வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயா
வீணர்கள் விளையாடும் வீதியல்லவா ஐயா
விபூதி பூசினாலும் வினை விடுமா ஐயா -நாம்
எந்த சந்நிதியில் தரிப்பெழுத சதி விழும் ஐயா?
நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.
பாழும் பரமர்கள் பதிலற்று பாவிகள்.
வேரும், விழுதுமாய் வேய்ந்த பகை நாள் குறிக்க,
ஆருமற்ற அனாதியாய் யார் ஆய்ப்பார்?
இத்தனை அவலமும் சுமந்த எந்தன் சுற்றம்.
இன்னும்
எத்துணை சுமை,சுமக்க அவர் வாழ்வு பறித்தான்?
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல்,
நெஞ்செரிக்கும் நியங்கள் எந்த கொம்பன் எமை அணைப்பான்?
விடிவு நொடிகளுக்கு மட்டும்தானா?
நொடிக்கும் எமக்கில்லையா?
வல்ல எம் வயலர்களை வார்ந்தெடுக்க பகைக்கு
பாதை விரித்த பாரதமே பதில் இறுப்பாயா?
உனையே துணையென தலைவன் துய்த்த-
பெரும்
கணையை,
துப்பிய பெருந் துரோகத்தின்,
வேரே நீதான்.
இத்தனை அழிவின் அரூப அற்பனே!
கால ஓட்டத்தில் உனதான காத்திரமான பதிலாய்
எம் பாதத்தில் நீ இறைஞ்சும் பாத்திரம் ஏற்பாய்.
பார் இது ஒன்றும் பாஞ்சாலி சபதம் இல்லை.
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக