புதன், 27 ஜூலை, 2011

எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.
சங்கேதமேதுமின்றி அது சாளரம் திறக்கும்.
பங்கமேது இல்லாததாய் அது பாசுரம் பாடும்.
அங்கம்,
அந்த அங்கம் அது போதும் எனக்கு -என்
ஆக்கம் தேக்கமது தவிர்க்கும்.
பூக்கும், அது-
பூக்கும் தொடர் பூபாளம் இசைக்கும்.
உனக்கும் அந்த நெருக்கம் உளமாலை சூடும்.அதை
வனப்பம் ஏற்று வாசல் வசந்தம் ஊ(கூ)டும்.

சிந்தனை செய்யென்றால் நிந்தனை செய்வோரே!
வந்தனை வாசம் பெற வாயிலை திறக்காரே!
நிந்தன் நியம் நியமம் ஊற சுய ஊக்கம் ஆய்ந்தீரா?
பந்தமது பரப்பெழுத பண்பலை வாசித்தீரா?

சொந்தமது சொத்தல்ல என்று சித்தமது நிறைத்தீரா?
மந்தமான மனக் கணக்கில் மணிக்கணக்கில் சீராய்ந்தீரா? -
உந்தனது குணக் குன்றில் என்ன வன(ள)ம் யாசித்தீர்?
மைந்தன் -எங்கள் வைகுந்தன்-
எம் மண்ணென்ற மாதவத்தை மறந்தீரோ -நாளை
உன் மண்ணே உனை மற(று)க்கும் யாதகத்தை மறுதலிப்பீரா?.

எங்கோ ஒரு நுகர்வு என் தகம் ஆசிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்