முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-
முதுகு நேர்த்து சொறிந்த வன்னகைகள்-
தமிழ்
இனத்திற்கு செறிந்த வஞ்சனையின்றி-
எந்த
இகத்திற்கு இழைத்த பஞ்சணையாகும்.
தொலை நோக்கு!
தொலைவல்ல,
கலையால் கரம் தொடு.
விலை போனார்கள் சிலர்:
விதண்டா வாதம் செய்ய சிலர்.
கண்டதையும் கக்கி காசாக்க சிலர்.
விண்டதாக விவாதிக்க வித்தையேற்று சிலர்.
அண்டா,அண்டாவாக அளக்க சிலர்.
கொண்டதெல்லாம் தாம்
விடுதலையின் தலையென்பர் சிலர்.
அன்றலர்ந்த மலராய்,
ஆளுமையாய் அண்ணனுடன்,
சென்றிந்த செம்பகையை,
பொடியாக்கி போனார்களே.
அவர்கள:
பொடிகளல்லர் தமிழுடன் தன்னை,
ஆகுதியாக்கிய கரும்பூ இவர்கள்.
இந்த-
கல்லறையின் கனதிகளையும்,
அதன் காத்திரத்தையும்,
கொண்ட கொள்கையின்
கொற்றங்களையும்,
தன்
சுயத்திற்காக
கொன்று
இங்கு
பிரிந்து நிற்கும் பீடர்கள்
என்று
இவர் உறுதியாய் எங்கள்
உழவன் கரம் கொடுத்தான்.
உறவாடி கெடுக்கும்
உறவு.
இதுதான்
அன்று வரை இன்று ஈறாக
தொடரெழுதும்
ஒட்டு,
எட்டப்பர் க(ஓ)டை.
முள்ளி வாய்க்காலில் விழ்ந்தாலும்-
கள்ளிப் பால் தெளிக்க எங்கள் இனமே
கனதியாய்.
இழி நிலையேற்ற கொடியோரின்
கும்பம் கண்டோம்.
பிரித்தகற்ற முடியா பிடாரிகள் எல்லாம்
இன்று
தானாவே தன்னை பிரிகையாற்றிய
பிம்பம்.
ஒரு சுத்திகரிப்புக்குள்
சுதாகரித்து.
தன் பீடத்தை தானே தகற்ற வரலாறும் இங்குதான்.
நன்றே.
பிரிவில் ஊறும் உறுதியற்ற உருவம் கண்டோம்.
பிறளாத எங்களின் திண்மையான திண்ணம் கண்டோம்.
இனி
விதி அளி(ழி)க்கா வீரியம் பெறுவோம்.
எமக்குள்
களையற்ற காளையரும்,
கனதியான,
தாளையரும்---
வலம் வரும் தலம்.
விடிவெள்ளி இனி தூரமும் இல்லை.
சோரம் போகும் சாரமும் இல்லை.
தோள் தொடும் தோழர்கள் இனி
தேற்றம் பெறுவர்.
ஈழத் தோற்றம் வரைவர்.
ஈகமே இழைந்திரு இயல்பாகும் எல்லாம்.
ஈற்றுவோம் அந்த தோற்றுவாயில் தொகுப்பாக.
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக