புதன், 13 ஜனவரி, 2010

ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?


நீ வர நினைவெழுதும் என் புலர் முகம்-நீ
வந்த பின் அது வாடும் வயப்பு என்ன?
போன பின்னே உன் போக்கங்கள் புனையும்,
பாவனைகளை எந்த பக்கங்களில் பயனாக்குவேன்?

வாசம் தரும் பூவெல்லாம் வசமிழந்து வாட,
நேசமெல்லாம் உன்னாலே நெக்குருகி போனதடி.
பாசமதின் பவித்திரங்கள் பாழாகிப் போகுமுன்னே-
ஊசும் என் உயிர்ப்பெழுத உற்றவளே உயிர்க்காயோ?

வீசும் தென்றலிலே விரக தாபம் எனையேந்தும்!
கூசும் இந்த கூர்ப்பெழுத குயிலே நீ குரலாலே,
பூசும் உன் புன்னகையில் புதிர் கரைத்து புலவாயா?
நீசர் சிலர் எம் நித்திலங்களை நிர்ணயிக்கும்,
நிலைகளிற்கு நீயேன் நிறைவெழுதிப் போகின்றாய்?
நிந்தனது ஞாயங்களை நீயே பரிவெழுது.

காயம் அது காயும் காலம் அதை ஆற்றும்-ஆர
மாயம் அதை வரையும் மன்றங்களை நீ கலைத்து,
ஆயம் அதை ஆக்கி அனந்தவளே எனை அவைப்பாய்
யாகம் அது மிளிர யாக்கும் என் யாகசகங்களை,
பாகம் அதில் பகிர்ந்து பாவையே நீ பரிவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்