ஞாயிறு, 4 டிசம்பர், 2011


எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு
இன்று அகவை ஒன்று கூட
அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.
வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.
என் மனம் யாகிக்கும்
புவனத்தின் மெளவலில்
இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!
விடியலில் வீதி திறக்கும்.
ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்
அகம் சொரியாது.

தாளில்லா தடயம்
பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.
ஈழப் பெரு வீச்சே!
நீ ஏற்றிய புரட்சி வரிகளில்
ஈழம் நிமிர்வெய்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்