திங்கள், 11 ஜனவரி, 2010

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!


ஈட்டிய வெற்றியின் ஏகாந்த முகப்பு நீ.
தீட்டிய திட்டத்தில் தீயாத தீம்பு நீ.
காட்டிய காத தூரத்தின் சுனையான கானல் நீ.
அப்படித்தான் நீ காண்பது கானலென கற்பித்தாரே-பின்
நீ சுனையென உன்னை சுற்றமெல்லாம் சுற்றக் கண்டோம்.

வெற்றிக் கொடிகள் பல நீ ஏந்தினாய்-அதனால்
கொற்றவனின் கொற்றத்தில் உன் முற்றங்கள் முனைப்பாக
கூற்றனாகினாய் பகை தொட, அவன் பரமங்கள் பங்கப்பட
புறமுதுகு காட்ட வைத்த கூற்றுவனே!
எத்தனை வெங்களம் கண்டாய் அதுவல்ல உன் திறப்பு
எத்தனை போராளிகளை பகை புலமேற்றி பங்கமில்லா
முகிழ்வனாய் பாதை நீட்சித்தாய்.



நீ கடந்த பாதை முற்றிலும் புதர்கள், புதிர்கள்.
நீ படைத்த பாதைகள் முற்றிலும் புதுமைகள்,புரட்சிகள்.
நீ கடிந்த்தால் போராளிகள் அத்தனையும் முத்துக்கள்,சொத்துக்கள்
ஆக்கி நீ வைத்ததால் ஆகினர் அஞ்சா நெஞ்சினராய்,வித்துக்கள்
உன் பாதையை,பார்வையை எத்தனை கல்லறை மேனியர்
கனதியாக உன்னால் பேணினர்?

விடுதலை காற்யையே மூச்சாக சுவாசித்தாய்-உன்
வடுக்கள் தாங்கிய மேனியால் அதையே வாசித்தாய்.
துடுக்கானதாக உன் சுவாசத்தை சுகித்த சுமைதூக்கா
தர்க்கர்கள் கூட உனதான தகமறிந்து தூக்கினர்
விடுதலை சுமையை.

ஆர்த்தெடுக்க அடிபணியா அறமேந்திய ஆற்றலே-உன்
இறுதி மூச்சை இந்தி ராணுவமா இயமன் கைவசப் படுத்த
இயலா இறுக்கம் ஈற்றது.

எழுந்த போதும்,எரிந்த போதும் நீ விரனாகவே எதிர் வினையாற்றினாய்-
பழுத்த விடுதலை பரமனாய் பாரிலே பரந்தாய்.
கொழுத்த உனை முடியாமல் கோழையர் களம் நழுவிட,
விழுத்தி உனை முடிக்க வீணர்கள் விழைய,வீரம் வினைத்த
விழா முடியே முகியே,
பகை மகிழ பாழும் இந்தியனால் இகம் இழந்தனையா?

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
கிட்டும் வெற்றியினை தொட்டு தாலாட்டிச் சென்றவனே
முட்டும் பகை வாசல் உன்னால் முற்றமிழந்து புறமுதுகு காட்ட!
எட்டுத் திசையிலும் ஏகாந்தனாய் ஏறிய உறுப்பனே.ஏந்தலே!

கொட்டும் மழையிலும்,கொளுத்தும் வெயிலிலும்,
சுடுக்கும் பனியிலும், சுற்றமறியா காடுகளிலும்,
களம்மைத்த கரிகாலனின் காத்திரனே!
உன் காலடிச்-
சுவட்டில் உளமேந்தும் உவகையர் உனதான,
பாதையில் உன்னதமாய் உருவமைப்பர்.

நீ
ஏந்திய தாகம்,ஏற்றிய சுடர்,வீற்றிய வீரம் எதுவும் விலை போகாது
சிந்திய குருதிக்கு மங்காத ஒளி சமைப்பாம்-நீவிர்
சிதை கொண்ட பள்ளியில் எங்கள் பாகம் பகற்போம்-
விதையான உங்கள் விம்பத்தாடு விலை போகா தலைவன்,
பாதையில் உனதான தாகம் தீர்ப்பாம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாகந்தான் என்ற
ஈடாத வேதம் எட்டும்வரை ஏறெடுப்பாம்.
பீடுடைய பிரமங்கள் பின் தங்கா.

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்