புதன், 27 ஜூலை, 2011

எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,
தொழுதெழுதி தோழமை சூட்டி,
விழுது பற்றி விவேகம் பாராட்டி,
பழுதகற்றிய எம் பத்மர்களை-
இருதயத்தில் பூட்டி,
இருளேந்தா மலர் கொட்டி,
தருணங்கள் வினாடியாக தாள் பணிந்து,
என் இருதயச் சக்கரத்தில் நாளும் நினைவேந்தி,
நாத் தழுதழுக்க நினைவே பாரமாகும்
அவர் தம் ஈகங்களின் அடிச்சுவட்டில்.
ஆண்டோ இரண்டாக அவர்
தியாகங்களின் யாகங்களை
யாக்கையோடு யான் நினைக்கும்
திக்குகள் என் திடமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்