சனி, 2 ஜனவரி, 2010

மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!


உனக்குள் இருக்கும் ஒருவனை தேடு -உன்
மனைசை திறந்து உண்மையை நாடு -பொய்
உரைப்பதை மறந்து நியாயத்தை பாடு -திரை
கதவினை அகற்றி திறனை எடைபோடு.

எத்தனை நாள் இன்னும் பொய்யிற்குள் வாழ்வாய்-நீதி
மறைத்தினி எவ் மன்றத்தை ஆள்வாய்?உன்
உதட்டினில் உதிரும் உறக்கத்தை மாற்றி மெய்
மெருகேற்றி உயிர் மொய்ப்பட வாழ்வாய்.

சித்தனைத்தும் நீ சிரமப்பட வேண்டாம்-
உய்த்தனைத்தே உளம் சிறப்புற வாழ,
மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ-
மேதினியில் சிறப்புடன் வாழ உற்ற உறவதை,
ஏந்தி உலகை கற்றிட நீ கைத்தலம் பற்று.

அப்பனே,சண்முக என்று தினம் வேடங்கள் பூண்டு- சிலர்
அருகமர்ந்து எனை காத்திடு என்று சித்தம் பதற மேனியை-
உருக்கி பின்,
என்னை நன்றாய் காத்திடு என்று கல்லதை,
கலக்கலாய் கனகச்சித வேடம் பூத்து,
நெஞ்சது என்றும் சுயநலம் வகுக்க சூத்திரமாக,
தேவாரத்தை வார்ந்து, நயந்து
பக்தி எனும் பாதையை பகுத்து அதில் சித்தமெல்லாம்-என்
சிவனே என்று எத்தனை காலம் நீ ஏனத்தை ஏய்ப்பாய்.

பசிக்கு உணவு,நோய்க்கு மருந்துபோல்
கவலைக்கு காரணம் கண்டிட வேண்டும்.
கலக்கமது உன் கைகளில் கலந்தால் கல்லான சிலைகள்
கலக்கத்தை கலைக்காது.இது மெய்யென-
அறிந்து, மேனியை வருத்தி, ஊனது உருக்கி,
உண்மையை உணரு.

நாடு அதை நாடு,
நாட வேண்டியதை என்றும் நாடு.
தேடலது உன் தேவையை நிவிர்த்திக்க,
தேகமது இவ் தேசத்தில் ஊரும் வரை-உன்
தேடல்கள் உலகில் தேயாமல் தேடவேண்டும்.

சும்மா இருக்க சோறு வராது- நீ
அம்மா என்றாலும் அமுதம் வராது.
இம் மாநிலத்தில் போராட்டமே வாழ்வு அது
எம் மாநிலமாயிருந்தாலும் இதுவே வாழ்வு.

குடியிருக்க, குந்த குறு மண் வேண்டும்-அது
மடியிருந்தால் அதன் மகிமையே யாண்டும்.
படிதாண்டி நீ பாரதில் இருக்கும் பாரத்தை
குறைக்க உன்தாய் மடியான தாயகம் தேடு.

வித்தாக வீழ்ந்த சொத்தான எங்கள்
சோதியரின் சொப்பனம் மறவாதே-எங்கு நீ
வாழ்ந்தாலும்,வீழ்ந்தாலும் அந்த
கல்லறை மேனியரின் காத்திரம் மறையாதே.

சில்லறைத் தனமாய் சிதைந்து போகாமல்,
மெல்லென அவர் யாகங்கள் போற்றி,
வில்லாளனாய் நீ விரிய வேண்டும்-எங்கள்
எல்லாளனின் எண்ண கதவினை யாக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்