ஈகையின்
இமய வரம்பே!
நெடிதுயர்ந்த வீரக்கனலே!
துயர் தாங்கிய கொடிகளின்,
உயிர்
நெருப்பே!
பகை எரித்து பாளும் அவர் பாதமான பாதை அழிக்க,
உம்மைபுடம்
போட்டு புனருத்தாரணம்,
பூட்டிய பூம்புனல் புனித திருவே!-
நீவிர்
தொட்ட
பகையின் உளப் பரப்புக்கள்,
எல்லாமே உன் பெயருக்குள் அணுவாக,
கரு
எனும் வார்த்தையில் அவை கரியாக,
வரும் பகை திருப்பிய திருவாக,உருமறைத்து,
உளம்
செருக்கி,
சொல்லாப் பெயர் சுருக்கி,
சுயம் எரித்து,
கயம் கலைக்க
கரும்புலியமான கார்த்திகர்களே!
இன்று !
உன் நினைவெழுதும் நாளா?
இல்லை,
நீவிர்
தமிழீழப் பரப்பில் பிறந்த திருநாளா?
அல்லது,
பாரும் பகையே எந்த
பரமத்திற்கும்
அடிபணியாத் தலைவனின் அகத்தில்செருக்காய்
குடியிருந்த
பெருநாளா?
அஃதன்றி-அகிலத்தில் தமிழீழத்தை யாகிக்கும்
அத்தனை
தமிழர்களின் ஆவிதனில்
நீவிர்உனது ஆன்மாவை நிறைவிருப்புடன்,
தமிழீழத்திற்காய்
நிமிர்வெழுதி நிறைவாக்கி,
நிலைவெழுத்தாக்கிய நிறைநாளா?
எத்திரு
நாளென எண்ணி உனை எழுதுவேன்?
செத்திருந்த தமிழினத்தை
உயிர்த்தெழ வைத்த வேதியர்
நீவர்.
உங்கள் சொத்தனைத்தும்-
தமிழீழ தாகமென உயிரெழுதி-
உயிர்
பரப்பி உன்னதமான இந்நாளை
ஆவிக்குள்ளும் அடங்கா எமை மேவித்திரியும்
உன்மெட்டுக்கள்
என்றும்அணைந்து விடா
கட்டுக்களாக -
எமது சந்ததிகள் உள்ள வரை
உம்
வரைபுகள் வகையெழுதும்.
தமிழீழ யாசகர்களே!
தனை சான்றெழுதிய
போசகர்களே!
உமை ஈன்ற மண்ணிற்கானவர்களே!
மனை மீளும்.
விழி
சிரிக்கும்.
உன் குவியங்களின் குழிகள்-
இன்று ஓர் பாரிய
இடைவெளியில்-
ஆயினும்-
ஓயாத,ஒப்புவமையற்ற ஓர்மங்கள்
சலனமின்றி,
சந்தடியகற்றி
சாவாசமாய்,
புலனேற்றி பூப்பார்கள்.
புண்ணியரே!
சேதிவரும்
நாளுடன் -
உன் செந்தமிழாணை கலந்து.
பொதுமை வேணி நீர் ஏந்திய
சிந்தனைகள்.
இனத்தின் தமிழினத்தின்,
தமிழுணர்வின்,
இல்லை தாயக
விடியலில்,
தலைவனின் தார்மீக சமரில்,
ஏன்!
எல்லாவற்றிற்கும்
மேலாக,
சுதந்திரத்தின் அந்த சுந்தர,
விடியலில் நீவிர் கொண்ட
வேட்கைகள்
எந்த வேதத்திற்குள்ளும்
இடிபடாமல் விடுதலை
உச்சாடனத்திற்குள் மட்டுமே
உறைந்திருந்த உணர்வுகள்.
சந்தனக் காற்றாய்
என்றும் எம் நினைவில்.
சரித்திரர்களே!
சாந்தி கொள்.
நல்ல
சங்கதிகளுடன்சஞ்சரிக்கும் நாள் கூடும்.
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக