எந்த நினைவுகளையும்,
எங்கள் உறவுகளையும்,
எந்தன் சுற்றத்தையும்,
எங்களான முற்றத்தையும்,
நினைவுகளால் என்றாலும்,
களையும் நினைவிருந்தால்,
எல்லாமே அல்,ஆன்,ஒடு,ஓடுவாக
ஓர்மம் களி(ழி)த்தால்!
நாம் தமிழராய் தலை நிமிர்வதில்
எவ்வித யோக்கியதையோ,பாத்தியதையோ
அர்த்தமோ இல்லை.
எனவே!
எனக்குள்,உனக்குள்,எம் எல்லோர்க்குள்ளும்
குமுறும் குரலாய் நான்
இங்கு குறியிடும் குவியத்தை குலைக்க
யாரும் கனவிலும் கடுகள்ள வேண்டாம்.
இது!
தர்மத்தின் குரலாய்
குறி சுடும்.
சூடப்(கற்பூரம்) புத்தியுள்ள
சூட்சுமம் உள்ளோரே!
சுகிப்பீராக!?
என்னைத் தாழ்த்துவதாய்-நீ
தாழ்ந்து போகாதே,நீ
நுணலானால் ஒரு போதும்
அரவமாய் அறம் தீண்டேன்.
மறவாதே மானிடமே!
அனுதினமும்,
உறங்கும் முன் ஒரு கணமாவது
உன் முற்றத்தின் அவலத்தை
உள் வாங்கு!
சிலாகி!
உற்ற வழி தேடு உனக்குள் உறங்கும்.
பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.
ஒரு திவ்விய ஒளி உன் அகம் சூடும்.
கனவுகள் காண்,
அதை தினமும்
புனருத்தாரணம் செய்.
சமூக சிந்தனை அகம் ஊட்ட,
ஏதோ,
ஏதோ ஒன்று உன் இலங்கலில்
இயங்க மடி தேடும்.அந்த
மனிதம்,
அதுதான் உன் இயல்பாக முடி சூட.
எது உன்னால் முடியுமோ?
அது தானாக உனை இயக்கும்.
ரத்தத்தின் சத்தத்தில்
முற்றங்கள் முகை நு
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக