காலம்.

விடுப்புப் பார்ப்பதுவும் விண்ணை முட்டும்
விண்ணும் விழி பரவும் வியப்பும்.
காற் சட்டையுடன் மூத்திரம் போனதுவும்
மேற் சட்டையில்லாமல் மேதினியில் ஆடியதுவும்
ஆக
பருவத்தே ஆன பழுப்பும்
காலங்கள் ஒவ்வொரு விளையாட்டையும் நிர்ணயிக்கும்.

உழவுனிற்கு நாம் என்றாவது
உளப் பூர்வமாக ஏதாவது ஆற்றினோமா?
களங்களும்,களனிகளும் கால்படாமல் போயிருந்தால்
உண்ண உணவிற்கு உலர்வுற்று
காட்டுவாசியாய் கலமேந்தியிருக்கும் கணம்.

இயற்கையில் மனிதம் படைத்த மனிதன்
ஈவுகளற்றி ஈடற்ற விளை நிலமாய்
ஈர உளம் கொண்ட கற்பகமல்லவா விவசாயி
இக் கணமென்ன எக்கணமும் ஊடும் நன்றிகள்
இகமியங்கும் இவர்களால் இயற்கைக்கும் எம் நன்றிகள்.

உழவர் திருநாள் பெரு நாளாக என்றும் ஓங்கட்டும்.
ஊனக உள்ளங்கள் தவிர்த்து.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

value="http://videozer.com/embed/9x85ggbk" >

வியாழன், 12 ஜனவரி, 2012

இழையும் ஆதங்கம்.


என்று பூர்த்தியாகும் என
என்றும் எழும் கேள்விக்கு

நன்றான பதில் நவில நாநிலத்தில்
நம்மவர்கள் யாருமே இல்லையா?

குன்றாக நிமிர்வெழுதும் குவியமிது
கூடவே மன்றமாய் எம் மதியர்கள்
நின்று கூடுவர்.
நிலையெழுதுவர் என்ற ஏக்கமது குலவ
தலை கொள்ளும் தளைகளாய் தரணியில்
ஒன்று கூடி வடமிழுப்போம்.
ஒய்யாரமாய் இதை நிறைவு கொள்வோம்.
சித்திரைக்குள் என சிலிர்க்கும் நனவுகளுடன்...

நண்பர்களே!
அன்பர்களே நினைவில் கொள்ளுங்கள்
நிதி வேண்டும் இன்னமும் 14 இலட்சமென்பதை
இலட்சியமாய் இதயத்தில் கொள்வதுமட்டுமல்ல

ஈதலாக ஈயணும்.ஈசனாக மாறணும்.
ஈடில்லா இலட்சியமாய் இவ் வருடமே முடிக்கணும்.

ஆயத்தமாகுங்கள் இறுதிக் கட்ட நிதி நல்க.
காரணங்கள் தேடி ரணங்கள் சூடாமல்
தோரணங்கள் கட்ட தோழர்களையும் இணையுங்கள்.
சோர்வகற்றி இலங்குங்கள்.
சேருமிடம் சேர.

திங்கள், 2 ஜனவரி, 2012

எழுதவா?_


எழுது
ஏதாவது
இல்லை எதையாவது???
எண்ணங்கள் எழுகின்றது.

எழுதவா?
விடவா?
வைகறையிலும் வானம்-
இருள் மொள்ளும் போதினிலும் எழும்
எண்ணங்களை என் செய?

யாருக்காகவும் பதியும் பதிவல்லை-
ஒரு வகையில் என் மன,மான திருப்திக்காகவா?
அல்லது எதையாவது சுட்டி என் எண்ணங்களை ஈடேற்றவா?

ஏதும் இல்லை என எனை நானே ஏ(ன்) மாற்றவா?
இல்லை பொழுது போக்கவா?

ஆதங்கம் சார்ந்த அங்கலாய்ப்பா?
தங்ககங்கள் தேடும் சந்தமா?
தங்காதவரை தடுத்திடும் தளமாக்கவா?
அங்கமதை அர்ப்பணிப்புடன் அளித்திட ஏங்கும்
பங்கமிலா பரிதவிப்பா?

புரிந்தவர்கள் பதிவெழுதுவார்.அஃதற்றோர்
அப்படியே விழி பிதுங்க நான்-
எதை எழுத?எதை விட?

எனினும் எழுதுவேன் என்கின்ற
தெளிவினில் என் தேடல்கள் தொடர எழுதுவேன்.
எது தேவையோ?
எதில் தேடலோ
என்ன தேடலோ?

அதையெலாம் எழுதுவேன்.என்
எதிர்பார்ப்பு தொடர --??!!
தொடரும் தொடரெழுத எழுதுவோம்
என எனையாரும் பிறழாதகற்றும் வரை.

வலைப்பதிவு காப்பகம்