நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்
நித்திலர்!
பேரறியாமல்,பேதமை நீக்க
ஊரறியாமல் உறுப்பேந்திய
சத்தியரை மறந்தீரோ?
இன்று!
சாத்தியமற்ற சாகித்தியத்தை-
சகிப்பு அப்பாற்பட்ட-
சாதனையை நுகருவாயோ ?-எம்
போதனை அகற்றிய போதி மரம் சூழ
வாதனை உனை வாட்ட -எந்த
"மா "வினை சூட்டுவாய்?
மறந்ததுவும்,
துறந்ததுவும்,
பறந்ததான-
பாவனை காட்டும்.?
எதையும்,யாவற்றையும்,
கறந்தனவாக காதகர் வீதி -
உன் உலா வரும்.
வருடும்,
வசந்தத்தின் சுகந்தங்களென
வீதி புனரமைப்பென பூப்புனித நீராட்டும்-
ஐயகோ!
ஆவி உனை விட்டகல,
ஆவன செயும்.அத்தனையையும் அள்ளும்,
"சோ"வினை உனை சூழ,
உனை நெயும்.
பூசை அறிவாயா?
புத்தா!
என -
உனை புணரும்-
வாதனை அறிவாயா?
வற்றியரே!
என்றும்,
பாதை அறியா பரப்பில்-
வெறும் போதையை மட்டும்-
போற்றும்.
போகியரே!
போ!
உன் வீட்டு முற்றத்திலும்-
அயலவரின்-
ஆத்திலும்,
கல்லாக கடை விரித்த-
காடையரை தொழு.
உன்!
விதியின்-
வீதி-
வீரியம் பெறும்.
ஆம்!
கார்த்திகை முடிந்து-
இப்போது-
திருவெண் பாவை பாடு.
உன்-
வெண் பாவை-
ஆரியன் சூடிய-
காலத்தின் கனிவில்-
கல்லை பூசி!
புத்தனின் புனிதக் கால்-
பதிந்ததாய்-
மத்தாப்பிடு!
போததிற்கு-
உன்,
அயலவரையம்-
ஆராவரமாய் ஆதங்கி-
காத்திரர்களின்-
காலடி ஒதுக்கி?
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக