வியாழன், 28 ஜனவரி, 2010

அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.


சிரிக்கும் மலர்களிலே,அது
விரிக்கும் இதழ்களிலே-அறமிழக்க
மரிக்கும் கண்ம் உண்டு.அதுபோல்
எவர் தரிசிக்கும் அறமற்ற அரியாசனத்திலும்-
அழிவுண்டு.

ஆற்றும் திறனது அழியாது.
பிறரும் போற்ற பின் விழைவினை,
முன்பே தெறிக்கும் தெரிவுகள் ஆற்றினால்,
தெம்பே தெளிக்கும் செழிப்புக்கள் செப்பனிட.

தேர்வுகளில் தெளிவற்று,
பார்க்கும் பார்வைகளில் பரிவற்று,
ஊற்றெடுக்கும் உணர்வுகளை!
புரிவகற்றி,ஆற்றல்கள் அமைத்தால்
வலுவற்ற பாதை வாதைகளையே வார்க்கும்.
போகும் பாதை தெரிவற்று???
என்ன தேர்ச்சியை எவர் தேர்ப்பார்?

புரியாத பரிவெழுதும் புதர்களிலே!
வலியான எம் பார்வை எந்த வலுவேற்றும்?
வலுவெல்லாம் வதைமுகாமில்!
தெளிவெல்லாம் புறமுதுகில்!
வழியெங்கே?
வரித்தெடுத்த தெளிவெங்கே?
அத்தனையும் மெளனத்தில் மரிப்பெழுதுமா?

இல்லை!
இறைதலும், இலங்குதலும்,இயங்குவதும்
எந்த இழையை இனி இரப்பேந்தும்?
தளமும் அற்று,களமும் கலைந்து,
ஏந்த ஒரு உலையும் அற்று!
இப்படி எல்லாமே அற்றதாய்!?-
சூனியமே சுவடாய்!

இங்கிருந்து எந்த காரியத்தை?
மங்களமாய் நாம் மதிப்போம்?
வெங்களத்தில் எங்கள் வேதினியர்
சங்காரமாக்கிய சங்கதிகளை??
இங்கிதமகற்றி இந்தியனுடன் இன்ன பிற
வெங்களாந்திகளும்--

எம் களங்களை இனி
எந்த சந்தம் ஏற்றி?
ஆயுதம் அற்றபோது நாம் ஆளுமை இழந்தோம்.
இதனால் நாம் ஏதும் ஏந்தும்
ஏதனமும் இழந்தோம்.
பலமற்றவன் பவனிவர எந்த
பார்வையிலும் பாதை இல்லை.

இப்போ நாம்!
வெறும் வாய்.
மெளனமாக,
அவல் மட்டுமல்ல-
அவலமும் கூட மெல்கின்றோம்.
மெளனம் மேதினியில் மெய்சிலிர்க்க,
மேவும் நாள் கை கூட.அதுவரை
வரைமுறையற்ற வன்மங்கள்
மனமொழுக.

எம் மாவீரக் கல்றைகளே!
உற்றவன் இல்லையெனில்,
யாவும் அறமற்று அற்றே போகும்.
ஆயினும் எம் மனங்களில்
மாதவமாய் நீவிர் வாழும்
வேதத்தை எந்த வேமனும்
அழிக்கவோ,அகற்றவோ முடியாது.

நீங்கள் வாழ்வது,
எங்களின் ஆத்மார்த்த ஆன்மாவில்.
உங்கள் புன்னகைப் பூக்கள் என்றும்
கருகாது.
கால,காலமாய் கனதியாய் வாழும்.
மீண்டும் இந்த மேதினியில்
கல்லறை மேனி கலவரமின்றி
களமேற்றும்,
கலமேந்தும் எங்கள் காலக் கடனால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்