
என்று பூர்த்தியாகும் என
என்றும் எழும் கேள்விக்கு
நன்றான பதில் நவில நாநிலத்தில்
நம்மவர்கள் யாருமே இல்லையா?
குன்றாக நிமிர்வெழுதும் குவியமிது
கூடவே மன்றமாய் எம் மதியர்கள்
நின்று கூடுவர்.
நிலையெழுதுவர் என்ற ஏக்கமது குலவ
தலை கொள்ளும் தளைகளாய் தரணியில்
ஒன்று கூடி வடமிழுப்போம்.
ஒய்யாரமாய் இதை நிறைவு கொள்வோம்.
சித்திரைக்குள் என சிலிர்க்கும் நனவுகளுடன்...
நண்பர்களே!
அன்பர்களே நினைவில் கொள்ளுங்கள்
நிதி வேண்டும் இன்னமும் 14 இலட்சமென்பதை
இலட்சியமாய் இதயத்தில் கொள்வதுமட்டுமல்ல
ஈதலாக ஈயணும்.ஈசனாக மாறணும்.
ஈடில்லா இலட்சியமாய் இவ் வருடமே முடிக்கணும்.
ஆயத்தமாகுங்கள் இறுதிக் கட்ட நிதி நல்க.
காரணங்கள் தேடி ரணங்கள் சூடாமல்
தோரணங்கள் கட்ட தோழர்களையும் இணையுங்கள்.
சோர்வகற்றி இலங்குங்கள்.
சேருமிடம் சேர.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக