சனி, 2 ஜனவரி, 2010

கடவுள் செய்த பாவம்.

அப்பனே! முருகா!-அனந்தனே!
சித்தனே! கச்சி ஏகாம்பனே! முத்தனே!
எத்திக்கும் எழுந்த எம் பெருமானே!
சித்திக்கும் வரம் தந்து, சிரஞ்சீவி
வாழ்வு தந்து, நாளும்,பொழதும்
எமை நயமாக காப்பாற்று என்று நா
நயந்து தொழுத வேளை விலக --

ஆலய நடைதனை, ஆழத் தாளிட்டு,
அக்கம் பக்கம் அனைத்தையும் நோட்டமிட்டு
நிம்மதியாய் போகின்றார்
ஆண்டவனை காப்பாற்றி.
ஆயாசப் பெருமூச்சில்
அத்தனை ஆதங்கம் அவனிற்கு அணிந்த
அத்தனை பொன்னகையையும்
எப்படி போற்றுவதென்று?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்