ஞாயிறு, 17 ஜனவரி, 2010
விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.
நினைவெரியும் நீங்கா நியம் எரியும்-
தணலெடுத்து இந்த தளத்தில் தகிக்கும்,
உணர்வுகளை உலையிறக்க நெகிழும் எம்-
மூச்சுத் திணறல்களை எந்த மூலிகையில்
புனருத்தாரணம் புனைக்க?
கனவிருக்கும்,காத்திரமான களமிருக்கும்.
நினைவிருக்கட்டும் நீலியர்களே!உந்தன்
கானல்கள் உங்கள் கழுத்திறுக்கும்.
காலம் கலம் சுருக்கும் கனதிகள் உன்-
கண்களில்,
தேர்தல் தேற்றத்தில் உந்தன் ஊர்தலுடன்
உணர்வுகள் உற்ற உரமேந்தி--
ஒற்றர் குல ஒத்தடம் இன்னும் எத்தனை நாள்?
கற்றல் என்றும் உன்னில் கருக்கொள்ளாது.
விற்பனங்கள் அற்ற விதையற்ற வீணர்களே!
சொப்பனங்களை இனி என்ன செய்வதாக உத்தேசம்?
நெருங்கும் நாளது உற்ற உன் நெற்றியை உறுதியாய்-
விறுமங் கொள் விபரமாக --
புத்தனின் அகத்தில் எந்த முகைப்பிருந்ததோ?
அது-
எந்த சித்தனின் சிரசிலும் சிறப்பெய்யவில்லை.
அது
நுகைகூட நோக்க தேற்றம் கொள்ளாது.
எத்தனின் ஏகாந்தம் ஆக நீ
எந்த மூலையை முகர்ந்தாலும் முகத்தில் ஒளி உமியாது.
பக்தனாக நீ எந்த பகடையான பட்டுடையுடுத்தாலும்,
வித்துக்களை எங்கள் வியூகம் யூகிக்கும்.
சற்றே பொறு போக்கற்ற இரண்டகர்களே!
முற்றிலும் மாற்றான முகை நீ இளைக்க,
வெந்தணலில் வெந்ததான உன் வெளிகளை
வெற்றிச் சங்கூதி எம்மவர் மேதினியில்
வேலியோடு வதைப்பர்.
முடிவல்ல!
இது முகிழ்வென எம் முற்றம் முகம் பூரிக்கும்.
அழகல்ல!
அளவளாவும் அத்தியாயமுமல்ல!
சரிவல்ல!
சங்கம் வளர்த்த தமிழ் சாதிக்க இன்னமும் இழையோடும்.
வரிவெல்ல!
கரிகாலன் காலம் உரைத்த களம் மெல்ல,
மேதினியில் மேவ.
உளம் பூண்டு உறுதியுடன் புலம் பூத்த
புவனம்.
எடுத்த காரியம் எதுவும் உடன் அறுவடையாகாது.
எந்த வித்தும் நட்டவுடன் பலனளியாது.
அடுத்த அசைவுகள் ஒவ்வொரு ஓர்மத்திலும்
ஓசையற்று நகரும்.
நர்த்தனங்கள் நடனத்தில் மட்டுமல்ல -ஈழ
கட்டுமானங்களும் அதே கனதியில்.
விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2010
(48)
-
▼
ஜனவரி
(16)
- இன்னா செய்தாரை ஒறுத்தல்!
- அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.
- ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.
- உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.
- விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.
- ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
- ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?
- சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
- கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
- பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.
- உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.
- பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
- ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
- ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
- கடவுள் செய்த பாவம்.
- மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!
-
▼
ஜனவரி
(16)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக