திங்கள், 2 ஜனவரி, 2012

எழுதவா?_


எழுது
ஏதாவது
இல்லை எதையாவது???
எண்ணங்கள் எழுகின்றது.

எழுதவா?
விடவா?
வைகறையிலும் வானம்-
இருள் மொள்ளும் போதினிலும் எழும்
எண்ணங்களை என் செய?

யாருக்காகவும் பதியும் பதிவல்லை-
ஒரு வகையில் என் மன,மான திருப்திக்காகவா?
அல்லது எதையாவது சுட்டி என் எண்ணங்களை ஈடேற்றவா?

ஏதும் இல்லை என எனை நானே ஏ(ன்) மாற்றவா?
இல்லை பொழுது போக்கவா?

ஆதங்கம் சார்ந்த அங்கலாய்ப்பா?
தங்ககங்கள் தேடும் சந்தமா?
தங்காதவரை தடுத்திடும் தளமாக்கவா?
அங்கமதை அர்ப்பணிப்புடன் அளித்திட ஏங்கும்
பங்கமிலா பரிதவிப்பா?

புரிந்தவர்கள் பதிவெழுதுவார்.அஃதற்றோர்
அப்படியே விழி பிதுங்க நான்-
எதை எழுத?எதை விட?

எனினும் எழுதுவேன் என்கின்ற
தெளிவினில் என் தேடல்கள் தொடர எழுதுவேன்.
எது தேவையோ?
எதில் தேடலோ
என்ன தேடலோ?

அதையெலாம் எழுதுவேன்.என்
எதிர்பார்ப்பு தொடர --??!!
தொடரும் தொடரெழுத எழுதுவோம்
என எனையாரும் பிறழாதகற்றும் வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்