எண்ண அலைகளில் என்றும்,
திண்ணமாய் திறனெடுத்து,
எண்ணாக் காரியத்தை எளிதாக்கி,
எரித்த ஏந்தல் நீ-
வரலாறு!
உன்னை என்றும் வரிந்து வகைத்திருக்கும்.
ஆடு,மாடு,பொன்,பொருளென,
ஓடித் திரிந்த எம் முற்றத்தில்,
நீ!
தேடியதுவும்,தெரிவெழுதி தேற்றியதுவும்,
விடியலின் முகவரியென முத்தாய்ப்பாய்.
சொல்லாமல் செயலாக்கமாக்கிய செவிலியனே!
உன் வைராக்கியத்தில் எந்த-
வரிகள் பொருதும்?இல்லை
பொருந்தும்?
பாடு பொருள் இதுதானென,
ஊடு கூடி தேடும் உன் தெரிவில்,
எத்துணை உறுதி?
பேடு தேடும் தருணங்களில் உன் அகவை.
ஆனால் இந்த அகவையில் உன்-
ஆரோக்கியமான சிந்தனையில் உன்
கருக்கள் சீலமாக தக்கவைத்து!
உருவான உறுதியில் பிரபாகரனின் பிரமத்தை,
பிறழாமல் பின்பற்றிய பிதாமகன் நீ.
விழுப்புண் ஏந்தி!
அந்த விகாரமான பொழுதுகளிலும்- நீ
உதிர்த்தது தம்பி எனும் திருப் பெயர்.
உதிராத பிரமாணம்,
நெஞ்சகத்தில் நெருப்பாக,
நெகிழ்வெழுதிப் போனவனே!
வீரனே!
செல்லக்கிளி அம்மானான தீரனே!
ஞாலத்தில் எங்களின் நாயம் பிறக்க தீயான தீபமே!
ஒப்பாரிகளின் முதுகில்,
ஓர்மம் ஒட்டிய சிங்கள கிங்காதரர்களின் சிம்ம
சொப்பனம் நீ.
ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே
காலம் எமதாக்க கரந்தடியில் கலந்தாயோ!
வித்தாகி விழுதெறிந்த சித்திலனே!
முத்தாகும் எங்கள் முழு நிலம் ஒரு நாள்
சொத்தாகும் வரை சோர்வகற்றி
நித்திலத்தில் உங்களின் நினைவுகளுடன்
நெடும் பயணம் போகின்றோம்.
உங்களின் சத்தியக் கனவை அகத்தில் ஆழப்படித்தபடி.
செல்லக்கிளி அம்மானின் வீர
நினைவு சுமந்து!
தமிழீழ விடுதலை வரலாற்றில் பெரும் பதிவில்-
வெல்ல வழி வகுத்த திருநெல்வேலி
கண்ணி வெடி தாக்குதலில் களப்பலியான
"மாவீரன்" சதாசிவம்-செல்வநாயகம் நினைவாக
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக