புதன், 27 ஜூலை, 2011

வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயா

வீணர்கள் விளையாடும் வீதியல்லவா ஐயா

விபூதி பூசினாலும் வினை விடுமா ஐயா -நாம்

எந்த சந்நிதியில் தரிப்பெழுத சதி விழும் ஐயா?



நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.

பாழும் பரமர்கள் பதிலற்று பாவிகள்.

வேரும், விழுதுமாய் வேய்ந்த பகை நாள் குறிக்க,

ஆருமற்ற அனாதியாய் யார் ஆய்ப்பார்?


இத்தனை அவலமும் சுமந்த எந்தன் சுற்றம்.
இன்னும்
எத்துணை சுமை,சுமக்க அவர் வாழ்வு பறித்தான்?


மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல்,

நெஞ்செரிக்கும் நியங்கள் எந்த கொம்பன் எமை அணைப்பான்?


விடிவு நொடிகளுக்கு மட்டும்தானா?

நொடிக்கும் எமக்கில்லையா?

வல்ல எம் வயலர்களை வார்ந்தெடுக்க பகைக்கு
பாதை விரித்த பாரதமே பதில் இறுப்பாயா?



உனையே துணையென தலைவன் துய்த்த-
பெரும்
கணையை,
துப்பிய பெருந் துரோகத்தின்,
வேரே நீதான்.

இத்தனை அழிவின் அரூப அற்பனே!

கால ஓட்டத்தில் உனதான காத்திரமான பதிலாய்

எம் பாதத்தில் நீ இறைஞ்சும் பாத்திரம் ஏற்பாய்.

பார் இது ஒன்றும் பாஞ்சாலி சபதம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்