சனி, 5 மார்ச், 2011




மனம் விட்டு கதைத்தால்
தனம் விட்டு போயிடுமாய் சிலர்
கனமகன்று களம் விலகும்
குணமகல வேண்டும்.அப்போதே
சினமகன்று, சீலம் தகைத்து,
...வனம் சூடும் தளம் விரியும்.

அஃதகன்று
சம்பிரதாய வணக்கம்!
தம்பிராயனிற்கு மட்டுமே,
உன் பிராயமோ,என் பிரியமோ!
ஊரக வரம்பு வளம் பெற,
உளம் திறந்து உரையாடி,
வளமான வகை தகைத்து,
கனமான நிதி அளித்து-- எம்
கலட்டி நூலகம் கனகதியில் இலங்க,இயங்க
விழி திறந்து,வழி சமைக்கும்.

யாரும்,யாரிடமும் கோபம் கொளல் வேண்டாம்.
வாரும்!
உன் மதி நிதியளிக்க வேண்டும்.
தாரும் நிதியென யாரும் உனை இறைஞ்சாமல் நீ
ஊரும் உறவாட உவகை உனையளக்க
பேரும் பேறும் பெருமையாய்-
உம் பெருந்தன்மையை நல்குவாய்.
நூலக எதிர்பார்ப்பாய் பெருந் தனம் நீ பொறுப்பாய்
உணர்வுடன் நல்கி ஊரவரை உன் வழி ஏற்க
முன்னுதாரணமாய் முகிழ்வாய்.


மு.குறிப்பு!
இரை மீட்டு தரை தடவாமல்
கறை பூசும் கதையகலக வேண்டும்.
திறமான நிதி வேண்டும்.திண்ணமாய்
உயர்ந்திருக்கும் தளம் காண்.
தடைக் கல்லாய் இருப்பகற்றி
பலன் தரு கற்பகமாய் உடன் வருவாய் உறவே.
உன் உயிர்ப்பில் உவப்பில் ஊரக நூலகம்.

யாதும் புரிவீர்.
காதும் கதையுமாய்
ஏதும் தெரியாமல் எமை ஏய்ப்பதாய்
உமை கழிவிற்குள் தள்ளாதே.
களிவிரக்கம் கொள்ளாதே.இது
ஒவ்வொருதரினதும் காலக் கடமை.
மறுத்துரைக்கவோ ஒத்திப்போடவோ முடியாத
சீராக கடமை புரிவாய் பரிவாய்.
ஆகவே
காலக் கடனறிந்து காத்திரமாய் இயங்கு.

தொடருவேன்.
ஒவ்வொரு வாரமும் இது தொடராய் தொடரும்.
எவரும் என்னுடன் தொடர்பு கொள விரும்பின்.
எப்போதும் எனதான வாசல் திறந்திருக்கும்.
படருங்கள்.
அடுத்த பதிவு எமதூரின் கல்விமான்களிற்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்