வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,
எத்தகம் மூடி சிதைத்தார்கள்?
உன் சித்தகத்தில் சிறக்கல்லையா?
பித்தகங்கள் பிறவியாக பிடரி வழி
பிறழ்ந்த சிங்களனவன் பிஞ்சு முதல்-எங்கள்
உறங்கு குழிவரை உயிர்த் தண்ணி பறித்தான்.
பொது மக்களின் புதை குழியில் நாளை இவர்
"மா"?வீரக்குதூகலம் கலக்க -எந்த
"பா" ஏந்தினார்கள்?ஆம்
அரக்க சிந்தையர்கள் கால,காலமாக களி(ழி)க்கும்,
அனந்த நிலையது அவர்கட்கும் பொருந்தும்.
எந்த போதினி போற்ற பொய்கை கலந்தார்.
எம் இன அவல "சா"க்களில்:இவர்கள்
"சா"க்கடை திறப்பு.நாம் தீக்குளித்து
எரிந்த மேட்டில் சாம்பல் இன்னமும்
கரையவில்லை.
காயவில்லை!
கல,கலக்கின்றான்
சிங்களக் காடையவன்-பேரினவாத
தெருக் களத்தில்.
புலத்து நண்பனே!
என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்?
உன் கடனாற்ற!
வழமைபோல்
வேற்று முகம் காட்டி எந்த தோற்றுவாயில்
உன் வரப்பெழுதுவாய்?
இப்பவும் நீ தூங்க நாளை
உன் வீட்டு முற்றம் மட்டுமல்ல-நீ
கட்டியிருக்கும் கோவணமும் ஆவணமின்றி அகலும்.
விழித்திருக்க,
விவேகமாக செயலாற்று.அஃதின்றேல்
உன் முகவரியை மாற்றினாலும்-உன்
பிறப்பதை மாற்றமுடியாது.அது
உன் ஆயுள்வரை வரையறையின்றி
சந்ததி வரை வரப்பிளக்க வழியாகும்.
பசித்திரு!
பாரில் எப்போதும் விழித்தெழு -நாளை
ஊரில் உன் உறுப்பெழுத.
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக