புதன், 6 ஜனவரி, 2010

ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்,
உத்தமர்களே உலக வலத்தில் வாசகமாக,
கள்ளமொன்றும் அறியாதாராய் கதைகள் பல,
அளந்திடும் பக்தர்களாய் பல அரிதாரம்.

யாரும் இங்கு உத்தமர்களல்ல!
முகத்திற்கஞ்சி வேசையாடும்,
முகத்திரை மூடும் முகையர்களே!
அகத்திரையை என்றேனும் ஆழத்
திறந்திருந்து அமைதியாய் சிந்தித்ததுண்டா?

ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
கவ்வும் உங்கள் கனதியை எண்ண!
சுய பரிசோதனையை என்றாவது சுகித்ததுண்டா?
அப்போதாவது ஆத்மாவை திறந்ததுண்டா?

இப்போதாவது இதயத்தை திறவுங்கள்-அங்கு
சித்தம் கலைக்கும் பித்தம் பிதிர்க்கும்,
சொப்பனங்கள் விலக விழியுங்கள்.அஃதின்றி
ஒவ்வொன்றிற்கும் ஓராயிரம் காரணம்
கற்பித்தலை, அந்த கயமையை சித்தம் விலத்தி
வீசி விசுறுங்கள்.

ஒவ்வொரு தாக்கத்திலும் மறு தாக்கம் உண்டு.இதை
மானசீகமாய் மையித்தே இருஙகள்.
உள்ளத்தை திறந்து உண்மையை கூறு
அவ்வியம் அகன்ற அவலத்தை நினைத்து.
ஊடுருவும் ஒவ்வொரு இழப்பை இழைத்து.

தன்னைப் போல மற்றவனை மதிக்க,
உன்னால் ஆகும் உளமதை திறக்க.
சொன்னால் புரியும் சொந்தங்களை எண்ண
சினங்களை உறக்க,சுயநலன்கள் விலக்க
மனங்களை என்றும் மதியூகமாய் மனைக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்