செவ்வாய், 27 டிசம்பர், 2011

பிரான்சில் தலைவரின் ஒளிப்படத்துடன் கூடிய தபால் தலை வெளியீடு.


என்னே ஒரு அற்புதமான சேதி.
மனதில் ஒரு வகை இறுக்கம் தளர்ந்தான,
ஆத்ம திருப்பதி.
பேரிருள் ஒன்றில் ஏதோ ஒரு பொறி தென்படுவதாக
ஆதார்ச நிகழ்வது.

ஆம்!
இன்று பிரான்சு எனும் ஐரோப்பிய நாடானது
தமிழினத்தின் பெருந்தலைவனாம் மேதகு பிரபாகரனது
போர் முகம் ஒளிர
அவர் தம்
ஒளித்தடத்துடன்
தமிழீழத்தின் வரைபடம் முதல்-
அதன் தேசியத் தன்மைகளான-
தேசியப் பூவாம் கார்த்திகைப் பூவையும்,
தமிழீழ தேசியகொடியையும்,
தபால் தலைகளாக வெளியிட்டு எமது பெருந்தலைவனையும்
அதன் தார்மீக போராட்டத்தையும் கெளரவப்படுத்தி எமது தார்மீக போராட்டத்தை,
ஏற்றுக் கொள்ளக் கூடிய புறச் சூழலை உருவாவதற்கான
வெளிப்பாடாக என் கருத்து இங்கு பதிவாகின்றது.

பிரான்சின் தபால் துறை அமைச்சு இந்த தபால் தலைகளை இன்று அதிகார பூர்வமாக வெளியிட்டு வைத்தது.இந்த பெரு நிகழ்வு எம்
விடுதலைக்கு தாயக உறவுகள் இதுவரை சிந்திய குருதிக்கு கிடைத்த ஒரு சிறு
தார்மீக வெற்றியாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ததானது எம்
முன்னேற்றத்தின் பல தடைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இதனால் பல தடங்கலுடன் கூடிய போராட்ட பின்னடைவை 2009 வைகாசியில் தேசிய ஆயுதப் போராட்டம்
மெளனிக்க வைக்கும் வரை அகோரமான தன்மையை ஏற்படுத்தியது இங்கு பலராலும்
நினைவுகொள்ள வேண்டிய நிகழ்வாகும்.

ஒன்றை இழப்பதால்தான் இன்னொன்றை பெறமுடியும் என்கின்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பு இது.

எனவே இப்படியான புறச் சூழலில் ஏற்படுத்தப்பட்ட அதாவது வெளியிடப்பட்ட தபால் தலைகளை தமிழர்கள் தமதான தபால் மற்றும் பொதிகளை பட்டுவாடா செய்வதற்கு பிரயோகிப்பதன் மூலம் எமது போராட்டத்தின் மறுபக்கத்தை உலக சமூகத்தில் மிக சுலபமாக சென்றடைய வழி வகுக்கும்.

ஆவன செய்ய வேண்டியது பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் ஆற்ற வேண்டிய பெரும் பணியிது.

நன்றி.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011


எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு
இன்று அகவை ஒன்று கூட
அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.
வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.
என் மனம் யாகிக்கும்
புவனத்தின் மெளவலில்
இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!
விடியலில் வீதி திறக்கும்.
ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்
அகம் சொரியாது.

தாளில்லா தடயம்
பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.
ஈழப் பெரு வீச்சே!
நீ ஏற்றிய புரட்சி வரிகளில்
ஈழம் நிமிர்வெய்தும்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மாதினி வேதனை°

ஊர் உலவ மனமேவி
உற்சாகம் பொங்க மனை ஏவி
தற்காப்பு கலசம் களைய
எக்காப்பு பூண்டேன்?

ஈசன் என்பார்.
ஈதலும் என்பார்.
நாக்கில் நாவூற
நாயகன் என்பார்
உறவாடி கெடுத்து என் உயிர்மைமை கொன்ற
இந்த
உடன் பிறப்பை என்னென்பேன்?

ஓதுகின்றார்
கந்த புராணாம்
ஓதுவதோ
எந்தன் புராணம்
சீந்த வழியின்றி என்
சீதளம்
புதைத்த


இந்த காந்தளர்கள் போதும் என்
"கா"
மலர்கள் கொள?
வேண்டாம்


இந்த
வைதினில்
விழுப் புண் ஏந்திய
மாததர்கள் தவிர
உடன் பிறப் எல்லாம்
உதிர்ந்துபோகட்டும்-

வல்ல பகை எதிர்த்த
புலமைகள் ஊர்வர
செல்லட்டும் -இந்த
செவிட்டு முண்டங்கள்._

தொடருவேன்
என்

புதன், 27 ஜூலை, 2011

எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,
தொழுதெழுதி தோழமை சூட்டி,
விழுது பற்றி விவேகம் பாராட்டி,
பழுதகற்றிய எம் பத்மர்களை-
இருதயத்தில் பூட்டி,
இருளேந்தா மலர் கொட்டி,
தருணங்கள் வினாடியாக தாள் பணிந்து,
என் இருதயச் சக்கரத்தில் நாளும் நினைவேந்தி,
நாத் தழுதழுக்க நினைவே பாரமாகும்
அவர் தம் ஈகங்களின் அடிச்சுவட்டில்.
ஆண்டோ இரண்டாக அவர்
தியாகங்களின் யாகங்களை
யாக்கையோடு யான் நினைக்கும்
திக்குகள் என் திடமாக!
எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.
சங்கேதமேதுமின்றி அது சாளரம் திறக்கும்.
பங்கமேது இல்லாததாய் அது பாசுரம் பாடும்.
அங்கம்,
அந்த அங்கம் அது போதும் எனக்கு -என்
ஆக்கம் தேக்கமது தவிர்க்கும்.
பூக்கும், அது-
பூக்கும் தொடர் பூபாளம் இசைக்கும்.
உனக்கும் அந்த நெருக்கம் உளமாலை சூடும்.அதை
வனப்பம் ஏற்று வாசல் வசந்தம் ஊ(கூ)டும்.

சிந்தனை செய்யென்றால் நிந்தனை செய்வோரே!
வந்தனை வாசம் பெற வாயிலை திறக்காரே!
நிந்தன் நியம் நியமம் ஊற சுய ஊக்கம் ஆய்ந்தீரா?
பந்தமது பரப்பெழுத பண்பலை வாசித்தீரா?

சொந்தமது சொத்தல்ல என்று சித்தமது நிறைத்தீரா?
மந்தமான மனக் கணக்கில் மணிக்கணக்கில் சீராய்ந்தீரா? -
உந்தனது குணக் குன்றில் என்ன வன(ள)ம் யாசித்தீர்?
மைந்தன் -எங்கள் வைகுந்தன்-
எம் மண்ணென்ற மாதவத்தை மறந்தீரோ -நாளை
உன் மண்ணே உனை மற(று)க்கும் யாதகத்தை மறுதலிப்பீரா?.

எங்கோ ஒரு நுகர்வு என் தகம் ஆசிக்கும்.
விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்
மொழியின்றி வாழ்வாரா?
உணர்வதை பேண,
உன்னை தானும் புரிந்து கொள்ள-
மொழியின்றி வேற்று வழியுண்டா?

தாய் மொழி தாய்ப் பாலிற்கு அடுத்த மொழி.
சேய் அதை செம்மலாய் புரிந்திடா விடின்,
செவிலி மொழியா வழி காட்டும்?-கற்க
உவப்புணர்ந்து, உணர்வு செறிந்து ,சிந்தனை செய்ய!
அதை சிராக்கி தாயூட்ட தாய் மொழி தவிர,
மாற்று வழி ஏதும்உண்டா?

தாய் நாடிழந்தோம்,தேசமெலாம்,புல​ம்பெயர்ந்தோம்.
ஊரிழந்துஉறவிழந்து,பூமிப்பர​ப்பில்
சிதறுண்டோம்.
அவரவர் நாட்டில் அந்தந்த மொழி பேச -நாம்
எந்த மொழி கொண்டு எம் உறவு பேண?

எம் உறவை பேணவும்,உணர்வைபுரிந்தெழவும​்-
தாய் மொழியே தாரக மந்திரம்.
புரிந்தெழுவோம்.
விழி இழந்தால் வாழ்வுண்டென்பேன்.
எம்
மொழி இழந்தால்,
தாய் மொழி இழந்தால் தேசியம் மட்டுமல்ல
எம் தேசமே அழியும்.
விழி இழந்தால் வாழலாம்-எம்
மொழியிழந்தால் வாழ்வில்லை காணீ
புன்னை மரக் குயில்களாக,
புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்,
தின்னக் கொடுத்தோம்.திமிரெடுத்த
சிங்களத்தின் கொடுங்கரத்தில்.

என்ன பிறவிக் கடனிது?
ஏனிந்த அவலத் தொடரது?
தின்னத் தின்ன சின்னத்தனம்.
சிரசெரித்த கோழைத்தனம்.

வண்ணக் கலவை குழைத்த-எங்கள்
வைடூரியங்கள்-எல்லாம்
பண்ணை பிறழ்ந்த பரிதாபம்.
எண்ணக் கிடங்கில் எத்தனை நாள்?

நினைவழித்த நாட்களாய்-இனி
நிதம் கலைந்து போகுமா?
நினைவெழுதும் நாளின்றி-நெஞ்சம்
கனம் கலைத்து காயுமோ?

தொலை தூரம் தெரியாத சொப்பனமாய்-
வலையிறுத்து வஞ்சக பாழகர்கள்-எங்கள்
விலையற்ற வித்தகங்களை எந்த
வினையாற்ற அழித்தார்?

வலி, புரியவைக்க முடியாத வலி.
பலி, பகைக்கு பகை தெரியா பலி.
நலி ,நகையிழந்த நம் செஞ்சோலை நலித்த,
கலி, காலமிழந்த கலி வலியேற்றி -இனி
எந்த வதைமுகம் காட்டும்?

அஞ்சலிக்க மட்டுமல்ல இவ்வாக்கம்.
செஞ்சோலை பாலகரின் நினைவு நெகிழ்வாக,
கொஞ்சி விளையாடும் கொற்றங்களிற்கு தங்க
தலைவன் சமைத்த சபை பற்றி பண்ணாட,
நினைவுகள் தெறிக்க,உள்ளம் பற்றும் கனல் சுமந்தும்
ஈகையின்
இமய வரம்பே!
நெடிதுயர்ந்த வீரக்கனலே!
துயர் தாங்கிய கொடிகளின்,
உயிர்
நெருப்பே!
பகை எரித்து பாளும் அவர் பாதமான பாதை அழிக்க,
உம்மைபுடம்
போட்டு புனருத்தாரணம்,
பூட்டிய பூம்புனல் புனித திருவே!-

நீவிர்
தொட்ட
பகையின் உளப் பரப்புக்கள்,
எல்லாமே உன் பெயருக்குள் அணுவாக,
கரு
எனும் வார்த்தையில் அவை கரியாக,
வரும் பகை திருப்பிய திருவாக,உருமறைத்து,
உளம்
செருக்கி,
சொல்லாப் பெயர் சுருக்கி,
சுயம் எரித்து,
கயம் கலைக்க
கரும்புலியமான கார்த்திகர்களே!

இன்று !
உன் நினைவெழுதும் நாளா?
இல்லை,
நீவிர்
தமிழீழப் பரப்பில் பிறந்த திருநாளா?
அல்லது,
பாரும் பகையே எந்த
பரமத்திற்கும்
அடிபணியாத் தலைவனின் அகத்தில்செருக்காய்
குடியிருந்த
பெருநாளா?
அஃதன்றி-அகிலத்தில் தமிழீழத்தை யாகிக்கும்
அத்தனை
தமிழர்களின் ஆவிதனில்
நீவிர்உனது ஆன்மாவை நிறைவிருப்புடன்,
தமிழீழத்திற்காய்
நிமிர்வெழுதி நிறைவாக்கி,
நிலைவெழுத்தாக்கிய நிறைநாளா?
எத்திரு
நாளென எண்ணி உனை எழுதுவேன்?

செத்திருந்த தமிழினத்தை
உயிர்த்தெழ வைத்த வேதியர்
நீவர்.
உங்கள் சொத்தனைத்தும்-
தமிழீழ தாகமென உயிரெழுதி-
உயிர்
பரப்பி உன்னதமான இந்நாளை
ஆவிக்குள்ளும் அடங்கா எமை மேவித்திரியும்
உன்மெட்டுக்கள்
என்றும்அணைந்து விடா
கட்டுக்களாக -
எமது சந்ததிகள் உள்ள வரை
உம்
வரைபுகள் வகையெழுதும்.

தமிழீழ யாசகர்களே!
தனை சான்றெழுதிய
போசகர்களே!
உமை ஈன்ற மண்ணிற்கானவர்களே!
மனை மீளும்.
விழி
சிரிக்கும்.
உன் குவியங்களின் குழிகள்-
இன்று ஓர் பாரிய
இடைவெளியில்-

ஆயினும்-
ஓயாத,ஒப்புவமையற்ற ஓர்மங்கள்
சலனமின்றி,
சந்தடியகற்றி
சாவாசமாய்,
புலனேற்றி பூப்பார்கள்.
புண்ணியரே!
சேதிவரும்
நாளுடன் -
உன் செந்தமிழாணை கலந்து.

பொதுமை வேணி நீர் ஏந்திய
சிந்தனைகள்.
இனத்தின் தமிழினத்தின்,
தமிழுணர்வின்,
இல்லை தாயக
விடியலில்,
தலைவனின் தார்மீக சமரில்,

ஏன்!
எல்லாவற்றிற்கும்
மேலாக,
சுதந்திரத்தின் அந்த சுந்தர,
விடியலில் நீவிர் கொண்ட
வேட்கைகள்
எந்த வேதத்திற்குள்ளும்
இடிபடாமல் விடுதலை

உச்சாடனத்திற்குள் மட்டுமே
உறைந்திருந்த உணர்வுகள்.
சந்தனக் காற்றாய்

என்றும் எம் நினைவில்.
சரித்திரர்களே!
சாந்தி கொள்.
நல்ல
சங்கதிகளுடன்சஞ்சரிக்கும் நாள் கூடும்.
இந்த
வக்கிரம் வகைத்தவரா -உன்
உத்திரம் வகுப்பார்?
முத்திரமான எங்கள்
சத்திரியர்களின்
சித்திரம் பார்.

எத்திரை வந்தபோதும்,
பத்தரையான
பவித்திரர்கள்.
விதித்திரை விண்ட வீரியர்கள்-அவர்
தேசத்திற்காய்
வீரச்
சமர் கொண்டவர்கள்,அவரைக்
கொன்ற பின்னும் சேடம் வரையும்-
ஆரியத்
தரை அகம் ஆய்ந்தாயா?

தினமும்,
வன்மையாய் முகம் மறைக்கும்-
மூர்க்கம்
காண்.
வெறும் தரை வழிப்பாதையில்,
பார்வை வேண்டாம்.
புனர்
வாழ்விற்கு வகையில்லை,இவர்
அபிவிருத்தியென்று எதை ஆய்கின்றார்?

அடுத்த
வேளை கஞ்சிக்கு அதரம் அற்று,
படுத்த வேளை கிஞ்சிதமாய் கிராகதர்கள்
கிள்ளும்-
இராணுவ சக்கரம் எந்த சதங்கை கட்டும்?

புராணம் பாடும் புலமே
உன் உலவலிற்காய்,
உறுப்பறுத்து உசாவல் நலமென்னும் நர்த்தனம் அறு.

வெறும்
வெளிகள் உள்ளம் உலவாது.
ஊடுகள் உணர சிலாகி.
தாறு மாறாய் தடம் புரண்ட
தமிழ் நிலம்.
ஊறு கொடுத்த தேறுகள் தேச வீதியெங்கும்.

ஆனால்
நீவிரோ!
வெற்றுக் காட்சியில் வேகம் கரைத்து,
எம் வேதம் மறைத்து,
இப்படியா
உரைப்பாய்?
உல்லாச பயணத்திற்காய் உன் உறுப்பமைக்கும்
சல்லாபத்திற்காகவா?
சவக்காடானது எம் தேசம்?

சுய நல சூத்திரர்களே!
நலமானதாய்
நாடு என-
நா ஒளித்து நடுகல் நடாதே.
நீதி,நியம் ஒளித்து எதையும்
ஒவ்வாதே.
எதையும் நாட்டிற்காய் ஒப்பாத சு(க)யமே!

உன்-
சுவடனைத்தும்
பாவியர்கள் பாதம்.
பதகழித்து பாகை சரித்து பல்லாயிரமாய்-
பாடை
விரித்தவர் தடமது.
பரணியிலும் பரவும் பதமது.

உன் சாவால் கூட
மறக்க முடியாத,கூடாத
மனக் காயமது.
சொகுசு பேரூந்து பிரயாணத்திற்காய்
எம்
தேசப் புதல்வர்கள் பிராணன் விடவில்லை.
அன்று எரிந்தது அவர்
களம்-நாளை
அது உன் மனையின் மீதும் பெ(ம)ருகும்.
மறக்காதே நிச்சயம்
இதுவும்-!

பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.
அது
பணமாக,கருவியாக,படைபலமாக
பலவித முகம் கொள்ளும்-
பலம் அது -
அற்ற போதே
சித்தணைத்த சிலதுகள்
அடிவருடும்.அதுதான்
இன்று சிறீலங்காவில் ஆரியக் கடைவிரிப்பு.
ஈழத்-
தமிழரின்
அவலச் சரிவு.

ஆக!
மீண்டிடும் பலம் கறுக்க
கே.பி யின்
கேனத்தனம்,கோத்தாவுடன்
கோமயம்.

புலமே!
சுதாகரிக்கும் சுயம்
வேண்டும்.அன்றேல்
ஆதியுடன் அந்தமாக அத்தனையும்
கதி அதோ கதிதான்.
அரசியலையும்
ஆத்தமார்த்தாமாய் அகம் கொள்.
தூரத்துப் பச்சை பசுமையே இல்லை.
நேர் கொண்ட வார்த்தையும்,
நிமிர்வான
வாழ்வும்
தேர் கொள்ளும் உனை தோள் கொளும்.

பார் இந்த பாரில்
உனக்கான வாழ்வை
தோள் கொண்ட
தோழர்கள் யார்?

என்றும்,
மறைமுகத்திற்கு
அப்பாற்பட்வர்கள்-.

இன்று!
புல
வாழ்வில்
எத்தனை அறிவுரை ஆற்றும்
இந்த
முத்திலர்களை
புரிந்து கொள்.
முட்டாள்தனமாக
எத்தனையோ?
முத்திரையிடுவர்.
ஐயா
வினா மட்டும் வேண்டாம்?????

இவர்கள்
யாருமே
எம் நித்திலம் பகிரா பாவியர்கள் .---
அல்ல!
இவர்கள்
பவித்திரர்கள்

ஆம்!?
எமை!
காக்க!
அவதாரமெடுத்த
ஆரியர்கள்.

புத்தி கூறும்
புவித்திரர்கள்.

ஏய்!
முட்டாள்களே!
என்---?
தலைவனை விட
தரமெழுதும் த(ச)ரித்திரர்கள்
ஏற்றுக் கொள்.
மன்னிக்கவும்
நேரமாகுது

பூம்பாவை பாட
போ!
சோரம் போ!
பாடு
விடியும் காலையில்
தேசிய கீதம் பாடு.
அதையும்
சிங்களத்தில் பாடு.

இனி
உன் வாசலில்
திருவெண்பாவை+காப்பெல்லாம் விடுத்து
தேசிய கீதம் பாடு.
பாளி மொளியில் பாடு.
தமிழ்
விட்டு வடு.
இல்லை விடு.

மனிதா!
ஈனத் தமிழா!
இனி
மரம் நடும் வேளையில் அரச மரத்தை மட்டும்
தவிர்த்து விடாதே.
உன்
வீட்டு
முற்றத்தில்
அகதியாய்
மகிந்தையும்,மகிந்தாவும்.

அது சிறீலங்கா!
ஐரோப்பா அல்ல????????
13 டிசம்பர் 2010 · விருப்பம் ·

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
உண்பதுதான் சமிபாடடையும்!
நாம்!
வாயூற பார்த்திருந்தோம்.
வயிறாற-
புசித்திருந்தோமா?

தூரத்துப் பச்சையில்-
துயில் நீத்திருந்த-
என் சமூகமே!
உனக்குள. ஊறும்
பசுமைகளை ஏன் துலைத்தாய்?

பஞ்ச தந்திர கதை படித்ததினால்
எழுந்த பாதகமா?
கல்லை பூசிக்கும் களமே!
உன் காத்திரர்களை ஏன் மறந்தாய்?+
போ!

முத்தென்ன வெண் நகையாள் பாடு.
முன்வந்தெதிரெழுந்தாள்.
பத்துடையீர்!
ஈசன் பழுவுடையீர்!
ஓம்பு!

உன் வீட்டு முற்றமும்
விரைவில்:
ஓடையற்ற,
கோவணம் இழந்த கோபுரமாய்-
தப்பே இல்லை,
தாமரை குளத்தில்,
ஈசன் தவமிருந்து,
உன் சந்ததியை-
தக்க தருணத்தில்
அற்புதம் செய்து ஆய்ந்ததாய் அரற்று.
காவு-

இதுதான்-
உனதான சந்ததிக்கு நீ
மீட்டி வைத்த மிருதங்கம்!

இருக்கும் போது சுவைக்காத எதுவும்-
இழந்தபின் மீட்கும்-
சோக கீதம் தொடரட்டும்.
வேறென்ன உன் வாழ்வில்-
வெகுமதியாய்-
ஈட்டி வைப்பாய்?

போ!
அங்கே ஆலய மணி ஆரவராமாய்!
நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்
நித்திலர்!
பேரறியாமல்,பேதமை நீக்க
ஊரறியாமல் உறுப்பேந்திய
சத்தியரை மறந்தீரோ?
இன்று!
சாத்தியமற்ற சாகித்தியத்தை-
சகிப்பு அப்பாற்பட்ட-
சாதனையை நுகருவாயோ ?-எம்
போதனை அகற்றிய போதி மரம் சூழ
வாதனை உனை வாட்ட -எந்த
"மா "வினை சூட்டுவாய்?

மறந்ததுவும்,
துறந்ததுவும்,
பறந்ததான-
பாவனை காட்டும்.?
எதையும்,யாவற்றையும்,
கறந்தனவாக காதகர் வீதி -
உன் உலா வரும்.
வருடும்,
வசந்தத்தின் சுகந்தங்களென
வீதி புனரமைப்பென பூப்புனித நீராட்டும்-

ஐயகோ!
ஆவி உனை விட்டகல,
ஆவன செயும்.அத்தனையையும் அள்ளும்,
"சோ"வினை உனை சூழ,
உனை நெயும்.
பூசை அறிவாயா?

புத்தா!
என -
உனை புணரும்-
வாதனை அறிவாயா?
வற்றியரே!

என்றும்,
பாதை அறியா பரப்பில்-
வெறும் போதையை மட்டும்-
போற்றும்.
போகியரே!

போ!
உன் வீட்டு முற்றத்திலும்-
அயலவரின்-
ஆத்திலும்,
கல்லாக கடை விரித்த-
காடையரை தொழு.
உன்!
விதியின்-
வீதி-
வீரியம் பெறும்.

ஆம்!
கார்த்திகை முடிந்து-
இப்போது-
திருவெண் பாவை பாடு.
உன்-
வெண் பாவை-
ஆரியன் சூடிய-
காலத்தின் கனிவில்-
கல்லை பூசி!
புத்தனின் புனிதக் கால்-
பதிந்ததாய்-
மத்தாப்பிடு!

போததிற்கு-
உன்,
அயலவரையம்-
ஆராவரமாய் ஆதங்கி-
காத்திரர்களின்-
காலடி ஒதுக்கி?
புன்னை மரக் குயில்களாக,
புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்,
தின்னக் கொடுத்தோம்.திமிரெடுத்த
சிங்களத்தின் கொடுங்கரத்தில்.

என்ன பிறவிக் கடனிது?
ஏனிந்த அவலத் தொடரது?
தின்னத் தின்ன சின்னத்தனம்.
சிரசெரித்த கோழைத்தனம்.

வண்ணக் கலவை குழைத்த-எங்கள்
வைடூரியங்கள்-எல்லாம்
பண்ணை பிறழ்ந்த பரிதாபம்.
எண்ணக் கிடங்கில் எத்தனை நாள்?

நினைவழித்த நாட்களாய்-இனி
நிதம் கலைந்து போகுமா?
நினைவெழுதும் நாளின்றி-நெஞ்சம்
கனம் கலைத்து காயுமோ?

தொலை தூரம் தெரியாத சொப்பனமாய்-
வலையிறுத்து வஞ்சக பாழகர்கள்-எங்கள்
விலையற்ற வித்தகங்களை எந்த
வினையாற்ற அழித்தார்?

வலி, புரியவைக்க முடியாத வலி.
பலி, பகைக்கு பகை தெரியா பலி.
நலி ,நகையிழந்த நம் செஞ்சோலை நலித்த,
கலி, காலமிழந்த கலி வலியேற்றி -இனி
எந்த வதைமுகம் காட்டும்?

அஞ்சலிக்க மட்டுமல்ல இவ்வாக்கம்.
செஞ்சோலை பாலகரின் நினைவு நெகிழ்வாக,
கொஞ்சி விளையாடும் கொற்றங்களிற்கு தங்க
தலைவன் சமைத்த சபை பற்றி பண்ணாட,
நினைவுகள் தெறிக்க,உள்ளம் பற்றும் கனல் சுமந்தும்.
எண்ண அலைகளில் என்றும்,
திண்ணமாய் திறனெடுத்து,
எண்ணாக் காரியத்தை எளிதாக்கி,
எரித்த ஏந்தல் நீ-
வரலாறு!
உன்னை என்றும் வரிந்து வகைத்திருக்கும்.

ஆடு,மாடு,பொன்,பொருளென,
ஓடித் திரிந்த எம் முற்றத்தில்,
நீ!
தேடியதுவும்,தெரிவெழுதி தேற்றியதுவும்,
விடியலின் முகவரியென முத்தாய்ப்பாய்.
சொல்லாமல் செயலாக்கமாக்கிய செவிலியனே!

உன் வைராக்கியத்தில் எந்த-
வரிகள் பொருதும்?இல்லை
பொருந்தும்?
பாடு பொருள் இதுதானென,
ஊடு கூடி தேடும் உன் தெரிவில்,
எத்துணை உறுதி?
பேடு தேடும் தருணங்களில் உன் அகவை.
ஆனால் இந்த அகவையில் உன்-
ஆரோக்கியமான சிந்தனையில் உன்
கருக்கள் சீலமாக தக்கவைத்து!
உருவான உறுதியில் பிரபாகரனின் பிரமத்தை,
பிறழாமல் பின்பற்றிய பிதாமகன் நீ.

விழுப்புண் ஏந்தி!
அந்த விகாரமான பொழுதுகளிலும்- நீ
உதிர்த்தது தம்பி எனும் திருப் பெயர்.
உதிராத பிரமாணம்,
நெஞ்சகத்தில் நெருப்பாக,
நெகிழ்வெழுதிப் போனவனே!

வீரனே!
செல்லக்கிளி அம்மானான தீரனே!
ஞாலத்தில் எங்களின் நாயம் பிறக்க தீயான தீபமே!
ஒப்பாரிகளின் முதுகில்,
ஓர்மம் ஒட்டிய சிங்கள கிங்காதரர்களின் சிம்ம
சொப்பனம் நீ.

ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே
காலம் எமதாக்க கரந்தடியில் கலந்தாயோ!
வித்தாகி விழுதெறிந்த சித்திலனே!
முத்தாகும் எங்கள் முழு நிலம் ஒரு நாள்
சொத்தாகும் வரை சோர்வகற்றி
நித்திலத்தில் உங்களின் நினைவுகளுடன்
நெடும் பயணம் போகின்றோம்.
உங்களின் சத்தியக் கனவை அகத்தில் ஆழப்படித்தபடி.



செல்லக்கிளி அம்மானின் வீர
நினைவு சுமந்து!

தமிழீழ விடுதலை வரலாற்றில் பெரும் பதிவில்-
வெல்ல வழி வகுத்த திருநெல்வேலி
கண்ணி வெடி தாக்குதலில் களப்பலியான
"மாவீரன்" சதாசிவம்-செல்வநாயகம் நினைவாக
சரியாசனம் சாசனமாகாததால்,
புரியாசனம் புதைக்கப்பட்டதால்,
எரியாசனமாய் எழுதப்பட்டு-அந்த
உரியாசனம் உதிர்ந்தே போகுமா?

கரியாசனம் காட்டும்-ஆள
நிலக் கரியாசனமாய் நாளை-
அது தோன்றும் போதினிலே அதன்
வரியாசனம் வைடூரியமாய் மிளிரும்.

"தெரியா"(ஆ)சனம்,தெரியாத்தன​ம்
"வரியா"(ஆ)சனம் வரியாத்தனம்
வெறியாசனம் இலங்கும் சிங்களனால்,
கறையாசனமாய் இன்று புதைகுழியில்-ஆனால்

இவை யாவும்!
கரையாசனமாய் கனதி அள்ளும்-புவி
நிரையாசனமாய் எங்கள் மேனி தளிர
விபராசனமாய் விதி கீறும்-அன்று புரியும்
அவர் வரித்த புதியாசனம்.

பெளதீகாசனம் பகரும் பதிமுறை புரிவீரோ?-அந்த
பெளத்தாசனம் பயிற்றும் பாடையாசனம்-என்றோ அன்றி
பகுத்தாசனமாய் பரணியில் மறு,
தாக்காசனம் மரபெழுதும்.
விகுத்தாசனம் நிச்சயம் எங்கள் வீரம்- ஏற்கும் "விகுதா"(ஆ)சனமாய்-இது

"மா"வீராசனத்தின் மேல் நின்ற மெளன சாசனம்-எல்லா
"சா"ச(க)னத்தையும் எகிற்றி ஏறேறு "மா"சானமாய்-தமிழாசனம்
தரணாசனத்தில் தன் தகு சாசனம்!
தர்மாசனமாய்!
சினையாசனம் சிறப்பேந்தும் சீர்காணீர்.

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.
புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.
பாதிக்கப்பட்ட பாவிகளின் பரந்த நன்றிகள்.

தென்னிந்திய திரைப்பட கர்த்தாக்களிற்கு!
வன்னி மண் தின்ற வணங்கா மக்களின்
வந்தனை கூறும் நன்றிகள்.

ஈழத் தமிழரின் இதயம் தின்ற,
பாழும் சிங்கள பாவிகள் தங்கள்-
மன அழுக்கின் மகத்துவம் கலைக்க-
இனமானம் சுமந்து ஈர்ப்புடன் இலங்கி
இலங்கையில் இன்றுவரை நெடுத்த,
ஐ.ஐ.பா. விழாவை வாகையுடன்-
தோல்வியுற செய்த செம்மல்களே!

ஈழத் தமிழினம்!
நாளும்,பொழுதும் நலிந்து,
வலி சுமந்து மாளாத் துயர் பருக,
சிறீலங்கா ஆரியன் ஆதங்கித்து மகிழ,
எந்த விதி வரைந்தானோ -அதை
சிந்தையில் சிதைத்து சீரிய அடி கொடுத்த,
சிங்காரத் தமிழுணர்வுடன்-
திண்மையாய் முன்னெடுத்து,
எங்களின் கரம் பற்றி ஏங்கும்-
தமிழ் மனம் சுரக்க ஏந்திய,
ஊடகமாம் சினிமாத் திரையுலகினர்க்கு,
தமிழீழ மக்கள் சார்பாய்!
புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.

மங்காத வடுவிருக்க,
மனமெல்லாம் சினமிருக்க,
தினவெடுத்து சினையீன சிங்களம்
வினையிட,
பொங்காத தமிழனாய் பொறுப்பறுக்க நினைத்தீரா?-எங்கள்
தொப்பிள் கொடியுறவை கொக்கென்று நினை
ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!
பூத்திருந்தாய் எங்கள் புவனத்தில்,
புனித விடுதலை ஒன்றையே யாத்திருந்தாய்.
புத்த நித்தியம் எங்களிற்கு விதைத்த-
சித்த வைத்தியத்தையே சீர்-
தூக்கியிருந்தாய்.

அதனால்!
அவர்தம் ஆயிலியங்களை களைய,
தூக்கினாய் கருவி-அது
எம்!
ஆயுத எழுத்தாக,
அதையே விடுதலை-
எழுத்தாணியாய் ஏற்றவனே!
பாயும் பொழுதிற்காய் உன்னையே பதித்திருந்தாய்.
சாயும் நிலை வரினும் சிங்களன் கையில்
சாயாத கலையல்லவோ காத்திரமாய்-
உன்-
காயாத கனவது.

புறச்சூழல் உனை புரியாத பொழுதாய்,
உறவுகள் உனை அரவணைக்கா கணமாய்,
உன் கண்ணியமான,கடப்பாடு,
திண்மையான செயற்பாடு,
உண்மையான யோகமாக உணரும் பொழுதில்!

நீ!
சத்திய வேள்வியாய்
தமிழீழ மண்ணில் சாவால் சரித்திரம் எழுதி.
புண்ணியனே!
பிறப்புக்களின்
அர்த்தம் ஆரத் தழுவிய வித்தியனே!
விடியும் ஒவ்வொரு கணமும்,
உன் வீரம் சாற்றும் விகற்பத்தில்,
எம் விழி(ளி)ப்புக்கள் உமைத் தழுவும்.

சூழல்!
இன்று சூனியமாய் வரம்பு அள்ளியதாய்,
ஓரு பார்வை அவ்வளவே!
குருதிகள் சிந்தாத குதம் ஏதும் உண்டோ?
இது!
விடுதலை வேள்வி.இதில்
ஆகுதிகள் சாதாரணமான ரணம் சரிக்கா,
எல்லாமே!
இங்க அசாதாரண ஆயிலியம்
இத்தனையும் சுதந்திரம் விடுதலை என்ற பெருங்கனவின்-
இடுகுறி.

ஆம்:
சொல்லணத் துயரம் எம்
பூமிக்கு மட்டும் இல்லை எங்களின்
புதல்வர்களினதும்,
புனிதர்களும் மாவீரக் கனவெழுதும்.

எங்கள்-
தாயகத்தை சிதைத்து,
பிச்சு உதறி,சகலதுவும் பிணக்காடாய்!
வார்த்தைகளிற்குள் அடங்காத அட்டகாசம் அது.
மனிதம் தின்ற கோரத்தின் அரிச்சுவடியது.

இன்றும் அதன் தாரணங்கள் சூடிய வடுக்கள்
அனு தினமும் உள்ளம் அரித்து வெளிவரும்.

ஆயினும்!
புனிதனே உன் பாதம் ஆர்ந்து,அகோரணமாய்
உறுதி பூண்டோம்.
மலரும் தமிழீழத்திற்காய் நாம் மடி சுரப்போம்.
அந்த மகோன்னதம் மிளிரும்.
அரூவமான ஆத்தமங்கள் விழி விரிக்கும்.
விடியும் திசை எம்பால் ஒளிர,
உன் சத்திய வேள்வியின் வழியில்-
எம் வாசல் பூப் பூக்கும்.

சுதந்திரம்,
விடியல்,
எந்த இரத்த வடுவின்றியும்-
விடியாது.
விழி விரித்து,வழி பார்க்கும் பக்குவம் விகற்போம்.
வீழ்ந்தது எழுவதற்கே!
வேதம் படித்தோம்.
பாரில் உன் பாதை செழிக்கும்.
செந்தூரமாய் செந் தமிழீழம்
முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-

முதுகு நேர்த்து சொறிந்த வன்னகைகள்-
தமிழ்
இனத்திற்கு செறிந்த வஞ்சனையின்றி-
எந்த
இகத்திற்கு இழைத்த பஞ்சணையாகும்.




தொலை நோக்கு!

தொலைவல்ல,

கலையால் கரம் தொடு.

விலை போனார்கள் சிலர்:

விதண்டா வாதம் செய்ய சிலர்.

கண்டதையும் கக்கி காசாக்க சிலர்.

விண்டதாக விவாதிக்க வித்தையேற்று சிலர்.

அண்டா,அண்டாவாக அளக்க சிலர்.

கொண்டதெல்லாம் தாம்
விடுதலையின் தலையென்பர் சிலர்.



அன்றலர்ந்த மலராய்,
ஆளுமையாய் அண்ணனுடன்,

சென்றிந்த செம்பகையை,
பொடியாக்கி போனார்களே.
அவர்கள:

பொடிகளல்லர் தமிழுடன் தன்னை,

ஆகுதியாக்கிய கரும்பூ இவர்கள்.



இந்த-
கல்லறையின் கனதிகளையும்,

அதன் காத்திரத்தையும்,
கொண்ட கொள்கையின்
கொற்றங்களையும்,

தன்
சுயத்திற்காக
கொன்று
இங்கு

பிரிந்து நிற்கும் பீடர்கள்
என்று
இவர் உறுதியாய் எங்கள்
உழவன் கரம் கொடுத்தான்.


உறவாடி கெடுக்கும்
உறவு.


இதுதான்
அன்று வரை இன்று ஈறாக
தொடரெழுதும்
ஒட்டு,

எட்டப்பர் க(ஓ)டை.

முள்ளி வாய்க்காலில் விழ்ந்தாலும்-

கள்ளிப் பால் தெளிக்க எங்கள் இனமே
கனதியாய்.


இழி நிலையேற்ற கொடியோரின்
கும்பம் கண்டோம்.


பிரித்தகற்ற முடியா பிடாரிகள் எல்லாம்
இன்று
தானாவே தன்னை பிரிகையாற்றிய
பிம்பம்.
ஒரு சுத்திகரிப்புக்குள்
சுதாகரித்து.

தன் பீடத்தை தானே தகற்ற வரலாறும் இங்குதான்.



நன்றே.

பிரிவில் ஊறும் உறுதியற்ற உருவம் கண்டோம்.

பிறளாத எங்களின் திண்மையான திண்ணம் கண்டோம்.

இனி
விதி அளி(ழி)க்கா வீரியம் பெறுவோம்.

எமக்குள்
களையற்ற காளையரும்,

கனதியான,
தாளையரும்---
வலம் வரும் தலம்.


விடிவெள்ளி இனி தூரமும் இல்லை.

சோரம் போகும் சாரமும் இல்லை.


தோள் தொடும் தோழர்கள் இனி
தேற்றம் பெறுவர்.
ஈழத் தோற்றம் வரைவர்.
ஈகமே இழைந்திரு இயல்பாகும் எல்லாம்.
ஈற்றுவோம் அந்த தோற்றுவாயில் தொகுப்பாக.
எந்த நினைவுகளையும்,
எங்கள் உறவுகளையும்,
எந்தன் சுற்றத்தையும்,
எங்களான முற்றத்தையும்,

நினைவுகளால் என்றாலும்,
களையும் நினைவிருந்தால்,
எல்லாமே அல்,ஆன்,ஒடு,ஓடுவாக
ஓர்மம் களி(ழி)த்தால்!
நாம் தமிழராய் தலை நிமிர்வதில்
எவ்வித யோக்கியதையோ,பாத்தியதையோ
அர்த்தமோ இல்லை.

எனவே!
எனக்குள்,உனக்குள்,எம் எல்லோர்க்குள்ளும்
குமுறும் குரலாய் நான்
இங்கு குறியிடும் குவியத்தை குலைக்க
யாரும் கனவிலும் கடுகள்ள வேண்டாம்.

இது!
தர்மத்தின் குரலாய்
குறி சுடும்.
சூடப்(கற்பூரம்) புத்தியுள்ள
சூட்சுமம் உள்ளோரே!
சுகிப்பீராக!?

என்னைத் தாழ்த்துவதாய்-நீ
தாழ்ந்து போகாதே,நீ
நுணலானால் ஒரு போதும்
அரவமாய் அறம் தீண்டேன்.
மறவாதே மானிடமே!

அனுதினமும்,
உறங்கும் முன் ஒரு கணமாவது
உன் முற்றத்தின் அவலத்தை
உள் வாங்கு!
சிலாகி!
உற்ற வழி தேடு உனக்குள் உறங்கும்.
பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.

ஒரு திவ்விய ஒளி உன் அகம் சூடும்.
கனவுகள் காண்,
அதை தினமும்
புனருத்தாரணம் செய்.
சமூக சிந்தனை அகம் ஊட்ட,
ஏதோ,
ஏதோ ஒன்று உன் இலங்கலில்
இயங்க மடி தேடும்.அந்த
மனிதம்,
அதுதான் உன் இயல்பாக முடி சூட.
எது உன்னால் முடியுமோ?
அது தானாக உனை இயக்கும்.

ரத்தத்தின் சத்தத்தில்
முற்றங்கள் முகை நு
வலி!
அது எனக்கு புரியவில்லை.இந்த
ஆழி சுமந்து ஆற்றிய வேதனையின்,
சுவடுகள் கூட என்னை சுடவில்லை.
ஏனெனில்!
நான் அந்த மண்ணிலும் இல்லை.ஏன் இப்போதும்
நான் அம் மண்ணின் மைந்தனும் இல்லை.

எப்படி இந்த வேதனைகளின் கொடுமைகள்
எனை சுடும்?
அல்லது-
எப்படி என்னால் அந்த ரணங்களின்
கதங்கள் எனை கவ்வும்?நான்
வெளிநாட்டின் வேதகன்.

துப்பாக்கி குண்டின் சத்தங்கள் கூட,
என் செவி மொள்ளவில்லை.
அவர்களின் உத்தமமான,உயர்வான
போராட்டத்தின் பொறிகூட என்னை பாதிக்கவில்லை.
நான்தானே பக்குவமாக புலம் பெயர்ந்து விட்டேனே?
எனக்கென்ன மனக் கவலை?

இராணுவத்தின் வக்கிரகங்கள் எனை
வலமாக்கவில்லை.பேரினவாதிகளி​ன்
ஆழிக்கூத்து எனை சீண்டவில்லை.ஆகவே
அதுவரையில் அவர்களின் அனந்தம் நன்றே.

ஒரு முடறு தண்ணீர்க்கு என் சொந்தங்கள்
உறவுகள் பாடாய் பட்டதை,அதன் ஐீவித
வேதனைகள்--
பாலுக்கழுத பச்சிளம் பாலகரின் அழுகுரலும்,
எந்த பாலுக்கும் வழியின்றி அந்த தாயவள் பட்ட
வேதனைகள்,
வாழும் வயது முற்றி இயங்க முடியாமல்
அந்தரித்த எங்களின் முதியவர்கள்,
சுந்தர வயதில் சுகவாழ்விற்காய்
சுந்தரிகள் அவலத்தில்!
வாலிப வயதில் வளமாக்க வாழ்வை
வையத்தில் வகுக்க வாய்த்த என்
வாலிபர்கள்,

அத்தனை உறவுகளும் போட்டதை போட்டபடி
அடுத்த விநாடியில் எந்த நாடிகளை
இழப்போமன அறியாமல்,அடுத்த வேளை கஞ்சிக்கு கூட
கூடமில்லா கூடறுந்த என்
உறவுகளின் எந்த வேதனையும் என்னை பாதிக்கவே இல்லை.

ஏனெனில்,
நான் இங்கு வசந்தம் விரித்த,
வயலில் அதன் வயப்பில்,
என்னை கறுப்பனே வெளியேறென,
எனை விரட்ட துடிக்கும்,
நாசிகளின் கொதிப்பு எனக்கு பழகி
உடலும்,மனமும் அதனதன் இயல்பிலேயே
எருமை மேல் பெய்த மழையாக,
காலம் செல்ல அதுவே இயல்பாக --

உணர்வுகளின் சூட்சுமமும்,
உணர்ச்சிகளின் லயமும் எனக்கு எந்த ரீதியிலும்
எனை வதைக்கவில்லை.
எனக்கு எப்படி பிறக்கும் ரோசமும்,மானமும்,வெட்கமும்
உப்பு போட்டு தின்றதே எல்லாம் ருசிக்கே தவிர,
உணவிற்காக மட்டுமே?

இல்லவே இல்லை-
என்னமோ நடக்குது,நடந்தது.
யார் இறந்தால்,யாரிழந்தார்?
எதை இழந்தார்?ஏன் இழந்தார்?
எதற்காக இப்படி?
இவைகள் எல்லாம் எனக்கு சம்பந்தமே
இல்லாத கேள்விகள்.

நான் புலத்து குடிமகன்.
என் சுற்றமும்,முற்றமும்
ஏன் சகல உறவுகளும்,உணர்வுகளும்
இந்த புல முற்றத்து கொற்றமே.

முள்ளியவளை எங்குள்ளது?அதன்
பாரிய சரிதம் இப்போ யாது?அங்கு இறந்தவர்கள்
என் உறவும் இல்லை,அதனால் எனக்கு ஏந்த
உணர்வும் இல்லை.

நான் புலத்தில் மலர்ந்த புதியவன்.
என்னை எந்த உணர்வுகளும்,
ஏன் எதுவுமே!
எனை பாதிக்கவில்லை.
நான் இந்த நாட்டு குடிமகன்.
யார் அழுதாலும்,யார் செத்தாலும்
எவர் முட்கம்பிக்கள் வதைந்தாலும்.
எந்த புதைகுழிக்குள் எவரை புதைத்தாலும்,

எவரை சிங்களன் பாலியல் வன்புணர்ந்தாலும்,
யாரின் மார்பகத்தை அவன் அறுத்தாலும்
அரிந்தாலும்,
எவன் பெண்டிரை ஆமி புணர்ந்தாலும்,
எனக்கென்ன!
நான்
புலத்தில்
பிரசாவுரிமை பெற்ற
ஈனத் தமிழன்.
எனக்கு எதுவுமே வலியில்லை.ஆழி
வலித்தெடுத்த வதையும் இல்லை.

ஒன்று தெரியுமா?
நான்
தமிழனே இல்லை.
யேர்மனிய,கனடிய,பாரிசு,சுவி​ட்சர்லாந்து,
ஏன் சர்வதேச குடியுரிமைக்காய்
களம் தேடும் புலக் குடிமகன்.
வாழ்க சிறீலங்காவின் பேரினவாதம்
வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயா

வீணர்கள் விளையாடும் வீதியல்லவா ஐயா

விபூதி பூசினாலும் வினை விடுமா ஐயா -நாம்

எந்த சந்நிதியில் தரிப்பெழுத சதி விழும் ஐயா?



நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.

பாழும் பரமர்கள் பதிலற்று பாவிகள்.

வேரும், விழுதுமாய் வேய்ந்த பகை நாள் குறிக்க,

ஆருமற்ற அனாதியாய் யார் ஆய்ப்பார்?


இத்தனை அவலமும் சுமந்த எந்தன் சுற்றம்.
இன்னும்
எத்துணை சுமை,சுமக்க அவர் வாழ்வு பறித்தான்?


மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல்,

நெஞ்செரிக்கும் நியங்கள் எந்த கொம்பன் எமை அணைப்பான்?


விடிவு நொடிகளுக்கு மட்டும்தானா?

நொடிக்கும் எமக்கில்லையா?

வல்ல எம் வயலர்களை வார்ந்தெடுக்க பகைக்கு
பாதை விரித்த பாரதமே பதில் இறுப்பாயா?



உனையே துணையென தலைவன் துய்த்த-
பெரும்
கணையை,
துப்பிய பெருந் துரோகத்தின்,
வேரே நீதான்.

இத்தனை அழிவின் அரூப அற்பனே!

கால ஓட்டத்தில் உனதான காத்திரமான பதிலாய்

எம் பாதத்தில் நீ இறைஞ்சும் பாத்திரம் ஏற்பாய்.

பார் இது ஒன்றும் பாஞ்சாலி சபதம் இல்லை.
உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீ
உன் சந்ததிக்கு என்ன வரப்பெழுத வயம் வகுத்தாய்?
காவியாகவும்,கரைசலாகவும் உன் காலம்-எந்த
கருவியையும் கைக் கொள்ளாமல் அடிமை தேசத்தில்-என்ன
கருமாந்தமோ உனதான உவப்பற்ற வாழ்வு?

அன்று!
பாட்டி வடை சுட்ட கதை?
பஞ்ச தந்திர கதை தொடராய்----?
இன்று!
மீண்டும் இதையே மீட்கும்
நினைவு வரையும் காலங்களிற்கு இன்னமும்
வயதிருக்கு.

அதுவரை உன் சமூகம்,சுற்றம்,
முற்றப் பரப்பின் விதி மாற்றும் மார்க்கம்,
இனவிடுதலை,
வரலாறு தந்த தருகின்ற,
வயலை விரிவாக்கு.
தமிழ் தானே வளரும்.
சுதந்திரம்,விடுதலை,இனப் பற்று
இவைகளை கையிலெடு.

உன் அழ்மனதில் அறிந்த ஆயிரம்
அவலங்களை களைய எமக்கும் மருந்திடும்
மார்க்கம் உணர்த்து.
மனமார நீ மையிப்பாய்.
விரல் ஒத்தும் உன் எழுத்துப் பொறி
எம்மையும் பொறிக்கட்டும்
வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்
வாழ்ந்த இனம்,
வாகையே வகையாய் வயல் மீட்ட வள்ளல்கள்,
தோகை விரித்தாட தோட்டம் அமைத்த தோகையர்கள்,
பாகைகளால் பருதி பருத்து பரவி,விரவியிருந்த
பரிவுகள் எல்லாம் பாவிகளால்,
பறி்தெடுக்கப்பட்ட,
கரி நாள் இன்று.

மாற்றம் அதற்கு மட்டும்தான் மாற்றம் மையல் விரிக்காது.
ஆனால்!
மாற்றம்!
சுழலும் இந்த பூமிப் பந்து
சுமந்து வரும்.
நாள் ஒன்று நயக்கும்.
நலிந்து கொய்யப்பட்ட எங்கள் தோட்டம்-
நயப்பெழுதி நயனம் நயக்கும்.

ஈகத்தார்க்கு இரப்பெழுதும் மனம்,
இகத்தில் இதயத்தில் மட்டுமே எழுதட்டும்.
சொல்லிற்கு முன் செயலாக்கும் சேடியர்கள்,
செய்கை நியம் மொய்ய நாம்-
பொய்கை பொலிவுற போற்றும் எம் வழி செல்வோம்.

நேற்றைய போலவே பொழுது மட்டுமே விடியும்,
நாம் பொருதும் போக்கில் மாற்றம் மருவ,
பொலிவுற ஓா்மம் ஓங்க உலகொழுங்கு மாறும்.
விதைத்த உடன் எதுவும் அறுவடையாகாது.நாம்
விரிந்திருந்தால் வினைகள் விடையிறுக்காமல் ஓயாது.

நீதிக்கு தண்டனையை எந்த நிர்மலன் தொகுப்பான்?
போதித்த புத்தனின் பொய்மையில் உலவ?
சாதிக்கும் சரித்திரம் தர்மம் நிலை நாட்டும்.
பாதித்த எங்கள் பரப்பெழுதி ஊட்டும்.
தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,
ஈனர்களின் ஈனத்தனமான தாக்குதலால்
உயிர் குழி உறைய,மண்ணில் வீழ்ந்த அத்தனை தமிழ்
மக்களின் ஆத்மங்கள் சாந்தியடைய,
ஒரு கணம் நெகிழ்வால்,உணர்வால்,உயிரால​்
தலை வணங்கி,
ஈழ மீட்புக் கரங்களை ஈகமாய் இறுகப்பற்றி,
மாவீரக் கனவுகள் நனவாகும் வரை,
வரையறையின்றி உறுதியாய் இயங்குவோமென,
எம் மக்களின் ஈகத்தின் மேலொரு சத்தியம் நெய்து,
தொடர்ந்து எங்கள் தாயகக் கடமையை நேர்த்தியுடன் முன்னெடுப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,
எத்தகம் மூடி சிதைத்தார்கள்?
உன் சித்தகத்தில் சிறக்கல்லையா?
பித்தகங்கள் பிறவியாக பிடரி வழி
பிறழ்ந்த சிங்களனவன் பிஞ்சு முதல்-எங்கள்
உறங்கு குழிவரை உயிர்த் தண்ணி பறித்தான்.

பொது மக்களின் புதை குழியில் நாளை இவர்
"மா"?வீரக்குதூகலம் கலக்க -எந்த
"பா" ஏந்தினார்கள்?ஆம்
அரக்க சிந்தையர்கள் கால,காலமாக களி(ழி)க்கும்,
அனந்த நிலையது அவர்கட்கும் பொருந்தும்.
எந்த போதினி போற்ற பொய்கை கலந்தார்.

எம் இன அவல "சா"க்களில்:இவர்கள்
"சா"க்கடை திறப்பு.நாம் தீக்குளித்து
எரிந்த மேட்டில் சாம்பல் இன்னமும்
கரையவில்லை.
காயவில்லை!
கல,கலக்கின்றான்
சிங்களக் காடையவன்-பேரினவாத
தெருக் களத்தில்.

புலத்து நண்பனே!
என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்?
உன் கடனாற்ற!
வழமைபோல்
வேற்று முகம் காட்டி எந்த தோற்றுவாயில்
உன் வரப்பெழுதுவாய்?

இப்பவும் நீ தூங்க நாளை
உன் வீட்டு முற்றம் மட்டுமல்ல-நீ
கட்டியிருக்கும் கோவணமும் ஆவணமின்றி அகலும்.
விழித்திருக்க,
விவேகமாக செயலாற்று.அஃதின்றேல்
உன் முகவரியை மாற்றினாலும்-உன்
பிறப்பதை மாற்றமுடியாது.அது
உன் ஆயுள்வரை வரையறையின்றி
சந்ததி வரை வரப்பிளக்க வழியாகும்.

பசித்திரு!
பாரில் எப்போதும் விழித்தெழு -நாளை
ஊரில் உன் உறுப்பெழுத.

ஞாயிறு, 6 மார்ச், 2011

இன்று கனடாவில் இருந்து திரு.கார்த்திகேசு தர்மலிங்கம் அவர்களிடமிருந்து எனை பேட்டி காணும் முகமாக சில கேள்விகளை அனுப்பியிருந்தார்.எனவே அந்த வினாக்களிற்கு விடை அளிப்பது எனதான தார்மீக கடமையென எண்ணுகின்றேன்.
எனவே இனி கேள்விகளிற்குள்.
1.உங்களது இளமைக் காலத்தை பற்றி குறிப்பிடுங்களே?

எனது பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும் தும்பளை மேற்கு அமைந்தது.எனது தந்தையார் இளைப்பாறிய திரு.முருகப்பர் சுப்பிரமணியம்.எனக்கு 9சகோதரர்கள்.எனது இளமைக் கால வாழ்வு நான் புலம் பெயர்ந்து வரும்வரை தும்பளை மேற்காகவே அமைந்தது.ஆக எனது புலம் பெயர் வாழ்விற்கு முன் எனதான வாழ்வு எமதூரிலேயே கழிந்தது.
நான் இளமை காலத்திலேயே எனதான சுய புத்தியின் வளர்ச்சிக்கு முன்பிருந்தே ஆலயத் தொண்டில் எனது தந்தையாருடன் இணைந்து செயலாற்றியிருந்தேன்.குறிப்பாக கூறின் எமதூரில் உள்ள பெரியதம்பிரான் ஆலயத்தின் சிரமதான பணியினை அன்றே அக்கால குருக்களுடன் சேர்ந்து செய்திருக்கின்றேன்.
கோயிலின் கருவறைமுதல் நீங்கள் தீர்த்தம் ஏந்தி அருந்தும் அந்த கற்கள் வரை சிரமதான பணியினை மிகவும் அர்ப்பணிப்புடன் செய்திருந்தேன்.மேலும் சாரத ஆச்சிரமத்தில் சேர்ந்திருந்ததினால் என்னால் அவ்வளவு ஆழமாக இந்த பணியினை செய்யக் கூடியதாக இருந்தது.

அத்துடன் பிள்ளையார் கோயிலை சுற்றியுள்ள உப சிறு கோயில்களையும்,கோயிலின் மூலையில் இன்று அனாதரவாக இருக்கும் கோயிலிற்கான கேணியை சுத்தம் செய்தது முதல்
அன்று கோயிலின் தெற்கு புறம் அமைந்துள்ள கிணற்றை (பாவனைக்குகந்ததல்ல என நிராகரிக்கப்பட்ட)சுத்தம் செய்து மக்களின் பாவனைக்கு உகந்ததாக மாற்றியதில் நண்பர்களுடன் சேர்ந்து எனது பணி இருந்ததை மிகவும் காத்திரமான செயல் பாடாக இந்த இடத்தில் குறிப்பிடலாமென நினைக்கின்றேன்.
ஆக எனது இளைமைக் காலமானது ஊருடனும்,எங்களின் சமூகத்தேவையுடனும் இயங்கியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

மிகவும் முக்கியமாக ஆண்டு1976என நினைக்கின்றேன்.எமது ஊரில் எமது மக்களிற்கான "மெய் வல்லுனர் போட்டி" ஒன்றை ஏற்பாடு செய்தது முதல் அதை காத்திரமாக நிறைவேற்றியது வரை எனது ஊரக வளர்ச்சியில் எனதான ஈடுபாடு இலங்கியது.

இணைப்பாக எமதூரவர்களிற்கு மட்டுமல்ல வேறு ஊரவர்களிற்கும் இலவசமாக முறையே கேத்திரகணிதபொறிமுறை வரைதல்,பிரயோக கணிதம்,கணிதம் என்பன இலவசமாவே கற்பிக்கப்பட்டது.இதில் 100ற்கு மேற்பட்வர்கள் பயன் அடைந்தார்கள்.ஆண்டு(1976-1979வரை)பின்னர் களுவாஞ்சிக்குடியில் இருந்து சம்மாந்துறையில் கல்வி கற்ற ஆண்டான 1980--1981 வரை இச் சேவை அங்கும் காத்திரமாக முன்னெடுக்கப்பட்டது.

2.உங்கள் கிராமத்தில் நிர்மாணிக்கப்படும் சனசமூக நிலையத்தின் வளர்ச்சியில் மிகவும் அக்கறையுடன் செயல்படும் காரணம் யாது?

அது எனது குருதியில் ஊறிய உணர்வாக குறிப்பிடலாமே.மேலே நான் குறியிட்ட எனதான ஊரவருடான வளர்ப்பும் ஒரு காரணம் இல்லையா?மேலும் எமதான முந்தைய தலைமுறை எமதான ஊரிற்க்கு இப்படியான ஒரு பொது நூலகத்தை கட்டாததுவும்,எமக்கான நூலகம் ஒரு சுய கட்டிடம் இல்லாமல் ஆண்டு தோறும் நகர் நிலையில் இருப்பதுவும்,எவருமே அந் நூலகத்திற்கான ஒரு பிடி நிலம் கூட கொடுக்க முன் வராத நிலையில் உங்களின் பெற்றோரின் இந்த காத்திரமான செயல்பாடு எனை இந்த விடயத்தில் இணைய வைத்தது என கூறலாம்.மேலும் கடந்த காலத்தில் இப்படிஒரு எண்ணமோ அன்றி செயல்பாடோ முன்னெடுக்கப் படாத புறச் சூழலும் ஒரு காரணம்.இத்துடன் நூலகம் ஏதோ ஒரு வகையில் இன்னமும் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றது.

நான் புலம் பெயர்ந்து ஆண்டு 2009வரை என்னால் இப்படியான ஒரு தொடர்பை எமதூரவர்களுடன் ஏற்படுத்தக் கூடிய சாத்தியமோ,சந்தர்ப்பமோ எட்டவில்லை.அத்துடன் எனதான நிலைப்பாடு இங்கு குறிப்பிட முடியாவிடினும் நாடு சம்பந்தமாக காத்திரமாக இயங்கி கொண்டிருந்தேன்.அது பற்றி இதில் குறிப்பிடத் தேவையில்லையென கருதுகின்றேன்-ஆக எனதான செயல்பாடு நாடு,ஊர் என ஏதோ வகையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.மேலும் தகவல் தொடர்புச் சாதனங்கள் இப்போது போல் அன்றில்லை.

சுருங்கக் கூறின் எமதான நூலக கட்டுமானத்திற்கான காலக் கனிவு உங்களின் பெற்றோரின் நிலக் கொடுப்பனவும்,அதன் பிற்பாடு நூலகத்தின் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பான செயல்பாடும் என்னை இந்த பணியில் இணையவைத்தது.

3.அண்மைக் காலமாக உங்களின் எழுத்துக்கள் கிராம வளர்ச்சி பற்றி இருப்பதேன்?

நாடு தற்போது இருக்கும் நிலைதான்.புரியவில்லையா?
புலம் பெயர்ந்து வாழும் நாம் ஏன் இந்த கட்டுமானத்தை தார்மீகமாக முன்னெடுக்க முடியாதா?பிற நிறுவனங்களிடமோ,அரச சார்பற்ற நிறுவனங்களிடேமோ நாம் ஏன் கை ஏந்த வேண்டும்.அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் எமது சமூகமென்ன இன்றைய நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழா வாழ்கின்றார்கள்.
வீடு,கார்,ஆடம்பர அணிகலன்களுடன் வாழ்கின்றார்கள்.
ஆனால் ஊரில் எமது உறவுகள் அன்றாட வாழ்வூதியத்திற்காய் அயராது உழைத்து வாழும் என் சுற்றம் தங்களின் வசதியை மீறிய பங்களிப்பை நிதியாக அளித்துள்ளார்கள்.தொடர்ந்தும் அளித்துக் கொண்டே உள்ளார்கள்.
புல வாழ் மக்களும் அதே அளவு நிதியையே கொடுத்துவிட்டு,சிலர் ஏதும் இதுவரை கொடுக்காமல் சும்மா கதையளந்து கொண்டு மற்றவர்களை இழிவாக பேசும் மனநிலை களைந்து தமதான காத்திரமான நிதியை கொடுக்கும் சூழலில்வாழ்கின்றார்கள்.எனவே அவர்களையும் உள் வாங்கி நாமே நமது பணியை ஒப்பேற்ற எனதான இந்த எழுத்துக்கள் உதவும் என ஆழமாக நம்புகின்றேன்.
மேலும் நான் மட்டுமல்ல என்னுடன் இணைந்து செயல்பட இன்னமும் பலர் உள்ளனர்.
அதாவது இந்த கட்டுமானப் பணிக்குள் பாராமுகம காட்டும் எம் ஊரவர்களையும் உள் வாங்க வேண்டும்.எனவே அதை முன்னிறுத்தி என்னால் தெரிந்த வரியில் எனக்கு தெரிந்த மொழியை உபயோகிக்கின்றேன்.

4.உங்களின் எழுத்துக்களால் சிலரது மனம் காயம்படுகின்றதாக பேசுகின்றார்களே அதுபற்றி உங்களது கருத்தென்ன?

எவரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு அறவே இல்லை.பண்படுத்தி ஒன்றாக சேர்ந்தியங்க அறை கூவலாக என் எழுத்துக்களை பயன்படுத்துகின்றேன்.
மொழி விளக்கம் அற்றிருத்தல் என் பிழையில்லை.ஆகவே தொடரும் என் எழுத்துக்கள் எம் ஊரவரை காத்திரமாக உள்வாங்கும்வரை.

5.சனசமூகத்தின் வளர்ச்சிக்காக நிதி பங்களிக்காதவர்களை நேரடியாக தாக்கி எழுதுகின்றீர்களே இது நியாயமா?

நிச்சயமாக நியாயம்தான்.நான் கேட்பது அயலூரவரையல்ல.எனதூரவரை.அதற்கான எனக்கு தார்மீக உரிமையுண்டு.அதை நீங்கள் குறிப்பிடும் எவராவது என்னிடம் நேரடியாகவே தொடர்பற்றிருப்பது ஏன்?
அவர்களிற்கு தெரியும் அது அவர்களின் தார்மீக கடமையென்று.ஆக தனதான நிதி பற்றிய பங்களிப்பை மறுதலிப்பதற்காக,அல்லது தாமதிப்பதற்காக,அல்லது வேற்று முகம் காட்டி சுயபரிதாபம் சூடுவதற்காக இந்த குற்றச்சாட்டை முன் வைப்பதாகவே நான் கருதுகின்றேன்.
எனக்கு நூலக நிர்வாகம் மூலம் இடப்பட்ட பணியினை முன்னேற்பாடாகவே செய்து முடிக்க விழைகின்றேன்.இது ஒன்றும் தனி நபர் பணியல்லை.ஆகவே எமது சமூக,ஊரவர்கள் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டிய காலப் பணி.மேலும் நான் யாரின் பெயரையோ,அல்லது உறவையோ குறிப்பிட்டு இன்னமும் ஏடெடுத்து எழுதவில்லை.ஆனாலும் அப்படியான பணி தொடரலாமென எண்ணுகின்றேன்.இது அவர்களின் இயங்கல்களே தீர்மானிக்கும்.

6.ஊரில் இருந்த போதும் சரி,வெளி நாடு வந்த போதும் சரி எந்த பொதுச் சேவையிலும் ஈடுபாடின்றி இருந்த குமார்.இப்போது பொதுப்பணிபற்றி பேசுகின்றாரென உங்கள் கிராமத்தார் சிலர் விமர்சிக்கின்றார் அது பற்றி உங்கள் கருத்தென்ன?

இதற்குரிய விளக்கமான பதில் வினா1 ல் காண்க.கடைசி பதிலிலும் விளக்கியுள்ளேன்.

7.உங்களின் கவிதைபற்றி கூறும்போது பொருளில்லாக் கவிதையென சிலர் கூறுகின்றனர் அதுபற்றி உங்கள் கருத்தென்ன?
என்னால் பேச்சுத் தமிழில் எழுத முடியாது,தமிழை சிலரால் புரிந்து கொள்ள முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.மேலும் நான் கவிஞனோ அன்றி எழுத்தாளனோ இல்லை.அப்படி நான் கருதிக் கொண்டதும் இல்லை.
என் பாணி தனிப்பணி.இதிலஇ தடம் மாறாது தமிழ்.புரியாதவர்கள் தடுமாறுவது தம்மை தாமு இழிவாக்கவதாக நான் கருதுகின்றேன்.கருத்தில்லா ஆக்கமெனில் ஆளுமையான கருத்துப் பதிவாக்கலை இவர்கள் மேற்கொளாதிருப்பதேனோ?
தனிப்பட்ட ரீதியிலோ அன்றி face book மூலமோ இவர்கள் இதை விமர்சிக்காதேன்.ஆக தான் "விளங்காச் சிங்களம் தன் பிடரிக்கு சேதமென்ற" அணுகுமுறை என்னிடம் இல்லை.மேலும் என்னால் இதில் தமிழ் கற்பிக்க முடியாது.இத் தளம் கருத்துக்களை ஆளுமையாக ஏற்கும் தளம்.
ஆகவே புரியதவர்கள் புரிய முயற்சிக்கவும்.அஃதன்றி என்னிடமே நேரடியாக விளக்கம் கேட்கலாம்.எது பிழை?எங்கு எழுத்துச் சறுக்கல்,தமிழ் அது தமிழாக இருக்கும் வரை நாம்தான் தெளிவு பெற முயற்சிக்கணும்.அப்படி என்னில் இந்த குற்றம் சாட்டுபவர்கள் தாமே முன் வைத்து ஒரு சுய விமர்சனத்தையோ அல்லது கிண்டலாகவோ தமது கருத்தை பதிவு செய்யாதது ஏன்?
தனக்கு புரியவில்லையென்பதால் தடமே பிழையென்பது சரியா?
கலகம் பிறந்தால் ஞாயம் பிறக்கும்.இவர்களிற்கு ஞாயமே தெரியவில்லை போலும் அதுதான்.

8.கனடாவில் வசிக்கும் உங்கள் கிராமத்து நண்பன் கிருட்டினனுடன் இதிகாச விடயங்களில் மோதுவது ஏன்?

சிந்திக்கும் சுய திறனும்,ஏற்புடையதற்ற விடயங்களை வெளிக்கொணரவேண்டிய தேவை காரணமாக.திணிப்புக்களை இதிகாசமாவோ,புராணமாகவோ விழுங்கும் காவி மனப் பான்மை என்னில் அறவே அற்றதால்-எமக்குள் இந்த நாகரீகமான மோதல்.அவ்வளவே.
மேலும் கற்களை கடவுளாக ஏற்கும் சுய திறனற்ற,சுய தேடலற்ற மானுடமாக வாழ விருப்பகற்றி--இன்னமும் கூறிக் கொண்டே போகலாம்.தேவையற்றதென நினைப்பதனால் இதை அப்படியே விடுவோமே.

9.அண்மையில் கனடாவில் நடந்த கலந்துரையாடல் பற்றி நான் வெளியிட்ட எனது "பார்வை"
பற்றி நீங்கள் எழுதிய விமர்சனத்தில் "குறவர்காலத்தில் வாழ்கின்றார்களா"?என்று நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தபோது இந்த சாடல் ஒரு ஆரோக்கியமானதாக என்னால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.மேலும் இந்த வார்த்தை பிரயோகம் என்னை மிகவும் புண்பட வைத்தது இதற்கான உங்களின் பதில்?

விமர்சனம் என்பது ஒரு சமூகக் கோபமாக வெளிவரும் போது இப்படியான வார்த்தைகள் தானாகவே வெளிவருவது இயல்பே.அங்கு நடந்த உரையாடலில் சிலரின் கேள்வியே என்னை
இப்படி எழுத வைத்தது.ஆக "குற்றவாளியை விட குற்றம் செய்ய தூண்டியவரே தண்டனைக்குரியவர்".
எனவே இந்த குற்றச் சாட்டு என்னை சாராது.இந்த வார்த்தையின் வெளிப்பாடு.சில புறச் சூழலின் வெளிப்பாடே தவிர அக வெளிப்பாடல்ல.பலவிதமான சிந்தனையின் பின்பே இவ் வார்த்தையை பிரயோகித்தேன்.ஆக இழைக்கப்பபட்ட எழுத்தை திரும்ப பெற முடியாத நிலையல் நான் உள்ளேன்.மேலும் இதனாலான தாக்கமென்ன? உண்மையைத்தானே குறிப்பிட்டேன்.இது கேள்வியாக இருந்ததே தவிர அப்படித்தான், என நான் சொல்லவோ குறிப்பிடவோ இல்லை.எனவே மீண்டும் தெளிவாக வாசிக்கவும்.அர்த்தம் தெரியும்.
ஆக இது புரியவைக்க எழுதப்பட்ட ஆளுமையான வெளிப்பாடு.

10.உங்களது கிராமத்தில் நிறை கல்விமான்கள் இருந்தும் கிராம வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் ஒதுங்குவதேன்?

மிகவும் காத்திரமான கேள்வி இதற்கான தேடலில் நானும் உள்ளேன்.பதிலாக பின் வருபவை அமைகின்றதோ என்ற ஐயப்பாட்டில் நான் உள்ளேன்.
1.சுய நலம்
2.எனக்கேன் என்கின்ற வெளிப்பாடு.
3.பொருளாதார நிலமை.
4.ஒற்றுமையற்ற இயங்கல்.
5.தான் பெரியவன் என்கின்ற சுய கெளரவம்.
6.சமூக விளிப்புணர்வற்ற தன்மை.
7.தன்னை சுற்றியே போட்ட வலைப்பின்னல்.
8.கலட்டியான்,வலிகாமத்தான்,பிலாவடியான்,கோந்திரம்பத்தையான்
தோட்டம் பிள்ளையான்,பரியாரி வளவான்.காரைக் கலட்டியான்.என இப்படியான ஏற்றத் தாழ்வோ என எண்ணகின்றேன்:
மேலும்
பரம்பரையில் தமது சகோதரர்களடனான ஒற்றுமையின்மை.

இன்னமும் தெளிவான சமூக விளிப்புணர்வற்ற சமூக காவி மனப்பான்மை.
இப்படியான நிலையென கருதுகின்றேன்.மேலதிகமாக வெளிப்படுத்த விருப்பமில்லை.
எனினும் சிவப்பிரகாச வித்தியாசாலையின் தோன்றலிற்கு காத்திரமான பங்களிப்பை நல்கியிருந்தார்கள் என்பது மறக்க முடியாத,மறைக்கக் கூடாத யதார்த்தம்.
இல்லையென்றால் எமது ஊரில் சிவப்பிரகாச வித்தியாசாலையேது?

மேலும் ஏதோ ஒரு வகையில் இன்னமும் நூல் நிலையம் இயங்குவதென்பதுவும் மறுக்க முடியாத உண்மையில்லையா?


11.பாரதியின் வாய்ச்சொல்லில் வீரரடி என்ற சொல் யாருக்கு பொருந்தும்?

என்னை வில்லங்கத்தில் மாட்டுவதாக எண்ணமோ?மன்னிக்கவும் பதில் காலம் பொறுத்து வெளிவரும்.அதற்காகவே ஒரு ஆக்கமும் வெளியிட உள்ளேன்.அப்போது அதற்கான பதிலை பெறுவீர்கள்.

12.கனடாவில் வாழும் எமதூரவர்கள் பற்றி விமர்சனம் செய்வது முறைகேடான விடயமென உங்கள் நண்பரொருவர் குறிப்பிட்டார் அது பற்றி உங்களின் நிலைப்பாடு?

ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகின்றேன்.இந்த உலகில் எந்த மூலையில் வாழும் எனதூரவனை விமர்சிப்பதற்கு எனக்கு உரிமையுள்ளது.அதாவது தானாகவே என்னிடம் நேரில் முறையிடும் வரை வரையறையுடன் எனது இந்த கருத்து தொடரும்.மேலும் என்னுடன் யாரும் தொடர்பை ஏற்படுத்தவில்லை.இது பொதுவான,எமது ஊர் சார் விடயம்.சிலரிற்கு விடயங்கள் தெரியாமல் இருக்கலாம்.தெரிந்தவர்கள் பாராமுகம காட்டலாம்.காட்டுபவர்களையும் காட்டமாக இலங்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டுள்ளது.ஏனெனில் இது எமது காலக் கடமை.எமது முன்னோர்கள் செய்த பிழையை அல்லது தவறை என்னுடைய தலைமுறை தவிர்க்க அல்லது வேற்று முகம் காட்டி புறம் செல்வதை அனுமதிக்க முடியாது.ஆகவே தற்போதைய நிலையை விளக்கி நாம் எல்லோரும் சேர்ந்து இயங்கி இந்த கட்டுமானத்தை நிறைவேற்றும் வரை இது தொடரும்.தவிர்க்கவோ,ஒத்தி வைக்கவோ முடியாத காலக் கடன்.
இதை தற்போது வாழும் இளைய தலைமுறையிடமோ,எதிர் காலத்தில் வரும் சந்ததியிடமோ ஒப்படைத்து நாம் தப்பிக்க முனைவது மனிதாபமான செயலும் இல்லை.

எம்மால் இப் பணியை செய்து முடிக்கக் கூடிய வல்லமையும்,பொருளாதரா கட்டுமானமும் தாராளமாவே உள்ளது.இது யதார்த்தம்.
என்ன சிலரிற்கு தனம் தரும் மனம் இல்லை.அதற்காக அவர்களை புறம் தள்ள முடியாது.முடியுமானவரை எல்லோரையும் உள் வாங்கி செயல்பட வேண்டியுள்ளதால் இந்த செயற்பாடு.நான் கனடாவில் உள்ளவர்களை மட்டும் எதிர்பார்க்கவில்லை.இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் வசிப்பவர்களுடன் தொடர்பில் உள்ளேன்.
ஆயினும் உங்குள்ளவர்களே கூடுதலாக எமதூரவர்களாக உள்ளபடியினாலும்,எனது நண்பர்கள் என்பதானாலும் எனது செயல்பாடு உவ்விடம் குடிகொண்டுள்ளது.மற்ற நாட்டில் வாழுபவர்களின் நிதியும் நூலகத்தை சேர்ந்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே முறைகேடென்று ஏதும் இல்லை.ஆயின் சம்பந்தப்பட்டவர் என்னுடன் தொடர்பு கொள முனையாதது ஏன்?எனது தொடர்பூடகம் எப்போதும் திறந்த நிலைியிலேயே உள்ளது.ஆனால் யாரும் எந்நேரமும் என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


13.உங்களின் ஆரோக்கியமாக கருத்துக்களிற்கு யாரும் தடை சொல்லவில்லை.சில சந்தர்ப்பங்களில் சமூகத்தின் மேலுள்ள வெறுப்பால் கடுமையான சொற்களை பிரயோகிப்பது தவறில்லையா?

நிச்சயமாக இல்லை.நான் எவரையும் நேரடியாக சாடவில்லை.நீங்களே அதை குறிப்பிட்டும் உள்ளீர்கள்.சமூக கோபம் தவிர்க்க முடியாதது என்ற உண்மையை நீங்களே ஏற்றுக் கொள்ளும்போது சில சமயம் சில ஆரோக்கியமான வார்த்தைகள் கடுமையான சொற்களாக பார்க்கப்படுகின்றது.இதுதான் உண்மை.கசப்பதால் அது நஞ்சாகாது.

14.ஊர் எப்படி இருந்தாலென்ன என் வங்கி கணக்கு சரியாக இருந்தால் போதும் என நினைப்பவர்கள் பற்றி?

தான் பிறந்து,தவழ்ந்து,நடைபயின்று,கல்வி கற்ற முற்றத்தையும்,எமதான சுற்றத்தையும் எண்ணி செயல்படுவதே சாலச் சிறந்ததாகும்.
சுய நலமாக வாழுவது பற்றி கருத்துக் கூற நான் வரவில்லை.அதில் கொஞ்சமேனும் பொது நலத்தையும் சேர்த்து வாழுங்கள்.வெறும் பணம் உன் ஆத்மார்த்தமாகாது.ஆடம்பரமாகவோ,பெரு வசதியாகவோ வாழ்வது உங்களின் தெரிவு.அதுபற்றி நான் மிகவும் சந்தோசமாக ஏற்கின்றேன்.அதே சமயம் எமது ஊரை உள்ளத்தால் ஆத்மார்த்தமாக நினைத்து ஒரு சமூக கடமையாக செய்யுங்கள்.சும்மா எதிர்கால கனவு காணாமல் நிகழ்காலக் கடனாக இந்த நூல் நிலைய கட்டுமானப் பணியை ஏற்று செயல்பட இந்த வங்கி கணக்கில் மட்டுமே கவனம் செலத்தும் எம்மவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் இன்று உனதான இந்த வாழ்விற்கு மூல காரணமே நீ பிறந்த எமது ஊர்தான் என்கின்ற நன்றியுணர்வாவது வேண்டும்.இதற்கு மேல் நான் எதை கூற.
உணர்வு தானாகவே வரவேண்டும்.அல்லது மற்றவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.அதுவுமன்றி தனதான பெருமைக்காகவேனும்,பொது விடயத்தில் ஆளுமையாக கவனத்தை செலுத்த வேண்டும்.
இஃதும் அற்றோர் செத்தோரே.

15.உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்?

ஆம்.நான் முதலி்ல் குறிப்பிட்ட எமதூரில் நானும்,அருந்தவராசா(வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டார்)மொறிசன் சேர்ந்து எமது வீட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள வயல் வெளியில் ஒரு மாபெரும் "மெய்வல்லனர் போட்டி" நடத்தி காட்டியது.மிகவும் பிரமாண்டமாக அதை நடாத்தி முடித்தோம்.அன்று பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திரு.காராளசிங்கம் இந்த வயல் மைதானத்தை பொதுவான விளையாட்டு களமாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டார்.

மறு நாள் காலை விரிந்திருந்த வயல் வெளி தனிப் பயனாளரின் எல்லைகளை உள் வாங்க தொடங்கியது.அன்று முதல் நாம் துடுப்பாட்டமாடிய நிலம்,கிளித்தட்டு விளையாடிய எல்லை.பட்டமேற்றி விண் கூவிய விரி நிலம்.தன் எல்லை சுருக்க தொடங்க எமது விளையாட்டு மைதானமும்??????
ஆதாரம் தேவையெனில் தற்போதும் வேலாயுத ஆசிரியரின் மகளான செந்திருவின் நெற்றியில் இருக்கும் வடு.இந்த உண்மைகளை பறை சாற்றும்.அல்லது தற்போது அமெரிக்காவில் வசிக்கும் திரு.நாகலிங்கம் யோகநாதனிடம் தொடர்பேற்றினால் இதன் நம்பகத் தன்மை மெய்ப்படும்.

2.தற்போது கட்டுமானத்தின் குறிப்பிட்ட எல்லைவரை நிமிர்ந்திருக்கும் எமது நூல் நிலையத்தின் கட்டுமானத்தை நிறைவேற்ற எம் ஊரவர்களுடன் மல்லுக் கட்டி நிற்கும் தற்போதைய செயல்பாடு.

இன்னமும் உண்டு தேவையற்றதென கருதி அவைகளை விட்டு விடுகின்றேன்.

நன்றி தங்களின் தொடர்பாடலிற்கு.

சனி, 5 மார்ச், 2011




மனம் விட்டு கதைத்தால்
தனம் விட்டு போயிடுமாய் சிலர்
கனமகன்று களம் விலகும்
குணமகல வேண்டும்.அப்போதே
சினமகன்று, சீலம் தகைத்து,
...வனம் சூடும் தளம் விரியும்.

அஃதகன்று
சம்பிரதாய வணக்கம்!
தம்பிராயனிற்கு மட்டுமே,
உன் பிராயமோ,என் பிரியமோ!
ஊரக வரம்பு வளம் பெற,
உளம் திறந்து உரையாடி,
வளமான வகை தகைத்து,
கனமான நிதி அளித்து-- எம்
கலட்டி நூலகம் கனகதியில் இலங்க,இயங்க
விழி திறந்து,வழி சமைக்கும்.

யாரும்,யாரிடமும் கோபம் கொளல் வேண்டாம்.
வாரும்!
உன் மதி நிதியளிக்க வேண்டும்.
தாரும் நிதியென யாரும் உனை இறைஞ்சாமல் நீ
ஊரும் உறவாட உவகை உனையளக்க
பேரும் பேறும் பெருமையாய்-
உம் பெருந்தன்மையை நல்குவாய்.
நூலக எதிர்பார்ப்பாய் பெருந் தனம் நீ பொறுப்பாய்
உணர்வுடன் நல்கி ஊரவரை உன் வழி ஏற்க
முன்னுதாரணமாய் முகிழ்வாய்.


மு.குறிப்பு!
இரை மீட்டு தரை தடவாமல்
கறை பூசும் கதையகலக வேண்டும்.
திறமான நிதி வேண்டும்.திண்ணமாய்
உயர்ந்திருக்கும் தளம் காண்.
தடைக் கல்லாய் இருப்பகற்றி
பலன் தரு கற்பகமாய் உடன் வருவாய் உறவே.
உன் உயிர்ப்பில் உவப்பில் ஊரக நூலகம்.

யாதும் புரிவீர்.
காதும் கதையுமாய்
ஏதும் தெரியாமல் எமை ஏய்ப்பதாய்
உமை கழிவிற்குள் தள்ளாதே.
களிவிரக்கம் கொள்ளாதே.இது
ஒவ்வொருதரினதும் காலக் கடமை.
மறுத்துரைக்கவோ ஒத்திப்போடவோ முடியாத
சீராக கடமை புரிவாய் பரிவாய்.
ஆகவே
காலக் கடனறிந்து காத்திரமாய் இயங்கு.

தொடருவேன்.
ஒவ்வொரு வாரமும் இது தொடராய் தொடரும்.
எவரும் என்னுடன் தொடர்பு கொள விரும்பின்.
எப்போதும் எனதான வாசல் திறந்திருக்கும்.
படருங்கள்.
அடுத்த பதிவு எமதூரின் கல்விமான்களிற்கு!

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

பேரன்னைக்கு என் பெரு வணக்கம்.


அம்மா!
ஈழத் தாயே!
ஈடில்லா வீர
வேங்கையை பெற்றெடுத்த பெருந் தகையே!
காலமெலாம் கயமைகளால்-
ஞாலமிழந்த எம் ஞாயங்களை-
மீளெடுத்து எம்
கோலமெழுதிய கொற்றவனை
தந்தவளே!
ஈன்ற பொழுதை விட பெருமை பெற்றவளே!
உன் மைந்தன் உமக்காற்றிய
ஆழ்ந்த வியத்தகு வீரியங்கள்,
பெரு விழுதாய்,
புடை சூழ இயற்கையெய்தினாய்.

ஈழத் தாயே
போய் வருக,
நோயின் உபாதைகளின்
உத்திரத்திலிருந்து உறவறுத்து
செத்திலாள் இந்த சேந்தனை பெற்றவள் என்ற
பெரு நிறைவுடன் போய் வருக எம்
பெரு நிறை சூழ் தாயே.

உங்கள் ஆத்மங்கள் ஓய்வெழுதட்டும்..
ஆன்மா அழகியலாய் அமைதி பெறட்டும்.
திங்களாய் எம் வாசல் வந்தாய்-அம்மா
சிங்களனால் எம் இனம் பெற்ற இன்னல் தீர்க்கும்.
பொன் ஈழ வேந்தனை ஈன்றெடுக்க நீ வருவாய்.
நிச்சயம் நீ வருவாய்.
போய் வா எம் பொற்பாதமே.
பதமே.
பேரன்னைக்கு என் பெரு வணக்கம்.

வலைப்பதிவு காப்பகம்