புதன், 6 ஜனவரி, 2010
ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்,
உத்தமர்களே உலக வலத்தில் வாசகமாக,
கள்ளமொன்றும் அறியாதாராய் கதைகள் பல,
அளந்திடும் பக்தர்களாய் பல அரிதாரம்.
யாரும் இங்கு உத்தமர்களல்ல!
முகத்திற்கஞ்சி வேசையாடும்,
முகத்திரை மூடும் முகையர்களே!
அகத்திரையை என்றேனும் ஆழத்
திறந்திருந்து அமைதியாய் சிந்தித்ததுண்டா?
ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
கவ்வும் உங்கள் கனதியை எண்ண!
சுய பரிசோதனையை என்றாவது சுகித்ததுண்டா?
அப்போதாவது ஆத்மாவை திறந்ததுண்டா?
இப்போதாவது இதயத்தை திறவுங்கள்-அங்கு
சித்தம் கலைக்கும் பித்தம் பிதிர்க்கும்,
சொப்பனங்கள் விலக விழியுங்கள்.அஃதின்றி
ஒவ்வொன்றிற்கும் ஓராயிரம் காரணம்
கற்பித்தலை, அந்த கயமையை சித்தம் விலத்தி
வீசி விசுறுங்கள்.
ஒவ்வொரு தாக்கத்திலும் மறு தாக்கம் உண்டு.இதை
மானசீகமாய் மையித்தே இருஙகள்.
உள்ளத்தை திறந்து உண்மையை கூறு
அவ்வியம் அகன்ற அவலத்தை நினைத்து.
ஊடுருவும் ஒவ்வொரு இழப்பை இழைத்து.
தன்னைப் போல மற்றவனை மதிக்க,
உன்னால் ஆகும் உளமதை திறக்க.
சொன்னால் புரியும் சொந்தங்களை எண்ண
சினங்களை உறக்க,சுயநலன்கள் விலக்க
மனங்களை என்றும் மதியூகமாய் மனைக்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2010
(48)
-
▼
ஜனவரி
(16)
- இன்னா செய்தாரை ஒறுத்தல்!
- அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.
- ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.
- உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.
- விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.
- ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
- ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?
- சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
- கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
- பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.
- உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.
- பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
- ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
- ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
- கடவுள் செய்த பாவம்.
- மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!
-
▼
ஜனவரி
(16)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக