புதன், 6 ஜனவரி, 2010
பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
உள்ளத்தில் ஒன்று வைத்து புறமொன்று பேசும்
கள்ள மனதின் கருமாந்தர்களே!
வெள்ளத்தில் அடித்துச் செல்லும்
கழிவுகளாக உந்தன் காலமது கழிந்து விடும்.
பள்ளத்திலே உந்தன் பாதடிச் சுவடுகள்.
உள்ளும்,புறமும் உரசாமல்
துள்ளும் நெஞ்சமது வேண்டும்,அஞ்சாமல்
மனமது விரித்து ஆளுகின்ற ஆற்றலதுவும் வேண்டும்.
தோற்றமதில்,மாற்றம் மகிமை சுரக்க வேண்டும்.
ஊற்றெடுக்கும் உறவதனில் ஊசாத உறுப்பு உறையவும்,
தேற்றமது தெள்ளறிவாய் தேறவும்,சாரவும்
சரம் சேரவேண்டும்.
மெள்ளவும் முடியாமல்,கொள்ளவும் முடியாமல்
கோர்த்து நிற்கும் கோரம் குலைய வேண்டும்.
மெளனமாக வஞ்சிக்கும் வரைபுகளும்,
உதவும் தருணத்தில் விலகும் வியாக்கியானங்கள்
விலகவும் வேண்டும்.உலவும் உள்ளங்களில்
களிப்பெழுதும் கலை வேண்டும்.ஆக
கற்றதனால் ஆன பலனென்கொல் என்பதை
ஆசுவாசமாக பற்றவும் வேண்டும்.
பயன் பிறர் அடைய பற்றுதலும்,
மயன் கொள்ளா மாற்றுதலும்,
துயரெறிய தூக்கிவிடும் துடிப்பும்,மற்ற
மானிட மார்க்கமும் மனப்புற மடிப்பும் வேண்டும்.
ஊனிடும் உறவும்,கூனிட நிமிர்வும்,தானிட
தர்மமும் தரணியில் தரமாய் வேண்டும்.
இடு என்று இல்லா இறையிடம் இறைஞ்சல்
இதய பூர்வமாய் தவிர்க்கும் தர்மமும் வேண்டும்.
உனதான இதயக் கதவுகளை இது சாரும்-
தனதான இருப்புக்களும் இனம் சார் உறவுகளிற்காய்,
விரிக்கும் விசாலமது வியாபிக்க,
தரிக்கும் சாந்தம் சார சகமான உற்றத்திற்காய்,
உதவும் உயர்வும்,
உனதானதாக உளம் சிறக்க வேண்டும்.
மற்றெல்லாம் இந்த மகிமை மையிக்க,
தான் தோன்றும் சாலச் சிறக்க,என் வீட்டு-
முற்றத்தில் தினம் சுரக்கும் போதெல்லாம் இவை
மற்ற வீட்டு மனைகள் திறக்க மனம் கெளவ்வும்.
மானிடம் உயிர்க்கும்,மாதவம் மனந்திறக்கும்.
தூவ,மனிதம் தூவ ஏது இங்கே பாவ,புண்ணியம்?
பாவ, இவை பாவ பரவும் இங்கே செளபாக்கியம்,
இருப்பதை இல்லார்க்கு இணங்கி இலக்க,
செருக்கது அகலும்,செல்வாக்கு செழிக்கும்-
உருக்கது இழகும் இயக்கம் இங்கே இமயமாகும்.
ஒற்றுமை ஒற்ற வேற்றுமை விலக,
பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
பற்றுவோமா?
இல்லை
பரிதவிக்க எங்கள் உறவெல்லாம்
பரிதவிக்க விற்போமா?
விலை போவோமா?
எங்கள் பவ்வியங்களை எல்லாம் பரமன் பா(மா)ண்பென??-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2010
(48)
-
▼
ஜனவரி
(16)
- இன்னா செய்தாரை ஒறுத்தல்!
- அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.
- ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.
- உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.
- விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.
- ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
- ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?
- சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
- கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
- பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.
- உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.
- பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
- ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
- ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
- கடவுள் செய்த பாவம்.
- மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!
-
▼
ஜனவரி
(16)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக