புன்னை மரக் குயில்களாக,
புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்,
தின்னக் கொடுத்தோம்.திமிரெடுத்த
சிங்களத்தின் கொடுங்கரத்தில்.
என்ன பிறவிக் கடனிது?
ஏனிந்த அவலத் தொடரது?
தின்னத் தின்ன சின்னத்தனம்.
சிரசெரித்த கோழைத்தனம்.
வண்ணக் கலவை குழைத்த-எங்கள்
வைடூரியங்கள்-எல்லாம்
பண்ணை பிறழ்ந்த பரிதாபம்.
எண்ணக் கிடங்கில் எத்தனை நாள்?
நினைவழித்த நாட்களாய்-இனி
நிதம் கலைந்து போகுமா?
நினைவெழுதும் நாளின்றி-நெஞ்சம்
கனம் கலைத்து காயுமோ?
தொலை தூரம் தெரியாத சொப்பனமாய்-
வலையிறுத்து வஞ்சக பாழகர்கள்-எங்கள்
விலையற்ற வித்தகங்களை எந்த
வினையாற்ற அழித்தார்?
வலி, புரியவைக்க முடியாத வலி.
பலி, பகைக்கு பகை தெரியா பலி.
நலி ,நகையிழந்த நம் செஞ்சோலை நலித்த,
கலி, காலமிழந்த கலி வலியேற்றி -இனி
எந்த வதைமுகம் காட்டும்?
அஞ்சலிக்க மட்டுமல்ல இவ்வாக்கம்.
செஞ்சோலை பாலகரின் நினைவு நெகிழ்வாக,
கொஞ்சி விளையாடும் கொற்றங்களிற்கு தங்க
தலைவன் சமைத்த சபை பற்றி பண்ணாட,
நினைவுகள் தெறிக்க,உள்ளம் பற்றும் கனல் சுமந்தும்
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக