வல்ல பகை சாய்த்தான்-வாகை
பல வகுத்தான்-வெல்ல இனி
வகையற்ற பகை-
ஆயுத மெளனித்தலை,
தேசத்தின் சேதம் அகற்ற பேசித் தீர்க்க,
பேராண்மையுடன் பேரமகற்றி பெரும்-
போர் நிறுத்தம் யாசித்தது.
ஆயுத மெளனித்தலை ஆழமாக ஆக்க,
அனுசரணை வேண்டினான் ஆதவன்.
ஆதங்கமது மையிக்க ஆரோக்கியம் ஆரோகணிக்க!
அவனியில் சில நாடுகள் நாடின.
ஆயின்!
சில அசைவுகள் அயல் நாடுகளில்,
அவை அமைத்த ஆசுவாசமான ஆயத்தத்துடன்-
ஆயினுமென்ன?
அனுசரித்த எந்த அவயங்களையும் ஆக்கவில்லை.
நேர்மைத் திறனகற்றி நேத்திரங்கள்.
எந்த அசைவை ஆக்கும்?
நேரங்களை,காலங்களை-
கருக்கி ஆரியர் ஆயுதகொள்வனவிலும் ஆட்பலத்தையும்
பயிற்சியையும்,
நவீன படைக் கலங்களின் கட்டுமானத்திலுமே
ஆசிய நாட்டில் மட்டமன்றி,
ஐராப்பிய அங்கத்திலும்,அமெரிக்க மட்டத்திலும்,
அகமாக அதீதமாக ஆரோகணித்தன.
சுமூகமான,
நேர்மையான வழியில்-
சிறீலங்கா பயணிக்க மறுப்பதை தலைவன்-
தரணிக்கு சாற்றியதை எந்த சாதகனும்,
சிரக் கொள்ளவே இல்லை.
இங்குதான் எங்கள் இயக்கத்தில் கிழக்கின்,
பெருந்தளபதியாக கருணா என்ற கயவன்
எட்டப்பனாக மாற்று வேடம் ஏற்க
கிழக்கில் என்னதான் நடக்குது என்று இயக்கத்திலே
தடுமாற்றம்.
பிரதேசவாதம் பேசினான் ஊருக்குள் பிரச்சனையை
எந்த பிம்பமும் இன்றி மக்களிடம்
வடக்கத்தான்,கிழக்கத்தான் என ஏதேதோ
பிள்ளையான் என்ற பிரகிருதியுடன்
தமிழர் பிணம் மீதேறி!
என்னதான் தலைவன் ஆக்கமான முடிவெடுத்தாலும்,
பிளவும்,முறிவும் எங்கள் தளத்தில்
பெரிதாக உடைப்பெடுத்தது
என்னவோ உண்மைதான்,
என்றாலும்
அதுவும் ஒரு பாரிய இழப்பே.
யாரென்ன கூறினாலும்!
இந்த இரண்டகனால் எங்கள் களத்திலும்,புலத்திலும்,
ஈடற்ற பின்னடைவே எவர் எதை சாற்றினாலும்.
ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
மாட்சி மிகுந்த எங்கள் மக்கள் படை,
சுதாகரிப்பை ஏற்கனவே எதிர்பார்த்ததினாலும்,
ஏற்கனவே ஒப்பந்தத்தின் பிரகாரம்-
தற்காப்பு சமரை மையப்படுத்தி களங்களில்-
இயன்றவரை மட்டுப்படுத்திய தாக்குதலை மேற்கொள்ள---
கிழக்கில் பெரும் ஆரவாரமாக, அட்டகாசமாக
மிகப் பெரும் படை நகர்வை மிலேச்சத்தனமாக
மனித நாகரீகமகற்றி
மகிந்தா தொடர ------(தொடரும்)
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2010
(48)
-
▼
ஜனவரி
(16)
- இன்னா செய்தாரை ஒறுத்தல்!
- அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.
- ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.
- உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.
- விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.
- ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
- ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?
- சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
- கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
- பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.
- உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.
- பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
- ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
- ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
- கடவுள் செய்த பாவம்.
- மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!
-
▼
ஜனவரி
(16)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக